தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
சனி, மார்ச் 20, 2010
புதன், மார்ச் 17, 2010
நாஞ்சில் தமிழும் நானும்
கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நாஞ்சில் நாட்டு (அதாங்க கன்னியாகுமரி மாவட்டம்) நண்பன் கிடைச்சான். நாங்கள் எல்லாம் விடுதியில் தங்கி படிச்சதால படிப்பு முடியும் முன் எல்லோர் வீட்டுக்கும் ஒரு முறை போவதுன்னு முடிவு பண்ணி இருந்தோம். நாஞ்சில் நாடான் முறைக்கு அவங்க வீட்டுக்கு போனோம். அவன் நாஞ்சில் நாட்டான் தான் ஆனால் நாங்க அவனோட வீட்டுக்கு போன போது அவங்க நாஞ்சில் நாட்டில் இல்லை, தொண்டை நாட்டுக்கு பக்கமா இருந்தாங்க.
அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..
பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.
மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.
நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.
அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...
அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..
பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.
மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.
நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
நாங்க பரவாலைடா, உங்க அப்பா வாத்தியாரு அவருக்கிட்ட படிக்கற பசங்க நிலைமையை நினைச்சு பாத்தா தான் பாவமா இருக்கு.
ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.
அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...
புதன், மார்ச் 03, 2010
சுவாமி விஜய் மல்லய்யாவின் தத்துவம்
பலான சாமியார் நித்தியானந்தா பேச்சு அதிகமிருப்பதால் இந்த இடுகையை இப்ப எழுதறேன்னு நினைச்சுக்காதிங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.
"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா
ஆங்கில மூலம்
“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா

எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.
Please forward this mail to 10 people…Miracle awaits you.
** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.
** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.
** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.
** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.
** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.
மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.
.
சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.
"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா
ஆங்கில மூலம்
“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா

எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.
Please forward this mail to 10 people…Miracle awaits you.
** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.
** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.
** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.
** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.
** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.
மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)