முல்லைப்பெரியார் அணை சிக்கலை என்ன லாவகமா தலைவர் கருணாநிதி தீர்க்கப்போறார்ன்னு பாருங்க.

வழக்கில் இருந்து தப்ப ஒரே வழி பேரை குவாத்ரோச்சின்னு மாத்திக்கிறதுதான். பேரை குவாத்தோச்சின்னு மாத்திக்க நிறைய பேர் வந்ததால அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் தீர்ந்திடுச்சாம். அந்த விண்ணப்பத்த முதல்லயே பேரை குவாத்ரோச்சின்னு மாற்றிக்கிட்டவர் விலை அதிகம் வைச்சு வெளியில் விக்கறதா பேசிக்கிறாங்க.

பிரமரும் உள்துறை அமைச்சரும் ரொம்ப உசாரா இருக்காங்க. இதைத் தான் வரும் முன் காப்பது என்கிறார்களோ?

தலைவருக்கு தெரியும்யா யாரை சட்டமன்ற உறுப்பினராக்கனும் யாரை மக்களவை உறுப்பினராக்கனும்னு அதுலையும் யாரை எப்ப எங்க அமைச்சராக்கனும்ன்னு. அதனால தான் நாம் அவரை அரசியல் சாணக்கியன் அப்படின்னு சொல்லறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக