வணக்கம்
சனி, டிசம்பர் 03, 2016
குடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்
ஒரு வீட்டில் எந்த சிறு விடயத்திற்கும் சண்டை, கணவன் மனைவி இருவரும் சண்டைக் கோழிகள். ஆனா அவங்க பக்கத்து வீட்டில் 10 ஆண்டுகளாக இருக்கும் கணவன் மனைவி அவர்களுக்குள் சண்டையே போடுவதில்லை.
இது இவர்களுக்கு வியப்பு. அவங்க சண்டை போடாம இருக்கும் காரணத்தை அறிய ஆவல் ஆனார்கள், தெரிந்தால் இவர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா. காரணத்தை அறிய கணவன் போனான். அவர்கள் வீட்டை மறைந்திருந்து கவனித்தான்.
கணவன் பட்டாசாலையிலும் மனைவி சமையலறையிலும் அமைதியாக அவர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
மனைவி காஃபி கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள், தவறி அது கணவனின் சட்டையில் சிந்திவிட்டது. உடனே மனைவி பதறி தான் கவனமாக கொடுத்திருக்கனும் என்றும் தன் தவறை மன்னிக்கும் படியும் கூறினாள். கணவன் இது உன் தவறில்லை நான் திடீர் என்று திரும்பியதால் தான் காஃபி கொண்டு வந்த உன் கை என் மேல் பட்டு காஃபி சிந்திவிட்டது அதனால் தவறு என் மேல் தான் என்றான்.
கணவன் அடுத்த அறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான். தரையில் இருந்த தண்ணீரை துடைக்காத தன் தவறினால் தான் விழுந்துவிட்டார் என்றும் அதற்காக தன் தவறை மன்னிக்கும் படியும் வேண்டினாள், தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் வந்ததால் தான் தான் தவறி விழுந்து விட்டதாக கூறி தவறு தன் மீது தான் என்று கணவன் கூறினான்.
மனைவி இயந்திர அம்மியை (Mixie) சட்னியை அரைக்க போட்டாள். அது வேலை செய்யவில்லை, உடனே கணவன் அதை சரிசெய்யாதது தன் குற்றம் என்று கூறினான், மனைவி தான் அது வேலை செய்யாது என்று தெரிந்தும் அம்மியை பயன்படுத்தாமல் மறந்து இயந்திர அம்மியை போட்டது தன் மீது தான் தவறு என்றாள்.
மனைவி மின்விசிறியை போட்டதும் அது வேலை செய்யவில்லை, புது மின்விசிறி தான் போடனும் என்று மின் பழுதாக்குநர் கூறியும் தான் வேறு மின்விசிறி வாங்கி பொருத்தாதது தன் தவறு என்று கணவன் கூறினான். மின் விசிறி இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை மறந்து அதை போட்டது தன் தவறு என்று மனைவி கூறினாள்.
இவர்கள் இப்படி இருப்பதால் இவர்களுக்குள் எப்பவும் சண்டை வருவதில்லை \ வந்ததில்லை
சண்டைக்கார மனைவி தன் கணவனிடம் அடுத்த வீட்டு அமைதிப்புறா குடும்பத்தை கவனித்தீர்களே அவர்கள் சண்டையிடாமல் இருக்கும் இரகசியத்தை கண்டுபிடித்தீர்களா என்று கேட்டாள்.
இருவரும் எப்போதும் குற்றவுணர்வோடு இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வருவதில்லை என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தாங்கள் செய்வது சரி என்று கருதுவதால் சண்டை ஏற்படுகிறது என்றும் கூறினான்.
இதிலிருந்து தெரிவது குடும்பத்தில் சண்டை இல்லையென்றாள் அவர்களிடம் குற்ற உணர்ச்சி உள்ளது என்று பொருள். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது என்பது நாம் அறிந்ததே.
திங்கள், நவம்பர் 12, 2012
இந்த தீபாவளியின் புது வெடிகள்
1. மன்மோகன் சிங் வெடி:-
புகையும் வராது வெடிக்கவும் செய்யாது ஆனால் அமெரிக்கா காரன் வெடிச்சா மட்டும் வெடிக்கும் தன்மையுடையது.
2. சோனியா வெடி:-
இதுக்கு தீ வைத்தால் இதுக்கு பதிலா சுற்றியிருக்கும் சிவகங்கை வெடி, திக்கு விஜய் வெடி, சிபல் வெடி, நாராயணன் வெடி, சிங்வி வெடி போன்ற மற்ற வெடிகள் வெடிக்கும்.
3. கெஞ்ரிவால் வெடி:-
இந்த வெடியால் பாதிப்பு அதிகமா இருக்கும். சில முறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சில முறை சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு எந்த அளவு என்பது வெடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்
4. கட்கரி வெடி:-
இது வெடிச்சால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. ஆனா கடுமையான வெடி போல் தோன்றும். இதை உதார் வெடி என்று தமிழல்லாத சொல்லால் குறிப்பிடுவார்கள். இது இன்னும் சந்தையில் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் சங்கத்து ஆட்கள் இதை வாங்குவது தான்.
5. மோடி வெடி:-
முசுலிம்கள் இதை வெடித்தால் அவர்களுக்கு பாதிப்பு உறுதி. இவ்வெடியை தடை செய்ய பலர் முயன்றாலும் இதன் புகழ் அதிகளவில் பரவிவிட்டதால் தடை செய்வது இயலாத செயல.
6. மம்தா வெடி:-
பொதுவுடமைவாதிகள், காங்கிரசு காரங்க வெடிச்சா அவங்க கைய சுட்டுரும். நிறைய புகை வரும் சில முறை வெடிக்கும், வெடிச்சா சத்தம் அதிகமா இருக்கும்.
7. காரத் வெடி:-
இருசியா, சீனா ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களுக்கு புடிச்ச மாதிரி வெடிக்கும். அமெரிக்க ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களை சுட்டு விடும்.
8. தாத்தா வெடி:-
வெடிக்கவே செய்யாது ஆனால் வெடிக்கற மாதிரி புஸ்சுன்னு போகும் சத்தமில்லாம இருக்கும் மறுபடியும் புஸ்சுன்னு போகும் வெடிக்கும் வெடிக்கும் அப்படின்னு நினைக்க வைச்சு ஏமாத்தும்.
9. ஆத்தா வெடி:-
வெடிக்காது ஆனா புகை மட்டும் நிறைய வரும். தாத்தா வெடிக்கூட இதை வைக்கக்கூடாது.
10. தரும தலைவி வெடி:-
ஒழுங்கு முறையில்லாமல் வெடிக்கும். வெடிக்கும் என்று சிலர் கூடி நின்று பார்த்தால் கண்டிப்பாக வெடிக்காது. தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்தில் வெடிக்காது ஆனால் புகை வரும், சில சமயம் அதுவும் வராது.
உங்களுக்கும் இது மாதிரி நிறைய புது வெடிகள் தெரிந்திருக்கும்.
பொருப்பு துறப்பி:-
இது நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல. I-T act 66A பண்ற பாட்டை பாருங்கப்பா :(
வியாழன், ஏப்ரல் 08, 2010
வழக்கறிஞர் நகைச்சுவை
நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.
சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்
மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார். ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.
வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.
பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.
திங்கள், மார்ச் 29, 2010
சிரிங்க சிரிங்க
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.
முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.
இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.
ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.
சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.
மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.
4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.
ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.
அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.
நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
.
செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009
சிரிக்க சிந்திக்க - 2
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் அறை பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
திங்கள், ஆகஸ்ட் 17, 2009
சிரிக்க சிந்திக்க - 1
திருமணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா...
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
திங்கள், மே 18, 2009
தேர்தல் நகைச்சுவை
ஊர்ல பேசும் போது என்னடா நீங்க நினைச்ச அளவுக்கு கூட வாக்கு வாங்கலையாட்டக்குது என்றேன்.
ஆமாண்ணா, இதுல எங்கோ தப்பு நடந்திருக்கு... வெற்றி பெறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை... ஆனா வாக்கு எண்ணிக்கை தான் உதைக்குது. பசங்களை கேட்டேன். அவங்க இப்படி தான் சொல்றாங்க..
"நான் போட்டது என்னமோ நம்ம கட்சிக்கு தான் ஆனா அது எதுல விழுந்ததுன்னு தான் எனக்கு தெரியாது."
இது தான் இப்ப ஊர்ல சூடானா தேர்தல் செய்தி....
சனி, மார்ச் 07, 2009
திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்
சமன்பாடு - 1
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
சமன்பாடு - 2
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
சமன்பாடு - 3
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆகவே,
முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.
முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!
வியாழன், நவம்பர் 06, 2008
வக்கீல்
சாட்சி: ஆம்
வக்கீல்: எந்த வகையில் உங்கள் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டது?
சாட்சி: மறந்து விட்டேன்
வக்கீல்: மறந்துட்டீங்களா? எதையெல்லாம் மறந்துட்டீங்கன்னு சொல்ல முடியுமா?
வக்கீல்: டாக்டர் எத்தனை பிரேத பரிசோதனைகளை இறந்தவர்களின் மேல் பண்ணியிருக்கிறீர்கள்?
சாட்சி: நான் பண்ணுன எல்லா பிரேத பரிசோதனையும் செத்தவங்க மேல தான்.
வியாழன், ஆகஸ்ட் 23, 2007
Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை
ஒரு சுலப வழி இருக்கிறது.
அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.
சனி, மார்ச் 24, 2007
300 ஆல் 15 கடத்தப்பட்டதா ?
பிரிட்டானிய கப்பற்படை வீரர்கள் 15 பேரை ஆயுதம் தாங்கிய இரானிய படைகள் கைது செய்துள்ளது.
ஈராக்கின் கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரானிய படைகள் தனது கடற்படை வீரர்களை கைது செய்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளது.
ஆனால் இரான், பிரிட்டானிய கடற்படை வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனாலயே கைது செய்ததாக கூறியுள்ளது.
எது உண்மை ? யாம் அறியோம் பராபரமே.
ஏன் இந்த கைது நடவடிக்கை?
1. யுரேனிய செறிவூட்டல் தொடர்பாக இரானுக்கு எதிராக ஐ.நா மூலம் தடை கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மும்முரமாக உள்ளதால்.
2. இரானிய கடற்பகுதியில் அத்துமீறி பிரிட்டானியர்கள் நுழைந்ததனால்.
3. அமெரிக்க Hollywood 300 படம், இரானிய / பெர்சிய மக்களை கேவலமாக சித்தரித்ததனால்.
என்னைப்பொருத்தவரை 300 படமே இதற்கு காரணம் என்பேன். 300 பேர் கொண்ட ஸ்பார்ட்டா நகர படை மாபெரும் பெர்சிய படையை தோற்கடித்த வரலாற்று நிகழ்வு தான் படம். அந்த படத்தில் ரொம்ப கேவலமாக பெர்சிய (தற்போதய இரான்) படைகளை / மக்களை காட்டியிருப்பர்கள்.
கொசுறு:
மதன் ஸ்பார்ட்டா பெர்சிய சண்டையை வைத்து ஒரு தொடர் எழுத போறார் தலைப்பு - "போனாங்க தோத்தாங்க" , இது தொடர்பாக ஏகப்பட்ட நூல்கள் உள்ளன, மதன் 90 சத நூற்களை படித்து குறிப்பெடுத்து விட்டார் 10 சத நூற்கள் தான் பாக்கி, தோத்து போன பெர்சிய மன்னனே இது தொடர்பாக ஒரு நூல் எழுதி அதில் ஸ்பார்ட்டா மக்களின் திறமையை புகழ்ந்திருப்பார். போதாதுக்கு அற்புதமான graphics உடன் படமே வந்தாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அதிலிருந்து ஒரு படத்தை போடுவதாக உள்ளார்கள்
ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் இரானியர்களை கோபப்படுத்தியுள்ளது, அதனால் தங்களது வீரத்தை காட்ட வேண்டி பிரிட்டானிய வீரர்கள் 15 பேரை கோழி அமுக்கர மாதிரி அமுக்கிட்டாங்க.
பின்ன இரானியனா கொக்கா...
ஸ்பார்ட்டா நாட்டு படையை பிடிக்காம வெள்ளைக்காரனை புடிச்சு என்ன சாதிக்கப்போறாங்க அப்படின்னு கேக்கறீங்களா? மதனின் போனாங்க தோத்தாங்க தொடரில் இது தொடர்பாகவும் அவர் விளக்கப்போறார்.
அதுவரைக்கும் பொறுக்க முடியாதவர்களுக்கு இப்ப ஸ்பார்ட்டா என்ற நாடே இல்லை, அது பழங்காலத்து கிரேக்க நாடுகளில் ஒன்று.
புதன், பிப்ரவரி 28, 2007
செயலலிதா - லட்சுமி மிட்டல் ஒப்பீடு
டாடா பழைய ஆளு, அம்பானி தான் இப்ப பெரிய பணக்காரர் என்றேன் நான், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. எங்க சண்டைய யாராவது தீர்த்து வைங்கப்பா...
சரி யார் பணக்கார இந்தியர் என்ற கேள்வி வந்த போது இருவரும் இரும்பு ஆலை முதலாளி மார்வாடி லட்சுமி மிட்டல் என்பதை ஒத்துக்கொண்டோம்.
இந்த வெட்டி அரட்டைல இருந்து சேட்டும் சேக்கும் தான் பணத்துல குளிக்கிற ஆளுங்கன்னு புரிந்தது.
நம்ம சேட்டு லட்சுமி மிட்டலை பாராட்டணும், உலகின் 5 வது பெரிய பணக்காரரா இருந்தாலும் , இங்கிலாந்தில் வசித்தாலும் இன்னும் இந்திய கடவுச்சீட்டை (Passport) தான் வைத்துள்ளார். நாமல்லாம் அப்படியா? எப்படா குடியுரிமை கிடைக்கும்ன்னு அல்லாடறோம்.
முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவி, புரட்சித்தலைவி வெற்றிச்செல்வி ( செயலலிதா தாங்க) க்கும் லட்சுமி மிட்டலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்றான். எனக்கு ஆச்சரியம் என்னன்னு சொல்லுடான்னு கேட்டேன்.
இரண்டு பேரும் அவங்க பசங்களுக்கு உலகம் வியக்கற அளவு மா மா மா பெரும் அளவில் திருமணம் நடத்துனாங்க அந்த விதத்தில் இரண்டு பேருக்கும் ஒற்றுமை என்றான்.
நான் கடுப்பாயிட்டேன் , டேய் லட்சுமி மிட்டல் அவரு காசை போட்டு திருமணம் நடத்தினார், முன்னாள் முதல்வர் வெற்றிச்செல்வி நம்ம காசை ( அதாங்க நம்ம அரசாங்கம்) வைத்து திருமணம் நடத்தினார், இரண்டையும் ஒப்பிடாதன்னு திட்டினேன்.
நீங்களே சொல்லுங்க செயலலிதாவே அந்த திருமணத்தை மறக்க நினைக்கறப்போ இவன் அதை வைத்து ஒப்பீடெல்லாம் நடத்தினா நல்லா இருக்குங்களா?