வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
சனி, டிசம்பர் 03, 2016
குடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்
ஒரு வீட்டில் எந்த சிறு விடயத்திற்கும் சண்டை, கணவன் மனைவி இருவரும் சண்டைக் கோழிகள். ஆனா அவங்க பக்கத்து வீட்டில் 10 ஆண்டுகளாக இருக்கும் கணவன் மனைவி அவர்களுக்குள் சண்டையே போடுவதில்லை.
இது இவர்களுக்கு வியப்பு. அவங்க சண்டை போடாம இருக்கும் காரணத்தை அறிய ஆவல் ஆனார்கள், தெரிந்தால் இவர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா. காரணத்தை அறிய கணவன் போனான். அவர்கள் வீட்டை மறைந்திருந்து கவனித்தான்.
கணவன் பட்டாசாலையிலும் மனைவி சமையலறையிலும் அமைதியாக அவர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
மனைவி காஃபி கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள், தவறி அது கணவனின் சட்டையில் சிந்திவிட்டது. உடனே மனைவி பதறி தான் கவனமாக கொடுத்திருக்கனும் என்றும் தன் தவறை மன்னிக்கும் படியும் கூறினாள். கணவன் இது உன் தவறில்லை நான் திடீர் என்று திரும்பியதால் தான் காஃபி கொண்டு வந்த உன் கை என் மேல் பட்டு காஃபி சிந்திவிட்டது அதனால் தவறு என் மேல் தான் என்றான்.
கணவன் அடுத்த அறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான். தரையில் இருந்த தண்ணீரை துடைக்காத தன் தவறினால் தான் விழுந்துவிட்டார் என்றும் அதற்காக தன் தவறை மன்னிக்கும் படியும் வேண்டினாள், தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் வந்ததால் தான் தான் தவறி விழுந்து விட்டதாக கூறி தவறு தன் மீது தான் என்று கணவன் கூறினான்.
மனைவி இயந்திர அம்மியை (Mixie) சட்னியை அரைக்க போட்டாள். அது வேலை செய்யவில்லை, உடனே கணவன் அதை சரிசெய்யாதது தன் குற்றம் என்று கூறினான், மனைவி தான் அது வேலை செய்யாது என்று தெரிந்தும் அம்மியை பயன்படுத்தாமல் மறந்து இயந்திர அம்மியை போட்டது தன் மீது தான் தவறு என்றாள்.
மனைவி மின்விசிறியை போட்டதும் அது வேலை செய்யவில்லை, புது மின்விசிறி தான் போடனும் என்று மின் பழுதாக்குநர் கூறியும் தான் வேறு மின்விசிறி வாங்கி பொருத்தாதது தன் தவறு என்று கணவன் கூறினான். மின் விசிறி இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை மறந்து அதை போட்டது தன் தவறு என்று மனைவி கூறினாள்.
இவர்கள் இப்படி இருப்பதால் இவர்களுக்குள் எப்பவும் சண்டை வருவதில்லை \ வந்ததில்லை
சண்டைக்கார மனைவி தன் கணவனிடம் அடுத்த வீட்டு அமைதிப்புறா குடும்பத்தை கவனித்தீர்களே அவர்கள் சண்டையிடாமல் இருக்கும் இரகசியத்தை கண்டுபிடித்தீர்களா என்று கேட்டாள்.
இருவரும் எப்போதும் குற்றவுணர்வோடு இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வருவதில்லை என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தாங்கள் செய்வது சரி என்று கருதுவதால் சண்டை ஏற்படுகிறது என்றும் கூறினான்.
இதிலிருந்து தெரிவது குடும்பத்தில் சண்டை இல்லையென்றாள் அவர்களிடம் குற்ற உணர்ச்சி உள்ளது என்று பொருள். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது என்பது நாம் அறிந்ததே.
சனி, நவம்பர் 26, 2016
வெண்பா ஆசை என்னையும் பிடித்துக் கொண்டது.
வெண்பா ஆசை என்னையும் பிடித்துக் கொண்டது. அதனால் கூகுள் ஆண்டவர் கிட்ட வெண்பா இலக்கணம் கேட்டேன். தெளிவா ஏதும் எனக்கு கிடைக்கவில்லை, அதனால் தேடுன்னு தேடி முழு இலக்கணத்தையும் இங்க எழுதி உள்ளேன்.
தமிழ் விக்கிப்பீடியா மூலம் தெளிவா கத்துக்கிட்டேன்
அதாவது வெண்பா 2 முதல் 12 அடிகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு அடியிலும் 4 வார்த்தைகள் இருக்கனும் ஆனா கடைசி அடியில் 3 வார்த்தை தான் இருக்கனும்.
திருக்குறள் 2 அடியில் உள்ள வெண்பா.
ஈரசைச்சீர் வரும். மூவசையில் கனிச்சீர் (தேமாங்கனி, ..) வராது. காய்ச்சீர் மட்டும் வரும்.
ஈரசைச்சீர்கள் - தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
மூவசைசீர்கள் - தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் மட்டுமே வெண்பாவில் வரும்.
காய்ச்சீருக்கு அடுத்து நேர் அசை தான் வரனும் அதாவது தே.மாங்.காய் இதற்கு அடுத்து தே.மா அல்லது கூ.விளம் தான் வரனும்.
தளை தட்டுது என்பார்கள். தளை தட்டாமல் இருக்கனும். வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
திசை| முகந்| த வெண்| கவி| தைத் தேர்| வேந்| தே உன்| றன்
நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
இசை| முகந்| த தோ| ளுக் கிசை| வாள் வசை| யில்
நிரை நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர்
கருவிளங்காய் தேமா புளிமா புளிமா
தமை| யந்| தி யென்| றோ| துந் தை| யலாள் வென்| றோள்
நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர்
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
அமை| யந்| தி யென்| றோ ரணங்| கு
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை பு
புளிமாங்காய் தேமா பிறப்பு
பிறப்பு & காசு ஆகியவற்றில் உள்ள இறுதி அசையை நேர்பு என்பர்
பிறப்பு = பிறப்| பு - நிரை நேர்பு
காசு = கா| சு - நேர் நேர்பு
இறுதியில் குற்றியலுகரம் வரவேண்டும் ஆனால் அது சு வு லு பு உ ளு ழு னு ணு மு ஙு நு து போன்ற "உ"கர குற்றியலுகரமாக இருக்க வேண்டும்
நாள், மலர் போன்றவை நேர், நிரை அவ்வளவு தான். இதற்கு சிறப்பு விதிகள் இல்லை. அதாவது
நாள் - நேர் அசை; காட்டு - புல் பல் பால் மா க .
மலர் -நிரை அசை; காட்டு- மது இதே அல்லி மல்லி பொழில் கலாம்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் - என்ற குறளையும்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்ற குறளையும் அசை பிரித்துப் பாருங்கள்.
விக்கி மூலத்தில் நளவெண்பா உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியா மூலம் தெளிவா கத்துக்கிட்டேன்
அதாவது வெண்பா 2 முதல் 12 அடிகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு அடியிலும் 4 வார்த்தைகள் இருக்கனும் ஆனா கடைசி அடியில் 3 வார்த்தை தான் இருக்கனும்.
திருக்குறள் 2 அடியில் உள்ள வெண்பா.
ஈரசைச்சீர் வரும். மூவசையில் கனிச்சீர் (தேமாங்கனி, ..) வராது. காய்ச்சீர் மட்டும் வரும்.
ஈரசைச்சீர்கள் - தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
மூவசைசீர்கள் - தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் மட்டுமே வெண்பாவில் வரும்.
காய்ச்சீருக்கு அடுத்து நேர் அசை தான் வரனும் அதாவது தே.மாங்.காய் இதற்கு அடுத்து தே.மா அல்லது கூ.விளம் தான் வரனும்.
தளை தட்டுது என்பார்கள். தளை தட்டாமல் இருக்கனும். வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
- இயற்சீர் வெண்டளை - மாச்சீருக்கு அடுத்து நிரை அசையே வருனும். அதாவது தேமா, புளிமாவுக்கு அடுத்து கூவிளம், கருவிளம், கூவிளங்காய், கருவிளங்காய் தான் வரனும் அதே மாதிரி விளச்சீருக்கு அடுத்து நேர் அசையே வரனும் அதாவது கூவிளம், கருவிளம் என்பவற்கு அடுத்து தேமா, தேமாங்காய், கூவிளங்காய் தான் வரனும்.
- வெண்சீர் வெண்டளை - காய்சீருக்கு அடுத்து நேரசையே வரனும். அதாவது மூவசைச்சீர்களான காய்ச்சீருக்கு அடுத்து தேமா, கூவிளம் தான் வரனும்.
மாமுன்நிரை விளமுன்நேர் காய்முன்நேர் என்ற இலக்கண நெறிகளை மனதில் கொண்டால் தலை அல்ல தளையை பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஈற்றுச்சீர் அதாவது இறுதி அடியில்(வரி) உள்ள கடைசி சொல் நாள், காசு, மலர், பிறப்பு என்பது மாதிரி முடியவேண்டும்.
ஈற்றுச்சீர் அதாவது இறுதி அடியில்(வரி) உள்ள கடைசி சொல் நாள், காசு, மலர், பிறப்பு என்பது மாதிரி முடியவேண்டும்.
அசை பிரிப்பது எப்படி?
மெய் எழுத்து இருந்தால் அது தான் கடைசி
கப் , காக், வாய்க் - நேரசை
விளம், டமாம், மலர்க் நிரையசை
கபாலி கபா.லி - நிரை. நேர்
மாதம் மா.தம் , வேண்டு வேண்.டு - நேர் . நேர்
அதாவது நெடிலுக்கு முன் குறில் வரலாம். அது நிரை ஆகிவிடும். நெடிலுக்கு பின் குறில் வராது. மெய் எழுத்து (புள்ளி வைத்த எழுத்து) வரலாம்.
நெடில் வந்தால் அதனுடன் அசை பிரிப்பு நின்று விடும் & புள்ளி வைத்த எழுத்து (மெய் எழுத்து) உடன் அசை பிரிப்பு நின்று விடும்
காட்டு :- வாண்டு , காதணி -வாண்.டு , கா.தணி
வெண்பாவுக்கான இலக்கண நெறி - மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் என்பதாகும்.
மாமுன் நிரை - தேமா, புளிமாவிற்கு அடுத்த சொல் நிரை அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்,
விளமுன் நேரும் - கூவிளம், கருவிளம் போன்றவற்றிற்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும். காய் சீராக இருந்தாலும் அது கூவிளங்காய், கருவிளங்காயில் ஆரம்பமாக கூடாது.
காய்முன் நேரும் வரும். - மூவிசை சீர்களான காய்ச்சீருக்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்.
திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு
என்ற நளவெண்பா பாட்டை எடுத்துக்கொள்வோம். இது எப்படி அசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த சொற்கள் எந்த சீர் என்பதையும் பார்ப்போம். குறள் வெண்பா தான் எடுத்துக்காட்டுக்கு சுலபம் என்றாலும் நான் நேரிசை வெண்பாவான நளவெண்பா பாட்டை எடுத்துக்கொண்டுள்ளேன்.
கபாலி கபா.லி - நிரை. நேர்
மாதம் மா.தம் , வேண்டு வேண்.டு - நேர் . நேர்
அதாவது நெடிலுக்கு முன் குறில் வரலாம். அது நிரை ஆகிவிடும். நெடிலுக்கு பின் குறில் வராது. மெய் எழுத்து (புள்ளி வைத்த எழுத்து) வரலாம்.
நெடில் வந்தால் அதனுடன் அசை பிரிப்பு நின்று விடும் & புள்ளி வைத்த எழுத்து (மெய் எழுத்து) உடன் அசை பிரிப்பு நின்று விடும்
காட்டு :- வாண்டு , காதணி -வாண்.டு , கா.தணி
வெண்பாவுக்கான இலக்கண நெறி - மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் என்பதாகும்.
மாமுன் நிரை - தேமா, புளிமாவிற்கு அடுத்த சொல் நிரை அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்,
விளமுன் நேரும் - கூவிளம், கருவிளம் போன்றவற்றிற்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும். காய் சீராக இருந்தாலும் அது கூவிளங்காய், கருவிளங்காயில் ஆரம்பமாக கூடாது.
காய்முன் நேரும் வரும். - மூவிசை சீர்களான காய்ச்சீருக்கு அடுத்த சொல் நேர் அசையில் ஆரம்பமாக\ இருக்க வேண்டும்.
திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு
என்ற நளவெண்பா பாட்டை எடுத்துக்கொள்வோம். இது எப்படி அசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த சொற்கள் எந்த சீர் என்பதையும் பார்ப்போம். குறள் வெண்பா தான் எடுத்துக்காட்டுக்கு சுலபம் என்றாலும் நான் நேரிசை வெண்பாவான நளவெண்பா பாட்டை எடுத்துக்கொண்டுள்ளேன்.
திசை| முகந்| த வெண்| கவி| தைத் தேர்| வேந்| தே உன்| றன்
நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
இசை| முகந்| த தோ| ளுக் கிசை| வாள் வசை| யில்
நிரை நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர்
கருவிளங்காய் தேமா புளிமா புளிமா
தமை| யந்| தி யென்| றோ| துந் தை| யலாள் வென்| றோள்
நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர்
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
அமை| யந்| தி யென்| றோ ரணங்| கு
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை பு
புளிமாங்காய் தேமா பிறப்பு
பிறப்பு & காசு ஆகியவற்றில் உள்ள இறுதி அசையை நேர்பு என்பர்
பிறப்பு = பிறப்| பு - நிரை நேர்பு
காசு = கா| சு - நேர் நேர்பு
இறுதியில் குற்றியலுகரம் வரவேண்டும் ஆனால் அது சு வு லு பு உ ளு ழு னு ணு மு ஙு நு து போன்ற "உ"கர குற்றியலுகரமாக இருக்க வேண்டும்
நாள், மலர் போன்றவை நேர், நிரை அவ்வளவு தான். இதற்கு சிறப்பு விதிகள் இல்லை. அதாவது
நாள் - நேர் அசை; காட்டு - புல் பல் பால் மா க .
மலர் -நிரை அசை; காட்டு- மது இதே அல்லி மல்லி பொழில் கலாம்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் - என்ற குறளையும்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவையிரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்ற குறளையும் அசை பிரித்துப் பாருங்கள்.
விக்கி மூலத்தில் நளவெண்பா உள்ளது.
திங்கள், நவம்பர் 07, 2016
அமெரிக்க தேர்தலைப் பற்றிய நம் தவறான புரிதல்கள்
அமெரிக்க தேர்தலைப் பற்றிய பெரும்பாலான நம் ஆட்களுக்கு சில தவறான புரிதல்கள் இருக்கு.
அமெரிக்காவும் நம்மளைப் போன்றே ஒன்றியம் தான். நாம ஒன்றியம் இல்லை என்று சண்டைக்கு வருபவர்கள் ஒன்றிய நிதிநிலை அறிக்கை (UNION BUDGET) என்று ஒன்றிய அரசு ஏன் சொல்லுகிறது என்பது புரிந்தால் சரி.
அமெரிக்காவில மாநிலங்கள் தான் பலமானவை அடுத்து தான் ஒன்றியம். இந்தியாவில் ஒன்றியம் அப்புறம் தான் மாநிலங்கள் சிறு தனிப்பட்ட அதிகாரம் கூட மாநிலங்களுக்கு கிடையாது எல்லாம் ஒன்றிய ராசாவுக்கு அடங்கிய வரி வசூல் மையங்கள். அமெரிக்காவில் ஒன்றிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முறையை மாநிலம் தான் அந்த மாநிலத்துக்கு வகுக்கும். ஒன்றியத்துக்கு வேலை இல்லை.
அமெரிக்க அதிபரை அமெரிக்கர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதாக நாம் நினைத்துக்கொண்டுள்ளோம் அது தவறு. மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் தான் வாக்கு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
270 தேர்வாளர்கள் வாக்கு கிடைப்பவர்களே அதிபர் ஆக முடியும். மாநிலத்துக்கு மாநிலம் தேர்வாளர்கள் வாக்கு வேறுபடும். காட்டாக - கலிபோர்னியாவுக்கு 55 தேர்வாளர்கள் வாக்கு, பென்சில்வேனியாவுக்கு 20 தேர்வாளர்கள் வாக்கு, புளோரிடாவுக்கு 29 தேர்வாளர்கள் வாக்கு , லூசியானாவுக்கு 8 தேர்வாளர்கள் வாக்கு என்று இருக்கும்.
மெய்ன், நெப்ராசுக்கா தவிர அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலங்களில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்த மாநிலத்துக்கு உரிய தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்கும். காட்டாக - கலிபோர்னியாவில் மற்றவர்களை விட இலாரி அதிக வாக்குகள் பெற்றால் 55 தேர்வாளர்கள் வாக்கும் இலாரிக்கே கிடைக்கும்.
மெய்ன் & நெப்ராசுக்காவில் சிறு மாற்றம். மாநில அளவில் அதிக வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 வாக்குகளும் காங்கிரசு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு (அதிக வாக்குகள் பெறுவோருக்கு) 1 வாக்கும் கிடைக்கும்.
மெய்னில் 2 காங்கிரசு மாவட்டமும் நெப்ராசுக்காவில் 3 காங்கிரசு மாவட்டமும் உள்ளது. மெய்னுக்கு 4 தேர்வாளர்கள் வாக்கும் நெப்ராசுக்காவுக்கு 5 தேர்வாளர்கள் வாக்கும் உள்ளது.
நாம் இலாரி அல்லது திரம்பு அல்லது வேறு வேட்பாளர் யாரும் பிடிக்கவில்லை எனில் நமக்கு பிடித்த ஆள் பெயரை எழுதி அவருக்கு வாக்கு செலுத்தலாம். ஒகையோ மாநிலத்தின் குடியரசு கட்சியை சேர்ந்த ஆளுநர் குடியரசு கட்சி வேட்பாளர் திரம்புக்கு வாக்களிக்காமல் இத் தேர்தலில் நிற்காத மெக்கெய்னுக்கு வாக்கு செலுத்தியது போல். அவர் அந்த மாநிலத்துக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மெக்கெய்ன் அரிசோனா மாநிலத்துக்காரர். மாநில வாரியாகத் தான் கணக்கெடுப்பு நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் தனி சட்டம். அதன் படி தான் தேர்தல் நடக்கும்.
இதே போல் தான் துணை அதிபருக்கும். அதனால் இலாரி வென்றாலும் அவர் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வென்றாக வேண்டும் என்ற அவசியமில்லை. வேறொருவர் கூட துணை அதிபராக வெல்லலாம். காட்டாக குடியரசு கட்சியின் பென்சு, இருவரும் (இலாரி\பென்சு) இணைந்து வேலை செய்தாகத்தான் வேண்டும்.
ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் வெற்றி பெற்றதாக கருதுவது தவறு, முன்னமே கூறிய படி 270 தேர்வாளர்களை பெறுபவர் தான் வெற்றி பெருபவர். காட்டாக கலிபோர்னியா, டெக்சசு, நியு யார்க், பென்சில்வேனியா, புளோரிடா, இலினாய்சு, ஒகையோ, மிச்சிக்கன், வர்சீனியா, மேரிலாந்து, மாசெசூசெட்சு, போன்ற மக்கள் தொகை மிகுந்த 20 மாநிலங்களில் மட்டும் போட்டியிட்டு ஒருவர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற முடியும். ஆனால் அதிபராக வெற்றிபெற முடியாது.
சிறந்த அண்மைய எடுத்துக்காட்டு 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல். அதில் அல் கோர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றும் சார்ச் புசு 270 தேர்வாளர் வாக்குகள் பெற்றதால் அதிபர் ஆக முடியவில்லை. புளோரிடா கவுத்து விட்டது. புளோரிடாவில் புசு, அல் கோரை விட 537 வாக்குகள் அதிகம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதிபர் ஆனார். புசுக்கு கிடைத்த தேர்வாளர்கள் வாக்கு 271 அல் கோருக்கு கிடைத்தது 267. அல்கோர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புசை விட 5,43,895 வாக்குகள் ஒன்றிய அளவில் அதிகம் பெற்றிருந்தார்.
பெருங்கட்சிகளான குடியரசு, சனநாயகக்கட்சி வேட்பாளாராக அல்லாமல் மற்றவரும் பெரிய அளவில் வாக்குகள் பெற முடியும் என்பதற்கு இன்னோரு அண்மைய எடுத்துக்காட்டு 1992 ஆம் ஆண்டில் கிளிண்டன் வெற்றி பெறவும் அப்பா புசு அதாவது 2000 அதிபராகிய புசின் தந்தையும் சீனியர் புசு என்று அழைக்கப்படுவரும் தோற்க காரணம் ராசு பெரோட் என்ற கட்சி சாரா வேட்பாளர் ஆவார். அதிக வாக்குகள் பெற்றாலும் இவர் எந்த மாநிலத்திலும் அதிக வாக்குகள் பெறாததால் தேர்வாளர்களை பெறவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கே அதிக செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கியில் இதை படியுங்கள் உங்களுக்கு பிடிக்கலாம்
அமெரிக்காவும் நம்மளைப் போன்றே ஒன்றியம் தான். நாம ஒன்றியம் இல்லை என்று சண்டைக்கு வருபவர்கள் ஒன்றிய நிதிநிலை அறிக்கை (UNION BUDGET) என்று ஒன்றிய அரசு ஏன் சொல்லுகிறது என்பது புரிந்தால் சரி.
அமெரிக்காவில மாநிலங்கள் தான் பலமானவை அடுத்து தான் ஒன்றியம். இந்தியாவில் ஒன்றியம் அப்புறம் தான் மாநிலங்கள் சிறு தனிப்பட்ட அதிகாரம் கூட மாநிலங்களுக்கு கிடையாது எல்லாம் ஒன்றிய ராசாவுக்கு அடங்கிய வரி வசூல் மையங்கள். அமெரிக்காவில் ஒன்றிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முறையை மாநிலம் தான் அந்த மாநிலத்துக்கு வகுக்கும். ஒன்றியத்துக்கு வேலை இல்லை.
அமெரிக்க அதிபரை அமெரிக்கர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதாக நாம் நினைத்துக்கொண்டுள்ளோம் அது தவறு. மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் தான் வாக்கு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
270 தேர்வாளர்கள் வாக்கு கிடைப்பவர்களே அதிபர் ஆக முடியும். மாநிலத்துக்கு மாநிலம் தேர்வாளர்கள் வாக்கு வேறுபடும். காட்டாக - கலிபோர்னியாவுக்கு 55 தேர்வாளர்கள் வாக்கு, பென்சில்வேனியாவுக்கு 20 தேர்வாளர்கள் வாக்கு, புளோரிடாவுக்கு 29 தேர்வாளர்கள் வாக்கு , லூசியானாவுக்கு 8 தேர்வாளர்கள் வாக்கு என்று இருக்கும்.
மெய்ன், நெப்ராசுக்கா தவிர அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலங்களில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்த மாநிலத்துக்கு உரிய தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்கும். காட்டாக - கலிபோர்னியாவில் மற்றவர்களை விட இலாரி அதிக வாக்குகள் பெற்றால் 55 தேர்வாளர்கள் வாக்கும் இலாரிக்கே கிடைக்கும்.
மெய்ன் & நெப்ராசுக்காவில் சிறு மாற்றம். மாநில அளவில் அதிக வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 வாக்குகளும் காங்கிரசு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு (அதிக வாக்குகள் பெறுவோருக்கு) 1 வாக்கும் கிடைக்கும்.
மெய்னில் 2 காங்கிரசு மாவட்டமும் நெப்ராசுக்காவில் 3 காங்கிரசு மாவட்டமும் உள்ளது. மெய்னுக்கு 4 தேர்வாளர்கள் வாக்கும் நெப்ராசுக்காவுக்கு 5 தேர்வாளர்கள் வாக்கும் உள்ளது.
நாம் இலாரி அல்லது திரம்பு அல்லது வேறு வேட்பாளர் யாரும் பிடிக்கவில்லை எனில் நமக்கு பிடித்த ஆள் பெயரை எழுதி அவருக்கு வாக்கு செலுத்தலாம். ஒகையோ மாநிலத்தின் குடியரசு கட்சியை சேர்ந்த ஆளுநர் குடியரசு கட்சி வேட்பாளர் திரம்புக்கு வாக்களிக்காமல் இத் தேர்தலில் நிற்காத மெக்கெய்னுக்கு வாக்கு செலுத்தியது போல். அவர் அந்த மாநிலத்துக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மெக்கெய்ன் அரிசோனா மாநிலத்துக்காரர். மாநில வாரியாகத் தான் கணக்கெடுப்பு நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் தனி சட்டம். அதன் படி தான் தேர்தல் நடக்கும்.
இதே போல் தான் துணை அதிபருக்கும். அதனால் இலாரி வென்றாலும் அவர் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வென்றாக வேண்டும் என்ற அவசியமில்லை. வேறொருவர் கூட துணை அதிபராக வெல்லலாம். காட்டாக குடியரசு கட்சியின் பென்சு, இருவரும் (இலாரி\பென்சு) இணைந்து வேலை செய்தாகத்தான் வேண்டும்.
ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் வெற்றி பெற்றதாக கருதுவது தவறு, முன்னமே கூறிய படி 270 தேர்வாளர்களை பெறுபவர் தான் வெற்றி பெருபவர். காட்டாக கலிபோர்னியா, டெக்சசு, நியு யார்க், பென்சில்வேனியா, புளோரிடா, இலினாய்சு, ஒகையோ, மிச்சிக்கன், வர்சீனியா, மேரிலாந்து, மாசெசூசெட்சு, போன்ற மக்கள் தொகை மிகுந்த 20 மாநிலங்களில் மட்டும் போட்டியிட்டு ஒருவர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற முடியும். ஆனால் அதிபராக வெற்றிபெற முடியாது.
சிறந்த அண்மைய எடுத்துக்காட்டு 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல். அதில் அல் கோர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றும் சார்ச் புசு 270 தேர்வாளர் வாக்குகள் பெற்றதால் அதிபர் ஆக முடியவில்லை. புளோரிடா கவுத்து விட்டது. புளோரிடாவில் புசு, அல் கோரை விட 537 வாக்குகள் அதிகம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதிபர் ஆனார். புசுக்கு கிடைத்த தேர்வாளர்கள் வாக்கு 271 அல் கோருக்கு கிடைத்தது 267. அல்கோர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புசை விட 5,43,895 வாக்குகள் ஒன்றிய அளவில் அதிகம் பெற்றிருந்தார்.
பெருங்கட்சிகளான குடியரசு, சனநாயகக்கட்சி வேட்பாளாராக அல்லாமல் மற்றவரும் பெரிய அளவில் வாக்குகள் பெற முடியும் என்பதற்கு இன்னோரு அண்மைய எடுத்துக்காட்டு 1992 ஆம் ஆண்டில் கிளிண்டன் வெற்றி பெறவும் அப்பா புசு அதாவது 2000 அதிபராகிய புசின் தந்தையும் சீனியர் புசு என்று அழைக்கப்படுவரும் தோற்க காரணம் ராசு பெரோட் என்ற கட்சி சாரா வேட்பாளர் ஆவார். அதிக வாக்குகள் பெற்றாலும் இவர் எந்த மாநிலத்திலும் அதிக வாக்குகள் பெறாததால் தேர்வாளர்களை பெறவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கே அதிக செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கியில் இதை படியுங்கள் உங்களுக்கு பிடிக்கலாம்
அதிபர் வேட்பாளர் | ஒன்றிய அளவில் வாக்கு | ஒன்றிய அளவில் % |
---|---|---|
கிளிண்டன் | 44,909,806 | 43.01 |
சீனியர் புசு | 39,104,550 | 37.45 |
ராசு பெரோட் | 19,743,821 | 18.91 |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)