வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 11, 2011

மக்கள் விரோத கட்சி

இந்த தேர்தலில் மக்கள் விரோத கட்சி ஒன்னு போட்டியிடுகிறது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விசி, காங்கிரசு, பாசக எல்லாம் மக்கள் மனம் போல் நடப்பவை எனவே அவை மக்கள் விரோத கட்சிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மக்கள் விரோத கட்சி இந்த தேர்தலில் தோன்றியதல்ல. அவர்கள் பர்கூர், பெண்ணாகரம் போன்ற இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுருக்கிறார்கள். அந்த இடங்களில் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியும் புத்தி வராம இருக்காங்க.

இந்த மக்கள் விரோத கட்சியை சேர்ந்தவங்க முரண்நகையா தங்கள் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சின்னு பேர் வைச்சிருக்காங்க. 

அரசியலில் ஊழல் என்பதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை என்பது இவர்களுக்கு புரியவில்லை. கையூட்டு கொடுக்காம எந்த செயலும் நடக்காது என்பது மக்களுக்கு புரியுது. அவங்களும் வாய்ப்பு கிடைச்சா கையூட்டு வாங்க தயங்குவதில்லை. கையூட்டு, ஊழல் என்பது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள். இதை (ஊழல், கையூட்டு)எதிர்ப்பது என்பது மக்களை எதிர்ப்பது போல் ஆகாதா?

இவர்கள் தமிழ்நாட்டில் 35 தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். முனைவர் பட்டம் வாங்கியவரும் 5ம் வகுப்பு படித்தவரும் இவர்கள் வேட்பாளர்கள்.  தொகுதிக்கு தொண்டாற்ற கல்வி தகுதி மட்டும் தேவையில்லை என்பது இவர்கள்  வாதம். இவர்கள் வேட்பாளர்களின் கல்வி தகுதியை பார்த்தாலே இது விளங்கும்.

மாற்றம் என்பதே மாறாதது எனவே மாற்றம் வேண்டுபவர்கள் இவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்கலாம்.

கொள்கைகள்


வேட்பாளர்கள்


சென்னை மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கொளத்தூர் - S. அசோக் குமார்
அண்ணா நகர் - உதய் குமார்
மைலாப்பூர் - அசோக் ராஜேந்திரன்
வேளச்சேரி - செந்தில் குமார் ஆறுமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்துல 4 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆலந்தூர்   -  S.மீனாட்சிசுந்தரம்
பல்லாவரம்  -  R. குமார்
தாம்பரம்  -  R. கிருஷ்ணபாபு
மதுராந்தகம் (SC)  M. தனசேகரன்

திருவள்ளூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஆவடி  - Dr. M. பரமானந்தம்
அம்பத்தூர்  -D. ஜெகதீஸ்வரன்

கோயம்புத்தூர் மாவட்டத்துல 6 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

கவுண்டம்பாளையம்  - V. விஸ்வநாதன்
கோயம்புத்தூர் வடக்கு  -  K. துரைராஜ்
தொண்டாமுத்தூர்  -  கண்ணம்மாள் ஜெகதீசன்
கோயம்புத்தூர் தெற்கு  -  M. விஜய் ஆனந்த்
சிங்காநல்லூர்  -  P.தண்டபாணி
கிணத்துக்கடவு   -    B. இளங்கோ

கடலூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

நெய்வேலி  -  P. லில்லி
கடலூர்  -  T.E. சித்ரகலா

ஈரோடு மாவட்டத்துல 3 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

ஈரோடு (கிழக்கு)  -- S. சங்கமித்திரை
பெருந்துறை  --  S.ஸ்ரீமதி
பவானி  -- M.குமார்

கன்னியாகுமரி மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.


கன்னியாகுமரி  -  K.S. ராமநாதன்
கிள்ளியூர்  -  P. பாபு


நாகப்பட்டினம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

மயிலாடுதுறை  - தில்லை நடராஜன்
நாமக்கல் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

பரமத்தி-வேலூர்  - N. சுந்தரம்

சேலம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.

சேலம் (தெற்கு)  - G. விஸ்வநாத்

தேனி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
கம்பம்  - R. ராஜா மோகன்

திருப்பூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
திருப்பூர் (வடக்கு)  - P. சந்திரசேகர்
திருவாரூர் மாவட்டத்துல 2 தொகுதிகளில் போட்டி போடறாங்க.

திருத்துறைபூண்டி(SC)  - S.சரவணன்
திருவாரூர்  -S. இளங்கோ
தூத்துக்குடி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க.
தூத்துக்குடி  - A. ஆதிநாராயணன்
திருநெல்வேலி மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
ராதாபுரம்  - D.இனியன் ஜான்
திருவண்ணாமலை மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
கீழ்பென்னாத்தூர்  - G. செல்வராஜ்
வேலூர் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க
திருப்பத்தூர்  - திருமால்

விழுப்புரம் மாவட்டத்துல 1 தொகுதியில் போட்டி போடறாங்க

 ரிஷிவந்தியம்  - J. செல்வராஜு

வடிவேலு அன்றும் இன்றும் காலம் எப்படி மாறுது பாருங்க

 அன்று அம்மா அம்மா அம்மா தாயி இன்று அய்யா அய்யா அய்யா சாமி. என்னத்த சொல்றது.


ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

கருணாநிதிக்கு எதிராக கேரளாவில் ராகுல் பேச்சு.

87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு 87 வயதாகியது அனைவருக்கும் தெரியும், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்வதும் அனைவரும் அறிந்தது. திமுக கூட்டணி வெற்றிபெற்றால் அடுத்த முதல்வர் 87 வயதான சக்கர நாற்காலியில் செல்லும் கருணாநிதிதான் என்பதை அவர்களே அறிவித்துள்ளார்கள்.

சக்கர நாற்காலி தள்ளுபவர் என்ற ஒரே தகுதியின் கீழ்  சக்கர நாற்காலி தள்ளுபவருக்கு முறைகேடாக அரசின் நிலம் ஒதுக்கப்பட்டதை சவுக்கு அல்லது உண்மைத்தமிழனின் வலைப்பதிவை படித்தவர்கள் நன்கு அறிவர்.

ஆனால் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் பிரதமராவார் என கருதப்படும் ராகுல் 87 வயதானவர் மீண்டும் முதல்வராக கூடாது என்று கேரளாவில் பேசியுள்ளது தமிழ தேர்தல் களத்தை பரபரபாக்கியுள்ளது. (ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ?)

மண்ணு மோகன் சிங்கிற்கு வயதாகிவிட்டது என்பதால் தான் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் அவரை பிரதமராக்குவதில்லை என ராகுலின் அம்மா முடிவெடுத்துள்ளார். மண்ணே கடைசி வரை பிரதமரா இருந்தா அப்புறம் எப்ப பையன் பிரதமராவது?

தினமணி செய்தி

பைனான்சியல் டைம்ஸ் செய்தி

ஓமன் டிரைபுன் செய்தி


அவர் கேரள முதல்வரின் வயதை கூறுவது போல் தமிழக முதல்வருக்கு செய்தி சொன்னதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரின் பேச்சை கேள்விப்பட்ட கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் தமிழகம் வந்தால் கருணாநிதியை பார்ப்பது இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அவருக்கு கருணாநிதியை பிடிக்காது என்பது காங்கிரசு மற்றும் திமுக காரர்கள் அறிந்ததே.


ராகுல் இவ்வாறு பேசியுள்ளதால் காங்கிரசு காரர்கள் திமுக வெற்றிக்கு உழைப்பார்களா என்று கேள்விக்குறியே.. தகிடு தத்தங்கள் மூலம் (சிவகங்கை சின்னபையன் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்) திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு காங்கிரசு ஆதரவளிக்குமா என்பது கேள்விக்குறியே.

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தலைவர் தங்கபாலு வாழ்க வாழ்க

தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு மீது காட்டமடைய ஏதாவது காரமுண்டா? அவர் நடைமுறையில் இல்லாதது எதையும் செய்யவில்லை. எனவே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

தங்கபாலுவுக்கு தெரியும் யாரை வேட்பாளராக்குவது என்று. காங்கிரசில் நிறைய குழுக்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு குழு தலைவரும் அவர்கள் ஆட்களுக்காக போராடி தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே இல்லாத ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணி சங்கர் அய்யரை சேர்ந்த குழுவுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அவரும் அந்த இடத்தை தன் மனதுக்கு இனியவருக்கு கொடுத்துவிட்டார். தனக்கு பிடித்தவருக்கு தானே தர முடியும், பிடிக்காதவருக்கா தரமுடியும்?

கருப்பையா மூப்பனார் மகன் வாசன், சிவகங்கை சின்ன பையன் சிதம்பரம், பக்தவச்சலம் மகள் ஜெயந்தி நடராசன், காங்கிரசை ஒழிக்கனும் என்ற பெரியாரின் தம்பியின் பேரன் இளங்கோவன், பெரிய இடத்து பிள்ளை ராகுலின் அரவணைப்பின் கீழுள்ள புதிய குழு, பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தி கிருசுணசாமி, டெல்லியில் வாழ்ந்தாலும் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென் மாநிலத்தை சேர்ந்தவங்க மதராசி தான்) தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காகவும் காங்கிரசு மேலிடத்தொடர்பு இருப்பதாலும் மணி சங்கர் அய்யர் ஆகியோரின் குழுக்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலுவுக்கு சில இடங்கள் கிடைத்தது.   தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு இடம் கிடைத்தது தவறில்லை என்பவர்கள் அவர் தன் விருப்பபடி தன் குழுவுக்கு கிடைத்த இடங்களை  கொடுப்பது தவறு என்பது நகைச்சுவையாக உள்ளது.

அந்த இடங்களை யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம். அவர்கள் அப்போது காங்கிரசுகாரர் என சொல்லிக்கொண்டால் போதும் என்பது தான் நிபந்தனை. இதன்படி தான் மற்ற குழு தலைவர்கள் தொகுதி பங்கீடு செய்கிறார்கள். இது தெரியாதவன் முழு காங்கிரசு காரன் அல்ல மற்றும் காங்கிரசு பாரம்பரியத்தை பற்றி அறியாமல் காங்கிரசு பேரியக்கத்தில் இருக்கும் மடையன் அவன்.

எல்லோருக்கும் தெரியும் இங்கு காங்கிரசு வெற்றிபெறுவது கூட்டணி கட்சியினரின் தயவால் என்று இது தங்கபாலுக்கு தெரியாம இருக்குமா?  உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தமிழ்நாடு காங்கிரசு தலைவரா இருக்கற அவருக்கா தெரியாது? தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்னவென்று அவர் நன்கு அறிவார். 10% வாக்கு வங்கி, மத்தியில் அமைச்சர்கள், CBI raid என்று பூச்சாண்டி காட்டியே வேலையை முடிக்கனும் சார். (உண்மையாவே  10% வாக்கு வங்கி இருக்கான்னு கேக்காதிங்க அப்படி கேட்டால் நீங்கள் தமிழக அரசியல் பற்றி ஒன்றும் அறியாதவர் என்று பொருள்), காங்கிரசை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவிடம் 63 இடம் வாங்கறுதுன்னா சும்மாவா.(திமுக நிலையை நினைச்சா பரிதாமா தான் இருக்கு, தேன் குடிச்சவன் புறங்கையை நக்கி தானே ஆகனும்)

கிடைத்த 63 தொகுதிகளில் 13 இடங்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணைப்படி தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கபாலு தன் குழுவுக்கு ஆட்களை ஒதுக்கியதை எதிர்பவர்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணையை எதிர்க்கிறார்கள் என்று தான் பொருள்.

தமிழக குழுக்களை  பொறுத்தவரை அதிகஅளவாக வாசன் குழுவுக்கு 22 இடங்களும் . சிதம்பரம் குழுவுக்கு 12 இடங்களும்,  ராகுல் குழுவுக்கு 9 இடங்களும்  கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராசன், இளங்கோவன், பாமக நிறுவனரின் சம்பந்தி கிருசுணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. 1 இடம் மட்டுமே சொக்கத்தங்கம் அன்னை சோனியாவால் ஒதுக்கப்பட்ட இளங்கோவன் குழுவே தங்கபாலு குழு 13 இடங்களை பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவருக்கு எதிராக வேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர். கருப்பையாவின் பையன் குழுவும் இதற்கு ஒத்து ஊதவதாக  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழக காங்கிரசு தலைவராக அல்ல அல்ல காங்கிரசு காரணாக இருக்க தகுதி என்னவென்று பார்த்தால் அவன் நேரு குடும்பத்து காங்கிரசு கட்சி வாரிசுக்களின் செருப்புக்கு தன் எச்சில் போட்டு  பள பள என்று துடைப்பவனாக இருக்க வேண்டும். காந்தி பேரு வச்சி ஊரை ஏமாத்துனாலும் அவங்க நேரு குடும்பம் என்பதை நினைத்து கொண்டு அது மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


தமிழர்கள்,  ஈழ தமிழர்கள் பற்றி அவர் ஏன் அக்கறைபட வேண்டும் ( சில இடங்களில் வெற்றி பெற்றால் போதும்). அதை  தமிழின காவலர் தற்போதய முதல்வர் வெறும் வானம்  கருணாநிதி பார்த்துக்கொல்வார்.  அவரு தான் தமிழர்களுக்காக 1 மணி நேர உண்ணாவிரதம் இருப்பார், தந்தி அடிப்பார்.  இஃகி இஃகி.

மனைவிக்கு இடம் வாங்கி கொடுக்கிற மாதிரி  நடித்து இவர் இடத்தை புடிச்சிக்கிட்டார் என்பது எதிராளின் ஒரு வாதம். ஜெயந்தி தங்கபாலு காங்கிரசுகாரர், அவர் கணவர் முன்னாள் & இந்நாள் தமிழக காங்கிரசு தலைவர், இது  போதாதா? விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற குழுக்களில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் பெரிய தியாகிகளா? யாராச்சும் சொல்லுங்க. ஞானசேகரன், பீட்டர் அல்போன்சு, காயத்ரி தேவி, கே. என். அசன் அலி, அருள் அன்பரசு, யசோதா, பழனிச்சாமி ... எல்லாம் தியாகிகள் என்று அவங்க குழு தலைவரு தான் சொல்லிக்கனும், இஃகி.

இளங்கோவனுக்கு மரியாதையே அவரின் INITIAL தான் என்பதை அவர்  வேண்டுமானால் தன் வசதிக்காக மறந்திருக்கலாம், எல்லோரும் அப்படி மறக்கமுடியுமா? பெரியார், காந்தி எல்லாம் காங்கிரசே வேண்டாம் என்று சொன்னவங்க, ஆனா அவங்க பேரை சொல்லி தான் காங்கிரசுகாரனாக  இருக்கவேண்டியுள்ளது. தங்கபாலுவுக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததது ஒரு குறை தான். தலைவர் தங்கபாலுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா இடுகையின் நீளம் கருதி இது போதும் என்று நினைக்கிறேன்.

காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற துரோகங்களுக்கும் உள் அடி வேலைகளுக்கும் பயந்துவிடுவார் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.  கூட்டணி தயவால் எல்லா இடங்களிலும் அவர் குழு வெற்றி பெறுவது உறுதி. அப்புறம் இவனுங்களை பார்ப்போமில்ல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். (பல பொருள் தருவது இது ;-) )


ராஜிவ்ஜி  ஜெய்.
மறைமுக பிரதமர் சொக்கத்தங்கம் அன்னை சோனியாஜி ஜெய்.
வருங்கால பிரதமர் ராகுல்ஜி ஜெய்.