வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜனவரி 29, 2013

விஸ்வரூபம் படம் பார்த்தவன் சொல்வது

விஸ்வரூபத்தை பற்றி ஆள் ஆளுக்கு பேசிட்டாங்க. படம் பார்க்காதவங்கதான் நிறைய, நான் படத்தை பார்த்த ஆளு சும்மா இருப்பது தகுமோ? இப்படத்தை எதிர்ப்பது சரியா என்றால் சரி என்பது தான் என் கருத்து.

இந்த படம் தீவிரவாதத்தை பற்றி எடுக்கப்பட்டது. அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதத்தை பற்றி. கமல் இந்திய முசுலிமாக வரார். முதல் 30 நிமிடத்துக்கு மேல் இவர் முசுலிம் என்பதே தெரியாது. இவர் பெண்டாட்டி இவரை தொடர வைத்த துப்பறியும் நிபுணரால் தான் இவர் முசுலிம் என்பது தெரியவருகிறது. படத்தில் இது குறைவா இருந்திருக்கலாம் அது அதிகமா இருந்திருக்கலாம் கதை இப்படி இருந்திருக்கலாம் என்று நாம் சொல்லதான் முடியும்.  படம்
நல்லா இருக்கலாம் ஆனா வெற்றியடையாது, படம் நல்லா இல்லாமல் இருக்கலாம் ஆனா வெற்றியடைந்துவிடும். படத்தை இந்த மாதிரி எடுத்தா வெற்றி உறுதின்னு யாருக்கும் தெரியாது. திரைப்படத்தயாரிப்பு பெரிய சூதாட்டம்.

இந்த படத்தால நம்மூர் துலுக்கங்க எப்படி பாதிக்கப்பட்டாங்கன்னு தான் எனக்கு புரியலை. இதுல முசுலிம்களையும் கெட்டவங்களா காட்டுல. நம்மூர் ஆளுங்களுக்கும் இப்படத்துக்கும் உள்ள தொடர்பு கமல் பெண்டாட்டி நம்மூர், கமல் இந்திய உளவாளி. அவருக்கு இந்திய உளவுத்துறை உதவுது அவ்வளவு தான். அல் கொய்தா ஆட்கள் தீவிர மதநம்பிக்கை கொண்டவர்கள் தினமும் சூடம் பற்றவைத்து சாமி கும்பிடறவங்களா காட்டுனா நல்லா இருக்காதுல்ல.  அதை காட்ட கமல் தொழுகை செய்வதை காட்டியிருக்கலாம் இதை தணிக்கை துறை குறைக்க சொல்லியிருந்தால் நல்லது, அல்ல நம்ம துலுக்கர்களுக்கு அது தான் சிக்கல் என்றால் அதை
கமலிடம் சொல்லியிருக்கலாம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினால் ஏற்படாத பாதிப்பு இப்படத்தால் நிச்சயம் ஏற்படாது.

இப்படத்தை நாம் எதிர்க்க வேண்டும். ஏன் என்றால் ஆண்களை பலசாலிகளாகவும் பெண்களை பலமில்லாதவர்களாகவும் காட்டியதற்காக. படம் முழுக்க இப்படித்தான் காட்டியுள்ளார். இது அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை, இப்படத்தை பார்ப்பவர்களுக்கு ஆண் ஆதிக்க சிந்தனை வராதா? இப்படத்தை பார்க்கும் சின்ன குழந்தையின் பிஞ்சு மனசில் இது நஞ்சாக பதிந்து விடுமே?

பாப்பத்தியம்மா கறியோட ருசி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லு என்று பார்பனர்களை கேவலப்படுத்தியுள்ளார் அதனால் தான் பாப்பத்தியம்மா தமிழ்நாட்டில் 2 வாரம் தடை போட்டுட்டாங்களோ? படம் விஜய் டிவிக்கு கைமாறியது கூட காரணமாக இருக்கலாம். படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று தடை போட்டது ஊரை ஏமாற்றும் வேலை. படம் வெளிவந்த எல்லா இடத்திலேயும் ஆர்பாட்டம் கலவரம் காவல்துறை பாதுகாப்பு என்று இருக்கான்னு சொல்லுங்கப்பா. நான் படிச்ச செய்தி
இதழ்கள் எதுலயும் அப்படி இல்லை.

பாப்பத்திய பற்றி பேசிய கமல் துலுக்கச்சிய பற்றி பேசினாரா? ஏன் பாப்பாத்தின்னா இளக்காரமா? கமல் மற்றும் பல திரைப்படங்களில் பார்த்துள்ளேன் வில்லனை சாமி கும்பிடுபவனாக காட்டுவார்கள். இது சாமி கும்பிடுபவர்களை அவமதிப்பது ஆகாதா? சாமி கும்பிடுபவர்களை கண்டால் இளக்காரம் வேறென்ன.

வெள்ளி, ஜனவரி 25, 2013

நான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்!!!

நான் கமல் இரசிகன் அல்ல ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் பார்க்கப்போகிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே. தாலிபானையும் ஆப்கானிஸ்தானையும் காட்டுனா முசுலிம்களை தான் காட்ட முடியும். அவனுங்க தொழுகை நடத்தும் குரானை வைத்துள்ள தீவிரவாதிகள் தான். சிக்கறவன் கழுத்தை கோழியை அறுக்கற மாதிரி அறுப்பவனுங்க தான் அப்படி செய்யும் போது அல்லாகு அக்பர் என்று கத்துவதை வீடியோவாக எடுத்து உலகுக்கு அவனுங்க தான் காட்டுனானுங்க. இதை கமல் தன் படத்தில் சொல்லக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம்.
** சார்வாகன் இடுகையை எடுத்து ஒட்டி உள்ளேன்**
I Support Kamal Haasan


வணக்க நண்பர்களே,
இந்திய ஜன்நாயக ,மதசார்பற்ற நமது நாட்டின் சட்டங்கள் மட்டுமே நம்க்கு முதன்மையானது.நமது சமூகத்தில் எழும் சிக்கல்களை சட்டம் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்.

கருத்துகளின் வடிவம் புத்தகம்,பேச்சு,பதிவுகள்,திரைப்படம் என பல வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில் வாழும் நாட்டின் சட்டங்களுக்கேற்றபடி மட்டுமே அனுமதிக்கலாம். சில கருத்துகள் தடை செய்யப் படுகின்றன என்றாலும் அவை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே!!

அந்த வகையில் விஸ்வரூபம் நாட்டின் தணிக்கை சட்டங்களின் படி அனுமதி பெற்ற ஒன்று.ஆகவே படத்தை எதிர்ப்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்கள் என்றால் தணிக்கை சட்டங்களில் வேண்டி மாற்றங்கள் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்தி தேவையான மாற்றம் கொண்டு வரட்டும்.

அதை விட்டு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தொனியில் செயல்படுவதும்,அதற்கு அரசு செவி சாய்ப்பதும் தவறான முன் உதாரணங்களையே ஏற்படுத்தும்.

இப்போது கூட எதிர்க்கும் மதத் தலைவர்கள் நீதிமன்றம் சென்று மட்டுமே தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டுகிறோம். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பாரபட்சம் காட்டாமல் ஒடுக்குவதே நாகரிக‌ சமூகத்தை காப்பாற்றும் வழியாகும்.

நான் கமல் அவர்களை இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்.

என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள்  ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!

நன்றி!!