வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, டிசம்பர் 27, 2014

சம்மு காசுமீர் தேர்தல் அலசல்

2014 ஆம் ஆண்டு  சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.

இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
 
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.

பாசக  லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.

தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.

காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.

அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?


கட்சி வெற்றி பெற்றது% வாக்குகள்மொத்த வாக்குகள்
பாரதிய சனதா கட்சி (பாசக)2523 %11,07,194
மக்களின் சனநாயக கட்சி2822.7 %10,92,203
தேசிய மாநாட்டு கட்சி1520.8 %10,00,693
காங்கிரசு1218%8,67,883
மார்க்சிய பொதுவுடைமை10.5%24,017
மக்கள் கூட்டமைப்பு21.9%93,182
மக்கள் சனநாயக முன்னனி10.7%34,886
கட்சி சாராதவர்கள்36.8%3,29,881


மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்.  இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.

சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று.  சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.

பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.

People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.

சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.

தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.

முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25

சம்மு பகுதி: (6) பாசக 04
காங்கிரசு 02
காசுமீர் பகுதி: (5) காங்கிரசு 01
தேசிய மாநாடு 04
லடாக் பகுதி: (4) காங்கிரசு 03
கட்சி சாராதவர் 01

இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02

சம்மு பகுதி: (9) பாசக 03
காங்கிரசு 03
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 01
கட்சி சாராதவர் 01
காசுமீர் பகுதி: (9) காங்கிரசு 01
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 03
மார்க்சிய பொதுவுடமை 01
மக்கள் கூட்டமைப்பு 02
கட்சி சாராதவர் 01

குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.

மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09

காசுமீர் பகுதி: (16) காங்கிரசு 01
தேசிய மாநாடு 03
மக்களின் சனநாயகம் 11
மக்களின் சனநாயக முன்னனி 01

நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14

சம்மு பகுதி: (2) பாசக 02
காசுமீர் பகுதி: (16) தேசிய மாநாடு 04
மக்களின் சனநாயகம் 11
காங்கிரசு 01

ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20

சம்மு பகுதி: (20) பாசக 16
மக்களின் சனநாயகம் 02
தேசிய மாநாடு 02



முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

வெள்ளி, டிசம்பர் 05, 2014

இப்போது கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன ?அலசல்

உலக அரசியலில் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன?  பாதிப்பு நமக்கு உண்டே அதை தெரிஞ்சுக்க வேண்டாம்?
 
யூலை முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது தெரியும் இதற்கு காரணம் கச்சா எண்ணெயால் அதிக லாபம் அடையும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தருவதாக இருக்கலாம். உருசியாவின் பொருளாதார பலம் அதன் கச்சா எண்ணெய் தான். அடிமடியில் கையை வைத்தால் உருசியா உக்ரைனுக்கு தரும் நெருக்கடி குறையும் மேற்கின் பலம் அங்கும் பல இடங்களிலும் அதிகரிகரிக்கும்.

5 ஆண்டு விலை நிலவரம்

கவனித்துப்பார்த்தால் யூலை மாதம் தான் மலேசிய வானூர்தி புரட்சி\கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. புரட்சி\கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் கிழக்கிலுள்ள சுலோவின்சுக் நகரை அரசின் படைகளிடம் விட்டு விட்டு ஓடியதும் அப்போது தான் (அரசு படையின் தாக்குதல் தீவிரம்).


ஓர் ஆண்டின் விலை நிலவரம்


அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதால் உருசியா மீது சில பொருளாதார தடை விதித்ததும் அம்மாதத்தில் தான். உருசியா இதை மறுக்கிறது என்பது வேற. உருசியா ஆதரவு இல்லாம புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும்? தெரிந்த இரகசியம் என்பது இது தான்.

ஏன் உருசியா உக்ரைன் விடயத்தில் தலையிட வேண்டும்?. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் உக்ரைன் உருசிய பேரரசின் பிடிக்குள் தான் எப்போதும் இருந்துள்ளது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் காட்டும் நெருக்கமும் நேட்டோ உருசியாவின் அண்டை நாடுகளில் தளம் அமைப்பதும் அதற்கு உவப்பாக இல்லை.  உக்ரைனும் நேட்டோவின் கைகளுக்குள் போவதை தடுக்க முயல்கிறது. நேட்டோ பக்கத்தில் வருவது உருசியாவின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல். பல நாடுகள் இணைந்தது நேட்டோ என்றாலும் நடைமுறையில் அது அமெரிக்காவின் முகமூடி. இது எல்லொரும் அறிந்ததே.

இப்போதும் நேட்டோ உக்ரைனை தங்களுடன் சேர்ப்பதில்லை என்ற உறுதியை உருசியாவானது நேட்டோவிடம் கேட்கிறது. அதை அவர்கள் தந்தால் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை நிறத்திவிடுவதாகவும் அவர்களை உக்ரைன் அரசுடன் இணைந்து இருக்குமாறும் சொல்வதாக கூறுகிறது. அப்படி சொல்லவில்லை ஆனால் உறுதி கிடைத்தால் கொடுக்கபோகும் பதில் அதுதான். இது வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.


2011, 2012, 2013ம் ஆண்டுகளை விட இப்போது எப்படி பாறைநெய் பயன்பாடு குறையும்? கிணறுகளில் இப்போது கச்சா எண்ணெய் குறைந்திருக்கும். ஆனா விலை???? எப்படி? கணக்கு உதைக்குதே. 2010இல் கூட இன்றைய விலையை விட அதிகம்.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் (Shale oil) எடுப்பது காரணமாக சொல்லப்பட்டாலும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தான் உண்மையான காரணமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
அந்த அளவுக்கா பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து விட்டார்கள்? அதில் எடுத்த விபரம் வெளியே வரலையே.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய்- இதை களிப்பாறை கச்சா எண்ணெய் எனலாமா?

நம்மூர் அரசியலே பெரிசா இருக்கு இதுல உலக அரசியல் நமக்கு எதுக்கு? ஆனா அதன் பாதிப்பு நம்மை தாக்கும்.

நம்மூர் பக்த கோடிகள் விலை குறைந்ததற்கு மோதி தலைமையில் நடுவண் அரசு அமைந்தது தான் காரணம் என்று கூறாமல் இருந்தால் சரி. இப்படியும் கூறுவார்கள் அதையும் சிலர் நம்புவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

டிசம்பர் 1 அன்று  விலை குறைந்துள்ளது.  ஆமா நமக்கு எவ்வளவு விலைய குறைச்சு இருக்காங்க?

பாறைநெய், டீசல் போன்றவற்றின் குறைந்த விலைகுறைப்புக்கு ஏமாறாதிங்க மக்களே. சந்தைவிலையை பொருத்து விலை நிர்ணயம் என்று சொல்லி விலையை ஏத்தும் போது கடுமையா ஏத்திட்டு குறைக்கும் போது ????

பாறைநெய் விலை அதிகரித்தது என்றால் விலை நிர்ணயமானது கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சார்ந்தது என்பார்கள்.

ஓர் ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

5 ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

2010லிருந்து பாறைநெய் விலை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இது சென்னையை அடிப்படையாக கொண்ட விலை நிலவரம்:

            ஆண்டு 2010
தேதி விலை
பிப்பரவரி 2 51.59
ஏப்பிரல் 1 52.13
யூன் 26 55.92
செப்டம்பர் 8 56.02
செப்டம்பர் 21 56.31
அக்டோபர் 17 57.09
நவம்பர் 9 57.44
டிசம்பர் 16 60.65

2010இல் விலை ஒரு முறை கூட குறையவில்லை.

       ஆண்டு 2011
தேதிவிலை
மார்ச்சு 261.63
மே 1567.22
யூலை 167.5
செப்டம்பர் 1670.82
நவம்பர் 472.73
நவம்பர்1670.38
டிசம்பர் 169.55

        ஆண்டு 2012
தேதிவிலை
மே 2477.53
யூன் 375.4
யூன் 2972.27
யூலை 2473.16
யூலை 2572.19
ஆகசுட்டு 172.19
அக்டோபர் 971.48
அக்டோபர் 2771.77
நவம்பர் 1670.57


        ஆண்டு 2013
தேதிவிலை
சனவரி 1 70.58
சனவரி 1870.26
பிப்ரவரி 1672.17
மார்ச்சு 273.95
மார்ச்சு 1671.41
ஏப்பிரல் 270.34
ஏப்பிரல் 1669.08
மே 165.9
யூன் 166.85
யூன் 16 69.39
யூன் 29 71.71
யூலை 1573.6
ஆகசுட்டு 174.49
செப்டம்பர் 177.48
செப்டம்பர் 1479.55
அக்டோபர் 175.68
நவம்பர் 174.22
டிசம்பர் 2174.71

       ஆண்டு 2014
தேதிவிலை
சனவரி 475.71
மார்ச்சு  176.48
ஏப்பிரல் 175.49
ஏப்பிரல் 1674.6
யூன் 774.71
யூன்  2574.76
யூலை  176.93
ஆகசுட்டு 175.78
ஆகசுட்டு 1573.47
ஆகசுட்டு 3171.55
அக்டோபர்  1 70.87
அக்டோபர்  1569.59
நவம்பர் 167.01
டிசம்பர் 166.05
பாசக ஆட்சிக்கு வந்து 6 முறை விலை குறைந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் விலை குறையவில்லை. 
நானும் விலை குறைச்சிருக்கேன் என்று சொல்லி மக்களை நம்பவைக்க இது உதவும். ஆனா விவரம் தெரிஞ்சவன் கிட்ட இந்த பருப்பு வேகாது, ஆனா ஊடகங்களும் அரசின் ஊதுகுழலா இருந்து மக்களை நம்பவைக்கும்.

கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பாறைநெய் விலையை அரசு குறைக்க சொல்லாமல் இறக்குமதியாகும் கச்சா எண்ணைய்க்கு மூன்று வார இடைவெளிக்குள் பாறைநெய்க்கு லிட்டருக்கு 3.75 ரூவா என்றும் டீசலுக்கு லிட்டருக்கு 2.5 ரூவா என்றும் உற்பத்தி வரி விதித்து (அதிகரித்து, முன்னமே வரி உண்டு) பொதுமக்களுக்கு விலை குறைவு ஏற்படாமல் செய்துள்ளது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் 40 % அளவுக்கு குறைந்துள்ளது ஆனால் பாறைநெய் 11%, டீசல் 8% மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.  
 

 இந்த சுட்டியில் விரிவாக போட்டுள்ளார்கள்.

சனி, நவம்பர் 22, 2014

திருப்பதி பயணம்(ங்கள்)

திருப்பதி வேங்கடவனை பார்க்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை ஆனா பாருங்க அதுக்கு கொடுப்பினை இல்லாமல் இருந்தது. எங்க குடும்பத்தில் வேங்கிய பார்க்க போவனும்னு பேசிக்குவோம். அது பேச்சாவே இருந்தது.

வேங்கடவன் அலங்காரம் இல்லாமல்
அலங்காரம் இல்லாமல் உள்ள வேங்கடவன் திருமலை வேங்கி இல்லைன்னு நினைக்கிறேன். திருமலை வேங்கியின் புகைப்படம் (நிழற்படம்) வெளியில் வந்திருக்கான்னு தெரியலை. அலங்காரத்தோடு உள்ள வேங்கி மற்ற இடத்திலுள்ள வேங்கி என்பது என் எண்ணம்.

தனக்கு பிடித்த மலர் அலங்காரத்தோட வேங்கி.
நான் சின்ன பயனா இருந்தப்போ (வயசு மறந்துடுச்சி) எனக்கு உடம்பு சரியில்லை (வயித்துக்கடுப்பு) அதை சொல்லியும் கூட, சுற்றுலா போறவங்க யாரோ வரலைன்னு என்னை விடாப்பிடியா கூப்பிட்டாங்க. என் அத்தை மூலமா அந்த சுற்றுலா ஆளு எங்க வீட்டுக்கு வந்து என்னை பிடிச்சார். அலுவல் காரணமா எங்க அம்மாவால வர முடியாத நிலை என்ன பண்றது என்னை சுற்றுலா குழுவோடு அனுப்பி வைச்சாங்க. திருமலை போற வரைக்கும் எனக்கு உடல்நிலை சரியாகலை. அங்க கூண்டுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கறப்ப அங்க (அதுக்குன்னு கூண்டிலிருந்த இடத்தில்) குளிச்சேன் உடல் நிலை நல்லாயிடுச்சி. அது வரைக்கும் ரொம்ப பட்ட பாடு சொல்லி மாளாது :( .

கூண்டிலிருந்து (தர்ம தரிசன கூண்டு) மக்கள் சாமியை பார்க்க செல்கின்றனர்..

அடுத்த முறை குடும்பத்தோட போனோம் காட்பாடிய தாண்டினதும் விஜயவாடா அல்ல விசயநகரத்தில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசு மக்களவை உறுப்பினர் இறந்ததாலோ அல்ல தாக்கப்பட்டு கவலைக்கிடமானதாலோ ஆந்திராவுல மறியல் அப்ப இராமாராவ் ஆட்சி, எந்த வண்டியும் ஓடல. சோத்து மூட்டைய தூக்கிக்கிட்டு நாங்க நடந்தோம் அப்ப யாரோ புண்ணியவான்கள் எங்களை ஜீப்பில் ஏற்றிக்கிட்டாங்க. சித்தூரில் எங்களை இறக்கிவிட்டாங்க. அங்க காத்திருந்து தொடருந்து புடிச்சி திருப்பதி போனோம்.  அடுத்த தேர்தலில் காங்கிரசு ஆட்சிக்கு வர அந்நிகழ்வும்  "கை" கொடுத்தது. இது தான் நன்றாக நினைவு தெரிந்து நான் போன முதல்  தொடருந்து பயணம். எல்லாப்புகழும்  காங்கிரசு செய்த மறியலுக்கே :)

அலிப்பிரி என்னும் அடிவாரத்தில் உள்ள கோபுரம்
அப்புறம் மாமா பையனுக்கு மொட்டை அடிக்கிறதுக்காக குடும்பத்தோட போனோம். இப்ப வாடகை மகிழுந்தில் போனோம். பாவிநாசனத்தில் உள்ள அணையில் ஓரமா எல்லோரும் குளிக்க மேல இருந்து தண்ணி வருமே அதுல நல்லா குளிச்சோம். அங்க பூங்கா இருக்கு. சோத்து மூட்டைய அவிழ்த்து திங்க தொடங்கினோம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நானும் என் மாமா பையனும் தனியா போயி அங்கு வந்திருந்த பெண்களை (வயசு காரணம்;) ) சைட் அடித்தோம். பெண்களும் நைசா சைட் அடித்தார்கள். அங்கிருந்து வரவே மனசில்லை. எப்படி? அங்கிருந்து கிளம்ப மனசு வரும் இஃகி இஃகி. அங்கே அணை உள்ளது ஆனால் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை. திருமலையில் உள்ள கட்டடங்களுக்கும் கோயில்களுக்கும் இங்க இருந்து தான் நீலு (தெலுங்கு சொல் ஒன்னு கத்துக்குங்க) வருது.

பாபவிநாசனம் என்ற இடத்தில் குளியல்




படி இல்லா சம தள நடைபாதை







அடுத்த முறை என் மாமா பையனும் நானும் (நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் போது) திருப்பதி போனோம். திருப்பதியில் தமிழ் பேசும் இருவர் கூட சேர்ந்து கொண்டோம், அவர்களால் திருப்பதியில் உள்ள கோவிந்தராச பெருமாளை கும்பிட்டோம், எத்தனை பேர் கோவிந்தனை பார்த்திருக்காங்கன்னு தெரியலை, பெரும்பாலோர் வேங்கிய பார்ப்பதோட சரி.  பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து மேல(திருமலை) போனோம். மேல போனதும் நாங்க அவங்களிடம் இருந்து பிரிஞ்சிட்டோம். நல்லா சாமி கும்பிட்டோம். Semester (செமசுடர்) தேர்வில் எல்லாம் தேர்வாகனும் என்று வேண்டிக்கொண்டோம். அதுக்குத் தானே போனது.

திருப்பதி நகரிலுள்ள கோவிந்த ராச பெருமாள் கோவில் கோபுரம்.
கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்தாச்சு. நானும் என் நண்பனும் நினைச்சா சின்ன நண்பர்கள் குழுவ (3~6 பேர் ) சேர்த்துக்கிட்டு திருப்பதி போயிடுவோம். பல முறை போயிருக்கோம் எப்பவும் மேல போறப்ப நடை பின் தேவசுதான அறைய பிடிச்சு குளிச்சுட்டு சாமிய கும்பிட்டுட்டு பேருந்தில் கீழே. அப்புறம் நேரா சென்னை. சில முறை திருத்தணி வழியா போகும் பேருந்து, சில முறை தடா வழியா போகும் பேருந்து. போகும் போதும் வரும் போதும். சில முறைக்கு அப்புறம் தடாவுக்கு தடை போட்டுட்டோம் ஏன்னா அவ்வழி சாலை மோசமாக இருந்ததுதான்.
அடிவாரத்தில் படி. காலுக்கு நல்ல பயிற்சி.
அடிவாரம் வரை (மலைப்பாதை தொடங்கும் இடம்) போவதற்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஜீப் அதுக்கு ஆளுக்கு 10 ரூபா. நடு இரவில் (12 மணி வாக்குல) அது கிடைப்பதே பெரிசு இல்லையா? ஆளு நிறைய சேர்ந்த பின் தான் வண்டிய எடுப்பார்கள். மலைப்பாதைகளில் நிறைய கடைகள் உண்டு தண்ணி (நீலு), கோக், இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும். சிகரெட், பீடி விற்க திருமலையில் தடை. ஆனால் புகை பிடிக்க \இலுக்க தடையில்லை.

 திறந்தவெளி கூண்டுக்குள் மான்
மலைப்பாதையில் நிறைய இடங்களில் மான்களை பார்க்கலாம் திறந்த வெளி கூண்டுக்குள் இருக்கும். கம்பி வலை நமக்காக (நம்மிடமிருந்து மானை காப்பாத்தனுமே) அப்புறம் தான் மானுக்காக. முதல் முறை போனபோது தெரிந்த கோபுரத்தை பார்த்து திருமலைக்கு வந்ததாக நினைத்தோம். நிறைய பேர் இப்படி ஏமாறுவார்கள். அதுவரை படி. அப்புறம் படி இல்லை. சாலையில் சிறிது நேரம் அப்புறம் படி அப்புறம் திருமலை. சாலையை அடையும் முன் பெரிய அனுமன் சிலை வரும் அவ்விடத்தில் யோகநரசிம்மர் கோவிலும் உண்டு. கிட்டதட்ட ஒரு கிமீ சாலையில் நடக்கனும். தூரம் ஒன்னா அல்லது இரண்டு கிமீரா? எனக்கு தெரியவில்லை, நேக்கு தெலுசா?. சாலைப்பயணம் முடிந்ததும் படி. இதில் ஏற கடினமா இருக்கும்.  ஏற்றம் (சாய்வு) கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த படி ஏற்றம் முடிந்ததும் திருமலை வந்திடும்.
சாலையை அடையும் முன் உள்ள அனுமன்
இந்த சாலையில் தான் நடக்கனும் இங்க படி இல்லை.

தேவசுத்தான அறைய வாடகைக்கு எடுக்க பெருங்கூட்டம் இருக்கும் நாங்க 3 ~ 4 க்கெல்லாம் திருமலைக்கு சென்றுவிடுவதால் அறை எங்களுக்கு கிடைத்துவிடும். 6 மணிக்கு மேல தான் அறை (கன்னத்தில் அல்ல) கொடுக்க ஆரம்பிப்பாங்க.  அறைக்கு பக்கத்திலேயே இட்லி கிடைக்கும் சில முறை கிடைக்காது எங்கு அறை உள்ளதோ அதைப்பொருத்து இது மாறும். அறையை காலி செய்யும் பொழுது கூட்டுபவர்களுக்கு காசு கொடுக்கனும், கொடுக்காமலும் வரலாம், அவர்கள் நமக்கு செய்யும் உதவியை பொருத்து நாம் முடிவு செய்யலாம். இதை அங்குள்ளவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்( காக்கா பரம்பரையான்னு கேக்காதிங்க ). ஆனா சாவியை ஒப்படைக்கும் இடத்திலும் காசு கேட்பார்கள் (நம்ம முன் பணம் அவங்ககிட்ட இருக்கில்ல) அடேய் என்னமோ நான் வந்ததும் அறையை கொடுத்த மாதிரி கேக்கறானேன்னு கோபம் வரும் ஆனா அதை வெளிக்காட்டிக்காமல் நம் முழு முன் பணத்தையும் வாங்கிட்டு வரனும். நிறைய பேர் முன் பணத்தில் ஒரு பங்கை கொடுத்துவிடுவார்கள்.(அரசு பணத்தை அவன் நமக்கு இலவசமா குடுக்கிற மாதிரி நினைப்பு, இது ஒரு வகையான உடலியல் மிகப்பெரும்பாலோர் இதற்கு இரையாவார்கள்) 100 என்று சொல்லாமல் 99.99 என்று விலை வைப்பதும் இதனால் தான். (இந்த உடலியலை நம்பித்தான்)


வீடு திரும்பும் முன் இங்க சூடம் பத்த வைச்சு சாமி கும்பிடும் இடம்

ஒரு முறை சாமி இருக்கும் உள் கோவிலை உடலால் உருண்டு வர (அங்கபிரதட்ணம்) செய்ய நானும் என் நண்பனும் முடிவு செய்து அங்க கேட்டா ஒருத்தரும் உருப்படியான தகவலை சொல்லலை. இறுதியில் ஒருத்தர் சொன்னார் உடனே ஓடினோம் ஏன்னா இன்னும் 5 நிமிடம் தான் அதுக்கு இருந்தது. அங்க இருந்த குழாயில் குளித்து விட்டு சென்றோம் குளித்துவிட்டா என்றால் உடலை தண்ணீரால் நனைத்துக்கொண்டு. நாங்க பல மணி நேரமா கேட்டுக்கிட்டு இருந்தோம் அப்பவே இத்தகவல் தெரிந்திருந்தால் வரதனோட குளத்தில் முழுக்கு போட்டு விட்டு அவதியில்லாம பொறுமையாக கூட்டத்துடன் சேர்ந்திருப்போம். அப்புறம் தான் தெரிந்தது அங்கபிரதட்சனம் செய்பவர்களுக்கு தான் முதலில் சாமி காட்சி தருவாராம். அப்புறம் தான் மற்றவர்களுக்காம்.
மேல் செல்லும் வழியுள்ள நடைபாதை கடைகள்

இதனாலயே இப்ப நிறைய பேர் அங்கபிரதட்சனம் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாகி விட்டது, 150 பேர் தான் உள் கோயிலை உடம்பால் சுற்ற முடியுமுன்னா 500 பேருக்கு மேல வந்தா என்ன பண்றது அதனால இப்ப  அதுக்கு சீட்டு முறை கொண்டு வந்துட்டாங்க.  நிறைய பேர் சீட்டு வாங்க முயல்வதால் அது கிடைப்பது கடினம் என்ற நிலை.

இரவில் ஒளிரும் வேங்கியின் இல்லம்.
ஒரு முறை எங்களில் பலசாலியான  ஒருத்தன் மேல ஏற திணருனான். நோஞ்சான் மாதிரி இருந்தவன் எல்லாத்துக்கும் முன்னாடி ஏறிக்கிட்டு இருந்தான். அப்ப தான் புரிஞ்சது மேல படி வழியே செல்வதற்கு பலசாலியா இருந்தா மட்டும் பத்தாது என்பது.

பகலில் பறவை பார்வையில் வேங்கியின் இல்லம்.
நாங்க எப்பவும் காசு இல்லா முறையில் தான் சீனியை பார்ப்போம். ஒரு முறை 50 ரூபா கொடுத்து போனோம் ஆனா பாருங்க அப்ப 50 ரூபா வரிசையை மெதுவாகவும் காசு இல்லா வரிசையை விரைவாகவும் விட்டாங்க. அப்ப முடிவு பண்ணினோம் இனி என்ன ஆனாலும் காசு கொடுத்து சீனியை பார்ப்பதில்லை என்று. 
இது 50 ரூ வரிசை லட்டுக்கா அல்ல சாமிய பார்க்கவான்னு தெரியலை
நாங்க உணவுக்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகத்தை நாடமாட்டோம். எப்பவும் கையேந்தி பவன் தான். காசு குறைவு என்பதோடு அங்க தான் ருசி அருமையா இருக்கும். சீனியை பார்த்துட்டு வந்ததும் விலையில்லா (இலவச) சோற்றுக்கு டோக்கன் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து வெளியில் வந்து விலையில்லா சோறு வேண்டாம் என்பவர்கள் அதற்காகவே காத்து இருப்பவர்களுக்கு கொடை அளித்து அன்னகொடை அளிக்கலாம்.
பக்தர்களை நம்பி திருமலையில் உள்ள கடைகள்
கிளம்பும் முன் சீனியை பார்த்தமாதிரி இருக்கும் இடத்தில் சூடம் கொளுத்தி கும்பிட்டு வருவோம். அனுமார், கருடாழ்வார் கோவிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குமே. அவ்விடத்தை விரிவாக்கம் என்ற பெயரில் இப்ப இடிச்சுட்டாங்களாமே?  படத்தில் உள்ள மரத்தை வெட்டிட்டாங்களான்னு தெரியலை.

இந்த லட்டை வாங்க என்ன கூட்டம். லட்டே திருமலைக்கு சென்றதற்கு அறிகுறி
இன்னொரு முறை பேருந்தில் சென்னைக்கு வரும் போது நண்பன் ஒருத்தன் "தண்ணிலு" என்பது தெலுங்கு என்று கூறி எங்களை ஏமாத்திக்கிட்டு வந்தான்.  தெலுங்கு தெரியாது ஆனா சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியும்னான். நாங்க அவன் சொல்றத நம்பினோம் (நாங்கல்லாம் அப்பாவிங்க நம்புங்க). நாங்க சென்னை வருவதற்கள் எங்களுடன் வந்த இன்னொருவனுக்கு இவனுக்கு தெலுங்கு வார்த்தை எதுக்கும் பொருள் தெரியாது, தண்ணிலு தெலுங்கு அல்ல சும்மா புருடா விடுறான் அப்படின்னு ஐயம் வந்திருச்சு. சும்மா அவனை இரண்டு அடி போட்டதும் அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்பதையும் தண்ணிலு என்பது இவன் கண்டுபிடிப்பு என்றும் ஒத்துக்கிட்டான். தமிழ் சொல்லோட "லு" போட்டா அது தெலுங்கு அப்படினுட்டான்.
யாரு முதல்ல இந்த கல்லை அடுக்கிவச்சாங்களோ இப்ப தொடருது
நடைபாதையில் நிறைய இடங்களில் கல்லை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஏறும் போதோ இறங்கம் போதே ஓய்வு எடுத்த யாரோ பொழுதை கழிக்க கல்லை அடுக்கி இருப்பார்கள் இப்ப மக்கள் அதை தொடர்கிறார்கள். இப்படி கல்லை அடுக்கினா விரைவில் வீடு கட்டும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறார்கள். நாங்க சும்மா இருப்பமா நாங்களும் நிறைய கல் வீடு கட்டி இருக்கோம்.

இறுதி படி. இது முடியும் இடம் திருமலையே.

 தடுப்பு ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பிரிப்பதற்காக. ஆனால் ஏறுபவர்களுக்கு கைப்பிடியாக துணையாகவும் இருக்கும். தொடக்கத்தில் உள்ள படியில் தடுப்பு இருக்காது ஆனா தொடக்க படி முடியும் முன்பு சில இடங்களில் தடுப்பு இருக்கும். சமதளத்தில் தடுப்பு இருக்காது. இறுதி படிக்கட்டில் தடுப்பு இருக்கும்.

இப்ப கூட்டமும் அதிகமாகி விட்டது கோவிலும் மிகவும் வணிக முறை ஆகிவிட்டது. சீனியை இன்னும் விற்காம இருக்காங்களேன்னு மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். திருப்பதி கோவில் லட்டு முன்ன மாதிரி இல்லை. அளவும் சின்னதாகி விட்டது, ருசி கூட பழைய மாதிரி இல்லை.  ஏதோ அதிக வணிகமுறைக்கு கோவில் மாறுவதற்குள் அங்க அடிக்கடி போனேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். முதலில் அங்க நிறைய தமிழும் அறிந்த (ஏறக்குறைய 90%) ஊழியர்கள் இருந்தார்கள். மெதுவா தமிழ் அறியாத மற்றவர்கள் அதிகளவில் ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். உள்ளூர் ஆட்களுக்கு திருமலையில் வேலையில்லாமல் போனது வருத்தம் தான். அங்க தமிழ் பக்தர்களின் வருகை மிக மிக அதிகம் ஆனால் சில அறிவிப்பு பலகைகளில் தமிழ் இருக்காது. தமிழிலும் எழுதினால் பக்தர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை ஏன் தேவசுதானம் புரிந்து கொள்ள மாட்டிக்குது?
.

இப்ப தெரிந்து கொண்ட சில மனவாடு வார்த்தைகள்:

மனவாடு மனதேசம் - நம்மஆளு நம்ம தேசம்.
நீளு - நீர்
காவலா - வேண்டுமா
காவாலி - வேண்டும்
போ - போ (மென்மையா போ என்பதை அதாவது கிளம்பு என்பதை வெள்ளு என்பார்கள்)
வெள்ளு - கிளம்பு
சம்பேஸ்தானு - கொன்னுடுவேன்
சால - நல்லா
சால பாகுந்தி - நன்றாக இருக்கிறது.
பாகுனானா - எப்படிய்யா இருக்க என்று கேட்போம்மில்ல அது மாதிரி
சால பாகுனானு - நன்றாக உள்ளேன் (மேலே கேட்டதற்கு பதில்)

பெள்ளி -திருமணம்
மிர்ச்சி - மிளகாய்
ஆவுதா - அப்படியா
கொடுக்கு - மகன்
கூத்துரு  - மகள்
அம்மாயி - பெண்
தெல்லிது - தெரியாது
தெலுசா - தெரியுமா
 செப்பு- சொல்லு
இடி - இது
கடவு - படி
அத்தடு - அவன்
போஜனம் \ அன்னம் - சோறு\சாப்பாடு
சேசாவா - முடிச்சாச்சா
நிஜமா - நிசமா நாமளும் நிஜமா என்று சொல்லுவோம்
ஏமிட்டி - என்ன
அத்தனு - அந்தாளு
எவரு - யார்\எவர்
அக்கடிக்கி  வெள்ளு - அங்கே போ
எந்த \ எல - எப்படி
இக்கட சூடு ஹ ஹ ஹா - இங்கே பார் (இரஜினியால் இச்சொல்லை அறிந்தேன்)





புதன், அக்டோபர் 29, 2014

நரிமனும் அறமும் நீதியும் செயலலிதாவின் பிணையும்


நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக இருந்தால் அவரது நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் இந்தியாவில் இம்மரபு ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை.

தந்தை நரிமன் - வழக்குரைநர்

இப்போது மூத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பாலி சாம் நரிமன் செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்காக (பிணைக்காக) வாதாடியது இப்பிரச்சனைக்கு  உயிர் கொடுத்துள்ளது. பாலி சாம் நரிமனின் மகன் ரோகின்டன் பாலி நரிமன் உச்ச நீதிமன்றத்தில் யூலை 2014 முதல் நீதிபதியாக உள்ளார்.  கோபால் சுப்பரமணியத்தை நீதிபதியாக ஆக்க விடாமல் பாசக அரசு பல தகிடுதத்தங்களை செய்தது அப்போது தான், இல்லாவிட்டால் கோபாலும் ரோகின்டனுடன் நீதிபதியாகி இருப்பார்.  தந்தை நரி வழக்குரைஞராக அவ்வழக்கில் தோன்றுவது குறித்து அப்போது எழுத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளிய தந்தை நரி தான் வழக்காடுவது குறித்து சட்டப்பூர்வ தடையில்லை என்றார். எல்லோரும் சட்டப்படி ஒரே மாதிரி பார்க்கப்படுகிறார்கள் என்றார்.
மகன் நரிமன் - நீதிபதி

1961 வரை பலமுறை வழக்குரைஞர்கள் அவர்கள் உறவினர்களின் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்கள். 1961இல் இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதி  எண் 6ன் கீழ் நீதிபதியின் உறவினர்கள் யாரெல்லாம் வாதடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.  அதன் படி  நீதிபதியின் மகன், மகள், மருமகள், மருமகன், சம்பந்தி, சகோதர சகோதரிகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தா, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குழந்தைகள் மற்ற நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது. எனினும் இதிலும் குறை இருந்தது. நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்திலேயே (நீதிமன்ற வளாகம்?) வாதாடக்கூடாதா? (அவர் அங்கு இருக்கும் வரை) அந்நீதிபதியின் கீழ் வரும் வழக்குளுக்கு வாதாட கூடாதா? என்ற தெளிவு இல்லை. (வழக்குரைஞர்களுக்கு சட்டத்தின் ஓட்டையை கொடுக்கலாமா?)

 1980களின் தொடக்கத்தில் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்விதியை பற்றி விளக்கமளித்தது.  அச்சமயத்தில் கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி நசர்கி மனைவியை இழந்திருந்தார். அவரை பெண் வழக்கரைஞர் பிரமிளா நசர்கி மணமுடித்தார். அச்சமயம் பிரமிளா மூத்த வழக்குரைஞர் அல்ல எனவே அவர் பெயர் வழக்காடும் அனுமதி பெற்றதாக அவர் வாதாடும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இதை கவனித்த நீதிபதி அவர் வாதாடும் வழக்குக்குக்கு அவரை வழக்காடும் அனுமதி பெறும் படி கூறினார். அடுத்த நாள் அவர் பெயர் வழக்காடும் அனுமதி பட்டியலில் இருந்தது. ஆனால் அவர் வாதாடும் வழக்கின் நீதிபதி அவரை அனுமதிக்க மறுத்து விட்டார்.

அவர்  இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதியின் படி நீதிபதியின் எந்த உறவினரும் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றக்கூடாது என்றார்.  ஆனால் நீதிமன்றம் என்றது மொத்த கருநாடக உயர் நீதிமன்றத்தையும் (உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்றங்கள் இருக்கும் - வளாகம்) என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இது தான் முன்னமே தெரியுமே அப்படிங்கிறிங்களா? அதுவும் சரிதான்.


இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி அறிவிப்பை இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது.   ஆனால் இப்பிரச்சனையில் தொடர்புடைய  பிரமிளா மூத்த வழக்குரைஞராக மாறிவிட்டதாலும் அவரின் நீதிபதி  கணவர்  ஓய்வு பெற்றுவிட்டதாலும் இப்பிரச்சனை முடிவு எடுக்கப்படமாலே முடிந்தது (நீதியின் வேகத்தால் இஃகி இஃகி).  ஆனாலும் இவ்விதியை சரியாக விளங்கிக்கொள்வதில் \  விளக்குவதில் நீதிமன்றங்களால் இன்னும் சரியான முடிவு எடுக்கமுடியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருட்டிண ஐயர் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் வழக்குரைஞர்  மகன் கிருட்டிணமூர்த்தி வேறு மாநிலத்துக்கு சென்று வழக்குரைஞர் தொழிலை செய்தார்.  1970களில் இன்னொரு விவரமான வேலையை சில வழக்குரைஞர்கள் செய்தார்கள். பிணை வழங்குவதில் கண்டிப்பான அவர்களின் நீதிபதி மாமனாருக்கு செல்லும் பிணை மனுக்களில் இவர்களும் தோன்றுவதாக கையெழுத்து இடுவார்கள் அதனால் அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுவிடும்.  அப்புறம் என்ன...


உச்ச நீதிமன்ற நீதிபதியாக கிருட்டிண ஐயர் பதவியேற்றதும் அவரின் வழக்குரைஞர் மகன் இந்தியாவின் எந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவராமன் நாயரின் மகளும் மருமகளும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கியதும் சிவராமன் நாயர் குடியரசு தலைவரிடம் கேட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி சென்றார்.


இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் தன் வரலாறு கூறும் நூலில் பாட்னா  உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்குள்ள வழக்குரைஞர்கள் சிவப்புக் கொடி என்ற முறையை கையாண்டதை குறிப்பிடுகிறார்.

மகன், தந்தையின் நீதிமன்றத்தில்\அமர்வில் வழக்காட முடியாது என்பதால் சிலர் அவரின் நீதிமன்றத்துக்கு\அமர்வுக்கு தங்களுடைய வழக்கு செல்லக்கூடாது என்று கருதும் போது மகனிடம் வழக்கின் விபரங்களை கூறி வழக்கு அவரின் தந்தையிடம் செல்லாமல் தடுத்துவிடுவார்கள். இம்முறையானது சிவப்பு கொடி என்று அழைக்கப்பட்டது. இவ்வகையில் சட்டத்தின் விதியை முறையற்ற முறையில் கையாள்வது இங்கு அதிகம் காணப்பட்டது. சில இளம் வழக்குரைஞர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதியின் மகன்களுக்கு ஆதராவாக இருந்ததாகவும் கேள்வியுற்றேன் என்றும் லீலா சேத் கூறுகிறார். இம்முறையிலும் சிவப்பு கொடி முறை வளர்ந்தது.


1981இல் குப்தா வழக்கில் நீதிபதிகளை இடமாற்றும் போது அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் அவரின் உறவினர் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் உறவினர் நீதிபதிக்கு மற்ற நீதிபதிகளைவிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நிலை உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓர் கருத்தரங்கில் கூறிய அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவாகியது. அக்கருத்தரங்கில் அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரின் உறவினர் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் போது மற்றவர்களை விட தனக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்பதாலும் அது முறையற்றது என்பதாலும் அவ் வாய்ப்பை பயன்படுத்த கூடாது என்று நீதியை காக்கும் பொருட்டு வேறு மாநில நீதிமன்றத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.

1997இல் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் "சட்டவாழ்வின் மதிப்புகள்" என்ற தீர்மானத்தை கடைபிடிப்பதாக உறுதியேற்றார்கள். அத்தீர்மானம் நீதிபதியின் உறவினர் நீதிபதியின் நீதிமன்றத்தில் வாதாடுவதை தடுப்பது என்றும் நீதிபதியின் வீட்டில் தங்கி அவரின் உறவினர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.


மார்கண்டேய கட்சு சில நீதிபதிகளின் உறவினர்கள் அதே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே அவர்களின் உறவினர் வழக்குரைஞர்கள் பெரும் செல்வந்தர்களாகி விடுவதையும், விலையுயர்ந்த மகிழுந்து & வீடு என்று  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் குறிப்பிட்டார்.

லோதா - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சதாசிவத்திற்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்ற லோதாவிடம் நீதிபதியின் உறவினர்கள் அவர் பணியாற்றும் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞனர் தொழில் புரிய தடை விதிக்கப்படுமா என்று கேட்டப்பட்டபோது இது பற்றி  வழக்குரைஞர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்றார். இது தொடர்பாக பொது நல வழக்கை வழக்குரைஞர் சர்மா தொடுத்ததை தள்ளுபடி செய்தார்.

தற்போது நரி தன் மகன் நீதிபதியாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.  நீதியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை கெடுவதற்குள் வழக்குரைஞர் மன்றம் இது தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதுய கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது. நான் தமிழாக்கம். கட்டுரையை படித்தபோது சில இடங்கள் புரியவில்லை. அச்சுக்கு தகுந்த மாதிரி வெட்டி நாம புரிஞ்சிக்காம செய்துவிட்டார்கள் என்று தைரியமாக கூறலாம். சில இடங்களில் என் கருத்தை சேர்த்துள்ளேன் நான் என்ன தொழில் முறை மொழிபெயர்ப்பாளரா? ஆனால் அவரின் கருத்தில் இருந்து மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.

இக்கட்டுரையை படித்தால் வழக்குரைநர் தொழிலிலும் அறத்தை கடைபிடித்தவர்கள் இருந்ததை காணலாம்.

நரிமன் நிறைய பணம் சேர்த்துள்ளவர் இன்னும் ஏன்?  இவரின் செயல் சட்டப்படி சரியென்றாலும் அறமில்லையே? செயலலிதாவுக்கு வேறு திறமையான வழக்குரைநர்கள் கிடைக்கமாட்டார்களா? உச்ச நீதி மன்றத்தில் வேறு திறமையான வழக்குரைஞர்கள் இல்லையா?  நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக  இருந்த இவர் தவறான முன்னுதாரணம் ஆனது நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் செயல் அன்றி வேறு என்ன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லோதா ஒரு உறுதியான முடிவை அப்போது எடுத்து இச்சிக்கலுக்கு தீர்வுகண்டிருக்கலாம்.

வியாழன், அக்டோபர் 16, 2014

நோபல் அமைதி பரிசு சரியானவர்களுக்கு கொடுத்தார்களா


நோபல் அமைதி பரிசு என்பது அரசியல் தொடர்புடையது. சில முறை சரியானவர்கள் பெற்றுள்ளார்கள் என்ற போதிலும் இதில் நிறைய அரசியல் உள்ளது. அதற்காக மற்ற  துறைகளில் அரசியல் இல்லை என்று கருதவேண்டாம் அங்கு மிக குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம். அண்மைய கால அமைதிப்பரிசை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒபாமா (இது அவருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒன்று), வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம், ஐநா போன்றவை நிறையவே சொல்லும்.

இப்போது இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்கள்.

 கைலாசு சத்தியார்த்தி சுதந்திர இந்தியாவில் பிறந்து இந்தியராக இருந்து நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். அன்னை தெரசா இந்தியர் தான் என்றாலும் அவர் ஐரோப்பாவிலுள்ள மாசிடோனிய குடியரசில் பிறந்தவர்.

மற்ற இந்தியர்கள் சுதந்திரத்துக்கு முன் நோபல் வாங்கியவர்கள் (இராமன், தாகூர்), வெளிநாடுகளில் குடியேறியவர்கள் (அவர்கள் இந்திய வம்சாவழியினர் இந்தியர் அல்ல)

இதில் கொடுமை கைலாசு சத்தியார்த்திக்கு இந்திய அரசு  இது வரை எச்சிறப்பையும் செய்யவில்லை. பத்மா விருது என்பார்களே நம்ம சின்ன கலைவாணர் விவேகிற்கு கொடுத்தார்களே அதைக்கூட தரவில்லை.

வெளிநாடுகள் நிறைய விருதுகளை இவருக்கு கொடுத்துள்ளன. இவரை பரிந்துரைத்தது கூட சில வெளிநாட்டினர் தான்.

நம் அனைத்து (அச்சு, இணைய, தொக்கா) ஊடகங்களும்  இவரைப்பற்றி இது வரை விரிவாக சொன்னதில்லை.  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகாவது இவரைப்பற்றி சொல்லியிருக்கலாம். இப்போதும் இவரைப்பற்றி பெரிய அளவு செய்தி இல்லை.  நோபல் பரிசு இந்தியருக்கு என்றவுடன் செய்திபோட்டாக வேண்டும் ஆனால் அவர்களுக்கு இவரைப்பற்றி விரிவாக செய்திபோட இயலவில்லை. மலாலாவுக்கும் கொடுத்ததால் தப்பித்தார்கள், அவரைப்பற்றி தான் நிறைய காணொளிகள் உள்ளதே. சத்தியார்த்தி பற்றி கால் பங்கு மலாலாவைப்பற்றி முக்கால் பங்கு வெளியிட்டு தப்பித்தார்கள்.

 நம் ஊடகங்களும் அரசும் எப்படி என்பது இதன் மூலம் மேலும் விளங்கும் (இவர்களைப்பற்றி தெரியும் என்றாலும்).

30 ஆண்டுகளாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வரும் இவருக்கு நோபல் விருது கிடைத்தது மிகவும் பொருத்தம். இவரைப்பாதுக்காக்க இந்த விருது உதவும்.  எப்படியோ இவ்வளவு காலம் கொலைவெறித்தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். இவ்விருதால் இவருக்கு கிடைத்த  ஆகச்சிறந்த பயன் இதுவென்று கூறலாம். இவர் அமைப்புக்கு பணம் கிடைத்ததை விட இதுவே சிறப்புடையது. இப்ப இவர் சென்றால் இவரை தாக்க குழந்தைகளை பணிக்கு அமர்த்திய அரசியல் பணபல ஆள்பல செல்வாக்கு உடையவர்கள் அஞ்சுவார்கள், புகார் அளித்தால் காவல்துறை தட்டி கழிக்க முடியாது. இப்ப இவர் சொல்லுக்கு ஊடகத்தில் மரியாதை இருக்கும்.

மலாலாவுக்கு கொடுத்தது சரியா என்றால் இல்லை என்று கூறலாம். 

மலாலாவின் சாதனை குறைவானதா என்றால் இல்லை.  இப்போது வாங்க அவருக்கு தகுதியில்லை என்பதே உண்மை. அவர் தாலிபான்களுக்கு எதிராக தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்று போராடினார். அந்த அஞ்சா நெஞ்சத்தை பாராட்ட வேண்டும். பின் தாலிபான்களால் சுடப்பட்டு பாக்கித்தானில் சரியான சிகிட்சை முறை இல்லாததால் பிரித்தானியாவுக்கு சென்று மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தார். இவரை தாலிபான்களுக்கு எதிரான பரப்புரைக்கு மேற்குலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை இசுலாம் மதத்தை சேர்ந்தே பெண்ணே எதிர்ப்பது சில முட்டாள் தீவிரவாத முசுலிம்களுக்கு செருப்படியாக இருக்கும்.

பிரித்தானியாவுக்கு வந்ததில் இருந்து அவர் பாக்கித்தானுக்கு செல்லவில்லை. சென்றால் உயிருக்கு பாதுகாப்பில்லை. பாக்கித்தான் அரசால் அப்பகுதியிலிருந்து தாலிபான்களை விரட்ட முடியவில்லை. தாலிபான்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழ் படுகிறது என்பது உண்மை ஆனால் இசுலாமாபாத்துக்கு வடபுறம் நிறைய நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது? பரப்புரைக்கு மட்டுமே மலாலா பயன்படுத்தப்பட்டு வருகிறார். அப்போது தாலிபான்களை எதிர்த்ததுக்கா நோபல்?

நிறைய பெண்கள் தாலிபான்களை எதிர்த்து களத்தில் உயிருக்கு பயப்படாமல் இன்னும் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பிக்கலாம்.

இப்போது மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் (கிடைத்தது) அரசியல் தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

இதில் அவர் பகடைக்காய்.







ஞாயிறு, அக்டோபர் 05, 2014

சசிகலா குடும்ப கிளைப்படம் விபரம் படத்துடனும் விளக்கத்துடனும்

கருணாநிதி குடும்ப குடும்ப கிளைப்படம் தான் நமக்கு இது வரை தெரியும். அதிமுகவின் அசைக்க முடியாத செல்வாக்குள்ள சசிகலா குடும்பத்தினரின் குடும்ப கிளைப்படம் இது வரை நிறைய பேருக்கு தெரியாது. இவர்களை மன்னார்குடி மாப்ஃபியா என்றும் மக்கள் அன்போடு ( அன்போடா? வெறுப்போடா? பயத்தோடா?) அழைப்பார்கள்.


மன்னார்குடி குடும்ப வகையறா


சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.

(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி

(2)மருத்துவர். கருணாகரன் -இவரது ஓரே குழந்தை (மகன்)  மருமகன் ஆர்பி. இராவணன் (மிடாசு மதுபான ஆலையின் தலைவர்) இவரின் மகள் பெயர் தெரியவில்லை. இவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் தெரியவில்லை.
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )

விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:

1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். 

*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்

2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்

3. சசிகலா (நடராசன்)

4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)

5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி

6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)

சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அண்ணன் பையன் சுதாகரன் ஆகியோர் செயலலிதாவோடு சேர்த்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள். 

தஞ்சாவூரில் மருத்துவமனையை வாங்கி அதற்கு வினோதகன் பெயர் இட்டார்கள் என்று நினைக்கிறேன். 

பெயருக்கு  முன்போடும் முன்னெட்டு பற்றி முழு விபரம் தெரியவில்லை. டிடிவி என்றால் "தி"ருத்"து"றைப்பூண்டி "வி"வேகானந்தன் என்று நானாக நினைத்துக்கொண்டு உள்ளேன் எனக்கு முழு முன்னெட்டுக்கான காரணம் தெரியாது. 

வியாழன், செப்டம்பர் 18, 2014

கொலம்பிய பெண்கள் மிதிவண்டி குழுவின் தோல் நிறமுடைய உடையால் சர்ச்சை


கொலம்பிய நாட்டின் பெண்கள் மிதிவண்டி குழு இடுப்பிற்கு சற்று மேலிருந்து (அதாவது வயிற்று பகுதியிலிருந்து) தொடை வரை தோல் நிறத்தில் ஆன உடையை அணிந்திருப்பது பெரிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.

முதலில் அவர்கள் அந்த ஆடையுடன் காட்சியளித்தை போட்ட பிபிசி பிபிசியில் தான் நான் அச்செய்தியை பார்த்தேன், மற்றவர்களும் வெளியிட்டுருக்கலாம். தோல் நிறத்தில் உள்ள பகுதியை கறுப்பு கோடு கொண்டு அழித்து வெளியிட்டது.

கறுப்பு கோட்டால் மறைக்கப்பட்ட உடையுடன் பெண்கள் குழுவினர்


கொலம்பிய தலைநகர் பகோடாவில் அவ்வுடையை அணிந்து அவ்வுடையில் தவறு இல்லை என்று அக்குழுவினர் கூறினார்கள்.

இது தான்  தோல் நிறத்தை கொண்டுள்ள அவ்வுடை


அக்குழுவின் உறுப்பினரான ஆஞ்சி ரோசா இவ்வுடையை வடிவமைத்தார். தடகள மற்றும் மிதிவண்டி ஓட்டுபவரான தான் இவ்வுடையால் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இதுவும் மற்ற உடைகளைப்போன்றதே என்றார். 

பன்னாட்டு மிதிவண்டி சங்கத்தின் தலைவர் பிரையன் கூக்சன் இந்த உடைகள் கண்ணியமாக இல்லை என்றும் இவை அனுமதிகப்பட முடியாதவை என்றும் கூறினார்.

மறைக்கப்படாமல் முழுஉடையுன் பெண்கள் குழுவினர்


இந்த உடையை இவர்கள் அடுத்த வாரம் கொலம்பியா சார்பாக எசுப்பானியாவில் நடைபெறும் பொன்பிராடாவின் உலக வாகையாளருக்கான போட்டியில் அணிவார்களா என்று தெரியவில்லை.  இவ்வாரம் இத்தாலியில் நடந்த மிதிவண்டி போட்டியில் இவ்வுடையுனேயே கலந்து கொண்டார்கள்.

இப்போது கறுப்பு பகுதியை விலக்கிவிட்டு முழுவதுவாக அவர்கள் படத்தை பிபிசி போட்டுள்ளது. பிபிசியின் இம்மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.

சனி, ஜூலை 19, 2014

2014 உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம்

வென்றவர் முன்னால் திருத்தந்தை பெனடிக்கட்


இறுதியாட்டம்

அர்செண்டினா 0 - செருமனி 1

வழக்கமான நேரம்:
இரு அணிகளும் நன்றாக சம பலத்துடன் ஆடின. யாரும் கவல் (Goal) அடிக்கவில்லை. சில வாய்ப்புகள் (சுலபமானது அல்ல) கிடைத்தபோதும் இருவரும் அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அர்செண்டின்னாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதை தவறவிட்டு பெரும் பிழை செய்தது. பின் மெசிக்கு அருமையான கவல் போடும் வாய்ப்பு வாய்த்தது, ஆனால் அவர் அதை தவற விட்டுவிட்டார். இவ்விறுதியாட்டத்தில் இப்படிப்பட்ட கவல் போடும் வாய்ப்பு யாருக்கும் வாய்க்கவில்லை. இது போன்ற தவறவிடும் வாய்ப்புகளால் அவரை உலகின் மிகச்சிறந்த வீரர் என சொல்ல முடியாமல் போகின்றது. யாராவது அவர் சிறந்த வீரர் என சொன்னால் அவர்கள் வாயிலேயே குத்த வேண்டியது தான், 2014 உலகக்கோப்பையில் கட்டாய வெளியேற்றம் என்ற முறையில் நடைபெறும் ஆட்டத்தில் எதிலாவது அவர் கவல் போட்டிருக்கிறாரா? இல்லை என்பதே பதில்.

அர்செண்டினா அணி பெற்ற இரண்டு மஞ்சள் அட்டைகளும் அவசிமில்லாதது. பந்து கவல் பகுதியில் இருந்தாலாவது மஞ்சள் அட்டைய பெற்றதை பொறுத்துக்கொள்ளலாம்.

வெற்றிக் களிப்பில் செருமனி அணி

மிகை நேரம்:
தொடக்கத்தில் செருமனிக்கு மிக அருமையான வாய்ப்பு வாய்த்தது. அதை முயன்ற செருமனிக்கு அவ்வாய்ப்பு தவறிவிட்டது.

பத்து நிமிடங்களில் அர்செண்டினாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது அதை 18ம் எண் உடையவர் தவறவிட்டுவிட்டார்.

கவல் - 22 நிமிடத்தில் செருமனி (19ம் எண்காரர்) அருமையாக கவல் அடித்தது. அர்செண்டினாவின் தடுப்பரண் அப்போது சிதைந்து இல்லாமல் இருந்தது.

27வது நிமிடத்தில் அருமையான தலையிடி மூலம் கவல் அடிக்க அர்செண்டினாவின் மெசி முயன்றார். ஆனால் அது கவல் கம்பத்துக்கு சிறிது உயரத்தில் சென்றதால் கவலாகவில்லை. (மிக அருமையான வாய்ப்பு தவறிவிட்டது)

1990 க்கு பிறகு செருமனி இப்போது தான் உலகக்கோப்பையை பெறுகிறது.
இவ்வாட்டத்தை பொறுத்த வரை அர்செண்டினாவிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது. ஒப்பீட்டளவில் செருமனிக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. எல்லாம் வீணாலும் ஒன்று மட்டும் கவல் ஆகி கோப்பையை பெற்றுதன்றுவிட்டது.
உலக்கக்கோப்பை இறுதியாட்டத்தில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டுவிட்டு வெற்றி கிட்டவில்லையேன்னு கவலைப்பட்டா சரியா?  

அர்செண்டினா தென் அமெரிக்க அணியா? எல்லோரும் ஐரோப்பிய குடியேறிகள் போன்று உள்ளனர். அர்செண்டினாவில் தொல் பழங்குடிகள் உள்ளனரா? அர்செண்டினாவை மற்ற தென் அமெரிக்கர்கள் வெறுக்கவும் கிண்டல் பண்ணவும் உள்ள காரணம் சரியானது தான்.

தங்க கையுறை வாங்கியவர் - செருமனியின் கவலி
தங்க பந்து வாங்கியவர் - மெசி (சிறந்த வீரர்) (இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்தவரை வாயிலேயே குத்த வேண்டியது தான் )
தங்க காலணி வாங்கியவர் - சேம்சு ரோட்ரிகசு (கொலம்பியா

மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்

நெதர்லாந்து 3 - பிரேசில் 0

ஆட்டம் ஆரம்பம் ஆகும் போது பிரேசில் அணி வீரர் தீவிரமா வேண்டுனார். ஆட்டம் முடிவில் தான் தெரியுது சாமி செருமனி மாதிரி இவனுங்க 7 கவல் அடிக்காம காப்பாத்துன்னு வேண்டியிருக்காருன்னு.

நெதர்லாந்து முதல் கவலை போடும் வரை பிரேசிலின் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இப்படியே ஆடினால் பிரேசில் வென்று விடும் என எண்ணினேன். நெதர்லாந்து முதல் கவலை போட்டதும் ஆட்டம் மாறிவிட்டது.

முதல்லயே கவல் விழுந்ததால எங்க செருமனி மாதிரி நெதர்லாந்தும் நிறைய கவல் அடிக்குமோன்னு நினைத்து நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகலை. நிறைய கவல் போடுவார்கள் என்று நினைத்த எனக்கு சிறு ஏமாற்றம் தான்  .

இவ்வாட்டத்தில் பிரேசில் நன்றாக ஆடினாலும் அவர்களின் போயூழோ அல்ல நெதர்லாந்தின் ஆகூழோ அவர்களால் கவல் அடிக்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை இவ்வாட்டத்தில் அவர்களே வெற்றிபெற்றிருக்க வேண்டிய அணி.

ஒலிம்பிக் போட்டி நடப்பதற்குள் தன் கால்பந்து அணியை பிரேசில் சரி செய்துடுமா?

அரையிறுதி 

அர்செண்டினா 4 - நெதர்லாந்து 2 (வழக்கமான (மிகைநேரமும் சேர்த்து) நேரமுடிவில் இருவரும் கவல் அடிக்காததால் சமன்நீக்கி முறையில் 4-2 என்ற கணக்கு வந்தது)

ஆரம்பம் முதலே அர்செண்டினாவே நன்றாக ஆடினார்கள். நெதர்லாந்தின் ஆட்டம் நன்றாக இல்லை. அர்செண்டினாவின் போயூ(கூ)ழ் (unluck) வழக்கமான நேரத்தில் கவல் விழவில்லை. சமன்நீக்கி முறை வந்த போது நெதர்லாந்து வென்றுவிடுமோ என்று பயந்தேன் (இவ்வாட்டத்தை வெல்ல தகுதியில்லை என்பதால்) நல்லவேலை அர்செண்டினா வென்றது. நெதர்லாந்தின் கவலியை விட அர்செண்டினாவின் கவலி உயரம். நெதர்லாந்தின் கவலி சமன்நீக்கி முறைக்கு சரியில்லை போன ஆட்டத்தில் வந்தவர் இதற்கும் வந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

செருமனி 7 - பிரேசில் 1 அரையிறுதி ஆட்டத்தை பார்க்கவில்லை. 

ஞாயிறு, ஜூலை 06, 2014

2014 உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டம் ஒரு பார்வை

பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை போடுபவர் தருமி அவர்கள் தான்.  நானும் ரவுடி தான் அப்படின்னு காட்ட சின்ன இடுகை. அவர் பிரேசில் அணியின் இரசிகர், பிரேசிலின் போட்டியில் தான் அதிகளவில் அழுகுண்ணி (foul) ஆட்டம் இருந்தது  (கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்திலும் (51) கால் இறுதியிலும் (54))



செருமனி 1 - பிரான்சு 0
 கால் இறுதி ஆட்டம், நன்றாக இருந்தாலும் நான் நினைத்தபடி விருவிருப்பாக இல்லை. இறுதி நிமிடங்களில் செருமனிக்கு எளிதாக கவல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியும் தவறவிட்டுவிட்டார்கள். எப்படியோ 1-0 என்ற கணக்கில் செருமனி வென்று அரையிறுதிக்கு போய்விட்டது. சொல்லிக்கொள்ளும் படி இவ்வாட்டத்தில் ஒன்றும் இல்லை.


பிரேசில் 2 - கொலம்பியா 1
பிரேசில் கொலம்பியா ஆட்டத்தில் பிரேசில் கையே ஓங்கி இருந்தது. இது வரைகொலம்பியா வென்றதை வைத்து அதன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. கொலம்பியா தேசிய அணி போல் விளையாடவில்லை. ஏதோ ஒரு உள்ளூர் அணி போல் விறையாடியது. அதுவும் முதல் கவல் அடிக்கும் வரை பிரேசில் ஆட்டம் அருமை. அப்பறம் தான் இருவரும் முரட்டுத்தனத்தில் இறங்கினர். பிரேசிலும் உள்ளூர் அணி போல் தான் விளையாடியது.

பிரேசில் முதற்பாதியில் 1 கவல் மட்டும் போட்டது கொலம்பியாவின் ஆகூழ் தான். நிறைய போட்டிருக்கனும்.

இரு அணிகளும் வீரர்களும் காட்டுத்தனமாக விளையாடினர். இவர்களை நடுவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா வெற்றி பெறுபவர்கள் செருமனி கூட தான விளையாடனும். இது உலகக்கோப்பையான்னு எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. அவ்வளவு கேவலம்.

இரண்டாவது பாதி பரவாயில்லை. ஓரளவு கொலம்பியா பிரேசிலுக்கு ஈடு கொடுத்தது. கொலம்பியா முதல் கவலை போட்டவுடன் ஆட்டம் அதன் பக்கம் திரும்பியது ஆனால் நேரம் மிக குறைவு.

நெய்மர் இருக்காரு அப்படின்னு ஒரே பேச்சு. ஆட்டத்தில் யாருன்னே தெரியவேயில்லை (அதுவும் உள்ளூர் அணிக்கூட)  முதுகெலும்பின் கீழ்பகுதியை காலால்குத்தி இவ்வுலகக்கோப்பையில் இனி விளையாட முடியாத படி பண்ணிட்டாங்க. பிரேசிலின் இன்னொரு சிறந்த வீரர் சில்வா (அணித்தலைவர்) அடுத்த போட்டியில் விளையாட முடியாத படி இரட்டை மஞ்சள் அட்டை வாங்கிட்டாரு.

இறுதியில் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது அது கொலம்பியாவுக்கு மஞ்சள் இல்லாததால் தான் அது சரியா விளையாடலை, சிவப்பு அதுக்கு ஆகாத நிறம் இஃகி இஃகி



அர்செண்டினா 1 - பெல்சியம் 0
அருமையான ஆட்டம். பிரேசில் கொலம்பியா ஆட்டத்தை பார்த்துட்டு எதை பார்த்தாலும் நல்ல ஆட்டமா தெரியுங்கிறிங்களா. அதுவும் சரிதான். முதல் கவலை அர்செண்டினா போட்டதால் இதுவும் முரட்டு ஆட்டமா இருக்குமோன்னு பார்த்தேன், அப்படி இல்லை பெல்சியம் அணி வீரர்கள் கவல் அடிக்க கடுமையாக முயன்றார்கள் காட்டுத்தனமாக விளையாடவில்லை. வர்ணனையாளர்கள் மெசி மெசி என்று மெசி புராணம் பாடியது தான் கடுப்பாக இருந்தது. நல்லவேளை மெசி கவல் அடிக்கவில்லை அடிக்கவும் உதவவில்லை. கவலி மட்டும் இருந்தும் மெசியால் கவல் அடிக்க முடியவில்லை (அருமையான வாய்ப்பு). அப்ப மட்டும் மெசி கவல் அடித்திருந்தால் மெசி புராணம் பாடும் வர்ணனையாளர்களால் என் காது சவ்வு பிய்ந்திருக்கும், ஆண்டவன் இருக்கான் என்பதை நிருபித்த நிகழ்வு இது. நடுவர்கள் மெசிக்கு சிறிது ஆதரவா நடந்த மாதிரியும் தெரிந்தது.

நெதர்லாந்து 4 - கோசுட்டரிக்கா 3 (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 0.

நெதர்லாந்து கோசுட்டரிக்கா போட்டியில் முதல் 20 நிமிமடங்களுக்கு கோசுட்டரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. நெதர்லாந்து என்னடா இப்படி சொத்தை மாதிரி ஆடுதுன்னு நினைச்சேன். அப்புறம் அவர்கள் ஆட்டம் சூடு பிடித்தது. இவர்களின் சில கவல் அடிகள் கவல் கம்பத்தில் பட்டு திரும்பியது என்றாலும் கோசுட்டரிக்காவின் தடுப்பரணை நெதர்லாந்தால் உடைக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் பறக்கும் டச்சாக யார் இருப்பார்கள் என்று பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது

மிகைநேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோசுட்டரிக்காவின் தாக்குதல் பலமாக இருந்தது நெதர்லாந்து அதில் தப்பியது அவர்களின் ஆகூழ். கோச்சுட்டரிக்காவின் முன்னனி வீரர் கேம்பல் மற்றும் சிலர் ஆட்டத்தின் நடுவிலிருந்து வெளியேறிய போதும் நெதர்லாந்தின் ஆட்டம் பலனளிக்கவில்லை.

நெதர்லாந்து இறுதி 1 நிமிடம் இருக்கும் போது தன் கவுலியை மாற்றியது, புது கவலி சமன்நீக்கி ஆட்டத்தில் வல்லவரான கவலியா இருப்பார் போல அதுவே கவலி மாற்றத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன் இல்லையென்றால் நெதர்லாந்து கவலியை மாற்ற அவசியமே இல்லை. கோசுட்டரிக்கா கவலிதான் அடிபட்டவர். இருவரும் கவல் எதுவும் போடாததால் சமன்நீக்கி முறை வந்தது. அதில் நெதர்லாந்து 4-3 என்ற கணக்கில் வென்றது.

இப்படி அது ஆடினால் அர்செண்டினாவை வெற்றி கொள்வது கடினம்.
தோற்றாலும் வெற்றிபெற்றது கோசுட்டரிக்காவே.

அமெரிக்க கால்பந்து போல் உடனடி மரணம் என்ற முறை கால்பந்தில் வரவேண்டும். சமன்நீக்கி முறை விலக்கப்பட வேண்டும்.


                                                                    **************


கால் இறுதியை விட கால் இறுதிக்கு தகுதி பெற நடைபெற்ற ஆட்டங்கள் சிறப்பாக விருவிருப்பாக இருந்தன.


1. அல்சீரியா 1 -  யெர்மன் 2
அல்சீரியா யெர்மன் போட்டியில் அல்சீரியா இந்தளவு அதுவும் பலசாலியான யெர்மனிக்கெதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகைநேரத்தில் யெர்மனி 2-1 க்கு என்ற கணக்கில் அல்சீரியாவை வென்றதே அல்சீரியா வென்ற மாதிரி.

2. மெக்சிக்கோ 1- நெதர்லாந்து 2
மெக்சிக்கோ இறுதி நேரத்தில் சரியான உத்தி வகுக்காததின் பலனான தோல்வி. சரியான உத்தியை கையாண்ட நெதர்லாந்துக்கு வெற்றி.
இப்போட்டியில் மெக்சிக்கோ வென்றிக்க வேண்டும் ஆனால் இறுதி 20 நிமிடங்களில் சரியான உத்தியை கையாளதாதின் பலன் கால் இறுதி வாய்ப்பு கைநழுவி போயிருச்சு.


3. கோசுட்டரிக்கா 5 - கிரேக்கம் 3 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
கோசுட்டரிக்கா கால் இறுதிக்கு தகுதியான அணி. கிரேக்கம் ஆடியதை பார்த்தால் அதன் ஆதரவாளர்கள் கூட அதற்கு ஆதரவாக இருப்பார்களா என்பது ஐயமே.
நெதர்லாந்துக்கு சரியான போட்டி கோசுட்டரிக்கா தான்.

10 பேரை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடம் கோசுட்டரிக்கா ஆடியது 11 கொண்டும் கிரேக்கத்தால் வெல்லமுடியவில்லை என்றால் அதன் தரத்தை புரிந்துகொள்ளவும். கிரேக்கம் இவ்வளவு கேவலமா ஆடுமுன்னு நான் நினைக்கலை


4. பிரேசில் 3 - சிலி 2  ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
நியாமாக பார்த்தால் சிலி தான் வென்றிருக்க வேண்டும்.
சிலி கவலி அருமையாக தடுத்தார். இரண்டாவது மிகைநேர ஆட்டத்தில் சிலி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டது இல்லையென்றால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும்

5. அர்செண்டினா 1 - சுவிசு  0
அர்செண்டினா சுவிசு ஆட்டம் நன்றாக இருந்தது. மெசி குசி அப்படின்னு சொன்னாங்க ஆனா அவர் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை. மிகைநேரத்தில் மெசி பந்தை எடுத்து கொடுக்க மரியோ கவுல் அடித்தார். சுவிசுக்கு ஆகூழ் இல்லை அடுத்த நிமிடம் அவர்கள் அடித்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அர்செண்டினாவின் தடுப்பாட்டம் இதில் மோசமாக இருந்தது.

6. அமெரிக்கா 1 - பெல்சியம் 2
அமெரிக்கா பெல்சியம் ஆட்டத்தில் பெல்சியத்தின் கையே ஒங்கி இருந்தது. அமெரிக்காவின் ஆகூழ் பெல்சியத்தால் 90 நிமிடங்களில் கவல் (goal) அடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் கவலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  ஒரு மனுசன் 15 கவல் முயற்சியை தடுப்பது என்பது எளிதான செயலா. மிகைநேரத்தில் பெல்சியம் 2 கவல்களையும் அடித்தது.
அர்செண்டினாவை எதிர்க்க பெல்சியமே சரியான அணி.


சனி, ஜூலை 05, 2014

அறிவியல் தமிழர் - ஆரோக்கியசாமி பால்ராசு

இவரு கோயம்புத்தூர் காரர் இந்திய கடற்படைக்கு  APSOH சோனார் உருவாக்கியவர், 4G ன் அடிப்படையான MIMOவைக் கண்டுபிடித்தவர்.

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையால் 2014ல் (www.fetna2014.com) சிறப்பு செய்யப்படவிருப்பவர்.

இவர் பெற்றுள்ள விருதுகள்:
-----------------------------------------
2014 ல் மார்க்கோனி விருது
2010ல் இந்திய அரசின் பத்ம பூசன் விருது.
2011ல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் பெற்றுள்ளார்.

நன்றி:தென்றல் (www.TamilOnline.com)
==============
இந்தியக் கடற்படையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர்; இந்தியாவில் மூன்று தேசிய ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவியவர்; பத்மபூசண் முதல் பல தேசிய விருதுகளைப் பெற்றவர்; 4G எனப்படும் செல்பேசித் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தொழில்நுட்பமான MIMOவைக் கண்டுபிடித்தவர்; 400க்கும் மேல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்: தனது கண்டுபிடிப்புகளுக்காக 59க்கும் மேல் தொழில்நுட்ப உரிமங்களைப் (US patents) பெற்றிருப்பவர் என்று இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைச் சந்தித்து உரையாட தென்றலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து சில சுவையான பகுதிகள்…..

இளைமைக் காலம் மற்றும் கல்வி
என் தந்தை இந்தியக் கடற்படையில் இருந்தார். நான் ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில் (Montfort School) நான்கு வருடங்கள் படித்தேன். பின் சில மாதங்கள் லயோலா கல்லூரியில் படித்தேன். என் தந்தை நான் கடற்படையில் சேரவேண்டும் என்று விரும்பினார். அப்போது எனக்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. நான் என் தந்தையின் விருப்பத்தை ஏற்று National Defense Academyயில் சேர்ந்தேன். கடற்படையில் radar, missile systems போன்றவற்றின் மின்சாதனங்களைப் பராமரிக்கப் பயிற்சி பெற்றேன்.

பள்ளி நாட்களில் இருந்தே நான் கணக்கிலும், பௌதீகத்திலும் சிறந்து விளங்கினேன். NDA-விலும் நான் சிறந்த மாணவனாகத் தேர்வு பெற்றேன். அதனால் என்னை மேலே M.Tech. படிக்க அனுப்பினார்கள். அது என் வாழ்க்கையைத் திசை திருப்பியது. எனக்கு அடிப்படையான B.Tech. பட்டம் கிடையாது. ஆனால் IIT, டில்லியில் இருந்த பேரா. P.V. இந்திரேசன் அவர்களுக்கு என்னைப் பிடித்துவிடவே, அவர் IIT நிர்வாகக் குழுவிடம் பேசி M.Tech. சேருவதற்கான சிறப்பு அனுமதி பெற்றுத் தந்தார். IITயில் சேர்ந்த சில மாதங்களிலேயே நான் Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட விரும்பினேன். ஆனால் கடற்படை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடற்படைக்குப் பொறியாளர்கள்தான் தேவையே ஒழிய விஞ்ஞானிகள் தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் பேரா. இந்திரேசன் விடாது முயற்சி செய்து அதற்கான அனுமதியையும் பெற்றார். அப்போது M.Tech. படிப்பு இரண்டு வருடங்கள். என்ன வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் இரண்டாண்டுகளில் கடற்படை சேவைக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டனர். நான் ஏற்றுக் கொண்டேன்.

அதன்பிறகு நான் முழுமையாகக் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். Stochastic Calculus பிரிவில் ஆராய்ச்சிகள் செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்குத் திரும்புகையில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்குக் குறைந்தது மூன்று வருடங்கள் கல்லூரியில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். என் ஆராய்ச்சியைத் தொடர வசதியாக என்னை டில்லியிலேயே வேலையில் வைத்திருக்குமாறு வேண்டி அனுமதி பெற்றேன்.

சோனார் (Sonar) ஆராய்ச்சி
1971-ல் இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் போர்க்கப்பல் INS குக்ரி (INS Khukri) பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் குண்டு தாக்கி மூழ்கியது. 170க்கும் மேல் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். அது இந்தியாவின் முன்னணிப் போர்க்கப்பல். அதில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க சோனார் சாதனங்கள் இருந்தன. அதேபோன்று மேலும் இரண்டு கப்பல்களில் சோனார் சாதனங்கள் இருந்தன. சாதாரணமாகத் தரைப்படையிலும், விமானப் படையிலும் போர்ச் சேதங்கள் இருக்கும். கடற்படையில் சேதம் அதிகம் வராது.

சோனாரை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், என்னை ஆராயச் சொன்னார்கள். அந்த ஆராய்ச்சியை IIT, டில்லியில் தொடர அனுமதி கேட்டேன் – என்னுடைய Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையையும் முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்.

ஆறேழு மாதங்களில் புதிய மின்னணு சர்க்கியூட்டுகளை உருவாக்கினோம். அப்போதுதான் அமெரிக்காவில் மைக்ரோ சிப்புகள் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் அவற்றை வரவழைத்துப் பயன்படுத்தினோம். இந்தியா 1971 காலகட்டத்தில் அத்தனை சிக்கலான மின்னமைப்புகளை அதுவரை உருவாக்கியதில்லை. அதை நான் அப்போது உணரவில்லை. நாங்கள் உருவாக்கிய மின்னணு ரிசீவர், சோனாரின் தரத்தைப் பெருமளவில் உயர்த்தியது. இந்த வெற்றியால் கடற்படை அதிகாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். வெளியில் எனது ஆராய்ச்சிகளைத் தொடரச் சலுகைகள் எனக்குக் கிடைத்தன.

APSOH சோனார் உருவாக்கிய அனுபவம்
நான் ஒரு வருடம் இங்கிலாந்தில் லஃப்பர்க் (Loughborogh) பல்கலைக் கழகத்தில் இருந்தேன். இந்தியக் கடற்படை ஏராளமான சாதனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை உணர்ந்தேன். சோனார் சாதனங்கள் ஃபிரான்சில் இருந்தும் பிரிட்டனில் இருந்தும் வந்தன. அந்தச் சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்களைவிட நான் சோனார் பற்றி அதிகம் அறிந்திருந்ததை உணர்ந்தேன்.

இந்தியா திரும்பியதும், கடற்படையே ஏன் சோனார் சாதனம் தயாரிக்கக் கூடாது என்று தோன்றியது. அது கப்பலின் மிக விலையுயர்ந்த கருவி. கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ளது. மிக அதிகமான மின்சுற்றுக்களைக் (electronic circuit) கொண்டது. அதை இயக்க 400 கிலோ வாட்டுக்கு மேல் மின்னாற்றல் தேவை. ஆனால் அதை நாமே உருவாக்கலாம் என நம்பினேன். பல போராட்டங்களுக்குப் பின் கடற்படை அதற்கு அனுமதித்தது.

நான் கொச்சியில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தில் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 1983ல் அது கடற்படையால் அங்கீகரிக்கப்பட்ட போது அது உலகத்திலேயே முன்னிலை சோனார் சாதனமாக இருந்தது. அது இந்தியாவின் R&D திறனை மாற்றியமைத்தது.

ஸ்டான்ஃபோர்ட் முதல் அனுபவம்
என் Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையைப் பரிசீலித்த பேராசிரியர்களில் ஒருவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பேரா. தாமஸ் கைலாத் (Thomas Kailath) அவர்கள். ஸ்டான்ஃபோர்டில் என் ஆராய்ச்சியைத் தொடர அவர் வாய்ப்பளித்தார். எந்தத் திசையில் இருந்து குறிப்பலை (signal) வருகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதுகுறித்து நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டிருந்தன. MUSIC algorithm என்ற பெரிய கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். நான் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீருக்கடியில் குறிப்பலை வரும் திசையைக் கண்டுபிடிப்பதைப் பற்றி யோசித்து வைத்திருந்தேன். அந்தக் கணிதத்தை எப்படிப் பொதுவாக்கிப் பயன்படுத்துவது என்று பல மாதங்கள் யோசித்தேன். இறுதியில் ESPRIT என்ற ஒரு புதிய கருத்தை வெளியிட்டேன். அது வேகமாகப் பரவி ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டது.


இந்தியாவில் ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவியது
இந்தியா திரும்பியபின் DRDOவின் தலைவர் டாக்டர். அருணாசலம், மற்றும் கடற்படைத் தலைவர்கள் உதவியுடன் செயற்கை அறிவு ஆய்வுக்கூடம் (Artificial Intelligence Lab) உருவாக்கினேன். அதே சமயம் சாம் பிட்ரோடா அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெங்களூரில் CDAC அமைப்பையும் உருவாக்கினேன். இரண்டையும் ஒரே சமயத்தில் இயக்கி வந்தேன்.

Dr. அருணாசலம் லகுரகப் போர்விமானத் திட்டம் (Light Combat Aircraft program) ஒன்றைத் தீட்ட விரும்பினார். அரசாங்கத்தின் கீழ் இயங்கினால் மிகத் தாமதமாகலாம் என்றெண்ணிய நான் அரசாங்க நிதியுதவியுடன் ஒரு தனியார் அமைப்பாக அதை உருவாக்க விரும்பினேன். நானும் Dr. அருணாசலமும் எவ்வளவோ முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை.

அப்போது பாரத் எலக்ட்ரானிக்ஸில் Central Research Lab ஒன்றை ஏற்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் ஏற்றுக் கொண்டதும், இவற்றை நடத்துவதில் இருந்த செயல்முறைச் சிக்கல்களும் என்னை மீண்டும் ஸ்டான்ஃபோர்ட் வந்து ஆராய்ச்சியைத் தொடரத் தூண்டின.

MIMO கண்டுபிடிப்பு
நான் ஸ்டான்ஃபோர்டில் கணிதத் துறையில் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். மற்ற சிக்னல்களை ஒதுக்கி தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்வது எப்படி என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. குறிப்பலைகளை ஆராய்ச்சிக் கூடத்தில் உண்டாக்கி ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான சாதனங்களை இணைத்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் நான் எதிர்பாராத விளைவு ஒன்றைக் கவனித்தேன். அதிலிருந்து தோன்றியதுதான் MIMO (Multiple Input Multiple Output). இதுதான் 4G மொபைல் தொழில்நுட்பத்தின் அடிப்படை. MIMO இப்போது எல்லாக் கம்பியில்லாச் சாதனங்களிலும் இருக்கிறது.

16 QAM அலைக்கற்றைகளை அனுப்புவதே அரிதாக இருந்த காலம் அது. நான் ஒரு மில்லியன் QAM அலைக்கற்றைகளை அனுப்பலாம் என்று கூறினேன். AT&T, மோடரோலா, எரிக்சன் போன்ற நிறுவனங்கள் என் கருத்தை ஏற்க மறுத்தன. BELL Labs சில ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது கருத்தை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு MIMO பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போது MIMO பயன்படுத்தி 64 மில்லியன் QAM வரை அலைக்கற்றைகளை அனுப்பலாம்.

1998-ல் Iospan என்ற ஒரு நிறுவனத்தைத் துவங்கி MIMO-வுடன் OFDMA தொழிநுட்பத்தையும் சேர்த்து WiMax தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். இது 4G தொழில்நுட்பத்தின் முக்கியப் பகுதி. இந்த நிறுவனத்தை Intel குழுமம் வாங்கியது. அதன் பின் Beceem Communications நிறுவனத்தை உருவாக்கி அதில் 4G தொழில்நுட்பத்திற்கான சிலிக்கான் சில்லுகள் தயாரித்தேன்.

MIMO தொழில்நுட்பத்தில் 3000க்கும் அதிகமான Ph.D. ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 12,000 க்கும் அதிகமான உரிமங்கள் (patents) பதியப்பட்டுள்ளன. 14,000க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் உலகெங்கிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலம்
இந்தியாவில் ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும் தேக்கம் கண்டிருக்கிறது. விமானங்கள், டெலிகாம் சாதனங்கள், precision electronics போன்ற பல தொழில்நுட்பங்களையும் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் IT செலவு 150 பில்லியன் டாலர். பத்தாண்டுகளில் அது 420 பில்லியன் டாலர் ஆகிவிடும். நாம் தொடர்ந்து இறக்குமதி செய்யமுடியாது. உலகின் தலைசிறந்த சில்லு வடிவமைப்பாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் நிறுவனத்தின் பங்கு உரிமை (Stock Options) கிடையாது. பல வகைகளிலும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

நாம் முன்னேறித்தானே இருக்கிறோம். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். நாம் தினசரி பயன்படுத்தும் எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனமும் இந்தியாவில் தயாரிக்கப் பட்டதல்ல.

நாம் கவனமாக இல்லையென்றால் சிரியாவைப்போல ஆகிவிட வாய்ப்புண்டு. சிரியா ஒரு காலத்தில் இந்தியாவைவிடக் கல்வியில் சிறந்ததாக, மிக முன்னேறிய நாடாக இருந்தது. இப்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

நமக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து அபாயம் இருக்கின்றது. சீனாவுடனான நமது அந்நியச் செலாவணி வணிக நிலுவை (BOP) 45 பில்லியன் டாலர். நாம் வணங்கும் சிவன், முருகன் போன்ற கடவுளர் சிலைகள்கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. பொருளாதார ரீதியிலும் சீனாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

சீனா பல விதங்களில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. கல்வியில் IISc, IIT போன்ற கழகங்கள் உலகத்தரத்தில் 250 அல்லது 500 ஆம் இடத்தில் இருக்கின்றன. ஆனால் சீனாவில் பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உலகத் தரவரிசையில் 100 இடங்களுக்குள் இருக்கின்றன.

அறுபதுக்குப் பிறகு இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. அதுதான் நாம் பின்தங்கிப் போனதற்கு முக்கியக் காரணம். மோதி அரசு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புவோம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் வலிமை. இத்தகைய அமைப்பில் மாற்றங்கள் வேகமாக வராது. ஆனால் அந்த வளர்ச்சி நிலையானது. சீனாவில் மாற்றங்கள் வேகமாக வந்தாலும் அடிப்படையாக இருக்கும் அழுத்தங்கள் அரசாங்கத்தால் அமுக்கி வைக்கப் பட்டிருக்கலாம். ஒரு சிறிய விரிசல் வந்தாலும் அது பெரிதாக வெடித்துக் கிளம்ப வாய்ப்புண்டு.

இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் திறமைக்குப் பஞ்சமில்லை.

விருதுகள்
எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப் படக்கூடிய விருதுகள் – அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் (Alexander Graham Bell Medal). இது எனது அடிப்படை கணித ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டது. மார்கோனி பரிசு (Marconi Prize) பல தடைகளையும் தாண்டி ஒரு கருத்தைப் பலகோடி மக்களுக்குப் பயன்படும் வகையில் வடிவமைத்துத் தருவதற்காகக் கொடுக்கும் அரிய பரிசு. பத்மபூஷண் APSOH சோனார் உருவாக்கியதற்காக அளிக்கப்பட்டது.

மற்ற ஆர்வங்கள்
எனது ஆர்வமும் அன்பும் என் பேரக்குழந்தைகளிடம்தான். எனக்கு நான்கு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். இருவர் லாஸ் வேகஸில், இருவர் லண்டனில். எனக்கு வாழ்க்கைச் சரிதங்களைப் படிக்கப் பிடிக்கும். சார்லி ரோஸ் ஷோ மிகவும் பிடிக்கும். தினமும் தவறாமல் பார்ப்பேன். விரைவில் நானும் அந்த நிகழ்ச்சியில் வரவிருக்கிறேன்.

குடும்பம்
இந்தியக் கடற்படையில் என் தந்தை இருந்தார். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர். அப்பா வேலை நிமித்தமாக வெளியூருக்கும் கடலுக்கும் சென்றுவிடுவார். அம்மாவும் நாங்களும் பெரும்பாலும் கோயம்பத்தூரில்தான் இருந்தோம். அம்மா, அப்பா இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு சகோதரன் துபாயில் இருக்கிறார். மற்றொருவர் அமெரிக்காவில். அனைவரும் தொடர்பில் இருக்கிறோம். மின்னஞ்சல் போன்ற நவீன சாதனங்களுக்கு நன்றி கூற வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலோ, உலகின் வேறொரு பகுதியிலோ சந்திப்போம்.

என் மனைவியின் பெயர் நிர்மலா. எனக்கு இரண்டு பெண்கள் – மல்லிகா, நிருபமா. மல்லிகா கணவருடன் இங்கிலாந்தில் வசிக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். நிருபமாவும் அவள் கணவரும் மருத்துவர்கள். லாஸ் வேகஸில் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள்.

இளைஞர்களுக்கு…..
தற்கால இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியர்களுக்கு கணிதம் மற்றும் இயற்பியலில் இன்னும் ஆர்வம் இருக்கிறது. புதுக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கவும், அக்கருத்துக்களை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கவும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைப் பற்றி மேலும் விவரம் அறிய: www.stanford.edu/~apaulraj/

சந்திப்பு: C.K. வெங்கட்ராமன், சிவா சேஷப்பன்
தொகுப்பு: சிவா சேஷப்பன்


ஞாயிறு, ஜூன் 01, 2014

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 2 தொகுதிகளில் 4ம் இடம், 3இல் 3ம் இடம்

நடந்து முடிந்த 16வது மக்களவை தேர்தலில் (2014ம் ஆண்டு) மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இரு தொகுதிகளில் 4ம் இடமும் மூன்று தொகுதிகளில் 3ம் இடமும் மூன்று தொகுதிகளில் 2ம் இடமும்  பெற்றுள்ளது. அதாவது 5 தொகுதிகளில் இது இரண்டாம் இடம் கூட பிடிக்கவில்லை.


                                                                      அசோனல்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
பாபுல் சுப்ரியோபாசக419983
டோலா சென்திரிணாமுல்349503
பன்சா கோபால் சௌத்திரி மார்க்சிய பொதுவுடமைவாதி255829
இந்ராணி மிசுராஇந்திரா காங்கிரசு48502

                                                                      டார்சிலிங்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அலுவாலியாபாசக488257
பாய் சங் பூட்டியாதிரிணாமுல்291018
சாமன் பதக் (சுரச்)மார்க்சிய பொதுவுடமைவாதி167186
சுசய் காடக்இந்திரா காங்கிரசு90076

                                                                      ராய்கன்ஞ்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
சலிம்மார்க்சிய பொதுவுடமைவாதி317515
தீபா தாசுமுன்சிஇந்திரா காங்கிரசு315881
நிமு போமிக்பாசக203131
பபித்ரா ரன்சன் தாசுமுன்சி (சத்யா)திரிணாமுல்192698

                                                                      முர்சிடாபாத்து
வேட்பாளர்கட்சிவாக்குகள்
படருட்டோசு கான்மார்க்சிய பொதுவுடமைவாதி426947
அப்துல் மன்னன் உசைன்இந்திரா காங்கிரசு408494
அலி முகமதுதிரிணாமுல்289027
சுசித் குமார் கோசுபாசக101069


                                                                      உத்தர மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
மாவுசம் நூர்இந்திரா காங்கிரசு388609
காகன் முர்முமார்க்சிய பொதுவுடமைவாதி322904
சௌமித்ர ரேதிரிணாமுல்197313
சுபாசு கிருசுணா கோசுவாமிபாசக179000

                                                                       தட்சிண மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபு காசிம் கான் சௌத்திரிஇந்திரா காங்கிரசு380291
பிசினு பட ராய்பாசக216180
அப்துல் ஆசன்ட் கான்மார்க்சிய பொதுவுடமைவாதி209480
மோசிம் உசைன்திரிணாமுல்192632


                                                                      சாங்கிபூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபிசித் முகர்சிஇந்திரா காங்கிரசு378201
முசாபர் உசைன்மார்க்சிய பொதுவுடமைவாதி370040
நூருல் இசுலாம்திரிணாமுல்207455
சாம்ராட் கோசுபாசக96751
அபிசித் முகர்சி குடியரசு தலைவர் பிரணாப் முகர்சியோட மகன். பிரணாப் குடியரசு தலைவர் ஆனதும் 20012ல் நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிய கட்சியை 2536 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். அத்தேர்தலில் திரிணாமுல் போட்டியிடவில்லை என்பதும் அவர் வெற்றிக்கு காரணமாகும். இப்போது திரிணாமுல் போட்டியிட்டு 2.07,455 வாக்குகள் பெற்றாலும் அதனால் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இப்போது வாக்கு வேறுபாடு 8161.

                                                                      பகரம்பூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அதிர் ரன்சன் சௌத்திரிஇந்திரா காங்கிரசு583549
இந்ராணில் சென்திரிணாமுல்226982
பிரமோத் முகர்சிபுரட்சிகர சோசலிசுட்டு225699
தீபசு அதிகாரிபாசக81656


தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.

1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)

கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.

மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.