வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், மார்ச் 17, 2009

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த தைரியம் கருணாநிதிக்கு வருதான்னு பாப்போம்.

Machi சொன்னது…

அவருக்கு வராதுங்க. காங்கிரசு தயவில் தான் இங்க ஆட்சி ஓடிக்கிட்டிருக்கு.