வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

19 கருத்துகள்:

உடன்பிறப்பு சொன்னது…

//அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்//

இந்த கூட்டணிக்கு தான் ஓட்டு போடுமாறு இணைய மேதாவிகள் கேட்டு கொண்டனர். எல்லோருக்கும் இருக்கு ஆப்பு

உடன்பிறப்பு சொன்னது…

http://kalaignarkarunanidhi.blogspot.com/2009/05/blog-post_08.html

குறும்பன் சொன்னது…

உடன்பிறப்பு, தேர்தல் முடியும் முன்னே காங்கிரசு அதிமுக பக்கம் சாய உள்ளது, காங்கிரசுக்காக வாக்கு சேகரிக்கும் உடன்பிறப்புகளுக்கே எல்லாம் வெளிச்சம்.

திமுகவுக்கு ஆப்பு இருக்கு என்பதே சரி.

பதி சொன்னது…

ம்ம்ம்ம்ம்

இதே செய்தியைத் தான் உடன்பிறப்புக்கள் வேறு மாதிரி எழுதி உள்ளனர்..

//இந்த கூட்டணிக்கு தான் ஓட்டு போடுமாறு இணைய மேதாவிகள் கேட்டு கொண்டனர். எல்லோருக்கும் இருக்கு ஆப்பு//

அதிமுக கூட்டணிக்கு ஓட்டுக் கேக்குறவங்க மேதாவிகளொ இல்லையோ, ஆனா, இன்னமும் காங்கிரஸ்ஸுக்கு ஓட்டுக் கேட்கும் அறிவாளிகளை என்ன செய்ய?

:-))))))

பெயரில்லா சொன்னது…

ஆப்பு திமுகவுக்கு மட்டுமல்ல,ஜெ வை ஆதரிக்கும் சீமான், செந்தழல் ரவி போன்ற ஈழக் கனவு காண்போருக்கும்தான்!

குறும்பன் சொன்னது…

சரியா சொன்னீங்க பதி.

குறும்பன் சொன்னது…

அனானி,
சீமான், செந்தழல் ரவி போன்றோருக்கு ஆப்பு இருக்கட்டும், திமுக வுக்கு ஆப்பு இருக்கு என்று ஒத்துக்கொண்டதுற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

read ibnlive. congress polambal. Evlo.. periya dhesiya katchiku verum 2 seat kuduthangalam biharle. dmk needs this for giving too much support to cong.

உடன்பிறப்பு சொன்னது…

//அதிமுக கூட்டணிக்கு ஓட்டுக் கேக்குறவங்க மேதாவிகளொ இல்லையோ, ஆனா, இன்னமும் காங்கிரஸ்ஸுக்கு ஓட்டுக் கேட்கும் அறிவாளிகளை என்ன செய்ய?//

அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்கிறவர்கள் தங்களை நடுநிலைவாதிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்

உடன்பிறப்பு சொன்னது…

//இன்னமும் காங்கிரஸ்ஸுக்கு ஓட்டுக் கேட்கும் அறிவாளிகளை என்ன செய்ய?//

எங்களை தான் கும்மி தீர்த்தாயிற்றே, இப்போ அவர்களை கும்மலாமா?

குறும்பன் சொன்னது…

அனானி,
பீகார்ல வெற்றி பெற மாட்டோம்னு தெரிஞ்சும் எல்லா தொகுதியிலயும் போட்டிபோடுது.

யாதவும் பாஸ்வானும் கை கழுட்டாங்க.

குறும்பன் சொன்னது…

\\
//இன்னமும் காங்கிரஸ்ஸுக்கு ஓட்டுக் கேட்கும் அறிவாளிகளை என்ன செய்ய?//

எங்களை தான் கும்மி தீர்த்தாயிற்றே, இப்போ அவர்களை கும்மலாமா?
\\

உடன்பிறப்பு,
செஞ்ச துரோகத்துக்கு குறைந்தது 2 ஆண்டாவது கும்மனும்.

பெயரில்லா சொன்னது…

செந்தழல்ரவி ஒரு அரைவேக்காட்டு வெண்ணை

பெயரில்லா சொன்னது…

தமிழர்களை இளிச்ச வாயர்களாகவும்,ஏமாளிகளாகவும் நினைப்பவர்கள் முதலாவது காங்கிரசுக் கபோதிகள்.
அடுத்து கதாநாயகி!!!பழைய நடிகையின் இன்றைய வசனத்தில் மயங்கியிருக்கும் சூரப் புளிகள் நன்றாகச் சூடு போட்டுக் கொண்டு வரப்போகிறார்கள்.

பதி சொன்னது…

//பழைய நடிகையின் இன்றைய வசனத்தில் மயங்கியிருக்கும் சூரப் புளிகள் நன்றாகச் சூடு போட்டுக் கொண்டு வரப்போகிறார்கள்.//

பரவாயில்லைங்க அனானி...

இனிமே குடி முழுக எதுவும் இல்லை.. பொடா, தடா எல்லாம் பார்த்தாச்சு.. யாரு ஆச்சில தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ஞ்சது??

சரி.. அம்மா கிட்டயும் சூடு வாங்குனா போகுது... அது என்ன, நம்ப வைச்சு கழுத்த அறுக்குறதுக்கு கருணா கும்பலுக்கு மட்டும் தான் பட்டா போட்டு குடுத்துறுக்குதா???

பெயரில்லா சொன்னது…

//சரி.. அம்மா கிட்டயும் சூடு வாங்குனா போகுது... அது என்ன, நம்ப வைச்சு கழுத்த அறுக்குறதுக்கு கருணா கும்பலுக்கு மட்டும் தான் பட்டா போட்டு குடுத்துறுக்குதா???//

ரொம்ப காமெடி பண்ணாதீங்க. ஜெ கும்பல் ஈழத்தையே பட்டா போடு வித்துடுவாங்க

குறும்பன் சொன்னது…

//ரொம்ப காமெடி பண்ணாதீங்க. ஜெ கும்பல் ஈழத்தையே பட்டா போடு வித்துடுவாங்க//

கருணாநிதி குடும்பம் மட்டும் சளைச்சதா என்ன?

குறும்பன் சொன்னது…

//அடுத்து கதாநாயகி!!!பழைய நடிகையின் இன்றைய வசனத்தில் மயங்கியிருக்கும் சூரப் புளிகள் நன்றாகச் சூடு போட்டுக் கொண்டு வரப்போகிறார்கள்.//

'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்னும் வசனகர்த்தா வசனத்தில் மயங்குனா சரிங்கிறிங்க.

குறும்பன் சொன்னது…

\\செந்தழல்ரவி ஒரு அரைவேக்காட்டு வெண்ணை\\
அனானி அடுத்தவரை இங்கு திட்ட வேண்டாமே.