வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 27, 2009

போடுங்கம்மா ஓட்டு '...' பார்த்து...

போடுங்கம்மா ஓட்டு '......' பார்த்து... தேர்தல் நேரத்தில் இது வழக்கமா கேட்கிற கோசம். நானும் இப்படி கத்தி கத்தி வாக்கு சேகரித்திருக்கேன். ஆனா பாருங்க இந்த தேர்தல் கொஞ்சம் வேறுபாடு உடையது. போடாதிங்கம்மா ஓட்டு 'கை சின்னத்த ' பாத்து..... போடாதிங்கம்மா ஓட்டு 'உதய சூரியன ' பாத்து.... இது தான் இந்த தேர்தலுக்கான கோசம்.

கட்சி பாசம் உடன்பிறப்புகளை தடுக்குது, சரி எவன் ஊட்ல எழவு நடந்தாலும் உதய சூரியனுக்கு தான் வாக்கு போடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் தான் கட்சியின் வாக்கு வங்கி.

பிறப்புகளே சிந்தியுங்கள்... இவர் தான் ஆட்சியில் இருக்கிறார்.... இவர் நினைத்திருந்தால் முன்னமே மத்திய அரசை வழியுறுத்தி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும்... குறைந்த பட்சம் இலங்கைக்கு பணமும் இராணுவ தளவாடங்களும் போகாமல் செய்திருக்க முடியும். அது போதுமே என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

பாரதிராசா தலைமையில் ஈழ மக்களுக்காக திரையுலகம் போராட்டம் என்றதும் முழு அடைப்பு.... (டாஸ்மார்க் கடைகள், கலைஞர், சன் தொலைக்காட்சிகள் விதிவிலக்கு) ... செயலலிதா தமிழீழத்துக்கு ஆதரவு சொன்னதும் உண்ணாவிரதம் .... இதுக்கு வேற பல பதிவர்களின் சப்பை கட்டு..... (சில நேரமாவது) இவங்க எப்பதான் கட்சி சார்பா சிந்தித்து முடிவு எடுக்காம இருப்பாங்க... ரெட்டை இலைக்கு தான் ஓட்டுன்னு சொல்ற படிக்காத பாமரர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வேறுபாடு?

உண்ணா விரதமும் போர் நிறுத்தமும்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.

ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.

அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.

அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..