வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், டிசம்பர் 26, 2006

Airtel ன் சொதப்பல் ஆரம்பம்


Airtel நிறுவனம் நிமிடத்துக்கு 7.9 cents க்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொலைபேச ஒரு திட்டதை அறிவித்து அமெரிக்காவின் Calling Card சந்தையில் நுழைந்தது. இத்திட்டம் NRI மக்கள் மத்தியில் Airtel க்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அதற்கு இன்னொரு காரணம் Signup க்கும் முதல் recharge க்கும் இரட்டிப்பு மதிப்பு கொடுத்தது. அதாவது $50 வாங்கினால் அதன் மதிப்பு $100 ஆக Airtel நிறுவனத்தால் இரட்டிப்பு செய்யப்பட்டது. இந்த சலுகை குறிப்பிட்ட நாட்கள் வரைதான். சனவரி 7 க்குள் signup செய்ய வேண்டும். registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை, விபரங்களுக்கு https://www.airtelcallhome.com/ics/ என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

இதனால் நிமிடத்துக்கு 12.9 cents வாங்கிய Reliance ன் Calling Card சரியாக அடி வாங்க வேண்டியது Airtel ன் மா மாபெரும் தவறால் தப்பிவிட்டது. வாடிக்கையாளர் சேவை என்பது இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம், இல்லாமலே பெரிய அளவில் வளராலாம். ஆனால் அமெரிக்காவில் இது நடப்பது கடினம் என்பது Airtel க்கு புரியவில்லையே என்ன செய்வது??

இது நாள் வரை Airtel ன் வாடிக்கையாளர் சேவையை போல் ஒரு மகா மோசமான சேவையை நான் அமெரிக்காவில் பார்த்ததில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் வாடிக்கையாளர் சேவையே கிடையாது. எப்போது வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்தாலும் அது 'busy' ஆகவே இருக்கும். அவர்களின் வலைதளமும் மோசம், ஏதாவது update செய்யனும் என்றால் 5 நிமிடம் கழித்து Error வந்து நிற்கும். ஆரம்பத்திலேயே இந்த மாதிரி என்றால் ????

Airtel ன் அதிரடி நுழைவால் ஆடிப்போன Reliance சுதாகரித்துக் கொண்டு விலையை குறைத்துவிட்டது. இப்போ நிமிடத்துக்கு 7.9 cents தான். அதுவுமில்லாமல் recharge/new registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை விபரங்களுக்கு relianceindiacall.com என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

Airtel வருகையால் என்னைப்போன்றவர்களுக்கு நன்மை.

குறிப்பு : இந்த 2 நிறுவனங்களின் calling card தவிர மேலும் பல நிறுவனங்கள் 7.9 cents க்கு calling card கொடுக்கின்றன. ஆனால் reliance நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
https://www.reliablecalling.com/ நிமிடத்துக்கு 6.9 cents, www.pingo.com நிமிடத்துக்கு 7.6 cents

வாழ்க போட்டி! வளர்க வாடிக்கையாளர் நலன் !!.

வெள்ளி, டிசம்பர் 15, 2006

Positive Attitude

அவருகிட்ட வாழ்க்கையில் எல்லாத்தையும் "Positive" வா எடுத்துக்கனும்ன்னு சொன்னது தப்பா போச்சு.

ஏன்?

HIV-AIDS சோதனை பண்ணியதன் முடிவு "Positive" வா வரலைன்னு கவலையா இருக்கார்.

திங்கள், டிசம்பர் 04, 2006

விவசாயிகளுக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் வர்க்கம்.

பொதுவாக விவசாய நிலங்களை ஆக்ரமித்து/அபகரித்து பெரிய ஆலைகளை கட்டும் போது கம்யூனிஸ்ட்கள் அதை எதிர்த்து போராடுவார்கள், முதலாளித்துவம் ஒழிக என்பார்கள். இங்க நிலைமை தலை கீழ். இந்திய கம்யூனிஸ்டின் கோட்டையான மேற்கு வங்கத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட திரிணாமுல் காங்கிரஸ் அதை எதிர்த்து விவசாயிகளுக்காக போராடுகிறது. கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் பாணி போராட்டம்.
ஆளும் வர்க்கம் என்று வரும்போது கம்யூனிஸ்ட் மற்றும் எல்லோரும் ஒன்று தான் போல.

இது தொடர்பான செய்தி இங்கே.

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸார் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், நவம்பர் 28, 2006

கரும்பு விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில், ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.222.50 உயர்வு

2006-2007 சர்க்கரை ஆண்டில் 9 சதவீதம் பிழி திறனுள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ.802.50 என்று மத்திய அரசு குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. அரசு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விடக் கூடுதலாக ரூ.222.50 உயர்த்தி, 9 சதவீதம் பிழி திறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

முன்தேதியிட்டு.....

இந்த விலை உயர்வு, இந்த நடப்புக் கரும்பாண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன் தேதியிட்டு வழங்கப்படும்.

மேலும் 9 சதவீதம் பிழிதிறனுக்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறனுக்கும் டன் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


கரும்பு விலையை அதிகரித்து விவசாயிகளை மகிழ்வித்த முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டுகிறோம்.

ஜெயலலிதாவுக்கு வீரபாண்டியார் பதில்

கரும்புக்கான ஆதார விலையை தமிழக அரசு கமுக்கமாக 200 ரூபாய் குறைத்து விட்டது என்று கூறி அதை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரும்பு விலை

அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.1014 கொடுக்கப்பட்டதாகவும் இப்போது தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவறான தகவலை கூறி இருக்கிறார்.

தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு உற்பத்தியாளர்கள்-சர்க்கரை ஆலை அதிபர்கள்-கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூடி விவசாயிகளுக்கு கட்டுப்படியாககக்கூடிய விலையாக மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் 8ஷி சதவீத பிழிதிறனுக்கு மேல் இருந்தால் ஒவ்வொரு புள்ளிக்கும் கூடுதலான விலையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.

தடை உத்தரவு

மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கம் 2.1.2000 அனëறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதைத்தொடர்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டது. அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க முடியாது என்று கோர்ëட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத்துறை ஆலைகள் மத்திய அரசு அறிவித்த சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் மாநில அரசாங்கம் பரிëந்துரை விலையை சேர்த்து 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

தவறான தகவல்

தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான உரிய விலை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைக்கூட அறிந்துகொள்ளாமல் தி.மு.க. ஆட்சியில் திடீரென கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறானது ஆகும்.

2001-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2006 ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தையே கூட்டவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை காரணம் காட்டி மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ விலையோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஓட்டு வாங்க தந்திரம்

ஆனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வாதாடி மாநில அரசாஙëகம் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்யலாம் என்று ஜெயலலிதா கூறி இருப்பது தவறானது. அவருக்கு உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் எனëற எண்ணம் இருந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய 2004-ம் ஆண்டிலேயே கரும்பு விலையை ரூ.1014 ஆக உயர்த்தி இருந்திருக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோது அடுத்த நடைபெற இருந்த 2006 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொணëடு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க வேணëடும் என்று கருதி 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.1014 வழங்க வேண்டும் என்று ஒரு உத்தரவை 2005-2006-ல் போட்டு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க செய்த தந்திரமான செயல் ஆகும்.

முத்தரப்பு கூட்டம்

2006-2007-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையாக டனë ஒன்றுக்கு ரூ.802.50 என்று வழங்கி உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை ரூபாயை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேணëடும் எனëபது சட்டம். அந்த அடிப்படையில்தான் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.802.50 முதலில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை, முத்தரப்பு கூட்டத்திற்கு பின்னர் வழங்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள ஒன்று ஆகும். இந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க முத்தரப்பு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கருதி, தி.மு.க. அரசு மீது உண்மைக்கு மாறான அறிக்கை விடுவதை ஜெயலலிதா இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறி உள்ளார்.

ஞாயிறு, நவம்பர் 26, 2006

விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு.

விவசாயிகளுக்கு எதிராக இருப்பதென்று தமிழக அரசு கங்கனம் கட்டி கொண்டுள்ளது போல் தெரிகிறது. நல்ல விளைச்சல் தரும் பாசன வசதியுடைய விவசாய நிலங்களை பறித்து துணை நகரம் அமைப்பேன் என்பது, கரும்புக்கு ஆதார விலையை குறைப்பது என்று திமுக அரசு முடிவெடுத்திருப்பது விவசாயிகளின் நலனின் மேல் இந்த அரசுக்கு உள்ள அக்கரையை காட்டுகிறது.

கரும்புக்கு ஆதார விலையை தமிழ அரசு ஒரு டன்னுக்கு 200 ரூபாய் குறைத்துள்ளது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் கரும்பின் ஆதார விலையை உயர்த்துகிறேன் என்று தான் எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும். யார் ஆட்சிக்கு வந்தாலும் உயர்த்தமாட்டார்கள், விவசாயிகள் கடுமையாக போராடினால் தேர்தல் வருவதாக இருந்தால் வாக்கு அறுவடை செய்ய ஆதார விலையை கொஞ்சம் உயர்த்தி விவசாயிகளின் மேல் அக்கரையுள்ளதாக காட்டிக்கொள்வார்கள்.

இந்த முறை நிலைமை இன்னும் மோசம், இருக்கும் ஆதார விலையை குறைத்துள்ளார்கள். தற்போது 1014 ரூபாயாக இருப்பதை 802 ரூபாயாக சத்தமில்லாமல் கமுக்கமாக குறைத்துள்ளார்கள். கரும்பு வெட்டு கூலி டன்னுக்கு 200 ல் இருந்து 300 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்காகவா இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? எப்பப்பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் விவசாயி தலையிலேயே ஏன்யா கை வைக்கிறீங்க. "உழுதவன் கணக்கு பார்த்தா ஒரு ஆலாக்கு கூட மிஞ்சாது" என்பது விவசாயியின் நிலை அறிந்தோருக்கு தெரியுமே.

இதுல வேற நம்ம முதல்வர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அப்பப்ப கூறிக்கொள்வார், இப்ப நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அவர் கம்யூனிஸ்ட் அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகாரர் மாதிரி என்று. கம்யூனிஸ்ட் வேற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வேற என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் பெரும்போராட்டம் நடத்தினால் தான் உண்டு அல்லது மருத்துவர் இராமதாசு அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை விடவேண்டும். ஜெயலலிதா விலை குறைப்பை குறித்து கண்டன அறிக்கை விட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கலைஞர் குடும்பத்து ஆட்கள் சர்க்கரை ஆலையில் பெரும்முதலீடு செய்திருந்தால் கரும்பின் ஆதார விலை அதிகரிப்பு என்பது இந்த ஆட்சியில் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். சிமெண்ட் கதை தான் நமக்கு தெரியுமே.

"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது இப்போ "ஊருக்கு(அரசுக்கு) இளைச்சவன் விவசாயி" என்று மாறிவிட்டது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
.

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

வள்ளுவன் வாக்கு பொய்யா? தெரியாது, ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞருக்கு நன்றாக தெரியும்.

ஞாயிறு, நவம்பர் 19, 2006

புலியின் முதலை வேட்டை

இந்த படத்தில் புலியானது முதலையை வேட்டையாடும் காட்சி உள்ளது. முதலை பலமானது தான் ஆனால் அதன் பலம் நீரில் தான் அல்லவா? அதனால் தான் தரையில் புலியை எதிர்த்து முதலையால் போரிட்டு வெல்ல முடியாமல் தோற்றுவிட்டது.




என்ன தான் பலசாலியா இருந்தாலும் சில இடங்களில் பலம் இருக்காது / செல்லுபடியாகாது அப்போ அங்க பலமுள்ள எதிரி அடிச்சா பரலோகம் தான்.

புதிர்:-

புலி சிங்கத்தையும் சிங்கம் புலியையும் வேட்டியாடுவது எங்கு நடக்குது தெரியுமா?






இலங்கையில் தான்

சனி, நவம்பர் 18, 2006

Burger King - Outsource.

Outsourcing ஐ கிண்டலடித்து வந்த நகைச்சுவை ஒளிப்படம், நீங்களும் பாருங்க சிரிங்க. அமெரிக்காவில் பிரபலமான "Burger King" துரித உணவகம் தன்னுடைய உணவை "Order" எடுக்கும் பிரிவை "Outsourcing" செய்து விடுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது? இந்த ஒளிப்பதிவை பாருங்க.



இந்தியாவுக்கு வந்து சீனாவுக்கு போயிடுதுப்பா இந்த outsourcing வேலையும் :(

SU-30 Crash

ரஷ்யாவின் SU 30 விமானம் பாரிஸ் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளானதை காட்டும் படம். இதை செலுத்திய இரு விமானிகளும் திறமையாக தப்பித்தனர் அதை இந்த ஒளிப்படத்தின் முடிவில் நீங்கள் பார்க்கலாம்.


ஞாயிறு, நவம்பர் 12, 2006

சனி கோளில் மாபெரும் புயல்.

மாபெரும் புயலின் மையப்பகுதியான கண் எவ்வாறு இருக்கும் என்று தெரியுமா? இப்படத்தை பாருங்கள் இப்படி தான் இருக்கும். கண்ணுன்னா இது கண், என்ன அற்புதமா இருக்கு பாருங்க. இதற்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் நான் "கருவிழியாள்" என்று வைப்பேன் :-).

அறிவியலாளர்கள் சனி கோளில் தோன்றிய இந்த மாபெரும் புயலினை நாசாவின் காசினி (Cassini space probe) கொண்டு அறிந்துள்ளார்கள்.

இந்த புயல் எவ்வளவு பெரியது தெரியுமா? 8000 கி.மீ விட்டமுடையது, காற்று சுழலும் வேகம் மணிக்கு 500 கி.மீ, உயரம் 30-70 கி.மீ.

பூமியை தவிர இப்போழுது தான் வேறு கோளில் ஹரிகேன் போன்ற புயலை கண்டுள்ளார்கள். இதை ஹரிகேன் போன்ற புயல் என்று சொன்னாலும் இது பூமியின் ஹரிகேனிலிருந்து வேறுபட்டது. அதாவது சனியின் இந்த புயல் அசையாமல் நகராமல் ஓர் இடத்திலேயே கட்டி வைத்தாற் போல் இருக்கும்.



சனியின் இப்புயலை விட ஜீபிடரின் சிகப்பு புள்ளி புயல் பல மடங்கு பெரியது ஆனால் அதற்கு புயலின் கண் & கண் சுவர் இல்லாததால் அதை ஹரிகேன் வகை புயலில் சேர்க்கமுடியாது.

பூமியில் ஹரிகேன் வகை புயல் கடலில் உருவாகும் , சனி வாயு கோளானதால் ஹரிகேன் வகை புயல் உருவானாலும் அங்கு கடல் கிடையாது.

தொட்டியில் கையை விட்டு நீரை வேகமாக சுழற்றுங்கள் பின் கையை எடுத்துவிட்டால் தொட்டியில் நீர் சுழி இருக்கும், இந்த புயலின் தோற்றம் அவ்வாறு இருக்கும் ஆனால் அளவு மிகப் மிகப் ... பெரியதாக.

சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட காசினி விண்கலத்தால் (Cassini space probe) வரும் நாட்களில் மேலும் பல புதிய செய்திகள் வருன் என்று நம்பலாம்.

யானை வேட்டை

போஸ்ட்வானா நாட்டில் சிங்கங்கள் யானையை வேட்டையாடும் காட்சி. இரவிலும் பார்க்க கூடிய புகைப்பட கருவியை கொண்டு எடுக்கப்பட்டது.






சுட்ட இடம் பி.பி.சி .

வெள்ளி, நவம்பர் 10, 2006

இந்தியரால் செனட்டை கோட்டை விட்ட GOP.

அமெரிக்க செனட் தேர்தல் முடிந்து விட்டது. வெர்ஜினியாவில் ஜிம் வெப் வெற்றி பெற்றதன் மூலம் குடியரசு கட்சி (GOP)பெரும்பான்மை இழந்து சனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. குடியரசு கட்சிக்கு 49 இடங்களும் சனநாயக கட்சிக்கு 49 இடங்களும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த 2 சுயேச்சைகளும் சனநாயக கட்சி சார்பானவர்கள்.

இதில் கனடிகட் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சையான ஜோ லிபர்மேன் முன்பு 2000 ல் சனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர். இந்த முறை நடந்த சனநாயக உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெர்ஜினியாவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் ஆலன் சுலபமாக வெற்றி பெற்று விடுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். 2008 அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

இவர் வெர்ஜினியாவின் ஆளுநராக இருந்தவர் (1994-98)அப்போது இவரின் போட்டியாளர் மெரி சு டெரி கருத்துக்கணிப்பில் 29% முன்னிலையில் இருந்தார், அதை முறியடித்து 58.3% வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். அதற்கு இப்போ சனநாயக கட்சி பழி வாங்கியுள்ளது.

ஜுலை மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் இவர் ஜிம் வெப் ஐ விட 16% முன்னிலையில் இருந்தார்.

பிறகு தான் இவரின் பிரபலமான நிற வெறி "மக்கக (Macaca)" " கேலி பேச்சு வந்தது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயதுடைய சித்தார்த் என்ற சனநாயக கட்சியை சேர்ந்த தன்னார்வ தொண்டர் இவரின் அனைத்து கூட்டங்களையும் படம் பிடிக்க பணிக்கப்பட்டிருந்தார். கொடுத்த பணியை அவர் செவ்வனே செய்து வந்தார் அதனால் ஜார்ஜ் ஆலனுக்கு சித்தார்த்தை நன்கு தெரியும். ( ஜிம் வெப் ஐ விட என்று நான் கூறுவேன் :-) )

அவருடைய வெள்ளை மக்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தை கருத்தாக சித்தார்த் படம் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்த ஜார்ஜ் ஆலம் ஒக்கமக்கா "மக்கக (Macaca)" படம் எடுக்கறான் பாருடோய்ன்னு மனதில் கருவிக்கொண்டு "இங்கு மகக்காவை வரவேற்போம்! அமெரிக்காவிற்கு வருக , வெர்ஜீனியாவின் உண்மையான உலகத்திற்கு வருக " என்று கிண்டல் பண்ணினார்.

மக்கக என்றால் குரங்கு என்று பொருள் படும், இது ஆப்பிரிக்க மக்களை கிண்டல் பண்ண வெள்ளையர்கள் பயன்படுத்தும் சொல்.

இந்த நிறவெறி பேச்சையும் சித்தார்த் படம் எடுத்துவிட்டார். இதை பார்த்த மிடையங்கள் ஆலனின் மக்கக பேச்சை எடுத்து மக்களுக்கு போட்டு காட்டின. இது அவருடைய வெற்றிக்கு பெரிய அடியாக விழும் என்று அவர் நினைக்கவில்லை.

அவருடைய முன்னனி வெகுவாக சரிந்தது. 1 மாதம் போராடி மககவால் ஏற்பட்ட சேதத்தை ஓரளவு குறைத்தார். ஆனாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரின் மக்கக பேச்சு அவருடைய கனவுகளுக்கு இடியாக விழுந்து விட்டது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் வடவெர்ஜீனியா பல்வேறு இன மக்கள் வாழும் இடமாக மாறிவருவதும் ஆகும். இவரின் தோல்விக்கு முக்கிய காரணம் வடவெர்ஜீனியாவில் இவருக்கு விழுந்த அடி ஏனெனில் அவருடைய மொழியில் நிறைய மக்கக வாழும் இடம் இது.

இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் வெர்ஜீனியா குடியரசு கட்சியின் கோட்டையில் இருந்து விலகி பக்கத்து மேரிலாண்டை போல சனநாயக கட்சி கோட்டையாக மாறிவிடும். எல்லாம் வேகமாக வளர்ந்து வரும் வட வெர்ஜினியாவினால் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

புதன், நவம்பர் 01, 2006

பிரம்ச்சாரிகள் வேலை செய்யும் உணவகம்

(1) பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் உணவகம் எது என்று தெரியுமா?

துப்பு:- இது ஒரு பிரபலமான உணவகம்.

(2) ஏன் இது பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் இடமாக ஆகியது என்று தெரியுமா?

துப்பு:- நீங்கள் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உடையவராய் இருக்க வேண்டும்.

சரி உங்கள் விடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் கேள்விக்கு பதில்:-
சென்னையில் பிரபலமான "ஹோட்டல் சரவணபவன்"

இரண்டாவது கேள்விக்கு பதில்:-
(௧) மாற்றான் மனையை விரும்புபவர் ஹோட்டல் சரவணபவன் முதலாளி அண்ணாச்சி. திருமணமான ஊழியரின் மனைவியை மறுமணம் செய்பவர் முதலாளி அண்ணாச்சி. அதனால் ஊழியருக்கு திருமணமாலும் அது வீண். மனைவியை விட்டு கொடுக்கலைன்னா கொலை செய்ய கூட அஞ்சமாட்டார். அதாவது ஊழியர் திருமணமாகியும் பிரம்மச்சாரி.

(௨) இந்த சங்கதி தெரிந்ததால் திருமணமாகப்போவதாக இருந்தால் ஊழியர்கள் வேலையை விட்டு முன்பே விலகிவிடுவார்கள்.

செவ்வாய், அக்டோபர் 31, 2006

யார் லூசு?

தனியா அமைதியா நடந்து போயிக்கிட்டு இருந்த ஆளு திடீர்ன்னு சிரிச்சுக்கிட்டு நடந்து போனா என்னன்னு நினைப்பிங்க? லூசுன்னு தான்.

தனியா சிரிக்காதடா லூசுன்னு உன்னை நினைக்கப்போறாங்க என்று சொல்வதையும் சிலர் கேட்டிருக்கலாம், சொல்லியிருக்கலாம்.

அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஆச்சு. பூங்காவுல ஊர்ல இருந்து வந்தவர் கூட பேசிக்கிட்டு இருந்தேன் அப்ப ஒரு இளைஞர் திடீர்ன்னு தனியா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். அந்த இளைஞன் தனியா சிரிப்பதை பார்த்த நம் ஊர் காரர் என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை விட்டார் எனக்கு அந்த நமட்டுச்சிரிப்பின் பொருள் புரிந்துவிட்டது. என்ன உங்களுக்கும் தான? :-)

கண்ணால் காண்பதும் பொய் !       காதால் கேட்பதும் பொய் !!       தீர விசாரித்து அறிவதே மெய் !!!

 
அந்த பயல பத்தி தப்பா நினைக்காதிங்க, அவன் 'Blue Tooth' தொழில்நுட்பம் உள்ள செல்பேசியை பயன்படுத்தி யாருக்கிட்டையோ பேசிக்கிட்டு இருக்கான் என்றேன். அப்புறம் அவருக்கிட்ட என்னோட "BlueTooth" செல்பேசியை காட்டி பேசி காட்டினேன்.

இனிமே தனியா பேசிக்கிட்டு, சிரிச்சுக்கிட்டு இருக்கிறவன் ஒன்னு லூசா இருக்கனும் இல்ல 'BolueTooth செல்பேசியை ' பயன்படுத்தி பேசறவனா இருக்கனும்னார்.

நான் BolueTooth செல்பேசியை பயன்படுத்தும் லூசா கூட இருக்கலாம் என்றேன். :-))

புதன், அக்டோபர் 25, 2006

FireFox 2.0 vs IE 7.0

பழையபடி இணைய உலாவி போர் ஆரம்பமாகிவிட்டதா? நெருப்பு நரி (FireFox) 2.0 இணைய உலாவி மைக்ரோசாப்ட்டின் IE 7.0 க்கு போட்டியாக வந்து விட்டது. சொல்லப்போனால் IE 7.0 தான் நெருப்பு நரியின் போட்டியின் காரணமாக நெருப்பு நரியை போன்றே உலாவியை வெளியிட்டுள்ளது. நெருப்பு நரி 1.5 க்கும் நெருப்பு நரி 2.0 க்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் IE 6.0 க்கும் IE 7.0 க்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. அதாவது நெருப்பு நரியின் முக்கிய அம்சங்களை IE 7.0 கொண்டுள்ளது. நெருப்பு நரியில் இல்லாத எதையும் IE கொண்டிருக்கவில்லை.


முக்கியமாக IE 7.0 பயன்படுத்த உங்களிடம் Windows XP இயங்குதளம்( Operating System) இருக்க வேண்டும். ஆனால் நெருப்பு நரி 2.0 ஐ Windows 2000, Windows XP, Linux, Mac OS X போன்ற எல்லா இயங்குதளங்களிலும் புழங்கலாம். என்னிடம் Windows 2000 இயங்குதளம் தான் உள்ளது எனவே நான் இப்போது நெருப்பு நரி 2.0 ஐ நிறுவி இப்போது பயன்படுத்துகிறேன்.

நெருப்பு நரி 2.0 ல் உள்ள சில முக்கிய அம்சங்கள்.

Spell checking
Phishing protection
Stability
Security
Updates
Extensibility
Portability and standards.
Open source

மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 7.0 உலாவியை Windows 2000 இயங்கு தளத்தில் இயங்காதது அவர்களின் வணிக உத்தி தான். IE 7.0 க்காக எல்லோரும் Windows XP or Windows Vista க்கு மாறனுமா? அதிக அளவில் புழக்கத்தில் உள்ள Windows 2000 இயங்குதளத்திலும் வேலை செய்யுமாறு அவர்கள் IE 7.0 ஐ வெளியிட்டிறுக்க வேண்டும் அது தான் முறை.

IE யின் மேம்பாடு நெருப்பு நரியை பொருத்தே உள்ளது. அலுகுனி ஆட்டம் ஆடி போட்டியாளரை அழித்து அதன் பின் உருப்பிடியான தயாரிப்புகளை வழங்காமல் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவது தான் மைக்ரோசாப்ட்டின் வணிக முறை. என்வே நீங்கள் 'IE' ஐ விரும்புபவராக இருந்தால் நெருப்பு நரியை பயன்படுத்துங்கள் அப்போது தான் மேம்பட்ட IE உங்களுக்கு கிடைக்கும்.

நெருப்பு நரியை பயன்படுத்துவது IE ஐ பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது. இதன் காரணமாகவே நான் நெருப்பு நரிக்கு மாறினேன். நான் இன்னும் IE பயன்படுத்துகிறேன் என்றால் அதற்கு காரணம் "தமிழ்". ஆம் தமிழ் எழுத்துக்கள் IE ல் தெரிவது போல் நெருப்பு நரியில் தெரிவதில்லை. இது நெருப்பு நரியின் ஒரு மிகப் பெரிய குறை. விரைவில் இக்குறை தீரும் என்று நம்புவோம். சரவணா காப்பாத்தப்பா. ஆங்கில தளங்களை பார்க்க நான் பயன்படுத்துவது நெருப்பு நரி.

நெருப்பு நரி 2.0 ல் எனக்கு பிடித்த அம்சங்கள் Spell Check, Add-ons, தவறதலாக மூடிய Tab ஐ மீட்க்கும் வசதி "Shift+Ctrl+t" அலுத்தினால் மூடப்பட்ட Tab Window மீட்கப்பட்டுவிடும்.

மைக்ரோசாப்ட்டின் Windows 2000 இயங்குதள பயனாளரான நான் சிறந்த இணைய உலாவி என்று நெருப்பு நரியையே கருதுகிறேன். இணைய உலாவி போரில் நெருப்பு நரியை ஒழித்து இந்த முறை IE வெற்றிபெறுவது கடினம், காரணம் நெருப்பு நரி Open Source.

வெள்ளி, அக்டோபர் 20, 2006

உள்ளாட்சி தேர்தலில் பணம்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டது. ஆனா இத்தேர்தலில் புழங்கிய பணம் என்னை மலைக்க வைத்து விட்டது. சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் புழங்கப்பட்டதை விட பல மடங்கு பணம் இத்தேர்தலில் புழங்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு 100 ரூபாய் என்பது போய் சில இடங்களில் 1000, 1500 ரூபாயெல்லாம் கொடுத்துள்ளார்கள் ( உங்களால் நம்பமுடிகிறதா? ). இவ்வளவு பணம் செலவு செய்து இவர்கள் பெற போகும் பலன் என்ன என்று தான் எனக்கு தெரியவில்லை.

ந‌க‌ராட்சி வார்டு உறுப்பின‌ர்கள், உள்ளாட்சி உறுப்பின‌ர்க‌ள் லட்சக்கணக்கில் ப‌ண‌ம் செல‌வ‌ழித்து வெற்றி பெற்றால் செல‌வு செய்த‌ ப‌ண‌த்தை எடுக்க‌ முடியுமா? அந்த அளவுக்கு உள்ளாச்சிகளில் பணம் புழங்குதா? என‌க்கு தெரியவில்லை.

இவர்கள் என்ன தான் பணம் செலவு செய்து வெற்றி பெற்றாலும் பகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் மீண்டும் அடுத்த முறை வெற்றி என்பதை நினைத்து பார்க்க முடியாது. உள்ளாட்சி அமைப்பின் பலமே இது தான்.


இதில் இந்த‌ க‌ட்சி அந்த‌ க‌ட்சி என்று இல்லாம‌ல் எல்லா க‌ட்சியின‌ரும் செல‌வு செய்துள்ள‌ன‌ர். ப‌ண‌ம் வைத்திருந்த‌வ‌ன் அள்ளி வீசி இருக்கிறான்.


எதுக்குடா இவ்வளவு ப‌ண‌ம் செல‌வு செய்ய‌றாங்க என்று ஆய்ந்து பார்த்தால் திமுக தான் சூத்திரதாரி என்பது புரிந்தது. இப்போ நகராட்சி தலைவரை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்குள் இருந்து ஒருவரை தான் தேர்ந்தெடுக்கனும் முன்னாடி நகராட்சி தலைவர் தனியாக வாக்கு பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் (அமெரிக்க குடியரசு தலைவர் மாதிரி). அதனால ஒருவர் நகரவை தலைவராக வேண்டும்மென்றால் அவர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது அவரை ஆதரிக்கக்கூடிய மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும். அதனால் தலைவர் பதவிக்கு குறி வைப்பவர்கள் மற்றவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும். பழைய முறையாக இருந்தால் எப்படியும் இவர் பணம் செலவு செய்ய வேண்டும் இப்ப அந்த பணத்தை வார்டு வேட்பாளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற வைக்க முயல்கிறார்.


ஏன் திமுக இப்புதிய முறையை கொண்டு வந்தார்கள் என்றால் இப்போ அவர்கள் ஆட்சியில் இருப்பதால் சுலபமாக உறுப்பினர்களை வாங்க முடியும் என்பதாலயே. இதுவே அதிமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு இம்முறை மூலம் பெரிய பலன் இருக்கும். எனவே இப்புதிய தேர்தல் முறையை மாநில ஆளுங்கட்சிக்கு தோதான முறை எனக் கூறலாம்.


உள்ளாட்சி முறையை இவ்வாறு அரசியல் கட்சிகள் பந்தாடுவது மக்களுக்கு நல்லதல்ல. அரசியல் சார்பற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதே உள்ளாட்சிகளுக்கு நன்மைபயக்கும்.

செவ்வாய், அக்டோபர் 17, 2006

அமெரிக்காவில் "மொய்"

தங்கத் தமிழகத்திலே மொய் எழுதும் பழக்கம் உள்ளது யாவரும் அறிந்ததே. சின்னக்கவுண்டர் படம் மூலம் இது தருமமிகு சென்னை மற்றும் பட்டணத்து வாசிகளுக்கும் தெரியவந்தது. இது ஒரு வகையான கடன், வட்டியில்லா கடன் அதாவது கைமாத்து (கை மாற்று மருவி கைமாத்தாகிவிட்டது).
திருமணம் , பூப்பு நீராட்டு, புதுமனை புகுதல், குழந்தைக்கு முதல் மொட்டை & காது குத்து, போன்ற நிகழ்ச்சிகளில் மொய் வாங்குவது வழக்கம். மொய்க்குனே ஒரு பொத்தகம் போட்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று எழுதி வைப்பார்கள். அவர்களின் மொய் வாங்கும் நிகழ்ச்சிகளில் இந்த மொய் பொத்தகத்தை பார்த்து அதே பணம் அல்லது அதை விட அதிகமாக வைப்பார்கள். அதே அளவு பணம் வைத்தால் மொய் உறவு முறிந்துவிடும், எனவே அவங்க வைத்த பணத்தை விட அதிகமாகவே வைப்பார்கள்.
மறு மொய் வைக்காவிட்டால் மானக்கேடாகிவிடும். அவன் பையன் கல்யாணத்துக்கு 100 ரூபா வச்சேன் என் பையன் கல்யாணத்துல அவன் மொய்யே வைக்கலை என்று பேசுவார்கள்.
இதன் தொல்லை காரணமாக சில பகுதிகளில் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதழ்களில் அச்சடித்து கூறினர். காலப்போக்கில் அப்பகுதிகளில் மொய் வாங்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது ( இப்பவெல்லாம் யாரும் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதல்களில் அச்சடிப்பதில்லை).

சின்னக்கவுண்டர் படத்தில் வருவது போன்ற மொய் வாங்கும் பழக்கம் தஞ்சை பேராவூரணி பகுதி மக்களிடம் உண்டு.

இப்ப அமெரிக்க வாழ் மக்களிடம் இந்த பழக்கம் பலமாக வேரூன்றி வருகிறது. அதாவது பரிசு & "Gift Card" என்ற உருவத்தில். இங்க பெரும்பாலும் பிறந்தநாள் விழாக்களை நண்பர்களை அழைத்து கொண்டாடுவர். அப்போது எல்லோரும் பரிசு அல்லது "Gift Card" உடன் வருவர், அதனால் நம்மால எதுவும் வாங்காமல் கைய வீசிக்கிட்டு போய்ட்டு வர முடியலை. நாம பரிசு அல்லது "Gift Card" கொடுத்தால் அவர்களும் நம் வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளுக்கு பரிசு அல்லது "Gift Card" கொடுக்க வேண்டும் என்ற கணக்கு வருகிறது, இது கட்டாய மொய் என்பதற்கு பதிலாக கட்டாய பரிசு என்று வந்துவிட்டது. இப்பழக்கத்தை உடைக்க வேண்டுமென்றால் விழா அல்லது நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது பரிசு எதுவும் வேண்டாம் "Your Presence is Best Present" என்று சொல்லி அழைப்பது தான்.

திங்கள், அக்டோபர் 09, 2006

தமிழ் பெயர் - உதவி வேண்டும்.

என் நண்பன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க விரும்பி சிறிய அழகான தமிழ் பெயர்களை கூறுமாறு கேட்டான். மூன்றுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை எல்லாம் வடமொழி அல்லது வடமொழியோ என்று ஐயம் உள்ள பெயர்களே. ஒரு வாரம் யோசனை செய்து ஒரு 10 பெயர்களை கூறிவிட்டேன்.

இணையத்தில் தேடியதில் நிறைய சிறிய பெயர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் பெரிய பெயர்களாகவே இருந்தன.

என் நண்பனின் நிபந்தனை:-
பெயர் 4 எழுத்துக்குள் இருக்க வேண்டும், ரொம்ப நல்ல பெயராக இருந்தால் 5 எழுத்துக்கு விதி விலக்கு உண்டு உ.தா. இலக்கியா. "ழ" இல்லாமல் இருத்தல் நலம் என்பது அவன் எண்ணம் ஏனென்றால் அமெரிக்காவில் உள்ளதால் "ழ" ஆனது "ல" ஆகி பெயரின் பொருளை மாற்றிவிடும் என்பதால். இருந்தாலும் சில பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்ததால் (யாழினி) இங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.


உங்களுக்கு தெரிந்த சிறிய பெண் குழந்தைக்கான தமிழ் பெயர்களை பின்னூட்டத்தில் கூறி என் நண்பனுக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் யாரேனும் தமிழ் பெயர் கேட்டால் இப்பட்டியலை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.

இதுவரை அவனிடம் உள்ள பெயர் பட்டியல்:-

அல்லி
அருவி
அகலி
அந்தி
அன்னம்
அனிச்சை
அரசி
அன்பரசி
அழகி
ஆதிரை

இலக்கியா
இனியா
இளமதி
இன்பா
இனிமை

உமையாள் - உமையா
உமை

எழில்
எழிலினி

ஐயை

ஒளி
ஓவியா
ஔவை

கயல்
கயல்விழி
கண்மணி
கண்ணகி
கனிமொழி
கவி
கலை
காவியா
காவேரி
காந்தள்
சிட்டு
கோதை

குழலி
குமுதம்
குமாரி
குமரி
குயிலி

கொற்றவை
கோமதி
கோமளா - தமிழா ??

சுடர்
சுருதி - தமிழா? பொன்ஸ்க்கே ஐயம் வந்துவிட்டது.
செண்பகம் - செண்பகா
செவ்வந்தி
செல்வி

தமி
தமிழ்
தமிழினி
தமிழரசி
தமிழிசை
தாமரை
தென்றல்
தேனினி
தேன்மொழி

நிலா
நிலானி
நிலாவினி
நித்திலா
நிறைமதி
நங்கை
நந்தினி - நந்தி தமிழ் என்றால் நந்தினியும் தமிழ்.
நாச்சியார்
நாமகள்

பாவை
பாவாயி
புகழினி
புனிதா - புனிதம் தமிழ் என்றால் புனிதாவும் தமிழ்.
பூவை
பூங்கோதை
பூங்குயில்
பிறை
பொன்னி
பொன்மணி

மகிளா / மகிழா ?
மகிழம்
மங்கை
மதி
மலர்
மணி மலர்
மயில்
மல்லி
மகிழினி
மஞ்சுளா - தமிழ் என்று நினைக்கிறேன் மஞ்சு விரட்டு - மஞ்சள் - மஞ்சுளா.
மாதவி
மீனா
முல்லை
முழுமதி
மின்னல்
மேகலை
மேகலா

யாழினி

வடிவு
வள்ளி
வல்லி
வசந்தி
வதனி, வதனா - வதனம் (முகம்) தமிழ் என்றால் வதனி, வதனாவும் தமிழ்.
வானதி
வான்மதி
வளர்மதி
வெண்ணிலா

செவ்வாய், செப்டம்பர் 19, 2006

கோவை ஆத்துப்பாலம்.

கோவை ஆத்துப்பாலம் பிரசித்தி பெற்ற இடம் எதனால் என்று தெரியுமா உங்களுக்கு?
நொய்யல் ஆறு செல்வதாலா? பொள்ளாச்சி, கேரளா செல்லும் வண்டிகள் இதை கடந்து செல்வதாலா? உக்கடம் அருகில் உள்ளதாலா? சில பேர் கிண்டலாக இதை வாய்க்காப்பாலம் என்பதாலா? கோவைகாரர்களுக்கு நன்றாக தெரியும்.

கோவை மாநகரானது ஆத்துபாலத்துக்கு இந்தப்பக்கமும் நன்றாக வளர்ந்துள்ளது. குனியமுத்தூர் நகராட்சி பாலத்துக்கு இப்பக்கம் உள்ளது. நிறைய மக்கள் வேலைக்கு செல்ல, துணிமணி வாங்க, பெரிய கடை வீதிக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். சுருக்கமா சொன்னா காலையில் டீ குடிக்க, பல் துலக்க, முகம் கழுவ கூட நிறைய பேர் ஆத்துப்பாலத்தை கடப்பார்கள்.

இது ஒரு சிறிய பாலம் ஆனா முக்கியமான இடத்தில் உள்ளது. இதுல என்ன பிரச்சனைன்னா இதை கடப்பதற்கு சுங்கம் (Toll) கட்ட வேண்டும். அதில் என்ன தப்பு என்று கேட்பவர்களுக்கு, தினமும் பயன் படுத்தும் உள்ளூர் மக்களும் இதற்கு சுங்கம் கட்ட வேண்டும். ஊரின் நடுவில் உள்ள இச்சிறு பாலத்தை அரசு கையகப்படுத்தி சுங்கம் வசுலிப்பதை நிறுத்த வேண்டும். ஆனா என்ன காரணத்தாலோ மாநகராட்சி / அரசு இதை செய்ய மறுக்கிறது. இப்பாலத்தில் சுங்கம் வசுலிப்பதனால் இங்கு போக்குவரத்து நெரிச்சலும் ஏற்படுகிறது. ஊருக்கு நடுவில் அவசியமற்ற நெரிச்சல்.

என்னை பொருத்தவரை இப்பாலம் கட்ட அதிகபட்சம் ரூபாய் 2 கோடி ஆகியிருக்கலாம். இந்த வாய்க்காப்பாலத்தை (ஆத்துப்பாலம்) கட்ட சென்னை நேரு அரங்க புகழ் "L&T" பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

கிட்டத்தட்ட இதை கட்டி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது, போட்ட காசுக்கு மேல பல பல மடங்கு லாபம் பார்த்திருப்பார்கள் ஆனால் இன்னும் சுங்கம் வசுலிக்கிறார்கள். இப்போ இது அதிகாரபூர்வமான ஒரு பகல் கொள்ளை. சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?

வெள்ளி, செப்டம்பர் 15, 2006

திகிரி காபியாகுமா? - 1

சொல் ஒரு சொல்லில் இராகவன் திகிரி என்ற தமிழ் சொல்லுக்கு பொருள் சக்கரம் என்று கூறியிருந்தார். திகிரி என்றால் சக்கரம். அப்ப சக்கரத்தாழ்வார் திகிரியாழ்வாராக திரிகிறார். திகிரி டிகிரியாக மறுவும். ஆதலால் திகிரியாழ்வார் டிகிரியாழ்வாராக அறியப்படுவார். டிகிரி காபியின் சுவை சிறந்தது அதனால் மக்கள் டிகிரியையும் காபியையும் பிரித்து பார்ப்பதில்லை. ஆகையால் டிகிரியாழ்வார் காபியாழ்வாராக அறியப்படுவார்.

காபியாழ்வார் என்ற பெயர் இருப்பதால் பால் அபிசேகம் கூடாது அவருக்கு காபி அபிசேகம் தான் செய்யவேண்டும் என நியதி உருவானது.

பிள்ளையார் பால் குடித்த போது காபியாழ்வாருக்கும் பால் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அதை குடிக்கவில்லை என்றும் காபி கொடுத்ததும் குடித்தார் என்றும் செய்தி பலமாக பரவியதால் காபியாழ்வாரின் புகழ் வெளிநாடுகளுக்கும் எட்டியது.

பக்தர்கள் இன்ஸ்டென்ட் காப்பி & பில்டர் காப்பி போன்ற காபிகளை அபிசேகத்துக்கு கொண்டுவந்தனர். அபிசேக காப்பியை குடித்தால் வந்த பிணி ஓடும், எந்த பிணியும் அண்டாது என்ற செய்தி பரவியதால் காப்பியாழ்வாரின் புகழ் உச்சத்தை அடைந்தது.

எல்லா மதத்தவரும் அபிசேக காப்பியை குடித்து மத நல்லினக்கம் பேணினர். அரபு நாடுகளுக்கும் அபிசேக காபி சென்றது. அரபு அரசாங்கங்கள் இது இந்து மத சாமியின் காபி என்பதால் இக்காபிக்கு தடை விதித்தன. அங்கிருந்த நம்மூர் ஆளுகளுக்கு இது பெரிய சோதனையா போயிடுச்சு. அப்புறம் கள்ள சந்தையில வாங்கி தான் அபிசேக காபியை அவங்க குடிச்சாங்க. அரபுகாரர்களும் கள்ள சந்தையில் வாங்கி அபிசேக காபியை குடிச்சாங்க என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அரபு அரசாங்கங்கள் மத சம்பதப்பட்ட சங்கதியில் ரொம்ப கெடுபிடின்னு தெரியும் இல்லையா, கள்ள காபி சந்தை பற்றி தெரிந்து ஒட்டு மொத்த காபிக்கே அங்க தடை விதிக்கப்பட்டது. பாவம் காபி பிரியர்கள். ஆனா துபாய்ல மட்டும் விதிவிலக்கா காபியை விற்றாங்க ஏன்னா அது பன்னாட்டு சந்தை பல வெளிநாட்டு காரங்க காபிக்கு அடிமை காபி குடிக்கலைன்னா அவங்களுக்கு வேலை ஓடாது. துபாய் காரன் வெளிநாட்டை பகைச்சுக்க முடியுமா ( வெளிநாடுன்னா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுன்னு பொருள்). ஆனா அமெரிக்காவின் StarBucks துபாயில் இருந்ததால் தான் துபாய் அரசு காபியை தடை பண்ணவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எப்படியோ நமக்கு துபாயிலயாச்சும் காபி கிடைச்சா சரி.

காபி கிடைக்காத கோவத்துல அரபு நாட்டுல மனித உரிமையே கிடையாது அப்படின்னு ஒருத்தர் தன் அனுபவத்தை பதிவா போட்டார். அதுக்கு ஆதராவாகவும் எதிர்ப்பாகவும் வலைப்பூவில் பலர் எழுதினர். காபி குடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கறப்போ அதை மதித்து நடக்கனும் என்று ஒருவரும் அமெரிக்காவில் காபி குடிக்ககூடாதுன்னு சொன்னா கேப்பிங்க அரபு நாட்டுல் சொன்னா மட்டும் மனித உரிமை அப்படின்னு பேசுவிங்கன்னு காட்டமா எழுதினார். இன்னொருத்தர் காபி குடிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது அதை முஸ்லிம்கள் குடிக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்று சொல்லி குரானில் இருந்து பல வாசகங்களை எடுத்து பதித்தார். அதுக்கு பதிலளித்த இன்னொறுவர் ஏதோ அந்த காலத்துல அரபுக்களுக்கு காபி குடிச்சா ஒத்துக்காம போயிறுக்கும் அதனால காபி குடிப்பது தப்புன்னு சொல்லிருப்பாங்க இப்ப குடிக்கிறதில் தவறு இல்லைன்னார் அதுக்கு இன்னொருவர் குரான் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும் அதை பல பல அறிஞர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லி காபி குடிப்பது தவறே ஒரு உண்மையான முஸ்லிம் அதை செய்ய மாட்டான் என்றார். உடனே காபி குடிக்கும் & குடிக்காத மற்ற மதத்தவர்கள் இதற்கு எதிர் பதிவு போட்டனர்.

உடனே ஒரு நல்லவர் இஸ்லாம் காபிக்கு என்றும் எதிரியல்ல முஸ்லிம் அல்லாதவர்கள் காபி குடிக்கலாம் அதை குரான் தடுக்கவில்லை, குரானில் வரும் அரபிச் சொல்லான காபியை அது எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியாமல் இஸ்லாம் மேல் அவதூறு சொல்வதற்காக காபி என்ற சொல்லை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்று சாடினார். அரபியில் அது "காஃபி" , எல்லோரும் தவறாக உச்சரிக்கிறோம் என்று சொன்னார். அல் உஸ் காஃபி சலாம், அல் தீம் காஃபி இஸ்மில்லா, அல் காஃபி, அல் அக்பர் காஃபி யிலாகி, லேடன் மதினா காஃபி பின் ஸேக் , ரஸல் காஃபி குஸ் என்பதற்கு விரிவான விளக்கம் கொடுத்தார்.
அவருடைய காஃபி விளக்கம் காபியை கொண்டு இஸ்லாமை தாக்குகிறவர்களுக்கு ஒரு சாட்டையடி என்று பலர் பின்னூட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய அரசு காபியை தேசிய பானமாக அறிவித்தது, சாப்பிட்டு முடித்த பின் அல்லது காலையில் அல்லது மாலையில் காபி குடிப்பது நல்லது என்று அரசு உத்தரவு போட்டது. உடனே டெல்லி இமாம் எதிர் குரல் கொடுத்தார் காபி குடிப்பது இஸ்லாமுக்கு எதிரானது மற்றும் இந்து கடவுளுக்கு இது அபிசேக பொருள் ஆதலால் முஸ்லிம்கள் காபி குடிக்ககூடாது என்று ஒரு பாத்வா போட்டார்.

ஒரு தேசிய பானத்தை எப்படி அவமதிக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியது. இமாம், இஸ்லாம் "டீ" குடிப்பதை தடுக்கவில்லை, காபியை தடுக்கிறது எனவே எங்களால் காபி குடிக்க முடியாது என்றார். இது வலையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒருவர் தேசிய பானத்தை விட முஸ்லிம்களுக்கு மதம் பெரிதாகிவிட்டது வருத்தமளிக்கிறது என்றார். டிகிரி காபியா குடிக்க சொல்றாங்க இன்ஸ்டன்ட் காபி தானே குடிக்க சொல்றாங்க என்று கூறினார்.

வட்டி வாங்குவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளதால் வங்கியில் இருந்து வட்டி வாங்கக்கூடாது, வைப்பு நிதியில் பணம் போட கூடாது, முஸ்லிம் யாரும் வங்கியில் வேலை செய்யக்கூடாது என்று இமாம் ஏன் பாத்வா போட வேண்டியது தானே என்றார் ஒருவர். இன்னொருவர் நக்கலாக அப்படி போட்டால் அவருக்கு வர வேண்டிய வட்டி பணம் கிடைக்காமல் போயிடும் எப்படி போடுவாறு? என்றார்.

ஒரு Tee Totaller அரசு உத்தரவால் கடுப்பாகி காபியோ டீயோ மக்கள் விரும்பி குடிக்கனும் இதை குடி அதை குடிக்காத என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றார்.

சனி, செப்டம்பர் 02, 2006

உலகில் இந்திரா நூயி 4வது சக்திமிக்க பெண்

போர்ப்ஸ் இதழ் உலகின் 100 சக்தி மிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களான காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பெப்ஸி நிறுவன தலைவி இந்திரா நூயி , ICICI வங்கி தலைவிகள் லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா, ஜம்போ குழும தலைவி வித்யா சாப்ரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜெர்மனி அதிபர் ஆஞ்சல மெர்க்கெல் உலகிலேயே அதிகாரமிக்க பெண்ணாகவும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் கான்டலினா ரைஸ் 2வது அதிகாரமிக்க பெண்ணாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திரா நூயிக்கு 4வது இடம், சோனியா காந்திக்கு 13வது இடம், லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா க்கு 93 வது இடம், வித்யா சாப்ரியா க்கு 95 வது இடம்.


இதிலிருந்து என்ன தெரிகிறது?

எக்காலத்திலும் 'சோனியா' 'இந்திராவை' விட அதிகாரம் / சக்தி உள்ள பெண்ணாக முடியாதுங்கிறது தெரிகிறது.

http://www.forbes.com/lists/2006/11/06women_The-100-Most-Powerful-Women_Rank_1.html


இந்திரா நூயி தமிழ்நாட்டுப்பெண். இவர் சென்னையில் 1955 ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிருத்துவ கல்லூரியில் இளங்கலை பட்டமும், கல்கத்தா "Indian Institute of Management" -ல் முதுநிலைப்பட்டமும் பெற்றார்.

இந்தியன் என்ற முறையிலும் தமிழ் நாட்டுக்காரன் என்ற முறையிலும் இந்திரா நூயி க்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi



புரச்சித்தலைவி , இரும்புமங்கை போன்ற பல பட்டங்களை பெற்ற அ.தி.மு.க வினரால் அன்புடனும் பயத்துடனும் 'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா இந்த பட்டியலில் இடம்பெறாதது ஒன்றே போதும் போர்ப்ஸ் இதழ் காங்கிரஸ் & தி.மு.க விடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இப்பட்டியலை தயாரித்தது என்பதற்கு என்று 'வை.கோ', 'காளிமுத்து', 'பன்னீர்செல்வம்' & பல அதிமுக பிரமுகர்கள் தனி தனியாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.


டெல்லியிலில் நடக்க இருக்கும் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவை அழைக்க வந்த "சுப்பிரமணிசாமி" இதற்கான ஆதாரம் உள்ளதாகவும் சி.ஐ.எ மூலம் இதை தான் பெற்றதாகவும் கூறியுள்ளார். பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் இதழை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதினன்றத்தில் வழக்கு போடபோவதாக சொன்னார்.

"சோ" துக்ளக்கில் கேலிச்சித்திரம் வரைந்தும் கேள்வி பதிலில் நையாண்டியாக பதில் கூறியும் அவருக்கே உரிய முறையில் போர்ப்ஸ் பட்டியலை விமர்சித்துள்ளார்.

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

ஜீனாவால் கெட்ட புளூட்டோ

செக் குடியரசின் தலைநகரான பிரேஃகில் (Prague) 2700 வானியலாளர்கள் (நம்ம ஊர் சோசியகாரங்க போனாங்கனான்னு தெரியலை) சேர்ந்து புளூட்டோன்னு இருந்த கிரகத்த அது கிரகமில்லைன்னு சொல்லிட்டாங்க , .
அதனால் இனிமேல் சூரியனுக்கு எட்டு கிரகங்கள் தான் ஒன்பதுன்னு நாம படிச்சத மாற்றிக்கொள்ளனும். ஆசிரியர்கள் இதை மாணவர்களுக்கு சொல்லி விளங்க வைக்கவேண்டும். அடுத்த ஆண்டு பாட புத்தகத்தில் மாற்றம் செய்வாங்களா? முதலமைச்சர் அல்லது பிரதமர் மாறினாலே 5 ஆண்டு கழித்து தான் மாற்றுவங்க இதை சீக்கிரம் மாற்றுவாங்களா? ;-) அதிகம் ஆசை படக்கூடாது.

1930 ஆம் ஆண்டு புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டு சூரிய குடும்பத்தில் ஒரு கிரகமாக சேர்க்கப்ப்பட்டது. அப்பவே சிலர் இதுக்கு கிரக தகுதி கொடுக்கக்கூடாதுன்னு தகராறு செய்திருக்காங்க. அப்ப அவங்க பேச்சு எடுபடலை. அதுக்கப்புறம் நம்ம தாத்தா, அப்பா, நாம, நம்ம புள்ளைங்க எல்லாம் சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருக்குன்னு படிச்சிக்கிட்டு வந்தோம், வர்றோம். நவகிரக நாயகின்னு பாட்டு எல்லாம் எழுதி கொண்டாடுனோம். 3 ஆண்டுக்கு முன் எடுத்த ஒரு புகைப்படம் இதுக்கு ஆப்பு வைத்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த புகைப்படத்தைக் கொண்டு 2005-ல் மைக் பிரௌன் என்பவர் புதிய கோளை கண்டுபிடித்தார் அதை 2003 UB313 என்று தற்காலிகமாக பெயரிட்டார்கள். ஆனா அவரு செல்லமா ஜீனா(Xena)ன்னு பெயரை வைத்துக்கொண்டார். இந்த புது கோளானது புளூட்டோவை விட அளவில் சற்று பெரிதாக போனதன் விளைவுதான் புளூடோவுக்கு வினையாக அமைந்துவிட்டது. அதாவது குறுக்குவாட்டுல (விட்டம்) 240 கி.மீ பெருசு. அதனால இதையும் ஒரு கோளாக சூரிய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. நியாயமான கோரிக்கை புளூட்டோவுக்கு கோள் என்ற தகுதி கொடுத்தால் நம்ம ஜீனாவுக்கும் கொடுக்கனும் அது தான் முறை. இந்த கோரிக்கையை பன்னாட்டு வானியலாளர் அமைப்பு (International Astronomical Union's) விவாதித்தது, ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் "கோள்" என்று வரையறுக்க இதுவரை தெளிவான விதிகள் இல்லை. சரி கோளுக்குன்னு சில விதிகளை வரையறுக்கலாம் என்றும் அதன் அடிப்படையில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்களை அது கோளா இல்லை கோலி குண்டான்னு முடிவு செய்ய முடிவெடுத்து விதிகளையும் வரையறுத்தார்கள்.

இந்த புதிய விதியின் படி புளூட்டோவின் கோள் என்ற தகுதிக்கு ஆபத்து வந்தது. கடும் விவாதம் நடந்தது புளூட்டோவை கோள் என்று சொல்லி பழகிவிட்டதால் அதன் தகுதியை குறைக்க கூடாது என்று சிலர் வாதாடினர், அப்படியென்றால் நம்ம ஜீனாவுக்கும் மேலும் 2 பொருட்களுக்கும் (புளூட்டோவின் நிலவு செரோன் "Charon", விண்கல் செரெஸ் "Ceres" ) கோள் என்ற தகுதியை கொடுக்க வேண்டும். சூரிய குடும்பத்தின் கோள் எண்ணிக்கை 12 ஆக உயரும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பல புதிய பொருட்கள் (Objects)கண்டுபிடிக்கப்படும், புளூட்டோவுக்கு கோள் என்ற தகுதி இருந்தால் பின்னால் அது போல் நூறு கோள்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் என்னசெய்வதென்று வானியலாளர்கள் விவாதித்தனர்.

சிக்கலுக்கு ஒரே வழி புளூட்டோவுக்கு இருந்த கோள் என்ற தகுதியை நீக்குவது என்று முடிவு செய்து அறிவித்துவிட்டனர். இனி சூரிய குடும்பத்துக்கு 8 கோள்களே (Classical Planets), புளூட்டோ, ஜீனா, செரோன், செரெஸ் போன்றவை சிறு கோள்கள் ( Dwarf Planets) என்ற வகையில் அடங்கும்.

சரி கோள் (Classical Planets) என்பதற்கான புதிய வரையறை என்ன?
இயற்கைநேசி தெளிவாக தமிழ் படுத்தி தன் பதிவில் சொல்லி இருக்கிறார்.

1) கோள் சூரியனை மையமாக வைத்து சுற்றி வர வேண்டும்.

2) கோளின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அதன் வடிவத்தை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டும்.

3) கோளின் அண்டைய வழியில் (சுற்றுபாதை/Orbit) மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியாதாக இருக்கவேண்டும். (has cleared the neighbourhood around its orbit.)

புளூட்டோவின் நீள்வட்ட சுற்று பாதையானது நெப்டூயுனின் சுற்றுப்பாதையோடு மேற்பொருந்தி (Overlap)செல்வதால் புதிய வரையறையின் படி இது தானாக தகுதி இழந்துவிட்டது.

சிறு கோள்களுக்கான (Dwarf Planets) வரையறை.

1. சூரியனை சுற்றிவர வேண்டும்.

2. அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை இதன் வடிவத்தை கிட்டத்தட்ட வட்ட வடிவில் எடுத்து சென்றிருக்க வேண்டும்.

3. தன் சுற்றுப்பாதையை தெளிவாக வைத்துக்கொள்ளாதது. பல பொருட்கள் பாதையை பயன்படுத்தலாம், ஊடாக செல்லலாம், மேற்பொருந்தலாம். (has not cleared the neighbourhood around its orbit.)

4. துணைக்கோளாக (satellite) இருக்கக்கூடாது. அதாவது அடுத்த மொருளை மையமாக கொண்டு சுற்றி வரக்கூடாது. உ.தா. நிலா (பெரிய துணைக்கோள்) இது பூமியை மையமாக கொண்டு சுற்றி வருவதால் இது சிறு கோள் என்ற வரையறைக்குள் வராது.

புளூட்டோ நீக்கத்தை சில வானியலாளர்கள் ஆதரிக்கவில்லை / ஒத்துக்கொள்ளவில்லை. புது வரையறை தெளிவில்லாதது என்று கூறுகிறார்கள். நெப்டியூன் தன் பாதையை சுத்தமா வைத்திருந்தா புளூட்டோ ஏன் மேற்பொருந்தி செல்லுகிறது என்று கேட்கிறார் ஆலன் ஸ்டெர்ன் (Dr. Alan Stern) அப்ப நெப்டியூனுக்கு கோள் என்ற தகுதி கிடையாது. அதுவும் இல்லாம நம் பூமியின் சுற்று பாதைக்கருகில் பல ஆயிரக்கணக்கான விண்கற்கள் சுற்றுகின்றன, வியாழனின் சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான விண்கற்கள் சுற்றுகின்றன ஆகவே அவையும் கோள் என்ற தகுதியை இழக்கின்றன என்று ஆலன் ஸ்டெர்ன் கூறுகிறார்.

மழை விட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி புளூட்டோவுக்கு கோள் தகுதியை தரவேண்டும் என்று ஒரு குழு போராட தொடங்கியுள்ளது.

புளூட்டோவை நினைத்தா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதை தான் நினைவுக்கு வருது.

satellite - துணைக்கோள் , நிலா
asteroid - விண்கல்

சனி, ஆகஸ்ட் 19, 2006

Thatstamil.com க்கு என்னவாயிற்று?

இரண்டு நாட்களாக "thatstamil.com / thatstamil.oneindia.in" தளம் தெரியவில்லை. "The page cannot be displayed" என்ற பக்கமே தெரிகிறது. இத் தளத்திற்கு என்னவாயிற்று என்று யாருக்காவது தெரியுமா?

திங்கள், ஜூலை 31, 2006

இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதா?

இலங்கை அரசு "மனிதாபிமான" நடவடிக்கையாக தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட வான் படை & தரைப்படை குண்டுவீச்சை தொடர்ந்து இலங்கையில் போர்நிறுத்தம் காலாவதியாகிவிட்டதாக புலிகளின் திருகோணமலை அரசியல் பிரிவு தலைவர் எழிலன் அறிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர்நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவில்லை என்றும் இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை மனிதாபிமானத்தின் பால் எடுக்கப்பட்டதென்றும் கூறியுள்ளது. சிங்கள விவசாயிகளின் பயிர்கள் வாடுவது குறித்து மனிதாபிமான முறையில் கவலை கொள்ளும் அரசு தமிழ் மக்கள் குடிநீருக்காக தவிப்பது குறித்தும் மனிதாபிமான முறையில் கவலை கொண்டு அவர்கள் கவலையை போக்கினால் நன்றாக இருக்கும்.

இலங்கை அரசின் மனிதாபிமான நடவடிக்கையே குண்டுவீச்சு என்றால் இராணுவ நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அப்பட்டமான போர் நிறுத்தமீறலாக இருந்த போதிலும் இந்த குண்டுவீச்சை எந்த நாடும் கண்டித்ததாக தெரியவில்லை. ஒரு வேளை அவர்களும் இந்த குண்டுவீச்சு மனிதாபிமானது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்காணிப்பு குழு தலைவர் மட்டும் இந்த மனிதாபிமான தாக்குதல் தவறு என்று கூறியுள்ளார்.

இது வரை புலிகளின் நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் தாகுதலுக்கு எதிர் நடவடிக்கையாகவே உள்ளது.

பொதுவாக போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்துவிட்டதாக புலிகள் நினைத்தால் அது பலமான ஒரு தாக்குதலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தப்படும். இது வரை அப்படியொரு பலமான தாக்குதல் ஏதும் நடைபெறாததால் புலிகள் இன்னும் போர்நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்கிறார்கள் என்று கொள்வோமா?

வெள்ளி, ஜூலை 28, 2006

2006 Tour De France சட்டை கைமாறுகிறது

Tour De France -ன் இந்த ஆண்டு வெற்றியாளரான Floyd Landis ஊக்க மருந்து உட்கொண்டதாக சோதனையில் அறியப்பட்டுள்ளார். இதனால் இவரின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது, அவரது அணி பொனக்(Phonak) அவரை அணியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. 2வது மாதிரியை இன்னும் சோதனை செய்யவில்லை. அதன் முடிவை பொருத்து பன்னாட்டு சைக்கிள் அமைப்பு லெண்டிஸ் மீது நடவடிக்கை எடுக்கும்.


சைக்கிள் போட்டிகளிலேயே "Tour De France" தான் ராசா போட்டி அதாவது இது சைக்கிளின் உலக போட்டி. இதன் தூரம் எவ்வளவு தெரியுமா? 3000 - 4000 கி.மீ. ஒவ்வொரு ஆண்டும் இதன் தூரம் மாறும் ஆனால் 3000 கி.மீ க்கு கீழ் செல்லாது. இந்த ஆண்டு தூரம் 3657 கி.மீ. இது 20 கட்டங்களாக நடத்தப்படுகிறது, ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு நாள் அதன் படி 20 நாள், 2 நாள் ஓய்வு, ஆக மொத்தம் 22 நாள் இந்த போட்டி நடக்கும்.


இவ்வளவு கடுமையான போட்டியாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிப்பவருக்கும் 2 ம் இடத்தை பிடிப்பவருகும் இருக்கும் நேர இடைவெளி மிக குறைவு அதாவது ஒரு நிமிடம் இருக்கும் போட்டியின் கடுமை புரிகிறதா?

15 தாவது கட்டத்தில் முன்னனியாளராக இருந்த லெண்டிஸுக்கு கடும் சோதனை 16வது கட்டத்தில் வந்தது, தடுமாறி விழுந்தார் அதில் மதிப்புமிக்க 10 நிமிடங்களை இழந்தார், 16-ம் கட்ட முடிவில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் (Oscar Pereiro)இடையேயான நேர இடைவெளி 8 நிமிடமாக அதிகரித்தது. 11-ம் இடதுக்கு தள்ளப்பட்டார். இன்னும் 4 கட்டங்களே உள்ளன அதில் 8 நிமிட நேர இடைவெளியை குறைத்து வெற்றி பெறுவது என்பது மிக கடினம் என்பதால் லெண்டிஸின் கதை 2006 போட்டியில் காலி என்று அனைவரும் முடிவு செய்துவிட்டனர்.

ஆனால், எல்லோரும் அதிசயத்தக்கவகையில் பெரும் சாதனையாக 17வது கட்டத்தை லெண்டிஸ் வென்றார் இது சாதாரண வெற்றியல்ல இதில் அவருக்கும் முன்னனியாளரான ஆஸ்கார் பெரைரோவுக்கும் ஆன நேர இடைவெளியை 8 நிமிடத்தில் இருந்து 30 வினாடிகளாக கொண்டுவந்தார்.

19 & 20 ம் கட்டங்களில் முதல் நிலையை அடைந்து "Tour De France"ன் மஞ்சள் சட்டையை தனதாக்கிக்கொண்டார். 2வது இடத்தை பிடித்த ஆஸ்கார் பெரிரோவுக்கும் இவருக்குமான நேர இடைவெளி 57 வினாடிகள்.

இப்ப மஞ்சா சட்டை பறிபோகும் போல இருக்கு. 2வது மாதிரியின் முடிவை பொறுத்தே இது அமையும். முதல் மாதிரியிலிருந்து 2வது மாதிரியின் முடிவு பெரும்பாலும் மாறாது என்று கூறுகிறார்கள் அதன் படி முதல் இடம் ஆஸ்கார் பெரைரோவுக்கு போகப்போகிறது. 17வது கட்ட முடிவில் எடுக்கப்பட்ட மாதிரியில் தான் "டெஸ்டாஸ்டரோன்" (testosterone)அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக கண்டுள்ளார்கள்.

இப்பந்தயத்தில் லெண்டிஸ் இடுப்பு எலும்பு (Hip ailment -osteonecrosis) பிரச்சனையோடே கலந்து கொண்டார். விரைவில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறார்.

கடுமையான இடுப்பு எலும்பு வலியுடன் 3567 கி.மீ சைக்கிள் ஓட்டியது என்னை பிரமிக்க வைக்கிறது. பதிவு எழுத தூண்டியதும் இந்த பிரமிப்பே.

என்ன சாதனை செய்து என்ன பயன்? ஊக்க மருந்து உட்கொண்டதால் அனைத்தும் வீணாவதுடன் பழிச்சொல்லும் அல்லவா காலத்துக்கும் உடன் வரும்.


செவ்வாய், ஜூலை 18, 2006

அமெரிக்காவில் கண்ணையன்

அமெரிக்காவுக்கு வந்த 'கண்ணன்' ஒரு 'பீரங்கி' ஆனார். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
அமெரிக்கர்கள் கண்ணனை '"கேனன்'" என்று தான் உச்சரிப்பார்கள். பெருமையா இருக்கா? நல்லது.

ஆனா பாருங்க அமெரிக்காவில் "கண்ணையன்" பொழப்புதான் மோசம். எப்படினு கேட்கரீங்களா?
.
.
.
.
.
.
கண்ணன் 'கேனன்' ஆனா கண்ணையன் "கேனயன்" ஆகிடுவாரே.

வெள்ளி, ஜூலை 07, 2006

இலங்கையில் தடை செய்யப்பட்டவை.


1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்"

2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்"

3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி "

4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி"

5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்".

6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார்.

7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை"

8) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " டைகர் வுட்ஸ் "

9) இலங்கை அரசுக்கு பிடிக்காத விலங்கு "புலி".

10) இலங்கையில் தடை செய்யப்பட்ட உணவு பண்டம் " புளி " புளியை புலியா நினைத்து தடை பண்ணிட்டாங்க. அதனால கொழும்பு போனா புளிக் குழம்பு வேண்டும், புளி இரசம் வேண்டும் என்று கேட்காதிங்க. ஆனா அதிரசம் கிடைக்கும். :-)

11) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஏப்பம் "புளி ஏப்பம்" புளியை புலியா நினைத்து தான் காரணம்.


புதன், ஜூலை 05, 2006

AIIMS போராட்டத்தால் இதய நோயாளி மரணம்

உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.



http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&



என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

செவ்வாய், ஜூலை 04, 2006

சேவல் பலியிட்டு சங்கர மட வேலை தொடக்கம்

கொலை, கைது, ஜெயில் என்று இதுவரை சந்தித்திராத அளவு பெரும்சோதனையில் காஞ்சி மட சங்கராச்சாரியார்கள் உள்ளனர். இதனால் மட மக்கள் மடத்தில் வாஸ்து தோசம் ஏதாவது உள்ளதா என்று வாஸ்து அறிஞர்களை கொண்டு ஆராய்ந்தனர்.

ஆராய்ந்ததில் காஞ்சி சங்கர மடத்தின் முன் பகுதி நுழைவாயில் வாஸ்து குறைபாடுடன் உள்ளதாக வாஸ்து அறிஞர்களால் அறியப்பட்டது.

அதனால் வட பகுதியிலுள்ள நுழைவாயிலை இடித்துவிட்டு கிழக்கு திசையில் நுழைவாயிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் கிழக்குப்பகுதியில் இருந்த கடைகள் காலிசெய்யப்பட்டன.

தற்போது காலிசெய்யப்பட்ட கடைகளை இடித்து புதிய நுழைவாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கு முன் சேவல் பலி கொடுக்கப்பட்டது.


http://thatstamil.oneindia.in/news/2006/07/03/kanchi.html

காஞ்சி மடத்தில் சேவல் பலி கொடுத்து நுழைவாயில் மாற்றும் பணி தொடங்கப்பட்டது என்ற செய்தியை படித்ததும் என்னடா இது குப்பன் சுப்பன் ஆண்டுக்கு ஒரு முறை அவனோட கோயிலில் கோழி, கெடா வெட்டி சாமி கும்பிட்டப்போ இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க சேவலை பலி கொடுத்து வேலை செய்யறாங்களேன்னு தோன்றியது. எல்லாம் காலத்தின் கோலம் என்ன செய்வது.

ஒரு வேளை இவர்களின் சோதனைக்கு காரணம் அய்யனாருக்கும் கருப்பணாருக்கும் முனீஸ்வரனுக்கும் உரிய படையலை ஆட்சியாளர்களின் (அப்போது) நெருக்கத்தை வைத்து தடுத்ததால் நேர்ந்த தெய்வ குற்றமோ என்னமோ யார் கண்டது.

காதோலை, கருவமணி, சுருட்டு, சாராயம் படைத்து முனீஸ்வரனுக்கு ஒரு கெடா அல்லது கோழி வெட்டுனா எல்லா தோசமும் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். எனக்கு தெரிந்த பரிகாரம் இது.

வியாழன், ஜூன் 22, 2006

குறும்பாறு

தமிழ்மணத்தில் இப்போ "ஆறு" கரைபுரண்டு ஓடிக்கிட்டுருக்கு. அதுல சிறிய துணை ஆறா இந்த குறும்பாறு கலக்குது, இதுல தண்ணி குறைச்சல்ன்னு சொல்லாதிங்க தண்ணி வரதே பெரிய சங்கதி.

(1) எந்த ஊர் நீங்க?
பொறையாறு.


(2) எந்த சாமி புடிக்கும்?
ஆறுமுக சாமி.


(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
அய்யன்னாறுக்கு


(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
சாமியாறை
(எழுத்துப் பிழை காணாதீர்கள் 'ர' வை அழுத்தி சொல்லுவது வழக்கம் :-)) )

(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
காவேரி ஆறு.

(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.

(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
அது "கிருஷ்ணா" ஆறு.


(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
நதியா வை.


(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
"வைகை" புயல்.


(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
சிந்து.

புதன், ஜூன் 14, 2006

இதை கொஞ்சம் படிங்க சார்!

தமிழனோடு ஒன்றி கலந்துவிட்ட ஒரு சொல் என்னவென்றால் அது "சார்" தான். மூச்சுக்கு முன்னூறு தரம் தமிழன் உச்சரிக்கும் சொல் "சார்". என்ன சார் நான் சொல்றது சரி தானே?. அதுவும் திரைப்பட கலைஞர்களின் பேச்சில் இது மூச்சுக்கு மூவாயிரம் முறை வரும். ஒரு திரைப்பட கலைஞரின் தொலைக்காட்சிப் பேட்டியை நண்பர்களுடன் பார்த்த பொழுது தான் "சாரின்" மேன்மையை கண்டுகொண்டோம், சாரைப்பற்றி பேச ஆரம்பித்தோம். அன்னைக்கு அடிச்ச கிண்டலும் கேலியும் நக்கலும் தான் எங்களின் "சார்" பயன்பாட்டை குறைத்தது. எவனாவது ( என் நண்பர்கள் தான்) சார்ன்னு பேசுவதை கேட்டோம் அவன் தொலைஞ்சான், சாரு சாருன்னு சொல்லி அவன நோக அடிச்சிடுவோம்.

ஒருத்தரை மரியாதையாக அழைக்கனும்னா "சார்" போடாம அழைக்க முடியாதா? தமிழில் ஐயா என்ற அழகான சொல் உள்ளதே. ஆனா பாருங்க இந்த சொல்லை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. கொஞ்சம் மாற்றி பயன்படுத்தினா பொருள் மாறிவிடுகிறது அதாவது மரியாதைக்கு பதில் அவமரியாதை வந்துவிடுகிறது.

சொல்லுங்க ஐயா , சொல்லுய்யா, என்னங்கய்யா?, என்னய்யா? அதனால் நாம் மரியாதையோடு ஐயாவை பயன்படுத்தவேண்டும். இதுக்கு பேர் தான் மரியாதைக்கு மரியாதை :-))

இன்னொரு சிக்கல் "ஐயா" என்ற சொல்லை பயன்படுத்தினால் வயதில் மூத்தவர், பெரியவர், பெருசு (கிண்டல்) என்ற எண்ணம் வருகிறது. 3, 4 வயது மூத்தவர்களை ஐயா போட்டா நல்லாவா இருக்கு? அதுக்கு என்ன தீர்வு? பேர் சொல்லி அழைப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். மரியாதைக்கு "ங்க" போட்டுக்குங்க. "சரிங்க குமரன்", "என்னங்க வசந்தன்" என்பது மாதிரி. (என்னை விட வயதில் மூத்தவர்கள் என்னை "சார்" என்று கூப்பிட்டால் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும்.)

பழக பழக "சார்" பயன்பாடு குறைந்துவிடும், எனவே முடிந்த அளவு "சார்" போடாம பேச முயலுங்களேன். "ஆபீசரை" "சார்" போடாம அழைத்தீர்கள் என்றால் அது மிகப் பெரிய செயல், முயன்று பாருங்க. வாழ்த்துக்கள்!


ஒரு தமிழரிடம் பேசினால் ஒரு முறையாவது "சார்" என்ற சொல்லை பயன்படுத்திவிடுவேன். சார்... அட சொல்லுங்க சார், சார் நீங்க பெரிய ஆளு சார், வசந்தன் சார் என்ன சொன்னாருன்னா , ஆமா சார், இல்ல சார், போங்க சார், கிண்டல் பண்ணாதிங்க சார், குமரன் சார், ... இந்த மாதிரியாக.

"சார்" போட்டு பேச கூடாது என்று உறுதி எடுத்து "சார்" போடாமல் பேச பழகிக்கொண்டேன். ஒரு முறை நியூயார்க் பாரத ஸ்டேட் வங்கிக்கு சில ஐயங்களை தீர்க்க தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என்னுடைய ஐயத்தை தீர்க்கவேண்டியவர் அப்போது இருக்கையில் இல்லாததால் என் அழைப்பை இன்னொருவருக்கு மாற்றினார்கள். எடுத்தவர் பாண்டியராஜன் எனக்கு ஒரு தமிழ் பெயரை பாரத ஸ்டேட் வங்கியில் கேட்டதும் மகிழ்ச்சி, உடனே நான் "சார்" I ..... என்று பேசினேன். ஒரு வாக்கியம் பேசி முடித்ததும் ச்ச தமிழ்ன்னு தெரிந்தவுடனே "சார்" போட்டு பேசிட்டோமேன்னு ஒரே விசனமாயிடுச்சி. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. :-(
பள்ளிக்கூடத்தில் (தமிழ் வழி) ஆசிரியரை ( தமிழ் ஆசிரியரையும்) "சார்" என்று கூப்பிட்டபய தானே நான். எப்படி சுலபமா "சாரை" விட முடியும்.


நம்ம வலைப்பதிவு நண்பர்களும் "சாரை" தவிர்க்க முடியாமல் இருப்பவர்கள் தான் .. இவர்களும் தமிழர்கள் தானே. ;-)

சனி, மே 06, 2006

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.


               தேர்தல் வந்தாலும் வந்தது அரசியல் கட்சிகளின் பரபரப்பை தூக்கி சாப்பிடற மாதிரி நம் வலைபதிவர்கள் தூள் கிளப்பிட்டாங்க. வலைப்பதிவு மக்களோட சிறப்பு எல்லோரும் பட்டதாரிகள். திமுக, அதிமுக, தேதிமுக, மதிமுக, பாமக, வி.சிறுத்தைகள், பாசக என்று எல்லோரையும் ஆதரித்தும் எதிர்த்தும் காரசாரமான பதிவுகள். பினாத்தல் சுரேஷ் அடுத்த முறை "கொள்கை டிராக்கரில்" வலைப்பதிவில் எப்படி எழுதுவார்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

                மே 8 உடன் இதற்கு முடிவு வரப்போகிறது. ( அப்படின்னு நீ சொல்லலாம் நாங்க சொல்லலையே என்று சிலர் சொல்வது கேட்குது. ;-))

               இப்படி விலாவாரியா காரசாரமா சமூக, சாதி, மத, இன, கட்சி அக்கறையுடன் தேர்தலை அலசுன எத்தனை பேர் இந்த தேர்தலில் வாக்கு போட போறாங்க?

               படிச்சவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகளே நாட்டின் சீர்கேட்டுக்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படாது என்று வாய் கிழிய வெட்டி வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். பணத்துக்காக வாக்கு போடுபவர்கள் இருப்பதால் தான் நாடு உருப்படாமல் இருக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்று வியாக்கானம் பேசுபவன் வாக்கு போட போகமாட்டான். அரசியல்வாதிகள் படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள் படிக்காத மக்கள் நிறைய இருந்தாதான் அவங்க பொழப்பு ஓடும்ன்னு சொல்ற படித்தவன் வாக்கு போட போகமாட்டான்.

               இந்த மாதிரி படித்தவர்களை பற்றிய உண்மை குற்றச்சாட்டுகள் பல உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால் வலைபதிவர்களே நீங்கள் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிவிடாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

               வாய்ப்பு இருந்தும் வாக்கு போடாமல் இருப்பது மாபெரும் தவறு என்பதை குறைந்தபச்சம் வலைப்பதிவர்களாவது உணர்ந்து வாக்கு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

               வாக்கு பதிவு நிறைய இருந்தால் தான் மாற்றம் வரும், ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் பயம் (கொஞ்சமாவது) வந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்.

               நான் வெளிநாட்டில் வசிப்பதால் என்னால் வாக்கு போடமுடியாது ஆனா என் பெற்றோர்களை வாக்கு போடசொல்லுவேன். ( என் வாக்கையல்ல அவங்க வாக்கை ;-) ) என் வாக்கையும் யாராவது போட்டு விடுவார்கள் என்பது வேற கதை.

               வாக்கு போடமுடியாத சூழலில் நீங்கள் இருந்தால் உங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளை வாக்கு போட சொல்லுங்கள். நம்மால் முடிந்த சனநாயக கடமை.

புதன், மே 03, 2006

கருத்துக்கணிப்பு - திமுக 6.12% வாக்குகள் முன்னனி

                கருத்துக்கணிப்பு எல்லாம் சரியாக கணிப்பதில்லை என்பது என் கணிப்பு . 2001ல் Exit Poll கூட தவறாக வந்ததை மறக்ககூடாது.

                தற்போது தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு வேடிக்கையான வேதனை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரங்கற கதையா ஊடகத்துறையில் ( லாப நோக்கோடு )இருப்பவர்கள் எல்லாம் கருத்துகணிப்பு நடத்துறாங்க. சரி அதையாவது முறையா செய்யறாங்களா என்றால் அதுவும் இல்லை. கொஞ்சம் கூட பேனா கூசாமல் கருத்துகணிப்பு என்ற பெயரில் தனது கருத்துக்களை மக்களிடம்(வாசகர்களிடம்) திணிக்கிறார்கள். கெட்டிக்காரன் புழுகு எத்தனை நாளைக்கு ? என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் இந்த வகையில் ஒரு பொய்யான தகவலை பரப்பி மக்களை குழப்புவது & திசை திருப்புவது தான் அவர்கள் குறிக்கோள். இது தான் சனநாயகத்தின் நாலாவது தூணின் வேலை என்னும் போது சனநாயகத்தின் நிலைமை நமக்கு சொல்லாமலே புரியும். ஒரு பத்திரிக்கை கூட சார்பு தெரியாம எழுதுவது இல்லை. ( விகடனை பற்றி எனக்கு தெரியாது ).

                வலைபூக்களும் ஓரு ஊடகமே, வலைப்பதிவன் என்ற முறையில் நானும் ஒரு கருத்து கணிப்பு நடத்துவதாக முடிவு கட்டினேன் ( ஊரோடு / ஊடகத்தோடு ஒத்து வாழ் ) அதனால் வந்ததே இந்த பதிவு. ;)

                இப்போ 2006 சட்டசபை தேர்தல் குறித்த என் கருத்துகணிப்பு. ( என் ஊகம் )


  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% குறைவாக இருந்தால் கூட்டணியே வெற்றியை நிர்ணயிக்கும். அந்த வகையில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெரும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 60% அதிகமாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். வெற்றிக்கு திமுக கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டும்.

  •                 தேர்தலில் வாக்கு பதிவு 70% அதிகமாக இருந்தால் தேதிமுக (விஜயகாந்த்) பெருமளவில் வாக்குகளை பெறும். வெற்றிக்கு திமுக கூட்டணி மிக கடுமையாக உழைக்க வேண்டும்.


  •                 தேதிமுக, திமுக கூட்டணி வாக்குகளை விட அதிமுக வாக்குகளையே அதிகம் பிரிக்ககூடும். காரணம் விஜயகாந்திற்கு நகரங்களை விட கிராமங்களில் செல்வாக்கு (ரசிகர்கள்) அதிகம்.


                சும்மா ஊகமா சொன்னா மக்கள் ஒத்துக்க மாட்டாங்க, அதனால நான் தமிழத்தின் பல பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதன் முடிவை உங்களுக்கு இங்கு அளிக்கிறேன்.


                                திமுக                - 42.85

                                அதிமுக            - 36.73

                                தேதிமுக          - 10.20

                                பாசக                  - 6.12

                                மற்றவர்கள் - 4.08


                திமுக, அதிமுக வெற்றியை விட தேதிமுக எவ்வளவு வாக்குகள் பெறப்போகிறார்கள் என்பதே இத்தேர்தலின் சிறப்பு அம்சம்.

வியாழன், ஏப்ரல் 27, 2006

அங்கிள், ஆன்ட்டி, அ(+க்)சின் உறவு முறைகள்



               தமிழில் உறவுகளுக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, கணவன், மனைவி, சக்களத்தி, ஓப்பிடியா, ஓரகத்தி, பொறந்தவன், பொறந்தவள் ...... உறவின் பெயரைக்கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கிறவங்க எவ்வளவு பேர் இந்த உறவுமுறைப்பெயர்களை தெரிஞ்சவங்க என்று பார்த்தா குறைவா தான் இருப்பாங்க. கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் வசித்தவர்களுக்கு இந்த உறவு முறை பெயர்கள் தெரிந்திருக்கும் மற்றும் புழங்கியிருப்பார்கள் ஆனால் பெரு நகரத்தில் வசித்தவர்களுக்கு இப்பெயர்கள் தெரிந்திருப்பது கடினம்.

              இப்ப நகரமயமாதல் அதிகரித்து கிராமங்களில் வசிப்போரின் என்ணிக்கை குறைந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படி நகரங்களுக்கு குடியேரும் கிராமத்தினரின் வாரிசுகள் தமிழ் உறவுமுறை பெயர்களை புழங்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இப்படி தமிழ் உறவுமுறை சொற்கள் என்பது வயசானவர்கள் புழங்கும் சொற்களாக மாறி இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

              இந்த பதிவு போட காரணம் சிறு வயதில் என்கூட ஒன்னா ஊர்சுத்துன என் நண்பன் என்கிட்ட அவனோட மாமா அத்தையை அங்கிள் ஆன்ட்டின்னான் பாருங்க அது தான். அவனை ரெண்டு வாங்கு வாங்கிட்டேன் அப்புறம் தான் மனசு ஆறுதல் அடைந்தது.

              அப்புறம் கவனிச்சா தமிழ்கூறும் நல்லுலகின் பெரும்பான்மையான மக்கள் மம்மி டாடியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அங்கிள் ஆன்ட்டி யின் ஆதிக்கத்துக்குள் இருப்பது தெரிய வந்தது. இதுல கொடுமை என்னன்னா சில தமிழ் ஆர்வலர்களும் ( அம்மாவை மம்மின்னும் அப்பாவை டாடின்னும் கூப்பிடாதவர்கள் ) "சொல்லுங்க ஆன்ட்டி", "சரிங்க அங்கிள்" என்பது தான்.

              என் நண்பரோட மனைவிடம் யாருங்க இவரு என்று அவங்ககூட வந்தவரை பற்றி கேட்டேன், என்னோட "கசின்" அப்படின்னாங்க. நானும் கசின்னு மொட்டையா சொன்னா எப்படிங்க எந்த முறையில் கசின் அப்படின்னு கேட்டேன் அவங்க விட்டாங்களா என் "அன்கிளோட சன்" அப்படின்னாங்க, நான் அன்கிள்ன்னா? மாமாவா? சித்தப்பாவா?, பெரியப்பாவா? என்று கேட்டேன், என் பெரியப்பாவோட பையன் அப்படின்னாங்க. எனக்கு அப்பாடான்னு இருந்தது. ( அவங்களுக்கும் தான் என்று சொல்லத்தேவையிலை :-) ) .

              அவங்க "என் பெரியப்பாவின் பையன்" அப்படின்னு சொல்லி இருந்தா பளிச்சுன்னு புரிந்து இருக்கும் "அன்கிள்ன்னு" சொன்னதால எனக்கு சரியான உறவுமுறை தெரியாம போக ஏகப்பட்ட கேள்வி கேட்டும்படி ஆயிடுச்சு. இந்த மாதிரி கேட்டாதான் குறைந்தபச்சம் என்னிடமாவது அங்கிள், ஆன்ட்டி, கசின் என்று சொல்லாம தமிழில் உறவுமுறைகளை சொல்லுவாங்க என்பது எண்ணம்.

              என் நண்பரோட அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், அவரு பிரதர் இன் லா, ஸிஸ்டர் இன் லா, பாதர் இன் லா, மதர் இன் லா அப்படின்னு ஒரே இன் லா கதையா நிறையா பேசினார் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை அவரு பெரியவர் நான் ஏதாவது சொல்லப்போயி அவரு மனசு புண்பட்டிருச்சுன்னா என்ன பண்றது? இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்குமா? ஒரு நாள் என்னங்க பாரிஸ்டர் இன் லா கணக்கா பிரத்ர் இன் லா, ஸிஸ்டர் இன் லான்னு சொல்லறீங்க தமிழ்ல உறவுமுறையை சொல்லுங்க நமக்கு இந்த இன் லா முறையில் சொன்னீங்கன்னா என்ன சொல்லறீங்கன்னு புரியறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுது, நீங்க தமிழ்ல சொன்னாதானே எங்களுக்கும் உறவுமுறை பேரெல்லாம் தெரியும் அப்படின்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஆல் ரைட் தம்பி அப்படீன்னார். அதுக்கப்புறம் அவர் இந்த இன் லா கதையை என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.

              நம்ம மொழியை நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்? உங்களை தமிழ் தெரியாத ஆளுங்ககிட்ட தமிழ் பேச சொல்லலை, தமிழ் தெரிந்த ஆளுங்ககிட்ட தமிழில் பேசங்க. அதனால யாரும் உங்களை இங்கிலிஸ் தெரியாதவன் அதாவது முட்டாள்ன்னு நினைக்க மாட்டார்கள். வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.

              சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.

              இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

சில உண்மைகள்

நகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :

  • எந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.

  • சொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.

  • யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.

  • குழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.

  • தியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்?).

  • ஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.



புதன், ஏப்ரல் 05, 2006

வாக்கு போடாத மன்மோகன் சிங்

தேர்தலில் வாக்கு அளிப்பது நமது மிக முக்கிய கடமை மற்றும் உரிமைகளில் ஒன்று. ஆனால் நமது பிரதமரே அந்த கடமையை செய்யவில்லை என்னும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏப்ரல் 3, 2006 அன்று நடந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் மன்மோகன் சிங் வாக்கு செலுத்தவில்லை.

மெத்த படித்தவர், நாணயமானவர், பொருளாதார மேதை, அரசியல்வாதி இல்லாத பிரதமர் என்று பல பல சிறப்புகளை உடைய நமது பிரதமருக்கு இந்த செயல் ஒரு மாபெரும் தவறு என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாதான் இருக்கு.

1991 ல் இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்றால் அவர் அம்மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். இதன் பொருட்டே இவர் அஸ்ஸாம் வாசியானார். இவரின் நிரந்தர முகவரி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள டிஸ்பர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. அஸ்ஸாம் வாசியானது தவறில்லை ஆனால் ஒரு குடிமகனின் கடமையை தவறாமல் குறைந்தபச்சம் தேர்தல் சமயத்திலாவது செய்ய வேண்டுமல்லவா?

இவர் இதுவரை ஒரு அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு அளித்ததில்லை. 1998 பொதுதேர்தலில் மட்டும் வாக்களித்தார். அப்படியென்றால் உலகின் மிகப்பெரிய மக்களாச்சியின் தலைவர் கடந்த 15 (1991 - 2006) ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் வாக்களித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் வாக்கு போடலைன்னா புரிந்துகொள்ளலாம். - நிரந்தர அதிபர்.

மன்மோகன் சிங் கதை அப்படியல்லவே. இவர் உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவர். வாக்கின் அருமை தெரிந்து நடந்திருக்கவேண்டும். என்ன செய்வது உலகின் மிக பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவராக இருந்தாலும் இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இன்னும் இவர் மாநிலங்கவை உறுப்பினர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான்.

ஒரு வேலை இதனால் தான் இவருக்கு வாக்கின் அருமை தெரியாமல் போய்விட்டதோ?

இதில் என்ன வேடிக்கைனா, ஓட்டு பதிவுக்கு 2 நாளைக்கு முன்னாடி தொகுதிக்கு வந்து மகா (மக்கு ?) சனங்களே வாக்கு போடுங்கன்னு பிரசாரம் பண்ணியிருக்கிறார். ஆனா இவர் வாக்கு போடவில்லை. மன்மோகன் சிங் வாக்களிக்க வருவார் என்று இவர் சார்ந்த வாக்குசாவடி மக்கள் நினைத்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். சரியப்பா சில பேரால் வர முடியாது அதற்கு தானே அஞ்சல் வாக்கு முறை உள்ளது. பிரதமர், குடியரசு தலைவர், ஆளுனர், மந்திரிகளுக்கு இச்சலுகை உண்டு. மன்மோகன் சிங் அஞ்சல் வாக்கு முறையையும் பயன்படுத்தவில்லை.

தென் டில்லி மக்கள் இவரை 1999 -இல் தோற்கடித்தப்போ என்னடா மக்கள் ஒரு நல்ல ஆளை தேர்தெடுக்கமாட்டீங்கறாங்க என்று நினைத்ததுண்டு, இப்ப தான் தெரியுது தென் டில்லியில் நிறைய மன்மோகன் சிங்குகள் இருக்கிறாங்கன்னு.
அதனால் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மகா சனங்களே வாக்கு போடாதவர்கள் எல்லாம் மன்மோகன் சிங் மாதிரி. அப்ப நீங்க?
:-))

வாழ்க மக்கள் ஆட்சி.
மன்மோகனுமா? அப்படின்னு நொந்து போயி எழுதின பதிவுங்க இது.

source april 4, 2006 - dailypioneer newspaper.

http://www.dailypioneer.com/archives2/default12.asp?main_variable=front%5Fpage&file_name=story5%2Etxt&counter_img=5&phy_path_it=D%3A%5Cdailypioneer%5Carchives2%5Capr406

ஞாயிறு, ஏப்ரல் 02, 2006

திமுக - பாமக தொகுதிகளில் மாற்றம்.

பாமக போட்டியிடுவதாக இருந்த பெண்ணாகரம் தொகுதி திமுகவுக்கும் , திமுக போட்டியிடுவதாக இருந்த தர்மபுரி தொகுதி பாமகவுக்கும் மாற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் பெரியண்ணன் அத்தொகுதிக்கு பதில் பெண்ணாகரத்தில் போட்டியிடுவார்.

தற்போதைய பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற உறப்பினர் ஜி.கே.மணி மேட்டூரில் போட்டியிடுவதால் எவ்விதமான சிக்கலும் இன்றி இத்தொகுதி மாற்றம் நடந்துள்ளது.

2001 - இல் சுயேச்சையாக போட்டியிட்டு 34,729 வாக்குகள் வாங்கினவர் பெரியண்ணன், அத்தேர்தலில் திமுக 3-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

2001 ம் தேர்தலுக்கு பின் பெரியண்ணன் திமுகவில் இணைந்துவிட்டார். தற்போது மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

பெண்ணாகர தேர்தல் முடிவுகள் ( 2001 )

ஜி.கே.மணி (பாமக) = 49125
பெரியண்ணன் (சுயேச்சை) = 34729
குமார் (திமுக) = 17371

ஆதாரம்: தினமணி & Thatstamil

சனி, ஏப்ரல் 01, 2006

விருதாசலத்தில் மற்றொரு திருப்பம்.

      பா.ம.க வுக்கு சவால்விடும் வகையில் தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் பா.ம.க வின் கோட்டையிலேயே களம் இறங்கியுள்ளதால் பா.ம.க அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ள பா.ம.க தலைவர் இராமதாஸ் அவர்கள் விஜயகாந்திற்கு "டெபாசிட்" தொகைகூட கிடைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். விருதாசலம் தொகுதி வெற்றியை இராமதாஸ் ஒரு மானப்பிரச்சனையாக கருதுவதாக பா.ம.க வின் முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். அதனால் தற்போதைய வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு பதிலாக காடுவெட்டி குரு விருதாசலத்தில் போட்டியிடுகிறார். ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவுக்கு பதிலாக "இராமு படையாச்சி" போட்டியிடுகிறார்.

      காடுவெட்டி குரு தற்போது களத்தில் குதித்துள்ளதால் விருதாலச்தில் சூடு பறக்கும் என்று நிச்சயமாக கூறலாம், தேர்தல் கமிசன் சிறப்பு பார்வையாளரை இத்தொகுதிக்கு நியமித்து கண்காணித்தல் தேர்தல் பிரச்சினை இல்லாமல் நடக்க உதவும்.

புதன், மார்ச் 29, 2006

நகைச்சுவை சித்திரம் - 1

இந்த படங்களுக்கு விளக்கம் தேவையா?

அதிகாரத்தின் வளர்ச்சி - Evolution

Out House

புதையல் - Fortune

ஞாயிறு, மார்ச் 26, 2006

நகைச்சுவை - 1

  • மகன்: அப்பா நாம சீக்கிரம் பணக்காரர்கள் ஆகிடலாம்.
    அப்பா: எப்படி?
    மகன்: நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயாக மாற்றுவது என்று சொல்லி கொடுக்க போறார்.

  • அப்பா: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க வாத்தியார் உனக்கு நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றார்? பையன்: முட்டாப் பய மவனேன்னு திட்டறார் அப்பா.

  • 51 ரூபாய் கடன் வாங்கினவர் 15 ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். ஏன்?
    பணத்தை 'திருப்பி' தந்தாராம்.

  • ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.

  • காவல்காரர் இரண்டு குடிமக்களை ஓரங்கட்டி விசாரிச்சார். பேர் & முகவரி என்னன்னு ஒருத்தரை பார்த்து கேட்டார். என் பேரு கனகு எனக்கு நிலையான முகவரி கிடையாது நாடோடி மாதிரி சார் என்றார். அடுத்த குடிமகனிடமும் அதே கேள்வியை ( பெயர் & முகவரி) காவல்காரர் கேட்டார். இரண்டாவது ஆள் சொன்னார் என் பேரு மணி, 15 வருசமா கனகு வீட்டிற்கு மேல் வீட்டில் தான் குடி இருக்கிறேன் சார் என்றார்.

செவ்வாய், மார்ச் 21, 2006

எழுதுவது எவ்வளவு சிரமம்

எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது எழுதிபார்க்கையில் தான் தெரிகிறது. 2 வரி எழுதி முடித்தவுடன் என்ன எழுதுவது என்று தோன்ற மாட்டேங்குது. எப்படி தான் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களோ? அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு சில சமயம் உணர்ச்சி வேகத்தில் 20 வரி எழுத முடிகிறது மற்ற வேளைகளில் முடிவதில்லை. எழுதுவதற்கு மற்றொரு பெரிய தடைக்கல் தட்டச்சு தெரியாதது, பார்த்து பார்த்து தட்டங்குல்ல போது போதும் என்றாகிவிடுகிறது, எழுத நினைத்ததும் பாதியில் மறந்து விடுகிறது.

அப்படியே ஒரு 10 வரி எழுதிவிட்டு படித்து பார்த்தால் நமக்கே (எனக்கே) சகிக்கமாட்டேங்குது என்னதான் பண்றது? அப்புறம் சொல்றத/எழுதறத ஒழுங்கா முறையா எழுதுனாதானே ( ஒரு கோர்வையா இருந்தாதானே) படிக்கிறப்போ புரியும். எதை முதல்ல சொல்றது எதை நடுவில் சொல்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அப்புறம் ஒரு விசயத்தை பற்றி எழுதிக்கிட்டு இருக்கிறப்போ சம்மந்தம் இல்லாத ஒரு தகவலை நடுவில் எழுதறது. இந்த மாதிரி பல பல பல பிரச்சனைகள்.

இதையெல்லாம் எப்படி சரி செய்து ஒழுங்கா எழுதறது? ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.
அதனால் என் எழுதில் குறை இருந்தால் (இருக்கும்) மன்னிக்கவும்.