வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஏப்ரல் 12, 2007

முதலை பயங்கரம் - எச்சரிக்கை

எச்சரிக்கை:- படங்கள் கோரமானவை..

தைவான் நாட்டின் கோசியுங் ( Kaohsiung ) நகர முதலைப்பண்ணையில் இக்கொடூரம் நடந்துள்ளது. அப்பண்ணையின் விலங்கு மருத்துவர் 17 வயதுடைய நைல் நதி முதலைக்கு மருத்துவம் பார்க்கும் போது முதலையானது அவரது கையை கடித்து எடுத்து விட்டது. நல்ல வேலையாக அவர் தப்பிவிட்டார். துண்டான கையை துப்பாக்கியால் முதலையை சுட்டு மீட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரது கையை ஒட்டியுள்ளார்கள்.

துப்பாக்கியால் சுட்டும் முதலை மீது ஒரு குண்டும் படவில்லை ( சுட்ட ஆளு அப்படி சுட்டு இருக்கார் :-(( ). வெடிச்சத்தத்தினால் முதலை அதிர்ச்சியாகி வாயை திறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.


முதலையிடம் கையை கொடுத்தவர் பெயர் சேங்-பொ-யு (Chang Po-yu)





முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலைக்கு கையை கொடுத்த சேங்-பொ-யு (Chang Po-yu)