வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஏப்ரல் 08, 2010

வழக்கறிஞர் நகைச்சுவை

ஒரு விருந்தில் மருத்துவரும் வழக்கறிஞரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால் தொடர்ச்சியா தடங்கல் இல்லாமல் பேசமுடியவில்லை. ஏகப்பட்ட பேர் மருத்துவரிடம் தங்கள் உடல் நிலையை, நோயை கூறி இலவச மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் இது மாதிரி நடந்தது, மருத்துவரின் பொறுமை போயிடுச்சி (யாரும் தப்பு சொல்ல முடியாது, மனுசன நிம்மதியா விருந்தில் பேச விடறாங்களா), அவர் வழக்கறிஞரிடம் நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது சட்ட ஆலோசனை கேட்டு வருபவர்களை தடுக்க என்ன செய்யறீங்கன்னார்.

நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.



சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்


மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க  இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார்.  ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.



வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.



பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.


5 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

இஃகிஃகி!

குறும்பன் சொன்னது…

வாங்க பழமை.

Unknown சொன்னது…

:)))

குறும்பன் சொன்னது…

வாங்க சுந்தரராஜன்.

குறும்பன் சொன்னது…

வாங்க சுல்தான்.