வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, செப்டம்பர் 09, 2023

நீதிக்கட்சியால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரவில்லை

சுப.வீரபாண்டியன், அருள்மொழி என எல்லோரும் போகிறபோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது நீதிக்கட்சியின் ஆட்சி என்கிறார்கள்.

நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணை செயலாக்கம் பெறவில்லை; சுயேட்சை அமைச்சரவையான சுப்பராயன் அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரது முன்னெடுப்பிலேயே இட ஒதுக்கீடு அரசாணை கொண்டு வரப்பட்டு, அது தமிழ்நாட்டில் செயலாக்கம் பெற்றது என்பது வரலாறு!


அரசாணை செயலாக்கம் பெறவில்லை என்றால் என்ன ஆகும் என்பற்கு காட்டு :-- 

மகோரா ஆட்சியில் காவல் துறையில் உயர் அதிகாரிகள் காவல்துறையினரை பணியாளர்களாக (ஆர்டர்லிகள்) வைத்துக்கொள்ளுவதை நீக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த காவல்துறைப் பணியாளர்கள் காவலர்களுக்கான அரசு சம்பளத்தை பெறுவர். ஆனால் மகோரா வெளியிட்ட அரசாணை  தாலின் ஆட்சி வரையிலும் செயலாக்கம் பெறவில்லை, இன்னும் காவல்துறையினரை பணியாளர்களாக வைத்துக்கொள்ளும் போக்கு தொடர்கிறது. செயலாக்கம் பெறாத வரையில் அரசாணை என்பது பேப்பரை மட்டுமே அலங்கரிக்கும் வெற்று அலங்கார வார்த்தையே.

சனி, மே 13, 2023

கருநாடக தேர்தல்- 2023

 கருநாடக தேர்தல்- 2023



சிக்மகளூரில் தமிழக பாசக பொறுப்பாளர் CT ரவி - தோல்வி. 

CT இரவி (பாசக) 79,128 - 46.53%

தம்மைய்யா (காங்கிரசு) 85,054 - 50.01%



பாசகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய ஊப்ளி-தார்வார்ட் மத்தி தொகுதியில் செகதீசு சட்டர் தோல்வி

செகதீசு சட்டர் (காங்கிரசு) 60,775 - 37.89%

மகேசு தென்கினாகை (பாசக) 95,064 - 59.27%


கீழுள்ள அனைவரும் வெற்றி.

சிவக்குமார்- 143,023 (75.03%) - நாகராசு (மசத) 20,631 (10.82%) - அசோகா (பாசக) 19,753 (10.36%)

சித்தராமையா- 119,816(60.09%) - சோமன்னா 73,653 (36.94%) - பாரதி சங்கர் (மசத) 1,037 (0.52%)

குமாரசாமி - 96,592 (48.83%) - யோகராசா (பாசக) 80,677 (40.79%) - கங்காதர் (காங்) 15,374 (7.77%)

பொம்மை - 100,016 (54.95%) - பதன் யாசிராமெத்கான் (காங்) 64,038 (35.18%) - சசிதர் யெலிகர் (மசத) 13,928 (7.65%)


வெள்ளி, ஏப்ரல் 07, 2023

இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி? - சிவம் சங்கர் சிங் (பா.ச.க.வின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)

 நெடியது ஆனால் அனைவரும் படிக்கவேண்டியது. நமக்கு தெரியாத அரசியல் கட்சிகளின் வண்டவாளங்களை அறிந்துகொள்ளலாம், நாம் பலரும் அறியாமல் பெரிய கட்சிகளின் சதியில் மாட்டியிருப்பதை அறியலாம்.


இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?
(நீங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது)
- சிவம் சங்கர் சிங்
(பா.ச.க.வின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)
-தமிழில் இ.பா சிந்தன்.
- எதிர் வெளியீடு

சிவம் சங்கர் சிங், நூலின் ஆசிரியர்.
இந்தியா முழுக்க பல தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர்.
பிரபல தேர்தல் ஆலோசனையாளர் பிரசாந்த் கிசோரின்
IPAC என்கிற இந்திய அரசியல் நடவடிக்கை குழுவின் மூலம் அரசியல் ஆலோசனை வழங்கும் துறைக்குள் நுழைந்தார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். Data analytics எனப்படும் தரவு பகுப்பாய்வு உத்திகளை தேர்தல் பிரச்சாரங்களில் புகுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறார்.

மொழிபெயர்ப்பாளர் இ.பா.சிந்தன், மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்து வரும், இவர் சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பல நாடுகளில் அரசியல் சூழ்நிலை குறித்து இணையத்திலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

1. எப்படித்துவங்கின எல்லாமும்
அயல்நாட்டுக்கு படிக்கப்போகும் பெரும்பாலான இந்தியர்களைப் போலவே சிவம் சங்கர் சிங்கிற்கும் ஒரு கனவு இருந்தது.
அங்கே, படிப்பு முடிந்ததும் கொஞ்ச காலம் வேலை செய்துவிட்டு, போதுமான அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டு, இந்தியா திரும்ப வேண்டும் என்றும், அப்போது இந்தியாவின் அரசியலில் ஏதாவது பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அந்தக் கனவை தொடர்ந்த பயணம் தான் இந்த நூல்.

முதல் பகுதியில் குறிப்பிடத்தக்க சில

* அரசியலை கண்டுகொள்ளாமல்,அதில் அக்கறை இல்லாமலும் இருக்கிற மக்களில் எவ்வளவு பேரை, ஒரு கட்சி ஆதரவளிக்க வைக்கிறதோ, அந்த அளவுக்கு அக்கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது.

*CAG(citizens for accountable governance) என்ற அரசு சாரா அமைப்பினை உருவாக்கிய பிரசாந்த் கிஷோர், "வளர்ச்சியின் நாயகன்" மோடி என்று நாடு முழுவதும் அவருக்கு ஒரு பிரமாண்ட பிம்பத்தை கட்டி அமைக்கிறார்
.
*2014 இல் பாசக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, பிரதமராக பதவியேற்ற மோடியின் நம்பிக்கைக்குரிய இடத்திலிருந்து பிரசாந்த் கிசோர் விலக்கி வைக்கப்பட்டார். ஆக, சிஏஜி அமைப்பு நிர்மூலம் ஆனது.

*லேம்ப் ஃபெலோசிப் திட்டம் என்பது பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வகம் என்னும் ஒரு அரசுசாரா நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிவதற்கு தேர்வுகள் நடத்தப்பட்டு இந்தியாவின் ஏதாவதொரு பாராளுமன்ற உறுப்பினரோடும் பதினோரு மாதங்கள் இணைந்து பணிபுரியும் அரிய வாய்ப்பு சிவம் சங்கர் சிங்கான எனக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் கிடைத்தது. இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் அதில் இணைந்தேன்.

*சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்பியான பிரேம் தாஸ் ராய் உடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டேன்.

*பாராளுமன்றமே, எம்பிக்கள் உத்வேகத்துடன், திறம்படவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை என்பதை, எம்பிகள் உடன் பணிபுரிந்த எங்களில் பலருக்கும் புரிந்தது.

*தலைமையின் உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும் என்பதே எம்பிக்களின் கடமையாக இருந்தது.

*1985 களில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த கட்சி தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது நிச்சயமாக நல்லதொரு காரணத்தின் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் அதனால் ஒட்டுமொத்த பாராளுமன்ற நடவடிக்கைகளை விருந்து சடங்கு ஆகி போன பக்கவிளைவுகளையும் சரிவர கவனித்திருக்கலாம்.

*தேர்தலுக்காக பணிபுரிந்த போது தான் நடுநிலையான வை என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்த பல ஃபேஸ்புக் பக்கங்களை நிர்வகிப்பதே, அரசியல் கட்சிகள் தான் என்ற உண்மை எனக்குத் தெரியவந்தது.

*பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு வாக்களிப்பது

*பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்காக, தனிநபர் தீர்மானங்களை கொண்டு வருவது.

*விவாதங்களில் கலந்து கொள்வது

*கேள்விகள் கேட்பது

*பாராளுமன்ற நிலைக்குழுககளில் பங்குகொண்டு பாராளுமன்றத்தை 
பொறுப்புள்ளதாக்குவது
ஆகியவை ஒரு எம்பியின் பாராளுமன்ற கடமைகள் என தெரிந்துகொண்டேன்.

*"ஸ்டார்டு கொஸ்டின்" எனப்படும் நட்சத்திர கேள்விகளை அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர் நேரடியாக பாராளுமன்றத்திற்கு வந்து பதில் அளிப்பார். மற்ற கேள்விகள் நட்சத்திர அந்தஸ்து இல்லாத கேள்விகளாகக் கருதப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும்.

*லேம்ப் பயிற்சியை பதினொரு மாதங்கள் முடிந்த பிறகு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் கில் விண்ணப்பித்து வேலைக்கான உத்தரவாதம் கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன்.

பகுதி 2 அரசியல் ஆலோசகர்கள்

*உண்மை இல்லாத விஷயங்களை கூட அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு ஊடக வெளிச்சத்திற்காக உண்மையாக ஆக்கினோம். அவற்றில் ஒன்று, நாடறிந்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷனை, தானே தாக்கியதாக பெருமை பொங்க பரப்பினார் பாஜக இளைஞர் அமைப்பின் தேசிய பொறுப்பாளராக இருந்து பிறகு செய்தி தொடர்பாளரான தஜீந்தர் பால்சிங் பக்கா.

பகுதி 3. தொழில்நுட்பமும் டேட்டாவும்

*மணிப்பூர் தேர்தலில் செய்தது போலவே திரிபுரா தேர்தலிலும் மாணிக் சர்க்கார் அரசுக்கு எதிரான 100 குற்றச்சாட்டுகளை தயாரிக்க முயற்சி செய்தோம். ஆனால் தோல்வியுற்றோம்.
மாணிக் சர்க்கார் அரசுக்கு எதிராக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சொல்லிக்கொள்ளும்படியான குற்றச்சாட்டுகளை எங்களால் தயாரிக்கவே முடியாது என்பதையும் புரிந்து கொண்டோம்.

*தற்செயலாக உருவாக்கப்பட்ட வெற்றி முழக்கம் தான் "ஆப் கி பார் மோடி சர்க்கார்".

*இருவேறு மக்கள் குழுவிற்கு இருவேறு செய்திகளை கொண்டுசெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமாகியிருக்கிறது. இது ஒன்றும் புதிது இல்லை. ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் இப்படியாக செய்து தான் அமெரிக்க தேர்தலில் முடிவுகளை மாற்ற முடிந்திருக்கிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதனை தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்த துவங்கி இருக்கிறார்கள். மக்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப பிரச்சாரம் செய்யப்படுவது பேஸ்புக் நிறுவனத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் பல விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் அப்படியான தில்லுமுல்லுகளை செய்திருக்கிறதா என்று விசாரிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரே பரிந்துரை செய்திருக்கிறார்.

*பாஜகவை ஃபேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் 1.46 கோடி, யூடிபில் பின்தொடர்பவர்கள் 4.5 லட்சம், ட்விட்டர் ஒரு கோடி பேர்

*வாட்ஸ் அப்பை தாண்டியும் புதிய வாய்ப்புகளையும் பாஜக தேடிக் கொண்டேதான் இருந்தது. "நமோ செயலி" அல்லது "நரேந்திர மோடி செயலி" என்ற ஒன்றை உருவாக்கி, அதனை மிகத் தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கியது. வாட்ஸ்அப் இயங்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்படும் எந்த நிலையிலும் அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே நமோ செயலியை பாஜக அறிமுகப்படுத்தியது.

*பாரதிய ஜனதா கட்சிக்கு தன்னார்வத் தொண்டர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

*மின்சார கட்டணம் கட்டும் ரசீது மூலம் கூட ஒரு குடும்பத்தின் பின்னணி அலசப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு தேர்தலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

4. ஃபேக்(Fack) செய்திகளும் திட்டமிட்ட பிரச்சாரமும்

*ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் நிச்சயமாக அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.
ஒருகட்டத்தில் பொய்யைச் சொன்ன நீயே கூட நம்ப தொடங்கிவிடுவாய்.
நாஜி ஜெர்மனியின் பிரச்சார மந்திரியாக இருந்த ஜோசப் கோயபல்ஸ் அவர்களின் மேற்கோள் இது . இந்திய அரசியல்வாதிகளின் பெரும்பாலானோருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான வெற்றிகரமான அரசியல்வாதிகளுக்கு அன்றாட நடைமுறை அரசியலில் கோயபல்ஸ் கருத்துக்கள் நிச்சயமாக புதிதாக இருக்காது.

*ஃபேக் செய்திகளை உருவாக்கி, பரப்பி வெற்றி கொள்ளும் கட்சிக்கும், அவருக்கு எதிராக தோல்வி அடைந்து கொண்டே இருக்கின்ற கட்சிக்கும் ஃபேக் செய்தி உருவாக்கி பரப்புவது தவிர வேறு வழி என்ன இருக்கிறது? அதனால்,ஃபேக் செய்திகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு ஃபேக் செய்திகளும் வளரத்தான் போகின்றன.

5. ஒரு தேர்தலை வெல்வது

*தலைமையிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதால் கட்சி கட்டுப்பாட்டுடன் செயல்பட முடியும் என்பதை தவிர, குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதரவுக் கூட்டம் உருவாகி அதுவே நாளடைவில் பல கட்சிகளாக உடைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

*இந்து மதம் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக கட்டமைக்கப்படும் ஃபேஸ்புக் பக்கங்களை பின்தொடரும் லட்சக்கணக்கானோர் பாஜகவால் மட்டுமே இந்து 
மதத்தை காப்பாற்ற முடியும் என்றும் நம்புகின்றனர்.

*வரலாற்றை திரித்து காங்கிரசின் மீது மக்களுக்கு வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பகத்சிங்கை சிறையில் சென்று காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கவில்லை போன்ற பொய்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.
உண்மையில் ஜவகர்லால் நேருவே நேரடியாக சிறைக்குச் சென்று "பகத் சிங்கையும்,
பத்துகேஸ்வர் தத்தையும் சந்தித்தார்" என்ற எளிய உண்மையை கூகுளில் தேடினால் கூட தெரிந்து கொண்டுவிடலாம்.
வரலாற்றில் மிக தெளிவான உண்மை நிலை கூட அறிந்திராத பிரதமராக இருக்கிறார் என்று மோடி மீது ஏளனப்பார்வை தானே மக்களுக்கு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக,இத்தகைய பொய்களின் மூலமாக பாஜகவிற்கு அரசியல் ஆதாயம் தான் கிடைத்தது.
பாஜகவில் இருந்து ஏன் விலகினேன்?

*2014 ஆம் ஆண்டில் மோடியின் மாய வார்த்தைகளால் என்னை போலவே பலரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. பாஜகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளிலிருந்து தான் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக பாஜகவிலிருந்தும், ஏபிவிபி இருந்தும்,இன்னும் சொல்லப்போனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்துமே கூட பலபேர் என்னுடைய கருத்திற்கு ஆதரவளித்தனர்.

*தேசங்களையும் அது இயங்குவதற்கு தேவையான அமைப்புகளையும் கட்டமைப்பதற்கு பல பத்தாண்டுகள், நூறு ஆண்டுகள் கூட தேவைப்படும் அப்படியாக உருவாக்கி வைக்கப்பட்டிருந்த பலவற்றையும் பாஜக அழித்திருக்கிறது என்பதே அதனுடைய தோல்விக்கு உதாரணம்.

*தேர்தல் நிதி பத்திரம் - நம் நாட்டின் அரசியல் கட்சிகளை கார்ப்பரேட்டுகளுக்கும் அன்னிய சக்திகளும் விலை கொடுத்து வாங்கி ஊழலை சட்டபூர்வமாக அங்கீகரித்து, அதற்காகவே உருவாக்கப்பட்ட நடைமுறை. ஊழல் குறைந்து இருப்பது போல தோன்றுவது இதனால்தான். உண்மையில் அமெரிக்காவைப் போன்று நேரடியாக கண்டுபிடிக்கமுடியாத மாதிரியான ஒரு திட்டத்தை உருவாக்கி ஊழலை சட்டப்படி அங்கீகரிக்கும் ஒரு நடைமுறையாக மாற்றியிருக்கிறது பாஜக அரசு.

* திட்டக் கமிஷனை ஒழித்தது

செய்யும் திட்டங்கள் சரியாக செயல்படுத்த படுகின்றனவா என்று அறிந்துகொள்ள திட்ட கமிஷனின் அறிக்கைகள் தான் பெரும் உதவியாக இருந்து வந்தன. அது ஒழிக்கப்பட்டு விட்டதால், இனிமேல் அரசாங்கம் கொடுக்கிற தகவல் மட்டுமே தான் இருக்கப் போகின்றன.

*சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை முறைகேடாக பயன்படுத்துதல்

*பணமதிப்பிழப்பு படு தோல்வியில் முடிந்த ஒரு திட்டம்.
பயங்கரவாதத்தையும் காகித பணத்தின் தேவையை குறைக்கவும் ஊழலை உடைத்தெறியும் அமல்படுத்த பட்டதாக கூறிய அனைத்துமே அபத்தமான பொய்ப்பிரச்சாரப் பரப்புரைகள் தான்.
உண்மையிலேயே, இந்தியாவின் தொழில் துறையையும், வியாபாரத்தையும் ஒட்டுமொத்தமாக இத்திட்டம் அழித்துவிட்டது.

*ஜிஎஸ்டி செயல்படுத்திய விதம்
அவசரகதியில் செயல்படுத்தப்பட்டால் வியாபாரத்தில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.

*வீண்பெருமைக்காக வெளியுறவு கொள்கைகளையே குழப்பி வைத்திருப்பது.

*சன்சாத் ஆதர்ஷ், கிராம் யோஜனா, மேக் இன் இந்தியா, ஸ்கில் டெவலப்மன்ட் போன்ற பல்வேறு திட்டங்களின் தோல்வி.

*பெட்ரோல் மற்றும் டீசலின் அதிகப்படியான விலை உயர்வு

*மிக முக்கியமான அடிப்படை பிரச்சனைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாதது

*விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களை தொடர்ச்சியாக 
அவமானப்படுத்துவது

*70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்காதது போல் மாயையை உருவாக்குவது.

*மேற்கண்ட காரணங்களால் நான் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி எனது ராஜினாமாவை 2018ல் சமர்ப்பித்தேன்.

7 சில பரிசோதனை முயற்சிகள்

*ஊரிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிய மனித உரிமைப் போராளி ஐரோம் ஷர்மிளா ஒரு கட்சியை துவங்கினார். முதலில் போட்டியிட்டு அவர் பெற்ற வாக்குகள் வெறும் 90 மட்டுமே.

*ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டம் பெற்ற பின்னர் லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் யேல் பல்கலைக்கழகத்திலும் படித்துவிட்டு அரசியலில் நுழைந்தார் அசாமைச் சேர்ந்த பரோடியுத் போரா. மக்காவிலிருந்து பிறகு தனிக்கட்சியாகத் தொடங்கிய லிபரல் ஜனநாயகக் கட்சியில் முன்னனுபவம் கொண்டிருக்கும் தனி நபர்கள் ஓட்டு போட்டாலும் கூட புதிய கட்சிகளால் பெரிய அளவுக்கு வெற்றிபெற முடியாது என்பதற்கு உதாரணமாக அமைந்தது.

*ஊழலற்ற ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 2006 ஆம் ஆண்டில் மருத்துவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான நாக பைரவர் ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவர் "லோக் சத்தா" என்ற அமைப்பை தொடங்கினார்.
பிறகு அது கட்சியாக மாறியது. அக்கட்சியின் ஒரே எம்எல்ஏவாக இருந்தார்.
பிறகு, எம்பியாக முயற்சி செய்து நான்காவது இடம் பெற்றார்.
தற்போது அது மீண்டும் கட்சியை அமைப்பாக மாற்றி விட்டார்.
இந்தியாவில் 177 அரசியல் கட்சிகளில் நல்லாட்சி அமையவும் சட்ட மாற்றங்களை ஏற்படுத்தவும் அரசினை சிறப்பாக செயல்பட வைக்கவும் முயல்கிற ஒரு கட்சியை தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.
ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக்சத்தா கட்சிக்கும் அந்த பட்டியலில் நிச்சயமாக இடம் உண்டு என்றாலும், அவர்களால் இதுவரையில் தேர்தலில் வெல்ல முடியாமல் போயிருக்கிறது.

*சமீபத்திய இந்திய வரலாற்றில் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கி ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் அரசியலில் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது "ஆம் ஆத்மி கட்சி"யை தான் சொல்ல முடியும்.
கட்சி தொடங்கப்பட்டது முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் மட்டுமே 130 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றது ஆம் ஆத்மி கட்சி.

*2014 ஆம் ஆண்டு முதலே கல்வி, சுகாதாரம் மற்றும் இதர அரசு சேவைகளில் பல சீர்திருத்தங்களை ஆம் ஆத்மி கட்சியால் மேற்கொள்ள முடித்திருக்கிறது.

*ஆம் ஆத்மி கட்சியின் மீது மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொதுவாக மற்ற பெரிய கட்சிகள் மீதும் வைக்கப்பட முடிகிற குற்றச்சாட்டுகள் தான். இருந்தாலும், அவையெல்லாம் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டும் பெரிய அளவிலான நெருக்கடிகள் ஆக மாறி இருக்கின்றன, ஏனென்றால் ஊழலை ஒழித்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வருகிறோம் என்று உறுதியளித்து விட்டு அரசியலுக்கு வந்த காரணத்தினாலேயே அவர்கள் மீது வைக்கப்படுகிற ஒவ்வொரு குற்றச்சாட்டும் மக்களின் கவனத்தை ஈர்த்து கோபத்தை உண்டாக்குகின்றன.

*மேற்கண்ட மாற்று அரசியல் பரிசோதனை முயற்சிகளும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

* நான் 2018 ஜூன் மாதத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி விட்டதாக பொதுவெளியில் அறிவித்த பின்னர் அரசியலில் ஆர்வமுள்ள பலர் எனக்கு மின்னஞ்சல் மூலமும் அலைபேசி அழைப்புகள் மூலமும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

*கடந்த காலத்தில் அக் கட்சியின் செயல்பாடுகள், தவறுகள், என அனைத்தையும் பட்டியலிட்டு, கட்சியினால் நீண்ட நெடுங்காலம், அதற்காக சமரசம் செய்யாமல், இந்த அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்டால், அக் கட்சியில் இணைவது குறித்து நான் முடிவெடுக்கலாம்.

-சிவம் சங்கர் சிங்