வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 27, 2014

சம்மு காசுமீர் தேர்தல் அலசல்

2014 ஆம் ஆண்டு  சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.

இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
 
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.

பாசக  லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.

தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.

காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.

அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?


கட்சி வெற்றி பெற்றது% வாக்குகள்மொத்த வாக்குகள்
பாரதிய சனதா கட்சி (பாசக)2523 %11,07,194
மக்களின் சனநாயக கட்சி2822.7 %10,92,203
தேசிய மாநாட்டு கட்சி1520.8 %10,00,693
காங்கிரசு1218%8,67,883
மார்க்சிய பொதுவுடைமை10.5%24,017
மக்கள் கூட்டமைப்பு21.9%93,182
மக்கள் சனநாயக முன்னனி10.7%34,886
கட்சி சாராதவர்கள்36.8%3,29,881


மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்.  இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.

சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று.  சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.

பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.

People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.

சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.

தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.

முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25

சம்மு பகுதி: (6) பாசக 04
காங்கிரசு 02
காசுமீர் பகுதி: (5) காங்கிரசு 01
தேசிய மாநாடு 04
லடாக் பகுதி: (4) காங்கிரசு 03
கட்சி சாராதவர் 01

இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02

சம்மு பகுதி: (9) பாசக 03
காங்கிரசு 03
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 01
கட்சி சாராதவர் 01
காசுமீர் பகுதி: (9) காங்கிரசு 01
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 03
மார்க்சிய பொதுவுடமை 01
மக்கள் கூட்டமைப்பு 02
கட்சி சாராதவர் 01

குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.

மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09

காசுமீர் பகுதி: (16) காங்கிரசு 01
தேசிய மாநாடு 03
மக்களின் சனநாயகம் 11
மக்களின் சனநாயக முன்னனி 01

நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14

சம்மு பகுதி: (2) பாசக 02
காசுமீர் பகுதி: (16) தேசிய மாநாடு 04
மக்களின் சனநாயகம் 11
காங்கிரசு 01

ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20

சம்மு பகுதி: (20) பாசக 16
மக்களின் சனநாயகம் 02
தேசிய மாநாடு 02



முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

சனி, ஜூலை 19, 2014

2014 உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம்

வென்றவர் முன்னால் திருத்தந்தை பெனடிக்கட்


இறுதியாட்டம்

அர்செண்டினா 0 - செருமனி 1

வழக்கமான நேரம்:
இரு அணிகளும் நன்றாக சம பலத்துடன் ஆடின. யாரும் கவல் (Goal) அடிக்கவில்லை. சில வாய்ப்புகள் (சுலபமானது அல்ல) கிடைத்தபோதும் இருவரும் அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அர்செண்டின்னாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதை தவறவிட்டு பெரும் பிழை செய்தது. பின் மெசிக்கு அருமையான கவல் போடும் வாய்ப்பு வாய்த்தது, ஆனால் அவர் அதை தவற விட்டுவிட்டார். இவ்விறுதியாட்டத்தில் இப்படிப்பட்ட கவல் போடும் வாய்ப்பு யாருக்கும் வாய்க்கவில்லை. இது போன்ற தவறவிடும் வாய்ப்புகளால் அவரை உலகின் மிகச்சிறந்த வீரர் என சொல்ல முடியாமல் போகின்றது. யாராவது அவர் சிறந்த வீரர் என சொன்னால் அவர்கள் வாயிலேயே குத்த வேண்டியது தான், 2014 உலகக்கோப்பையில் கட்டாய வெளியேற்றம் என்ற முறையில் நடைபெறும் ஆட்டத்தில் எதிலாவது அவர் கவல் போட்டிருக்கிறாரா? இல்லை என்பதே பதில்.

அர்செண்டினா அணி பெற்ற இரண்டு மஞ்சள் அட்டைகளும் அவசிமில்லாதது. பந்து கவல் பகுதியில் இருந்தாலாவது மஞ்சள் அட்டைய பெற்றதை பொறுத்துக்கொள்ளலாம்.

வெற்றிக் களிப்பில் செருமனி அணி

மிகை நேரம்:
தொடக்கத்தில் செருமனிக்கு மிக அருமையான வாய்ப்பு வாய்த்தது. அதை முயன்ற செருமனிக்கு அவ்வாய்ப்பு தவறிவிட்டது.

பத்து நிமிடங்களில் அர்செண்டினாவுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது அதை 18ம் எண் உடையவர் தவறவிட்டுவிட்டார்.

கவல் - 22 நிமிடத்தில் செருமனி (19ம் எண்காரர்) அருமையாக கவல் அடித்தது. அர்செண்டினாவின் தடுப்பரண் அப்போது சிதைந்து இல்லாமல் இருந்தது.

27வது நிமிடத்தில் அருமையான தலையிடி மூலம் கவல் அடிக்க அர்செண்டினாவின் மெசி முயன்றார். ஆனால் அது கவல் கம்பத்துக்கு சிறிது உயரத்தில் சென்றதால் கவலாகவில்லை. (மிக அருமையான வாய்ப்பு தவறிவிட்டது)

1990 க்கு பிறகு செருமனி இப்போது தான் உலகக்கோப்பையை பெறுகிறது.
இவ்வாட்டத்தை பொறுத்த வரை அர்செண்டினாவிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது. ஒப்பீட்டளவில் செருமனிக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. எல்லாம் வீணாலும் ஒன்று மட்டும் கவல் ஆகி கோப்பையை பெற்றுதன்றுவிட்டது.
உலக்கக்கோப்பை இறுதியாட்டத்தில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டுவிட்டு வெற்றி கிட்டவில்லையேன்னு கவலைப்பட்டா சரியா?  

அர்செண்டினா தென் அமெரிக்க அணியா? எல்லோரும் ஐரோப்பிய குடியேறிகள் போன்று உள்ளனர். அர்செண்டினாவில் தொல் பழங்குடிகள் உள்ளனரா? அர்செண்டினாவை மற்ற தென் அமெரிக்கர்கள் வெறுக்கவும் கிண்டல் பண்ணவும் உள்ள காரணம் சரியானது தான்.

தங்க கையுறை வாங்கியவர் - செருமனியின் கவலி
தங்க பந்து வாங்கியவர் - மெசி (சிறந்த வீரர்) (இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்தவரை வாயிலேயே குத்த வேண்டியது தான் )
தங்க காலணி வாங்கியவர் - சேம்சு ரோட்ரிகசு (கொலம்பியா

மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்

நெதர்லாந்து 3 - பிரேசில் 0

ஆட்டம் ஆரம்பம் ஆகும் போது பிரேசில் அணி வீரர் தீவிரமா வேண்டுனார். ஆட்டம் முடிவில் தான் தெரியுது சாமி செருமனி மாதிரி இவனுங்க 7 கவல் அடிக்காம காப்பாத்துன்னு வேண்டியிருக்காருன்னு.

நெதர்லாந்து முதல் கவலை போடும் வரை பிரேசிலின் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இப்படியே ஆடினால் பிரேசில் வென்று விடும் என எண்ணினேன். நெதர்லாந்து முதல் கவலை போட்டதும் ஆட்டம் மாறிவிட்டது.

முதல்லயே கவல் விழுந்ததால எங்க செருமனி மாதிரி நெதர்லாந்தும் நிறைய கவல் அடிக்குமோன்னு நினைத்து நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகலை. நிறைய கவல் போடுவார்கள் என்று நினைத்த எனக்கு சிறு ஏமாற்றம் தான்  .

இவ்வாட்டத்தில் பிரேசில் நன்றாக ஆடினாலும் அவர்களின் போயூழோ அல்ல நெதர்லாந்தின் ஆகூழோ அவர்களால் கவல் அடிக்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை இவ்வாட்டத்தில் அவர்களே வெற்றிபெற்றிருக்க வேண்டிய அணி.

ஒலிம்பிக் போட்டி நடப்பதற்குள் தன் கால்பந்து அணியை பிரேசில் சரி செய்துடுமா?

அரையிறுதி 

அர்செண்டினா 4 - நெதர்லாந்து 2 (வழக்கமான (மிகைநேரமும் சேர்த்து) நேரமுடிவில் இருவரும் கவல் அடிக்காததால் சமன்நீக்கி முறையில் 4-2 என்ற கணக்கு வந்தது)

ஆரம்பம் முதலே அர்செண்டினாவே நன்றாக ஆடினார்கள். நெதர்லாந்தின் ஆட்டம் நன்றாக இல்லை. அர்செண்டினாவின் போயூ(கூ)ழ் (unluck) வழக்கமான நேரத்தில் கவல் விழவில்லை. சமன்நீக்கி முறை வந்த போது நெதர்லாந்து வென்றுவிடுமோ என்று பயந்தேன் (இவ்வாட்டத்தை வெல்ல தகுதியில்லை என்பதால்) நல்லவேலை அர்செண்டினா வென்றது. நெதர்லாந்தின் கவலியை விட அர்செண்டினாவின் கவலி உயரம். நெதர்லாந்தின் கவலி சமன்நீக்கி முறைக்கு சரியில்லை போன ஆட்டத்தில் வந்தவர் இதற்கும் வந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

செருமனி 7 - பிரேசில் 1 அரையிறுதி ஆட்டத்தை பார்க்கவில்லை. 

புதன், ஏப்ரல் 09, 2014

தேர்தல் கருத்து கணிப்பு


இந்த தேர்தலில் பலவிதமாக கருத்து கணிப்புகள் வந்தாலும் அனைத்தையும் புதினமாக பார்க்கவேண்டுமே தவிர உண்மை என்று நம்பினால் அது உங்கள் தவறு என்று தான் சொல்ல வேண்டும். தமிழக ஊடகங்களின் கருத்த கணிப்பு இன்னும் நகைச்சுவையானது. நக்கீரன் கருத்து கணிப்பு ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு என்று ஆளாளுக்கு முடிவு எப்படி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அது போல் கருத்து கணிப்பை எழுதி  தங்கள் இதழின் பக்கத்தை நிரப்புகிறார்கள். பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி பாசக கூட்டணி தான் இந்திய அளவில் வெல்லும் என்றும் தமிழகத்தில் மோடி அலை எதிர்பார்க்காத விதம் அடிப்பதாகவும் அதனால் பாசக கூட்டணி நிறைய இடங்களில் அதாவது 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் சொல்லுவார்கள். வேற வழி.



நம்ம பதிவுலகில் நிறைய பேர் அரசியல் சார்பு உடையவர்கள். ஆனா இத்தேர்தலில் பாசகவுக்கு பெரும் வாக்கு வங்கி உருவாகி விட்டது என்று பாசக ஆதரவாளர்கள் நம்மை நம்ப சொல்கிறார்கள். இதை இல கணேசன், வானதி சீனிவாசன், பொன் இராதாகிருட்டிணன், தமிழிசை போன்றோரே நம்ப மாட்டார்கள். ஆனா பாமகவையும் தேமுதிகவையும் தன் கூட்டணியில் சேர்த்ததை பாராட்டத்தான் வேண்டும். இதுக்கு அவங்க பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.

அதிமுகவின் வாக்கு வங்கி 35%க்கு மேல் கிடையாது (புரட்சி தலைவர் காலத்திலேயே அதுக்கு மேல போனதில்லை என்பதுல புகழ் பெற்ற பதிவரின் கூற்று). தேமுதிக அதில் கைவைக்கும். அப்ப அது குறையும். பொதுவுடமைவாதிகளுக்கு 2~3 % வாக்கு மட்டும் இருந்தாலும் அதை இழந்தது மாபெரும் தவறு. மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவை அதிமுகவை எந்த அளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. இன்னும் பெருமளவில் மின்வெட்டு உள்ளது அதன் தாக்கம் அதிமுகவிற்கு இருக்கும். தொழில் நகரங்களில் மின் வெட்டு தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும். அம்மா உணவகம், அம்மா தண்ணி (பாட்டில் குடிநீர்) போன்றவை எந்த அளவு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. அம்மாவின் சாதனைகள் என்ற பரப்புரைக்கு இது உதவும் அதுக்கு மேல் இதற்கு பலன் இல்லை என்பதே என் கணிப்பு. அம்மா தண்ணி என்றால் அரசே சாராயம் விற்பதை குறிக்கும் என்றாலும் அதுக்கு அம்மா பேர் வைக்காமல் அம்மாவிற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள்.

திமுகவின் வாக்கு வங்கி மிக அதிகளவாக 26% தான் இருக்கும் என்றாலும் அழகிரியினால் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்னும் குறைய வாய்ப்புண்டு, எவ்வளவு என்பது கேள்விக்குறி. கூட்டணி கட்சிகளால் வாக்கு 3% அதிகமாக வாய்ப்புள்ளது. இசுலாமிய கட்சிகளால் அதற்கு என்ன பயன் என்றால் அதை விட்டு சிறு அளவில் இசுலாமிய மக்கள் விலகிச்செல்லமாட்டார்கள். அதனால் இசுலாமிய கட்சிகளால் திமுகவிற்கு பெரும் பயன் இல்லை எனலாம். விடுதலைச்சிறுத்தைகளாலும் புதிய தமிழகத்தினாலும் அதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும்.

அதிமுகவிற்கு சிறிதளவு இசுலாமியர்களின் வாக்கும் பெருமளவு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கும் கிடைக்கும். எல்லாம் இரட்டை இலை செய்யும் மாயம்.

  • திமுக காங்கிரசு பாசக என்று அனைவரும் விரும்பிய தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8-10% வாக்கு வங்கி உண்டு. இவருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு கிடைக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி இவர்களால் கணிசமாக குறையும்.
  • பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உண்டு தேமுதிக அதை இப்ப ஆட்டைய போட வாய்பில்லாததால் பாமகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படாது.
  • மதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் சராசரியா 5-6% வாக்கு உண்டு. அவங்க பாசகவின் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் ஆசையாக வேண்டுமானால் இருக்கலாம்.
  • அது போலவே பாசகவின் பார்ப்பனர்கள் பாசக போட்டியிடாத இடத்தில் அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது, 50% பாசக பாப்சு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. பாசகவுக்கு கன்னியாகுமரியில் மட்டும் நல்ல வாக்கு வங்கி உள்ளது, 2011 சட்டமன்ற தேர்தலில் மாநில அளவில் பாசக 2.22% வாக்கு வாங்கி இருக்கு, இப்ப அதிகமாக வாங்கும் என்பது உறுதி. 
  • மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு சிறு செல்வாக்கு உண்டு. கொங்கு கட்சியில் பெரும்பாலானவர்கள் அதிமுக அனுதாபிகள். இதனாலும் அதிமுகவிற்கு சறுக்கல் தான்.
  • மோடி அலை என்பது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவு உள்ளது அதனால் இக்கூட்டணிக்கு கட்சி சாராதவர்களின் வாக்கு கணிசமாக கிடைக்கலாம்.
  • பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ஆகாது அதனால தேமுதிககாரங்க பாமகவுக்கும் பாமககாரங்க தேமுதிகவிற்கும் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உண்மையல்ல. சில இடங்களில் இது நடக்க வாய்ப்புண்டு. ஆனால் எல்லா (மிகப்பெரும்பாலான) இடங்களிலும் இது நடக்காது. 
  • பாசகவுக்கு கன்னியாகுமரி நம்பிக்கை தரும் தொகுதி மற்ற இடங்களில் துளியும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பாசகவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூரில்  புதிய நீதிக்கட்சியின் சண்முகம் வேட்பாளர். பாசகவின் சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார். இறுதி வரை இவர் களத்திலேயே இல்லை ஆனால் பாசகவின் தொகுதியை பெற்றுவிட்டார். இதுவல்லவோ அரசியல். 
  • பாசக கூட்டணியில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், பாசக 8 இடங்களிலும், மதிமுக 7 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், பச்சமுத்துவும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இப்ப நீலகிரி போச்சு, வேலூரை சண்முகத்துக்கு கொடுத்தாச்சு இறுதியாக பாசக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதி வேணுமுன்னு என்னா அலப்பறை.

ஆம் ஆத்மி கட்சிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தொகுதிகளில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களால் நல்ல வாக்கு வங்கி உள்ளது (கட்சிக்கு என்பதை விட அந்த வேட்பாளர்களுக்கு என்பது பொருத்தம்) புது வாக்காளர்களில் கணிசமானவர்கள் இதற்கு வாக்கு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி சட்டமன்றத்தில் பெரு வெற்றி பெற்றதும் ஊடகங்களில் அதிக அளவு பேசப்பட்டதும் இதற்கு கை கொடுக்கலாம். இவர்களால் எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்பது தெரியவில்லை. இவர்கள் தமிழகத்தில் வென்றால் அது கன்னியாகுமரியாக மட்டுமே இருக்கும், அதுவும் சுலபம் இல்லை.

காங்கிரசிற்கு கன்னியாகுமரி தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அது வெற்றி பெறும் அளவுக்கு உதவுமா என்பது ஐயமே. அங்கு முன்பணம் காப்பாற்றப்படும் என்பது உறுதி.

ஆத்தாவின் நாற்பதும் நமக்கே என்பது வெற்று கோசம் என்பது ஆத்தாவிற்கு இப்போ தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும். உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப இரணகளம் ஆக்கிட்டாங்களே.

இந்த மும்முனைப்போட்டியில் போட்டி கடுமையாக இருக்கும். குறைந்த வாக்கு வேறுபாட்டிலேயே வெற்றி இருக்கும். அதிமுக அளவிற்கு திமுக வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. பாசக கூட்டணியும் வெற்றி பெறுவார்கள் ஆனால் எத்தனை இடத்தில் என்று தெரியவில்லை. இது தொகுதியில் அவர்கள் எவ்வளவு பலமாக உள்ளார்கள் என்பதை பொறுத்தது. கூட்டணிக் கட்சிக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.

கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே உண்மையான ஐம்முனைப்போட்டி உள்ளது.

சவுக்கு தன் இணையத்தில் ( http://savukku.in/5527 )மார்ச் 24 அன்று அதிமுக 18ம் பாசக கூட்டணி 15ம் திமுக கூட்டணி 7ம் பெறும் என்று எழுதி  இருந்தது. அது வியப்பாக தான் இருந்தது. சவுக்கு கட்சி சார்பில்லாமல் செயல் படக்கூடியது என்பதால் அது கருத்துகணிப்பை வாங்கிய மூலம் கொடுத்ததை விருப்பு வெறுப்பில்லாமல் அப்படியே போட்டுள்ளது.

அரசியலில் எப்போ எது நடக்கும் என்று சொல்லமுடியாது. தேர்தல் சமயத்தில் சொல்லவே முடியாது. அரசியலில் அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு நாள் போதும் நிலைமையை தலைகீழாக மாற்ற.

இப்ப நீலகரியில் பாசக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி. இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்கப்போகுதோ.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் வதைபடப்போவதால் இப்போ நடக்கும் கூத்தை நாம இரசிப்போம்.

தகுதியானவர்களுக்கு அவர்களின் வெற்றி வாய்ப்பை பார்க்காமல் வாக்களிப்போம். முதல் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும். இப்படி பலர் சிந்தித்தால் அது மாற்றத்தை கொண்டு வரும்.

புதன், ஏப்ரல் 02, 2014

வாக்காளர்கள் விபரம்.

இந்த 16வது மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 814,591,184. இந்திய கணக்கில் 81,45,91,184. புதுச்சேரியில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அடிப்படையில் பெரிய மக்களவை தொகுதி தெலுங்கானாவின் மல்காச்கிரி (ஐதராபாத்தின் புறநகர்). அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் விளக்கமாகப் புரியும்.

எத்தனை வாக்காளர்கள் மாநில \ ஒன்றியப் பிரதேச வாரியாக உள்ளார்கள். எத்தனை விழுக்காட்டினர் வாக்காளர் நிழற்பட அட்டை வாங்கியுள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் இவர்களின் விழுக்காடு நிழற்பட அட்டை உடைய வாக்காளர்கள் விழுக்காட்டில்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 257,856 0.032% 98.54%
ஆந்திரப் பிரதேசம் 62,385,949 7.659% 100.00%
அருணாச்சலப் பிரதேசம் 753,216 0.092% 97.60%
அஸ்சாம் 18,723,032 2.298% 0.00%
பீகார் 62,108,447 7.624% 90.60%
சண்டிகார் 580,700 0.071% 99.95%
சத்தீசுகர் 17,521,563 2.151% 95.67%
தாத்ரா & நகர் அவேலி 188,783 0.023% 99.99%
தமன் & தியூ 102,260 0.013% 96.01%
கோவா 1,043,304 0.128% 98.66%
குசராத் 39,871,571 4.895% 99.96%
அரியானா 15,594,427 1.914% 100.00%
இமாச்சலப் பிரதேசம் 4,674,187 0.574% 100.00%
சம்மு & காசுமீர் 6,933,118 0.851% 86.86%
ஜார்க்கண்ட் 19,948,683 2.449% 99.55%
கருநாடகம் 44,694,658 5.487% 99.23%
கேரளம் 23,792,270 2.921% 2.921%
இலட்ச தீவு 47,972 0.006% 100.00%
மத்தியப் பிரதேசம் 47,544,647 5.837% 100.00%
மராட்டியம் 78,966,642 9.694% 91.60%
மணிப்பூர் 1,739,005 0.213% 99.62%
மேகாலயா 1,553,028 0.191% 100.00%
மிசோரம் 696,448 0.085% 100.00%
நாகாலாந்து 1,174,663 0.144% 0.00%
டெல்லி 12,060,493 1.481% 100.00%
ஒடிசா 28,880,803 3.545% 97.33%
புதுச்சேரி 885,458 0.109% 100.00%
பஞ்சாப் 19,207,230 2.358% 100.00%
இராச்சசுத்தான் 42,559,543 5.225% 99.74%
சிக்கிம் 362,326 0.044% 100.00%
தமிழ் நாடு 53,752,682 6.599% 100.00%
திரிபுரா 2,379,541 0.292% 100.00%
உத்திரப் பிரதேசம் 134,351,297 16.493% 99.92%
உத்திரா கண்டம் 6,786,394 0.833% 100.00%
மேற்கு வங்காளம் 62,468,988 7.669% 100.00%
மொத்தம் 814,591,184 100.000% 95.64%

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வாக்காளர் நிழற்பட அட்டை கொடுத்துட்டாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாநிலத்திலும் \ ஒன்றியப் பிரதேசங்களிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் பெண்கள் மற்றவர் மொத்தம்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 136,356 121,500 0 257,856
ஆந்திரப் பிரதேசம் 31,359,303 31,022,225 4,421 62,385,949
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 0 753,216
அஸ்சாம் 9,694,654 9,028,378 0 18,723,032
பீகார் 33,098,022 29,008,544 1,881 62,108,447
சண்டிகார் 315,336 265,364 0 580,700
சத்தீசுகர் 8,882,939 8,638,607 17 17,521,563
தாத்ரா & நகர் அவேலி 101,262 87,521 0 188,783
தமன் & தியூ 50,595 51,665 0 102,260
கோவா 520,264 523,040 0 1,043,304
குசராத் 20,864,446 19,006,837 288 39,871,571
அரியானா 8,442,220 7,152,207 0 15,594,427
இமாச்சலப் பிரதேசம் 2,390,117 2,284,068 2 4,674,187
சம்மு & காசுமீர் 3,657,764 3,275,354 0 6,933,118
ஜார்க்கண்ட் 10,508,420 9,440,237 26 19,948,683
கருநாடகம் 22,800,918 21,885,287 8,453 44,694,658
கேரளம் 11,442,927 12,349,343 0 23,792,270
இலட்ச தீவு 24,216 23,756 0 47,972
மத்தியப் பிரதேசம் 24,959,925 22,583,669 1,053 47,544,647
மராட்டியம் 41,841,934 37,124,438 270 78,966,642
மணிப்பூர் 852,953 886,052 0 1,739,005
மேகாலயா 769,711 783,317 0 1,553,028
மிசோரம் 341,934 354,514 0 696,448
நாகாலாந்து 594,572 580,091 0 1,174,663
டெல்லி 6,684,476 5,375,379 638 12,060,493
ஒடிசா 15,038,356 13,841,339 1,108 28,880,803
புதுச்சேரி 424,958 460,488 12 885,458
பஞ்சாப் 10,112,897 9,094,333 0 19,207,230
இராச்சசுத்தான் 22,406,058 20,153,464 21 42,559,543
சிக்கிம் 186,826 175,500 0 362,326
தமிழ்நாடு 26,893,009 26,856,677 2,996 53,752,682
திரிபுரா 1,212,509 1,167,032 0 2,379,541
உத்திரப் பிரதேசம் 73,613,039 60,731,628 6,630 134,351,297
உத்திரா கண்டம் 3,562,721 3,223,661 12 6,786,394
மேற்கு வங்காளம் 32,489,949 29,978,526 513 62,468,988
மொத்தம் 426,651,513 387,911,330 28,341 814,591,184

சண்டிகர், கேரளம், கோவா போன்றவற்றில் ஒரு வாக்காளர் கூட மற்றவர்கள் இல்லை என்பது பெரும் வியப்புக்குரியது.

பெண்கள் கேரளாவில் அதிகம்.பெண் வாக்காளர்களும் அதிகம். ஆனால் புதுச்சேரியில் அதிக பெண்கள் உண்டு என்பது தெரியாது. மலையாள தேசத்தில் உள்ள மாஹேல அதிக பெண்கள் இருந்து மொத்த புதுச்சேரி கணக்க அதிகப்படுத்திட்டாங்களோ..

அதிக பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலங்கள் \ ஒன்றியப் பிரதேசங்கள் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் எண்ணிக்கை பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் விழுக்காட்டில் (%) பெண்கள் விழுக்காட்டில் (%)
புதுச்சேரி 424,958 460,488 48.0% 52.0%
கேரளம் 11,442,927 12,349,343 48.1% 51.9%
மணிப்பூர் 852,953 886,052 49.0% 51.0%
மிசோரம் 341,934 354,514 49.1% 50.9%
தமன் மற்றும் தியூ 50,595 51,665 49.5% 50.5%
மேகாலயா 769,711 783,317 49.6% 50.4%
கோவா 520,264 523,040 49.9% 50.1%
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 49.9% 50.1%


காசியாபாத் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வர் ஏகே49 குடியிருந்த இடமில்ல?. உத்திரப்பிரதேசத்துக்கு சேர்ந்தது என்றாலும் டெல்லியை சேர்ந்தது என்று சொல்லலாம். (தலைநகருக்கு உட்பட்ட பகுதி)
வாக்காளர்கள் அடிப்படையில் முதல் ஐந்து பெரிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 ஆந்திரப் பிரதேசம் (ஐதராபாத்தின் புறநகர், தெலுங்கானா) மல்காச்கிரி 29,53,915
2 உத்திரப் பிரதேசம்(ஆனா டெல்லிக்கு சேர்ந்தது என்று சொல்வது தான் பொருத்தம்) காசியாபாத் 22,63,961
3 கருநாடகம் வடக்கு பெங்களூரு 22,29,063
4 உத்திரப் பிரதேசம் உன்னாவ் 21,10,388
5 டெல்லி வட மேற்கு டெல்லி20,93,922

வாக்காளர்கள் அடிப்படையில் ஐந்து சிறிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 இலட்ச தீவு இலட்ச தீவு 47,972
2 தமன் மற்றும் தியூ தமன் மற்றும் தியூ 1,02,260
3 சம்மு காசுமீர் லடாக் 1,59,949
4 தாத்ரா & நகர் அவேலி தாத்ரா & நகர் அவேலி 1,88,783
5 அந்தமான் & நிக்கோபார் தீவுகள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 2,57,856



தரவு: இந்திய தேர்தல் ஆணையம் (பெப்ரவரி 14, 2014 வரை உள்ள தகவல்.

குறிப்பு: அனைத்து தகவல்களும் என்டிடிவியின் இணையதளத்தில் இருந்து எடுத்தது.

திங்கள், மார்ச் 10, 2014

தேர்தல் கணிப்பு

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டாயிற்று. சில கணிப்புகளை இங்கே சொல்லி உள்ளேன். இது எந்த கட்சிகாரங்களும் காசு கொடுத்து செய்ததல்ல :) கருத்து கணிப்புன்னு வந்தா இதை முதல்ல சொல்லனும் பல கருத்து கணிப்பு நிறுவனங்களால் இந்த நிலை.

மாநிலம் தொகுதிகள் ஆட்சி 2009ல் காங் வென்றது 2009ல் பாசக வென்றது
ஆந்திரப்பிரதேசம் 42 காங்கிரசு 33 0
அருணாச்சல்பிரதேசம் 2 காங்கிரசு 2 0
அஸ்சாம் 14 காங்கிரசு 7 4
பீகார் 40 ஐக்கிய ஜனதாதளம் 2 12
சத்திசுகர் 11 காங்கிரசு 1 10
கோவா 2 பாசக 1 1
குசராத் 26 பாசக 11 15
அரியானா 10 காங்கிரசு 9 0
இமாச்சலப்பிரதேசம் 4 காங்கிரசு 1 3
சம்மு காசுமீர் 6 தேசிய மாநாடு 2 0
சார்கண்ட் 14 காங்கிரசு 1 8
கருநாடகம் 28 காங்கிரசு 6 19
கேரளா 20 காங்கிரசு 13 0
மத்தியப்பிரதேசம் 29 பாசக 12 16
மகாராசுட்டிரா 48 காங்கிரசு 17 9
மணிப்பூர் 2 காங்கிரசு 2 0
மேகாலயா 2 காங்கிரசு 1 0
மிசோரம் 1 காங்கிரசு 1 0
நாகாலாந்து 1 காங்கிரசு 0 0
ஒடிசா 21 பிசு ஜனதாதளம் 6 0
பஞ்சாப் 13 அகாலிதளம் 8 1
இராசபுதினம் 25 பாசக 20 4
சிக்கிம் 1 காங்கிரசு 0 0
தமிழ்நாடு 39 அதிமுக 8 0
திரிபுரா 2 காங்கிரசு 00
உத்திரப்பிரதேசம் 80 சமாச்வாடி 21 10
உத்திராகண்டம் 5 காங்கிரசு 5 0
மேற்கு வங்கம் 42 திரிணாமுல் காங்கிரசு 6 1

2009 தேர்தல் முடிவுப்படி: கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், அரியானா, உத்திராகண்டம், ஓடிசா , சம்மு காசுமீர் போன்ற மாநிலங்களில் பாசக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

காங்கிரசு திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற வில்லை.

மகாராசுட்டிரா, பஞ்சாப், பீகார் போன்றவற்றில் பாசகவுக்கு வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன. காங்கிரசுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் சம்மு காசுமீர் போன்றவற்றில் வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன.

2009ல் காங்கிரசு 3 மாநிலத்தில் முட்டை வாங்கியிருக்கு பாசக 14 மாநிலங்களில் முட்டை வாங்கியிருக்கு. இதில் பெரும்பாலான மாநிலங்கள் வடகிழக்கை சேர்ந்தது. அங்கு 1 அல்லது 2 தொகுதி தான் இருக்கும். ஆனா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், உத்திரா கண்டம்,  அரியானா, ஒடிசா, சம்மு காசுமீர் போன்ற 4க்கு மேற்பட்ட தொகுதி உடைய மாநிலங்களிலும் முட்டை.

தெற்கில் கூட்டணி பலமா அமைந்தால் தமிழ்நாட்டில் அதற்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சில இடங்கள் கிடைக்கலாம். கேரளா, ஆந்திராவில் இப்பவும் முட்டை தான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 2009ல் எப்படியோ 1 இடம் கிடைத்தது. அந்த மாநிலத்தில் பாசக செல்லாக்காசு. ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்தா தேறலாம் இல்லை ஆம்லெட் திங்க முட்டை கிடைக்கும்.

பீகாரில் நிதிசு கூட காய் விட்டதால் இம்முறை எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.  அதாவது வடமாநிலங்களில் நிறைய இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை பாசக பிடிக்கமுடியும். ஆனால் வடமாநிலங்களில் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி பாசகவுக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

அரியானாவில் 2009ல் இரு தொகுதிகளில் (பரிதாபாத், சோனிபேட்டை) பாசக இரண்டாவது வந்துள்ளது. இங்கு இது கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும். சௌத்தாலா கூட கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு போட்டி கொடுக்கலாம். காங்கிரசும் சௌத்தாலாவும் தான் பெரிய ஆளுங்க. அங்குள்ள சிறிய கட்சியான (சௌத்தாலாவை விட சிறியது) அரியானா ஜாங்கிட் காங்கிரசு கூட 2009ல் பாசக கூட்டணி வைத்தது. 2014ல் அங்கு ஆம் ஆத்மி எப்படி எல்லோருடைய கணக்கை கலைச்சிப்போடும்ன்னு தெரியலை.

மேற்கு வங்கத்தில் 2009ல் பாசகவின் பெரிய ஆளுங்களில் ஒருவரான ஜசுவந்த் சிங் டார்சலிங்கில் வெற்றி பெற்றவர். இவர்  தொண்டர் செல்வாக்கு இல்லாவர் ஆனால் அமைச்சராக இருந்ததால் பெரிய ஆளு என்றேன். அப்ப டார்சலிங்கில் எப்படி வெற்றி பெற்றார் என்கிறீர்களா? அது டார்சலிங்கின் தாதாவான கூர்க்கா சனமுக்தி மோர்சாவுடன் கூட்டணி வைத்தால் தான்.

அசாமில் நாலு இடம் அப்பா! அங்கு பெரும் வளர்ச்சி அப்படின்னு நினைக்காதிங்க. 2004ல் தனியா போட்டி போட்ட போது 2 இடம் கிடைத்தது உண்மை. ஆனால் அங்கு பாசகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதில் ஒருவரான பாடகர் பூபன் தன் தனி செல்வாக்கால் வென்றார். பாச கட்சியால் அல்ல. 2009ல் அசாம் கன பரிசத்துடன் கூட்டணி வைத்ததால் தான் 4 இடம் கிடைத்தது. பாவம் அசாம் கன பரிசத்துக்கு அப்போ 1 இடத்தில் தான் வெற்றி கிடைத்தது. இது தேர்வில் இவன் மதிப்பெண் குறைவு ஆனால் இவனை பார்த்து எழுதியவன் நிறைய மதிப்பெண் என்ற கணக்காயிடுச்சு.

பாசக பெரும்பான்மை பெறனும்னா தோராயமா 350ல் இருந்து தான் பெறனும். அதனால அது தனிப்பெரும்பான்மை பெறுவது சுலபம் அல்ல. கூட்டணி தான் ஒரே வழி. 200க்கு மேல் வெற்றி பெற்றால் பயம் இல்லாமல் இருக்கலாம் இல்ல எப்ப யாரு கத்தியால் குத்துவாங்கன்னு தெரியாது அநியாயத்துக்கு பயப்படனும் (ஆட்சியில் அமர்ந்தால்).

நிறைய தொகுதிகளில் வெற்றி பெறனும்னா அதற்கான வழி உத்திரப்பிரதேசத்தில் தான் இருக்கு. மராட்டியத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா புண்ணியத்தில் பாதிப்பு இருக்கு. அதை சரி கட்டுனா தேவலை. ஆம் ஆத்மியால் சில\பல இடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.



 இத்தேர்தலில் காங்கிரசு செத்த எலி.