வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



காங்கிரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெல்ச்சி நேரம் \ பெல்ச்சி காலம்

 இந்திரா காந்தியின் பெல்ச்சி காலம் போல "’இலாகிப்பூர்"’ பிரியங்கா வதேராவின் காலமாக மாறுமா என நிறைய வடநாட்டு ஆங்கில ஊடகங்கள் எழுதுவதை, கேட்பதை பார்த்தேன். (Can Priyanka do Indira’s comeback ‘Belchi’ moment of 44 years ago? what is belchi moment? ) இந்திரா காந்தி, பிரியங்கா வதேரா என்ற பெண்மணிகளை தொடர்பு படுத்தி இருந்ததால் பெல்ச்சி என்பது ’"பேட்டி"’ போன்ற பெண்கள் தொடர்புடைய இந்தி சொல் என நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது பெல்ச்சி என்பது பீகாரில் பாட்னாவுக்கு அருகில் உள்ள நாளந்தா (அக்காலத்தில் பீகார் செரிப்) மாவட்டத்தில் இருக்கும் போக்குவரத்து வசதிகளும் மற்ற வசதிகளும் அற்ற சிற்றூர் என்பது. இப்பவும் போக்குவரத்து வசதிகள் மோசம்.மற்ற வசதிகள் ஏதாவது மேப்பட்டு உள்ளதா எனத் தெரியவில்லை.

நெருக்கடி நிலையினால் வடநாட்டில் துடைத்து எறியப்பட்ட இந்திரா காந்தி 1980ஆம் ஆண்டு தேர்தலில் வடமாநிலங்களில் பெருவெற்றி பெற்றதற்கு அவரின் பெல்ச்சி பயணம் காரணம். அவரின் பெல்ச்சி பயணம் மலைக்க வைக்கக்கூட்டியது.

குர்மி சேனையால் பெல்ச்சியில் 1977இலில் பதினொன்று வெவ்வெறு சாதியை சேர்ந்த அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்டனர். கையை கட்டி நெருப்பில் போட்டு கொன்றார்கள். இதுவே பீகாரில் அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வு.

இந்திரா காந்தி பெல்ச்சிக்கு போவதாக இருந்தது அவரைத்தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்திரா காந்தி பாட்னாவுக்கு போய் பின்னர் பீகார் செரிப்புக்கு சென்றார்.

கட்சியினரிடம் பெய்ச்சிக்கு போகனும் என்றார்.



அவர் போனது ஆகத்து மாதம் அப்ப பருவகாலம் உச்சத்தில் இருக்கும் காலம். இங்கிருந்து பெய்ச்சி தூரம், பாதை பயங்கபர மோசம் சேறும் சகதியுமா இருக்கும், மழை பெய்தால் வெள்ளம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்வீர் என்றார்கள். அதனால இப்ப போவது நல்லதில்லை போக வேண்டாம் என்றனர். யார் சொல்லியும் கேட்காம போவேன் என பிடிவாதமாக இருந்தார். எனவே காரில் போனார், கார் சகதியில் மாட்டிக்கொண்டது. உடனை jeepஐ கொண்டு வரச் சொல்லி அதில் போனார். Jeepஇம் சிறிது தூரம் போனதும் மாட்டிக்கொண்டது. இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. சரின்னு உழவு எந்திரதை கொண்டு வரச்சொல்லி அதன் மூலம் jeepஐ இழுத்து பயணப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் உழவு எந்திரமும் மாட்டிக்கொண்டது. மறுபடியும் இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. அப்ப பாதையில் சேறும் சகதியும் எப்படி இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளுங்கள்.


நான் பெய்ச்சிக்கு நடந்து போகிறேன், வரவில்லை என்பவர்கள் தாராளமாக திரும்பி போகலாம் என்றார். சிறிது தூரம் போனதும், கூட்டத்திலிருந்த ஒருவர் பக்கத்தில் உள்ள கோவிலில் யானை இருக்கு என்றார். சரி யானையை கொண்டு வாருங்கள் என்றனர். யானை வந்தது. யானைப்பாகன் அம்பாரி இல்லை யானையின் முதுகில் தான் உட்கார முடியும் கீழே விழாமல் இருக்க அம்பாரி இல்லாததால் எந்த துணையும் இல்லை என்றார். இந்த யானையின் பெயர் மோதி.(இது தான் விந்தையா ) 😉 சரின்னதும் பிரதீபா பாட்டில் (ஆம் குடியரசு தலைவரே, அப்போது அவர் பீகார் காங்கி தலைவர்) இந்திரா காந்திக்கு பின்னும் முன்னாடி பாகன் இருக்க யானையில் இந்திரா பயணப்பட்டார். யானைப் பயணம் மூன்றரை மணி நேரம். சிறிய ஆற்றை கடந்தும் யானை போயிருக்கிறது. அப்போ ஆற்றின் நீர் யானையின் வயிற்றில் பாதியை தொட்டிருக்கிறது. அந்திசாயும் நேரத்தில் பெல்ச்சியை அடைந்தனர். இந்திரா யானையை விட்டு இறங்கவில்லை. யானையை மண்டியிட வைத்து சிற்றூர் மக்கள் கூறுவதை கேட்டார். 

டெல்லிக்கு திரும்பும் முன் 1977இல் அவர் தோற்க காரணமான செயப்பிரகாசு நாராயணை மருத்துவமனையில் சந்தித்து அவர் விரைவில் நலமடைய வேண்டினார், அப்போது செயப்பிரகாசு நாராயண் இந்திராவின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். 1980இல் வென்றார்.

வியாழன், மார்ச் 23, 2017

ஐந்து மாநில சட்டமன்ற முடிவும் மோதியின் அரசியலும்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வந்துள்ளன.

உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.

பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாச்வாதி கட்சிக்குள் கடுமையான குடும்ப தகராறு. முலாயம் சிங் யாதவும் கடைசி வரை சமாச்வாதிக்காக வாக்கு கேட்க வரவில்லை அது பெரிய சறுக்கல் தான்.  காங்கிரசு வைத்த கூட்டு பலனளிக்கவில்லை.

மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?

காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.

பச்சை சமாச்வாதி+, நீலம் பசக, காவி பாசக+
வாரணாசி பக்கம் தோற்க கூடாது என்பதற்காக அப்பகுதியில் பலமாக உள்ள அப்னா தளம் (சோனா வால்)  உடனும் மக்களவை தேர்தலிலேயே கூட்டு, கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராச்பார் சமூகத்தில் ஆதரவு பெற்ற சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியுடன் இந்த தேர்தலில் தான் கூட்டணி வைத்தது. இக்கட்சி தலைவர் பகுசன் சமாச்சிலிருந்து பிரிந்து வந்தவர். இது அவர்களின் உத்தியை காட்டுகிறது.  சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி கிழக்கு உத்தரப் பிரதேசத்தை தனியாக பிரித்து கொஞ்ச நிலத்தை பீகாரிலிருந்து எடுத்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க போராடுகிறது.

ஏழ்மையான பகுதியான  புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.  வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது.  எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.



ஏழு கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 



பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)

அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
காவி அகாலி+, கத்தரிப்பூ- ஆம் ஆத்மி+, நீலம்-காங்கிரசு

இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப்,  சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது.  பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப்  சாகிப்  மக்களவை தொகுதியில் 9 இல் 1  சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது.  சங்குரூர்  மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது.  இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது.  காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது.  டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.

காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)

உத்தராகண்டம்
காவி-பாசக, நீலம் - காங்கிரசு

உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.

பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார்.  உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.

பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.

பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2

மணிப்பூர்

காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்
மணிப்பூரை வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா  அரசியல் ஈடுபாடே நம்மை அங்கு ஈர்த்தது. மூன்று தொகுதிகளில் தான் அவரின் கட்சி போட்டியிடுகறது. அவர் 90 வாக்குகளை மட்டுமே பெற்றது கொடுமை. அவரை தோற்கடித்தது தப்பில்லை ஆனால் 90 இக்கு பதிலாக சில ஆயிரம் வாக்குகள் கொடுத்திருக்கலாம். அது அவரைப்போன்ற சமூக போராளிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக


மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.

மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.

தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும்  அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.

பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.


காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1

கோவா

காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
கோவா சிறிய மாநிலம் என்றாலும் ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் கோவா தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது.
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.

வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை.  அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்


ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும்.  காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார்.  தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது

காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள்  3

திங்கள், மே 09, 2016

2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி

திராவிட இயக்க குருதி ஓடும் தற்போதைய தமிழ்நாடு காங்கிரசு தலைவரின் திறமைகளை தெரிந்து கொள்ளுங்கள்




இனி தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க முடியாது என்றாலும் காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டுவது என்று தொண்டர்களுக்கும் நிருவாகிகளுக்கும் ஆலோசனை வழங்கும் காட்சி.



காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டினார் என்பது பற்றிய சிறப்பு பேட்டி.


திமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கியது குறித்து கருணாநிதி இளங்கோவனை பாராட்டல்.(திராவிட இயக்க வாரிசு என்றால் அது சோடை போகாது என்று நிருபித்ததற்காக)


திமுகவிடம் இருந்து 41 தொகுதிகள் காங்கிரசிற்கு கிடைத்ததை வைத்து குசுபுவும் விசயதரணியும் வாய் விட்டு சிரித்தல்.



இந்தியாவில் வரும் கருத்து கணிப்பு எல்லாம் டுபாக்கூர் என்று அறிந்ததால்அதிமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்து கணிப்புகளால் கடுப்பாகி நியூசு 7 மூலம் கருத்து கணிப்பு எடுப்பேன் என்று சொல்லும் காட்சி.


மோதிக்கு இணையாக பொய் பேசக்கூடியவர் ஊடக வெளிச்சத்தை பயன்படுத்துவர் இளங்கோவன் என்பதால் ராகுல் தன் மாதாஜியிடம் அவரை பற்றி கூறல்.


கூடிய விரைவில் டெல்லிக்கு வருவீர்கள் என்றும் அவரின் பயிற்சி தனக்கு தேவை என்றும் கூறல்.



வியாழன், ஆகஸ்ட் 25, 2011

ஐக்கிய முன்னனி அரசின் பலம்- அலசல்

தற்போதய ஐக்கிய முன்னனி அரசு பல்வேறு பெரிய ஊழல்களில் சிக்கி தவிக்கிறது.  இவை இது வரை யாரும் கண்டிருக்காத பெரிய ஊழல்கள். இன்னும் எத்தனை வரப்போகுதோ. இத்தகைய பெரிய ஊழல்கள் மற்றும் ஆட்சி நிர்வாக குறைகளினால் பலவீனமாக உள்ளது. ஆனாலும் அடுத்த ஆட்சி தங்களுடையது என்று நம்பிக்கையோடு இருக்கிறது. அதுக்கு காரணம்  காங்கிரசுக்கு எதிரான பாசக கூட்டணி அல்லது மூன்றாம் அணி வலுவாக இல்லாததே.


பொதுவுடமை கட்சி
பொதுவுடமை கட்சியின் பலமே வங்கமும் கேரளாவும் தான். வங்கத்துல பல்பு வாங்கியாச்சு வரும் மக்களவைத்தேர்தல் வரும்முன்பு  எந்த அளவு செல்வாக்கு உயருமுன்னு தெரியலை. எல்லாம் மம்தா அக்கா கைல தான் இருக்கு. கேரளாவில் நிறைய தொகுதிகளை பிடிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஓமன் சாண்டி மேல அதாவது காங்கிரசுகாரன் மேல அவ்வளவு நம்பிக்கை மேலும் கேரள அரசியலே அப்படிதான். இப்ப காங்கரசுன்னா அடுத்த முறை பொதுவுடமை.  இவர்களால் அதிகபட்சம் 50 க்கு மேல் வெற்றி பெற முடியாது. இதுவும் வங்கம் கை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். 34 ஆண்டுகளுக்கு பின் பொதுவுடமைவாதிகளிடம் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு ஆட்சி போயிருப்பதால் பொதுவுடமைவாதிகளுக்கு வரும் மக்களவைத்தேர்தலில் 25 இடங்கள் கிடைத்தாலே பெரிது. பொதுவுடமைவாதிகளின் ஆதரவு காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியான பாசகவுக்கு கிடைக்காது. வேற வழி இல்லாம இவங்க காங்கிரசுக்கு நிபந்தனை அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாகனும். அதாவது தோல்வி அடைந்தாலும் சுளையா 62 தொகுதிங்க காங்கிரசுக்கு ஆதரவு ( கேரளம் 20 + வங்கம் 42 ). இவர்கள் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறமாட்டார்கள் என கருதுவதால் மூன்றாம் அணி ஆட்சிக்கு வருவதை மறந்துவிடலாம்.

மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் மோசம் என்றாலும் சிவசேனா+பாசக பாதிக்கு மேல் வெற்றி பெறுவது கடினம். சிவசேனையின் பலமான மும்பையில் பால் தாக்ரேவின் தம்பி மகனான  ராஜ் தாக்ரேவால் பாதிப்பு இவர்களுக்கு உண்டு. அதன் பலன் காங்கிரசு+சரத்பவார் கட்சிக்கு கிடைக்கும். ராஜ் தாக்ரேவுடன் சிவசேனா+பாசக  ஏதாவது உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே பாசக கூட்டணி நிறைய இடங்களை வெல்ல முடியும். ஆதர்ஸ் ஊழல், மும்பை தீவிரவாத தாக்குதலை பாசக சிவசேனா கூட்டணி திறமையாக பயன்படுத்திக்கொள்ளுமா?

பீகார்
இங்க பாசக+ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பலமாக இருந்தாலும் லல்லு என்ன லொள்ளு பண்ணுவாருன்னு இப்ப சொல்ல முடியாது. லல்லு பஸ்வான் கூட்டணி நிதிசிடம் செல்லுபடியாகலை. தனியா போட்டியிட்டா ஒரு தொகுதி கூட காங்கிரசுக்கு கிடைக்காது. காங்கிரசோட சேர்ந்தா லல்லுவுக்கு கொஞ்சம் அதிகம் வாக்குகள் கிடைக்கும். இது பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.

2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் லல்லு காங்கிரசை கூட்டு சேர்த்துக்கலை. பாஸ்வான் கூட கூட்டு வைச்சிக்கிட்டாரு.  லல்லுவுக்கு 4 இடம் தான் கிடைச்சது, தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு 2 இடம் கிடைச்சுது.  பாஸ்வானுக்கு முட்டை. காங்கிரசு வாக்கை பிரித்ததால் லல்லு கூட்டணி 12 இடங்களுக்கு மேல் தோற்றது. மக்களவை தேர்தலில் கிடைத்த தெம்பால் 2010 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பிடித்தது. முந்தய தேர்தலில் 9 இடம். 2010 தேர்தலில் லல்லுக்கு மரண அடி. 22 இடங்களில் மட்டுமே வென்றார், முந்தய தேர்தலில் 54 இடம். பாஸ்வானுக்கு 3 இடம் தான் கிடைத்தது. முந்தய தேர்தலில் 10 இடம்.

அதனால் அடுத்து வரும் மக்களவைத்தேர்தலில் லல்லு காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.  காங்கிரசுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குறார் என்பது தான் கேள்வி.



உத்திரப்பிரதேசம்
பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுக்கு அடுத்த நிலையில் பாசக இருக்கு. 2009ம் ஆண்டு நடந்த 15வது மக்களவை தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி 23 இடங்களையும் காங்கிரசு 21 இடங்களையும் பகுஜன் சமாஜ் 20 இடங்களையும்  பாசக 10 இடங்களையும் இராசுட்டிரிய லோக்தளம் 5 இடங்களையும் பிடித்தனர்.  பாசகவும்  இராசுட்டிரிய லோக்தளமும் கூட்டணி. உபியில் காங்கிரசை ஒரு பொருட்டாக யாரும் கருதாதவேலையில் காங்கிரசு 21 இடங்களில் வென்றது தான் அதற்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது. 80 தொகுதிகளை உடைய உபியில் காங்கிரசுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அதனால தான் காங்கிரசின் பட்டத்து இளவரசர் இராகுல் உபியே கதி என்று சுத்துகிறார்.  அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனா இதுவரை இங்கு பாசகவின் செயல்பாடு சொல்லிக்கிற மாதிரி இல்லை. இராமர் பெயரை சொல்லி இனி இங்கு வாக்கு வாங்க முடியாது. கட்சிக்குள்ள உள் குத்து அடிதடி. பேச்சுத்திறமையும் உபியில் ஓரளவு செல்வாக்கும் உடைய உமாபாரதியை கட்சிக்குள்ள சேர்த்து கட்சிய தேர்த்தலாம் என்று பாசக கருதி அவரை திரும்ப கட்சியில் இணைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். 
ஆனால் பாசகவின் மற்ற தலைவர்கள் அவரை  வேண்டாதவராகவே பார்க்கின்றனர். இந்த வகையில் உபியில் கட்சி இருந்தால் எப்படி தேறும் என தெரியவில்லை. அஜித் சிங்கின் இராசுட்டிரிய லோக்தளத்திற்கு உபியின் மேற்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியான ஒடுக்கப்பட்டவர்களை குறி வைத்து பட்டத்து இளவரசர் இராகுல் காய் நகர்த்துகிறார். சமாஜ்வாதி கட்சியின் முசுலிம் வாக்கு வங்கி பிரிந்து விட்டது. அதில் நிறைய காங்கிரசுக்கு சென்றுவிட்டது. இந்த 2 கட்சிகளுக்கும் வாக்கு போடுபவர்களில் கணிசனமான பேர் காங்கிரசுக்கு வாக்கு போட்டதாலயே காங்கிரசு 21 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. பாசக கடுமையாக முயன்றால் மட்டுமே மற்ற 3 கட்சிகளுக்கும் ஈடுகொடுக்க முடியும். காங்கிரசால் முலாயமுக்கு தான் பாதிப்பு அதிகம். முலாயம் சரி பாதி இடங்கள் தந்தால் வேண்டுமானால் காங்கிரசு இதனுடன் கூட்டணி வைக்கலாம்.. பட்டத்து இளவரசர் தனி ஆவர்த்தனம் செய்யவே முயல்வார். ஆனால் அரசியலில் எது வேண்டுமாலும் நடக்கலாமே! அடுத்த ஆட்சி கனவில் இருக்கும் காங்கிரசுக்கும் பாசகவுக்கும் உபியில் அதிக இடங்கள் பெறுவது முக்கியம்.

ஆந்திரப்பிரதேசம்

எதிர்கட்சியான தெலுங்க தேசத்தை விட இங்கு காங்கிரசு பலமாக உள்ளது. 2009ம் ஆண்டு தேர்தலில் 33 தொகுதிகளில் காங்கிரசு வென்றது. காங்கிரசு அதிக தொகுதிகளில் வென்ற மாநிலம் இது தான். இப்ப தெலுங்கானா பிரச்சனை அதற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தெலுங்கானா உருவாக வில்லையென்றால் அங்குள்ள 17 தொகுதிகளை மறக்க வேண்டியது தான். உருவானால் சீமாந்திராவின் 25 தொகுதிகளை மறக்க வேண்டும். மேலும் இங்கு அரசியல் களம் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. சிரஞ்சீவி காங்கிரசுடன் இணைந்து விட்டார். சிரஞ்சீவியின் கட்சி கிட்டதட்ட 15% வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னால் முதல்வர் இராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து விட்டார். கடப்பா தொகுதியில் இவரை வெற்றி கொள்வது கடினம் மேலும் இவர் எந்த அளவு காங்கிரசு வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. மேலும் இவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை போட்டாயிற்று ஆளு அடங்கறாரான்னு பார்ப்போம். ஜெகன் 2 வாக்கை பிரித்தார்  என்றால் சிரஞ்சீவி 10 வாக்கை கொண்டு வருவார் என்பது காங்கிரசு கணக்கு.  கிட்டதட்ட 25 இடங்களில் சிரஞ்சீவியின் கட்சியால் தெலுங்குதேசம் கூட்டணி தோற்றது. இராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இல்லாத நிலையில் சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு பலம் கூடியுள்ளது.

தமிழ்நாடு

யாரு மேல சவாரி செய்யறாங்க என்பதை பொருத்தது.

கர்நாடகம்

2009 தேர்தலில் பாசக 19 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் 10 இடங்களாவது கிடைக்குமா? ரெட்டிகளின் சுரங்க ஊழல் , எடியூரப்பாவின் ஊழல் என்று கட்சி கலகலத்துள்ளது. இதை எந்த அளவுக்கு காங்கிரசும் தேவ கௌடா கட்சியும் பயன்படுத்தப்போகிறது என தெரியவில்லை. காங்கிரசுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மத்தியப்பிரதேசம்
காங்கிரசும் பாசகவும் சரி பலத்தில் உள்ள மாநிலம் இது. பகுஜன் சமாஜ் கட்சி வாக்கை பிரிக்க கூடியதாக இருக்கும், 2009ல் தனியாக போட்டியிட்டு 5.85% வாக்குகளை பெற்று 1 தொகுதியில் வென்றுள்ளார்கள். இவர்களால் யாருக்கு பாதிப்பு அதிகம் என்பதை பொருத்தே காங்கிரசு அல்லது பாசக இவர்கள் இருவரில் யார் அதிக தொகுதிகளை வெல்கிறார்கள் என்பது முடிவாகும்.

குஜராத்
இங்கு பாசக பலமாக இருப்பது போல் தோன்றினாலும் அவர்களால் பெரும் வெற்றி பெற முடியாது. இதுக்கு காரணம் முசுலிம்கள் பெருவாரியாக காங்கிரசுக்கு வாக்களிப்பதே. மோடி ஏதாவது மோடி மஸ்தான் வேலை செய்தால் மட்டுமே நிலைமை மாறும். பாசகவின் எதிர்கால சக்தியாக மோடி உருவெடுத்து வருகிறார் அது குஜராத்தில் அதிக தொகுதிகளை வென்றால் மட்டுமே பலப்படும்.

இராசத்தான்
இங்கு பாசக உள்கட்சி தகராறில் வெலுத்து வாங்குகிறது. காங்கிரசை இதில் இது தோற்கடித்து விடும். உள்குத்து வேலைகள் தொடர்ந்தால் பாசக இங்கு தேறுவது கடினம்.

ஒரிசா
இங்கு பிஜூ ஜனதாதளம் நிறைய தொகுதிகளில் வெல்லலாம். இங்கு போட்டியே காங்கிரசுக்கும் பிஜூ ஜனதாதளத்துக்கும் தான். பாசகக்கு 15% அளவிலான வாக்குகள் உள்ளது. அவை இல்லாதது பிஜூ ஜனதாதளக்கு இழப்பே. 2009ல் காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தது. பாசகவும் பிஜூ ஜனதாதளமும் கூட்டணி வைத்திருந்தால் காங்கிரசுக்கு கிடைத்த 4 தொகுதிகள் இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும். காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கும். பாசக வாக்குகளை பிரித்தாலும் அது பிஜூ ஜனதாதளத்தின் வாக்குகளையே பிரிக்கும். அதனால் பலனடையப்போவது காங்கிரசே.

20 தொகுதிகளும் அதற்கு மேலும் உள்ள மாநிலங்கள்.
மாநிலம் தொகுதிகள் எண்ணிக்கை
உத்திரப்பிரதேசம் 80
மகாராட்டிரம் 48
ஆந்திரப்பிரதேசம் 42
மேற்கு வங்காளம் 42
பீகார் 40
தமிழ்நாடு 39
மத்தியப்பிரதேசம் 29
கர்நாடகா 28
குஜராத் 26
இராஜஸ்தான் 25
ஒரிசா 21
கேரளம் 20


கீழிருக்கும் கருத்துப்படம் நான் சொல்லியதையும் சொல்லாததையும் தெளிவா சொல்லும்.



வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தலைவர் தங்கபாலு வாழ்க வாழ்க

தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு மீது காட்டமடைய ஏதாவது காரமுண்டா? அவர் நடைமுறையில் இல்லாதது எதையும் செய்யவில்லை. எனவே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

தங்கபாலுவுக்கு தெரியும் யாரை வேட்பாளராக்குவது என்று. காங்கிரசில் நிறைய குழுக்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு குழு தலைவரும் அவர்கள் ஆட்களுக்காக போராடி தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே இல்லாத ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணி சங்கர் அய்யரை சேர்ந்த குழுவுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அவரும் அந்த இடத்தை தன் மனதுக்கு இனியவருக்கு கொடுத்துவிட்டார். தனக்கு பிடித்தவருக்கு தானே தர முடியும், பிடிக்காதவருக்கா தரமுடியும்?

கருப்பையா மூப்பனார் மகன் வாசன், சிவகங்கை சின்ன பையன் சிதம்பரம், பக்தவச்சலம் மகள் ஜெயந்தி நடராசன், காங்கிரசை ஒழிக்கனும் என்ற பெரியாரின் தம்பியின் பேரன் இளங்கோவன், பெரிய இடத்து பிள்ளை ராகுலின் அரவணைப்பின் கீழுள்ள புதிய குழு, பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தி கிருசுணசாமி, டெல்லியில் வாழ்ந்தாலும் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென் மாநிலத்தை சேர்ந்தவங்க மதராசி தான்) தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காகவும் காங்கிரசு மேலிடத்தொடர்பு இருப்பதாலும் மணி சங்கர் அய்யர் ஆகியோரின் குழுக்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலுவுக்கு சில இடங்கள் கிடைத்தது.   தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு இடம் கிடைத்தது தவறில்லை என்பவர்கள் அவர் தன் விருப்பபடி தன் குழுவுக்கு கிடைத்த இடங்களை  கொடுப்பது தவறு என்பது நகைச்சுவையாக உள்ளது.

அந்த இடங்களை யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம். அவர்கள் அப்போது காங்கிரசுகாரர் என சொல்லிக்கொண்டால் போதும் என்பது தான் நிபந்தனை. இதன்படி தான் மற்ற குழு தலைவர்கள் தொகுதி பங்கீடு செய்கிறார்கள். இது தெரியாதவன் முழு காங்கிரசு காரன் அல்ல மற்றும் காங்கிரசு பாரம்பரியத்தை பற்றி அறியாமல் காங்கிரசு பேரியக்கத்தில் இருக்கும் மடையன் அவன்.

எல்லோருக்கும் தெரியும் இங்கு காங்கிரசு வெற்றிபெறுவது கூட்டணி கட்சியினரின் தயவால் என்று இது தங்கபாலுக்கு தெரியாம இருக்குமா?  உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தமிழ்நாடு காங்கிரசு தலைவரா இருக்கற அவருக்கா தெரியாது? தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்னவென்று அவர் நன்கு அறிவார். 10% வாக்கு வங்கி, மத்தியில் அமைச்சர்கள், CBI raid என்று பூச்சாண்டி காட்டியே வேலையை முடிக்கனும் சார். (உண்மையாவே  10% வாக்கு வங்கி இருக்கான்னு கேக்காதிங்க அப்படி கேட்டால் நீங்கள் தமிழக அரசியல் பற்றி ஒன்றும் அறியாதவர் என்று பொருள்), காங்கிரசை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவிடம் 63 இடம் வாங்கறுதுன்னா சும்மாவா.(திமுக நிலையை நினைச்சா பரிதாமா தான் இருக்கு, தேன் குடிச்சவன் புறங்கையை நக்கி தானே ஆகனும்)

கிடைத்த 63 தொகுதிகளில் 13 இடங்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணைப்படி தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கபாலு தன் குழுவுக்கு ஆட்களை ஒதுக்கியதை எதிர்பவர்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணையை எதிர்க்கிறார்கள் என்று தான் பொருள்.

தமிழக குழுக்களை  பொறுத்தவரை அதிகஅளவாக வாசன் குழுவுக்கு 22 இடங்களும் . சிதம்பரம் குழுவுக்கு 12 இடங்களும்,  ராகுல் குழுவுக்கு 9 இடங்களும்  கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராசன், இளங்கோவன், பாமக நிறுவனரின் சம்பந்தி கிருசுணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. 1 இடம் மட்டுமே சொக்கத்தங்கம் அன்னை சோனியாவால் ஒதுக்கப்பட்ட இளங்கோவன் குழுவே தங்கபாலு குழு 13 இடங்களை பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவருக்கு எதிராக வேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர். கருப்பையாவின் பையன் குழுவும் இதற்கு ஒத்து ஊதவதாக  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழக காங்கிரசு தலைவராக அல்ல அல்ல காங்கிரசு காரணாக இருக்க தகுதி என்னவென்று பார்த்தால் அவன் நேரு குடும்பத்து காங்கிரசு கட்சி வாரிசுக்களின் செருப்புக்கு தன் எச்சில் போட்டு  பள பள என்று துடைப்பவனாக இருக்க வேண்டும். காந்தி பேரு வச்சி ஊரை ஏமாத்துனாலும் அவங்க நேரு குடும்பம் என்பதை நினைத்து கொண்டு அது மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


தமிழர்கள்,  ஈழ தமிழர்கள் பற்றி அவர் ஏன் அக்கறைபட வேண்டும் ( சில இடங்களில் வெற்றி பெற்றால் போதும்). அதை  தமிழின காவலர் தற்போதய முதல்வர் வெறும் வானம்  கருணாநிதி பார்த்துக்கொல்வார்.  அவரு தான் தமிழர்களுக்காக 1 மணி நேர உண்ணாவிரதம் இருப்பார், தந்தி அடிப்பார்.  இஃகி இஃகி.

மனைவிக்கு இடம் வாங்கி கொடுக்கிற மாதிரி  நடித்து இவர் இடத்தை புடிச்சிக்கிட்டார் என்பது எதிராளின் ஒரு வாதம். ஜெயந்தி தங்கபாலு காங்கிரசுகாரர், அவர் கணவர் முன்னாள் & இந்நாள் தமிழக காங்கிரசு தலைவர், இது  போதாதா? விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற குழுக்களில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் பெரிய தியாகிகளா? யாராச்சும் சொல்லுங்க. ஞானசேகரன், பீட்டர் அல்போன்சு, காயத்ரி தேவி, கே. என். அசன் அலி, அருள் அன்பரசு, யசோதா, பழனிச்சாமி ... எல்லாம் தியாகிகள் என்று அவங்க குழு தலைவரு தான் சொல்லிக்கனும், இஃகி.

இளங்கோவனுக்கு மரியாதையே அவரின் INITIAL தான் என்பதை அவர்  வேண்டுமானால் தன் வசதிக்காக மறந்திருக்கலாம், எல்லோரும் அப்படி மறக்கமுடியுமா? பெரியார், காந்தி எல்லாம் காங்கிரசே வேண்டாம் என்று சொன்னவங்க, ஆனா அவங்க பேரை சொல்லி தான் காங்கிரசுகாரனாக  இருக்கவேண்டியுள்ளது. தங்கபாலுவுக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததது ஒரு குறை தான். தலைவர் தங்கபாலுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா இடுகையின் நீளம் கருதி இது போதும் என்று நினைக்கிறேன்.

காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற துரோகங்களுக்கும் உள் அடி வேலைகளுக்கும் பயந்துவிடுவார் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.  கூட்டணி தயவால் எல்லா இடங்களிலும் அவர் குழு வெற்றி பெறுவது உறுதி. அப்புறம் இவனுங்களை பார்ப்போமில்ல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். (பல பொருள் தருவது இது ;-) )


ராஜிவ்ஜி  ஜெய்.
மறைமுக பிரதமர் சொக்கத்தங்கம் அன்னை சோனியாஜி ஜெய்.
வருங்கால பிரதமர் ராகுல்ஜி ஜெய்.

வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

செவ்வாய், மார்ச் 17, 2009

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))