என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.
பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.
ஏன் நாம அரியானாவுக்கு போகனும். தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...
இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான். இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.
ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால் பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?
இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புதன், ஏப்ரல் 14, 2010
செவ்வாய், ஏப்ரல் 13, 2010
புத்தாண்டு வாழ்த்து
தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.
ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும். வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும். தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை.
வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில் ஒன்றாகிய இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?
சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.
நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.
ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும். வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும். தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை.
வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில் ஒன்றாகிய இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?
சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.
திங்கள், ஏப்ரல் 12, 2010
விவாகரத்து
ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன் வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.
சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.
பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.
நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.
பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.
பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.
பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.
சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.
பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.
நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.
பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.
பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.
பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.
நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்
என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான். இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க. இந்த வாய்ப்பை விடுவனா? எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.
என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.
பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.
என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).
குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.
இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி. ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).
என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.
பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.
என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).
குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.
இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி. ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).
வெள்ளி, ஏப்ரல் 09, 2010
கோவை - மாநாடு - சாலை
கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.
கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.
நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.
ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.
தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.
ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.
கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.
நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.
ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.
தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.
ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.
வியாழன், ஏப்ரல் 08, 2010
வழக்கறிஞர் நகைச்சுவை
ஒரு விருந்தில் மருத்துவரும் வழக்கறிஞரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால் தொடர்ச்சியா தடங்கல் இல்லாமல் பேசமுடியவில்லை. ஏகப்பட்ட பேர் மருத்துவரிடம் தங்கள் உடல் நிலையை, நோயை கூறி இலவச மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் இது மாதிரி நடந்தது, மருத்துவரின் பொறுமை போயிடுச்சி (யாரும் தப்பு சொல்ல முடியாது, மனுசன நிம்மதியா விருந்தில் பேச விடறாங்களா), அவர் வழக்கறிஞரிடம் நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது சட்ட ஆலோசனை கேட்டு வருபவர்களை தடுக்க என்ன செய்யறீங்கன்னார்.
நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.
சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்
மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார். ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.
வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.
பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.
நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.
சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்
மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார். ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.
வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.
பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.
புதன், மார்ச் 31, 2010
விளம்பரத்தில் ரஜினிகாந்த்
அமீரக பதிவர் செந்தில்வேலன் இந்தி ஜாக்கிகள் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து வருத்தப்பட்டிருந்தார். அவருக்காக இந்த இடுகை. இஃகிஃகி.
கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.
IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).
திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))
கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.
IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).
திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))
திங்கள், மார்ச் 29, 2010
சிரிங்க சிரிங்க
ஒரு இளைஞனுக்கு மிகச் சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. எந்த மாதிரியான "சிறந்த எழுத்தாளனாக" வர நீ ஆசைபடுகிறாய் என்று ஒருவர் கேட்டார்.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.
முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.
இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.
ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.
சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.
மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.
4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.
ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.
நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார்.
அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.
நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.
இப்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "Error Message" எழுதும் வேலை செய்கிறார்.
முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.
இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.
மின்சார நிறுவனம், சமையல் எரிவாயு நிறுவனம், தொலைபேசி நிறுவனம் என்றார் பணியாள்.
ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.
சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.
மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.
4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.
ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.
அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.
பெரியவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு , ஆமாப்பா, கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருப்பதற்கு மன்னிகவும் என்று எழுதவும் என்றார்.
நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்.
..
சனி, மார்ச் 20, 2010
கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு
தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
புதன், மார்ச் 17, 2010
நாஞ்சில் தமிழும் நானும்
கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நாஞ்சில் நாட்டு (அதாங்க கன்னியாகுமரி மாவட்டம்) நண்பன் கிடைச்சான். நாங்கள் எல்லாம் விடுதியில் தங்கி படிச்சதால படிப்பு முடியும் முன் எல்லோர் வீட்டுக்கும் ஒரு முறை போவதுன்னு முடிவு பண்ணி இருந்தோம். நாஞ்சில் நாடான் முறைக்கு அவங்க வீட்டுக்கு போனோம். அவன் நாஞ்சில் நாட்டான் தான் ஆனால் நாங்க அவனோட வீட்டுக்கு போன போது அவங்க நாஞ்சில் நாட்டில் இல்லை, தொண்டை நாட்டுக்கு பக்கமா இருந்தாங்க.
அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..
பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.
மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.
நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.
அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...
அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..
பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.
மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.
நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
நாங்க பரவாலைடா, உங்க அப்பா வாத்தியாரு அவருக்கிட்ட படிக்கற பசங்க நிலைமையை நினைச்சு பாத்தா தான் பாவமா இருக்கு.
ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.
அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...
புதன், மார்ச் 03, 2010
சுவாமி விஜய் மல்லய்யாவின் தத்துவம்
பலான சாமியார் நித்தியானந்தா பேச்சு அதிகமிருப்பதால் இந்த இடுகையை இப்ப எழுதறேன்னு நினைச்சுக்காதிங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.
"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா
ஆங்கில மூலம்
“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா

எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.
Please forward this mail to 10 people…Miracle awaits you.
** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.
** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.
** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.
** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.
** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.
மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.
.
சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.
"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா
ஆங்கில மூலம்
“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா

எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.
Please forward this mail to 10 people…Miracle awaits you.
** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.
** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.
** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.
** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.
** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.
மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.
.
செவ்வாய், மார்ச் 02, 2010
முக்கோணத்தில் புதிர்.
ஞாயிறு, பிப்ரவரி 14, 2010
இரண்டாம் சுற்று பனிப்பொழிவு - புகைப்படம்
2010 பிப்ரவரி மாதம் 2 அடிக்கு மேல் பனிப்பொழிவு இருந்ததையும் அதன் படங்களையும் போன இடுகையில் இட்டிருந்தேன். மூன்று நாள் கழித்து செவ்வாய்கிழமை இரவிலிருந்து புதன் கிழமை நண்பகல் வரை அடுத்த சுற்று பனிப்பொழிவு இருந்தது. 1 அடிக்கு மேல் வரும் என்று சொன்னாலும் 7 அங்குல அளவுக்கு தான் பனிப்பொழிவு இருந்தது. இரவில் அதிக அளவு பனிப்பொழிவு இல்லை. காலையில் கடும் காற்றுடன் நிறைய பனிப்பொழிவு இருந்தது. குளிரை கூட தாங்கிடலாம், ஆனா காற்றுடன் வரும் குளிர் கொடுமையானது. கடும் காற்று என்றால் நிலைமை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். கடும் காற்றுடன் பனி பெய்ததால் 15 அடி தள்ளி உள்ள பொருட்கள் கூட தெரியவில்லை. இதனால் பனி அள்ளும் வேலையை கூட நகர அரசுகள் ஒத்தி வைத்தன. மாலை ஐந்து மணிக்கு மேல் புகைப்படம் எடுக்கலாம் என்று வெளியே சென்றேன். திடீர் திடீர் என்று காற்று அடித்தது, காற்றின் போது குளிர் அதிகமாக இருந்ததால் ஏன்டா வெளியில் வந்தோம் என்று ஆகிவிட்டது. 5 நிமிடம் கூட வெளியில் இருந்து இருக்கமாட்டேன். கையுறையையும் தாண்டி கை சில்லென்று ஆகிவிட்டது, எந்தளவு குளிர் இருந்திருக்கும் என்று பாருங்கள்.
வரும் திங்கள் இரவு 5 அங்குலத்துக்கு பனி இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.
1. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி. பனி அள்ளிய பிறகும் நிறைய பனி மீதம் இருக்கு, முழுமையாக சுத்தப்படுத்த குறைந்தது4 நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.

2. நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டாலும் சாலை இன்னும் முழுவதுமாக சுத்தப்படுத்தப்படவில்லை. நடைபாதையை சுத்தப்படுத்தியது அதை ஒட்டியுள்ள நிறுவனம், அரசு அல்ல.

3. சாலை சந்திப்பு, பனி அள்ளும் எந்திரம் வேலையில் உள்ளது.
.
.
வரும் திங்கள் இரவு 5 அங்குலத்துக்கு பனி இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.
1. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி. பனி அள்ளிய பிறகும் நிறைய பனி மீதம் இருக்கு, முழுமையாக சுத்தப்படுத்த குறைந்தது4 நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.
2. நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டாலும் சாலை இன்னும் முழுவதுமாக சுத்தப்படுத்தப்படவில்லை. நடைபாதையை சுத்தப்படுத்தியது அதை ஒட்டியுள்ள நிறுவனம், அரசு அல்ல.
3. சாலை சந்திப்பு, பனி அள்ளும் எந்திரம் வேலையில் உள்ளது.
.
வியாழன், பிப்ரவரி 11, 2010
கடும் பனிப்பொழிவுக்கு பின் - புகைப்படங்கள்
2010 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவை பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள வாசிங்டன் & பால்டிமோர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது , 2 அடி உயரத்துக்கு மேல் பனி பொழிவு இருந்தது. அப்ப வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை (நல்ல முடிவு). பனிப்பொழிவு ஓய்ந்ததுக்கு அப்புறம் குடியிறுப்பு வளாகத்தில் சில புகைப்படங்களை எடுத்தேன். வரலாற்றில் இடம் பெற்ற இந்த பனிப்பொழிவை படம் பிடிக்கலை அப்படிங்கற அவப்பெயர் வந்துட கூடாது பாருங்க இஃகிஃகி.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...
1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.

2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி

3. குடியிருப்பு வளாகம்

4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.
.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...
1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.
2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி
3. குடியிருப்பு வளாகம்
4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.
வியாழன், பிப்ரவரி 04, 2010
மழை மறைவு பகுதி நமக்கு மட்டும் தானா?
தமிழகத்தில் மழை ஏன் குறைவா பெய்யுது என்பதற்கான காரணத்தை பள்ளி பாட புத்தகத்துல படிச்சிறுப்போம். காரணம் அதிக மழைப்பொழிவை கொண்டு வரும் 4 மாசம் இருக்கும் தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால். 2 மாசம் அடிக்கும் வடமேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகத்தின் உள் பகுதிகள் எப்பவும் வறண்ட பகுதிகள் தான்.
அமெரிக்காவுல மேற்கு கரையில் அடிக்கும் காற்று மழையை 4000 கிமீ தாண்டி கிழக்கு கடற்கரை வரை கொண்டு வருது. இங்க மட்டும் மலை இல்லையா? இருக்கு.
கேரளாவ தாண்டுனா நாம தான். ஏன் நம் பகுதி மட்டும் மழை மறைவு பகுதியா இருக்கு? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
கடற்கரையை ஒட்டி இருப்பதால் நமக்கு அதிகமான மழை பொழிவு இருக்கவேணும். வானத்த பொழந்துகிட்டு கொட்ட வேணாம், குறைஞ்சபட்சம் குடிக்க பஞ்சம் இல்லாம தண்ணி கிடைச்சாலே போதும். ஏன் இயற்கை தமிழகத்துக்கு இந்த ஓரவஞ்சனையை செய்கிறது? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
.
அமெரிக்காவுல மேற்கு கரையில் அடிக்கும் காற்று மழையை 4000 கிமீ தாண்டி கிழக்கு கடற்கரை வரை கொண்டு வருது. இங்க மட்டும் மலை இல்லையா? இருக்கு.
கேரளாவ தாண்டுனா நாம தான். ஏன் நம் பகுதி மட்டும் மழை மறைவு பகுதியா இருக்கு? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
கடற்கரையை ஒட்டி இருப்பதால் நமக்கு அதிகமான மழை பொழிவு இருக்கவேணும். வானத்த பொழந்துகிட்டு கொட்ட வேணாம், குறைஞ்சபட்சம் குடிக்க பஞ்சம் இல்லாம தண்ணி கிடைச்சாலே போதும். ஏன் இயற்கை தமிழகத்துக்கு இந்த ஓரவஞ்சனையை செய்கிறது? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
.
வியாழன், ஜனவரி 28, 2010
K V தங்கபாலுவில் KV என்பது என்ன?
தற்போதய தமிழக காங்கிரசு தலைவர் K V தங்கபாலு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுல K. V என்பது எதைக்குறிக்குது? என்னய்யா இது கேள்வி. V என்பது அவங்க அப்பா பேரோட முதல் எழுத்தா இருக்கலாம் K என்பது அவங்க கிராமத்தோட முதல் எழுத்தாவோ அல்லது அவரு தாத்தாவோட பெயரின் முதல் எழுத்தாவோ இருக்கலாம் என்று பலர் சொல்வது எனக்கு புரிகிறது. நானும் அப்படி தான் நினைத்தேன். அவங்க அப்பா பேரு என்ன என்று அறிந்து கொள்ள ஆவல். தேடி பார்த்தேன் எங்கும் கிடைக்கலை. இவரு மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டாரே அப்ப மனு தாக்கல் செய்யும் போது உறுதிமொழி ஆவணம் ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துருப்பாருல்ல அதுல பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று யோசனை வந்தது. சரின்னு தேர்தல் ஆணையத்தின் வலைக்கு போய் கண்டு பிடித்தேன்.
ஆனா பாருங்க அதுல இவரு அப்பா பேரு தங்கவேலுன்னு இருக்கு.

யாருக்காவது KVக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு தங்கபாலுவ பிடிக்காம இருக்கலாம் அதுக்காக தவறா சொல்ல வேண்டாம். இவரு தாத்தா பேரு KV ன்னு இருக்குமோ?? எண்கணித சோதிடத்தின் வேலையா இருக்குமோ???
.
.
ஆனா பாருங்க அதுல இவரு அப்பா பேரு தங்கவேலுன்னு இருக்கு.

யாருக்காவது KVக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு தங்கபாலுவ பிடிக்காம இருக்கலாம் அதுக்காக தவறா சொல்ல வேண்டாம். இவரு தாத்தா பேரு KV ன்னு இருக்குமோ?? எண்கணித சோதிடத்தின் வேலையா இருக்குமோ???
.
.
வியாழன், டிசம்பர் 31, 2009
சென்னை மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்
இது நேற்று உண்மையாக நடந்த நிகழ்வு. எப்படி எனக்கு தெரியும் என்றால் என்னுடன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பரின் பெற்றோருக்கு இது நடந்தது.
இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.
அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.
இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.
அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.
புதன், டிசம்பர் 30, 2009
ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்
இது பரபரபுக்காக வைக்கப்பட்ட தலைப்பா என்றால் ஆம் இல்லை எனலாம். நடந்த செயல் உண்மை. இவ்விடுகைக்கு வேறு மாதிரி தலைப்பு கொடுக்கத்தான் நினைத்திருந்தேன் ஆனா பதிவுலகில் இப்போ ஈரோடு பேச்சு அதிகமா இருப்பதால் இத்தலைப்பு. இஃகி இஃகிஃ
நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.
இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.
இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.
1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.
தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.
அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.
எனக்கு புரியாதது :-
1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.
2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.
3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.
.
நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.
இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.
இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.
1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.
தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.
அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.
எனக்கு புரியாதது :-
1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.
2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.
3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.
.
திங்கள், டிசம்பர் 21, 2009
ஆழ்கடலுக்குள் எரிமலை வெடிப்பு
நாம எல்லோரும் எரிமலை வெடிச்சு சிதறுவதை பார்த்திருப்போம். நேர்ல இல்லைங்க, படத்துல தொலைக்காட்சியில யூ டியூப்-ல தான். அறிவியலாளர்களும் பூமில எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க, கடல்ல எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க ஆனா ஆழ் கடலுக்குள் எரிமலை வெடிச்சு சிதறி பார்த்ததில்லை. இதுக்காக தவம் இருந்திருக்காங்க. பூமியிலிருந்து 1.2 கி.மீ கடலுக்குள்ள இருக்கற எரிமலை வெடிச்சு சிதறுனத ரோபோ மூலமா படம் புடிச்சி ஆகா ஆகான்னு கொண்டாடுறாங்க. ஆடட்டும் தப்பில்ல. இப்ப நாமும் அத பார்க்கலாமா. (அவங்க படம் பார்த்தாங்க நாமளும் பார்க்கப்போறோம் அதனால நாமளும் அறிவியலாளர்கள் தான், என்ன நான் சொல்லறது சரியா இஃகிஃகி)
இது பசிபிக் கடலில் இருக்கும் சமோவாவுக்கு தென் மேற்கே 200 கிமீ தள்ளி இருக்கு. இந்த எரிமலைக்கு பெயர் மேற்கு மாடா.
கடலில் உள்ள எரிமலைகளை நிறைய பார்த்தாலும் ஆழ்கடல் எரிமலை வெடிப்பை படம் பிடிப்பது இது தான் முதல். ஹவாய் தீவுகளில் ஒருவகையான எரிமலை குமறி அதன் குழம்பு கடலுக்கு செல்லும். எப்ப போனாலும் அதை பார்க்கலாம். அது புகழ் பெற்ற சுற்றுலா தளம் கூட. அது போன்றவற்றுடன் மேற்கு மாடாவை சேர்க்காதிங்க. இது தனி வகை.
ஆழ்கடலில் இருந்ததால் தண்ணீரின் அழுத்தம் இதன் வெடிப்பின் பாதிப்பு அல்லது சீற்றத்தை வெகுவாக குறைத்து விட்டதால் ரோபோ மூலம் எரிமலை வெடிப்பிற்கு சில அடி தூரம் வரை செல்ல முடிந்ததாம். நில மற்றும் கடல் மட்டத்திற்கு அருகிலுள்ள எரிமலைகளில் அவ்வாறு செல்ல முடியாது காரணம் அவற்றின் சீற்றம் மற்றும் வெப்பம்.
மேற்கு மாடா எரிமலையானது 9 கிமீ நீளமும் 6 கிமீ அகலமும் உடையது. இதன் அடி 3 கிமீ ஆழத்தில் உள்ளது. இது பசிபிக் டெக்டோனிக் தட்டு ஆசுத்திரிலேயா தட்டுக்கு அடியில் சொருகும் இடத்தில் இருக்கு. இது மிகவும் சிறப்பான இடம். இந்த பகுதியில தான் பாறைகள் மறுபயனீடுக்கு பூமிக்கு உள்ளாற போகும். அதே போல் இங்க தான் உருகிய பொருட்கள் பூமியின் உள்ளுக்குள் இருந்து மேல் பரப்புக்கு வரும். (உள்ளாற போனா வெளியில் வந்து தான ஆகனும்)
இது தொடர்பான செய்தி;
http://edition.cnn.com/2009/TECH/science/12/18/volcano.underwater.explosion.pacific/
http://news.bbc.co.uk/2/hi/science/nature/8419736.stm
குறிப்பு :- வழக்கம் போல் இது நான் எழுதும் தாமதமான சூடான செய்தி.
.
.
இது பசிபிக் கடலில் இருக்கும் சமோவாவுக்கு தென் மேற்கே 200 கிமீ தள்ளி இருக்கு. இந்த எரிமலைக்கு பெயர் மேற்கு மாடா.
கடலில் உள்ள எரிமலைகளை நிறைய பார்த்தாலும் ஆழ்கடல் எரிமலை வெடிப்பை படம் பிடிப்பது இது தான் முதல். ஹவாய் தீவுகளில் ஒருவகையான எரிமலை குமறி அதன் குழம்பு கடலுக்கு செல்லும். எப்ப போனாலும் அதை பார்க்கலாம். அது புகழ் பெற்ற சுற்றுலா தளம் கூட. அது போன்றவற்றுடன் மேற்கு மாடாவை சேர்க்காதிங்க. இது தனி வகை.
ஆழ்கடலில் இருந்ததால் தண்ணீரின் அழுத்தம் இதன் வெடிப்பின் பாதிப்பு அல்லது சீற்றத்தை வெகுவாக குறைத்து விட்டதால் ரோபோ மூலம் எரிமலை வெடிப்பிற்கு சில அடி தூரம் வரை செல்ல முடிந்ததாம். நில மற்றும் கடல் மட்டத்திற்கு அருகிலுள்ள எரிமலைகளில் அவ்வாறு செல்ல முடியாது காரணம் அவற்றின் சீற்றம் மற்றும் வெப்பம்.
மேற்கு மாடா எரிமலையானது 9 கிமீ நீளமும் 6 கிமீ அகலமும் உடையது. இதன் அடி 3 கிமீ ஆழத்தில் உள்ளது. இது பசிபிக் டெக்டோனிக் தட்டு ஆசுத்திரிலேயா தட்டுக்கு அடியில் சொருகும் இடத்தில் இருக்கு. இது மிகவும் சிறப்பான இடம். இந்த பகுதியில தான் பாறைகள் மறுபயனீடுக்கு பூமிக்கு உள்ளாற போகும். அதே போல் இங்க தான் உருகிய பொருட்கள் பூமியின் உள்ளுக்குள் இருந்து மேல் பரப்புக்கு வரும். (உள்ளாற போனா வெளியில் வந்து தான ஆகனும்)
இது தொடர்பான செய்தி;
http://edition.cnn.com/2009/TECH/science/12/18/volcano.underwater.explosion.pacific/
http://news.bbc.co.uk/2/hi/science/nature/8419736.stm
குறிப்பு :- வழக்கம் போல் இது நான் எழுதும் தாமதமான சூடான செய்தி.
.
.
செவ்வாய், டிசம்பர் 01, 2009
கூம்பு நோம்பி வாழ்த்து
கூம்பு நோம்பி என்பது கார்த்திகை ஒளித் திருவிழாவைக் குறிக்கும் அதாங்க கார்த்திகை தீபம். கொங்கு நாட்டில் விழாவை நோம்பி என்று தான் அழைப்பார்கள். அன்று தெருக்களில் கோலம் போட்டு வீடுகளை அகல் விளக்கால் அலங்காரம் செய்வார்கள். அன்று ஆடம்பரம் ஏதும் இருக்காது. ஆனால் விழாக் களை இருக்கும். காசு இருந்தா தான் இதை கொண்டாட முடியும் என்றில்லை, இது அனைவராலும் கொண்டாடப்படக்கூடியது. குறிப்பா தீபாவளிக்கு செலவழிக்கும் எந்த செலவும் இதுக்கு கிடையாது. எனக்கு தெரிந்து வாழ்த்தெல்லாம் இதுக்கு சொல்லி கேட்டதில்லை. அப்புறம் ஏண்டா வாழ்த்து இடுகைன்னு கேக்கறீங்களா? இஃகி இஃகி நானும் இடுகை போடனும்முல்ல. தீபாவளிக்கு இணையானது இது. சொல்லப்போனா தமிழர்கள் கொண்டாடும் ஒளி விழா இது தான்.
எங்கள் ஊரில்:-
விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.
கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.
சைவ நெறி - வைணவ நெறி
தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.
தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.
நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...
கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.
எங்கள் ஊரில்:-
விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.
கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.
சைவ நெறி - வைணவ நெறி
தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.
தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.
நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...
கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)