வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 27, 2009

போடுங்கம்மா ஓட்டு '...' பார்த்து...

போடுங்கம்மா ஓட்டு '......' பார்த்து... தேர்தல் நேரத்தில் இது வழக்கமா கேட்கிற கோசம். நானும் இப்படி கத்தி கத்தி வாக்கு சேகரித்திருக்கேன். ஆனா பாருங்க இந்த தேர்தல் கொஞ்சம் வேறுபாடு உடையது. போடாதிங்கம்மா ஓட்டு 'கை சின்னத்த ' பாத்து..... போடாதிங்கம்மா ஓட்டு 'உதய சூரியன ' பாத்து.... இது தான் இந்த தேர்தலுக்கான கோசம்.

கட்சி பாசம் உடன்பிறப்புகளை தடுக்குது, சரி எவன் ஊட்ல எழவு நடந்தாலும் உதய சூரியனுக்கு தான் வாக்கு போடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் தான் கட்சியின் வாக்கு வங்கி.

பிறப்புகளே சிந்தியுங்கள்... இவர் தான் ஆட்சியில் இருக்கிறார்.... இவர் நினைத்திருந்தால் முன்னமே மத்திய அரசை வழியுறுத்தி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும்... குறைந்த பட்சம் இலங்கைக்கு பணமும் இராணுவ தளவாடங்களும் போகாமல் செய்திருக்க முடியும். அது போதுமே என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

பாரதிராசா தலைமையில் ஈழ மக்களுக்காக திரையுலகம் போராட்டம் என்றதும் முழு அடைப்பு.... (டாஸ்மார்க் கடைகள், கலைஞர், சன் தொலைக்காட்சிகள் விதிவிலக்கு) ... செயலலிதா தமிழீழத்துக்கு ஆதரவு சொன்னதும் உண்ணாவிரதம் .... இதுக்கு வேற பல பதிவர்களின் சப்பை கட்டு..... (சில நேரமாவது) இவங்க எப்பதான் கட்சி சார்பா சிந்தித்து முடிவு எடுக்காம இருப்பாங்க... ரெட்டை இலைக்கு தான் ஓட்டுன்னு சொல்ற படிக்காத பாமரர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வேறுபாடு?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து. :-)