வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 09, 2016

கருத்து கணிப்பும் திமுகவும் அதிமுகவும்


கருத்து கணிப்பு அப்படின்னுட்டு இந்த நாளிதழ்களும் செய்தி தொக்காவும் அடிக்கற கூத்து இருக்குதே அதை சொல்லி மாளாது. 

தந்தி தொக்கா அதிமுகவுக்கு அடிமையா நடக்குது என்பது ஊர் அறிந்த இரகசியம். ஏன்னு சிந்தித்து பார்த்தா தொழில் என்பது தெரியவரும். ஏன்னா திமுகவுக்கு சன், கலைஞர் என்று இரு தொக்காக்கள் உள்ளன. அதிமுகவுக்கு செயா மட்டும் தான் உள்ளது. சன் எல்லோரையும் விட பலம் வாய்ந்தது. தந்தியும் திமுகவுக்கு அடிமை வேலை பார்த்தால் தொழில் சிறக்காது, அதனால் அதிமுகவுக்கு அடிமை வேலை பார்க்குது. புதிய தலைமுறை இந்த விளையாட்டில் கலந்துக்கவில்லை என்பது ஆறுதல். பச்சமுத்துவுக்கு சட்டத்துக்கு புறம்பாக\சட்டத்தை வளைத்து ஏரியில் கட்டிய  தன் கல்லூரிகள் மூலம் வரும் காசே போதும். இந்த தொக்கா வருமானம் பெரிதில்லை. அதனால புதிய தலைமுறை தப்பித்தது. (இதை எழுதிய பின்பு புதவும் கூத்தில் இணைந்துள்ளது) மேலும் தந்திக்கு தினத்தந்தி என்ற நாளிதழும் உண்டு அது தான் அதன் பெரும்பலம் அந்ந நாளிதழுக்கு அரசு விளம்பரம் வேண்டும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி சட்டையை தினந்தந்தி போட்டுக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

தாது கொள்ளையன் வைகுண்டராசன் நியூசு 7 என்ற செய்தி தொலைக்காட்சியை தொடங்கினார். ஏன்னு தெரியுமா? அவரு தாது கொள்ளை வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்த போது செய்தியாளர்கள் நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டனர்  இந்த செய்தி தொக்கா ஆளுங்க அதையும் அவரையும் படம் பிடித்து தங்கள் தொக்காவில் போட்டார்கள். பல நாட்களுக்கு இது தான் எல்லா இடத்திலேயும் சிறப்பு செய்தி. 

எழுதப்படாத விதி என்னவென்றால் செய்தி நிறுவன முதலாளி ஊரை அடித்து உழையில் போட்டாலும் அதை மற்ற செய்தி நிறுவனங்கள் கண்டுக்கப்படாது என்பது தான். வெளியில் பெரிய அளவில் தெரிந்தாலும் அச்செய்திக்கு சிறப்பிடம் கொடுக்காமல் சிறிது காட்டி விட்டு மற்றதுக்கு சிறப்பிடம் கொடுத்து இதை பெரிதாக காட்டக்கூடாது என்பது. ஏன் வைகுண்டம் செய்தி தொக்கா தொடங்கினார் என்று இப்ப புரிகிறதா? வைகுண்டத்துக்கு காசு பற்றி எந்த கவலையும் இல்லை. விளம்பரமே வரவில்லையென்றாலும் அவரால் நியூசு 7 தொக்காவை நடத்தமுடியும். 

நியூசு 7 இளம் செய்தி தொக்கா, எப்படி பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது? தந்தி காரன் அதிமுகவுக்கு ஆதரவா கருத்து கணிப்பு போடறான் அப்ப திமுவுக்கு ஆதரவா போடறது தான் சரியான வியாபார தந்திரம். நியூசு 7உம் அதைத்தான் செய்தது. இதுக்கு நம்பக்கத்தன்மையை கூட்ட பங்காளி சண்டையில் உள்ள தினமலரை கைக்குள் போட்டுக்கொண்டது. 
சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தான் நியூசு 7 உடன் ககவில் ஈடுபட்டது

தினமலர் எப்படி அதிமுகவுக்கு எதிராக என்று நினைப்பது புரிகிறது. ஒரு பங்காளி அதிமுகவுக்கு நெருக்கமாக உள்ளதால் எதிர் பங்காளிகள் அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக கருத்து கணிப்பை வெளியிட்டார்கள். கவனிக்க சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தினமலர் இன்னும் பங்காளிகள் கையில்தான் உள்ளது. சண்டை நீதிமன்றத்தில் உள்ளது. சில  தினமலர் ( சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு) பதிப்புகள்  ஒரு பங்காளிகிட்டயும் மீதமுள்ள பதிப்பு மற்றொரு பங்காளி பொருப்புலேயும் உள்ளது. அது தான் தினமலர் பெயர் வந்துள்ளது. 

நியூசு 7 கருத்து கணிப்பால் அதிமுக கடுப்பாகி தன் தேர்தல் அறிக்கையில் தான் ஆட்சிக்கு வந்தால் தாது மணல் அள்ளும் வணிகத்தை அரசே ஏற்ற நடத்தும் என்று வைகுண்டத்துக்கு பெரிய குண்டை போட்டது. இப்ப வரவில்லையென்றாலும் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பது வைகுண்டத்துக்கு தெரியும். ஆப்பு உறுதி. மேலும் தற்போது அதனிடம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் பாசகவிற்கு அதிமுக ஆதரவு தேவை. கூட்டி கழித்து பார்த்தால் வைகுண்டத்தின் அடி மடியிலேயே அதிமுக கை வைக்கிறது. மேலும் அரசு கம்பிவட வலையமைப்பில் நியூசு 7 இக்கு அதிமுக சிக்கலை ஏற்படுத்தியது. (தற்போது அதிமுக தான் ஆளுங்கட்சி என்பதை புரிந்து கொள்க)



அதிமுக தேர்தல் அறிக்கையீல் தாது மணல் பற்றி
அதனால் கலவரமடைந்த வைகுண்டம் வெள்ளம் பாதித்த சென்னையில் அதிமுகவுக்கு பெரு ஆதரவு உள்ளது என்று கருத்து கணிப்பை வெளியிட்டார்.  அவரின் நல்ல காலம் சென்னையை பற்றி அதுவரை நியூசு 7 கருத்து கணிப்பை வெளியிடாததுதான்.

வைகுண்டத்துக்கு கிலி பிடித்தபின்பு

தமிழகத்தில் கருத்து கணிப்பின் போக்கு இப்படித்தான். அதனால இந்திய அளவில் சிறப்பாக உள்ளது என்று நினைக்காதிர்கள் அங்கும் கருத்து கணிப்பு பல்லிளிக்கிறது. பொய் கருத்து கணிப்பை வைத்தே தேர்தல் காலம் முழுவதும் ஓட்டுபவர்கள் தான் அவர்கள்..

இப்ப தந்தி, நியூசு 7 உடன் புதிய தலைமுறையும் இக்கூத்தில் இணைந்துள்ளது. ஒன்றிய அளவில் காட்ட ஆங்கில தொக்கா என்டிடிவியும் இணைந்துள்ளது.

புதன், ஏப்ரல் 13, 2016

2016 தேர்தல் காலம் என் பார்வை



தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது.  கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?

                                                               --**--

நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
                     
                                                               --**--

5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு  ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.


                                                                  --**--

சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .

இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

                                                                   --**--

அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக  புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே.  பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்  யாரு விசாரிச்சு பாருங்க.


மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக  இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.


தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும்  மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.

                                                                   --**--

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.

தேமுதிக + மநகூ+தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு என் அடுத்த பார்வை வரும் எப்படியும் தேர்தல் முடியும் முன் ஒரு இடுகையை போடலாமுன்னு  திட்டம் வைத்துள்ளேன்.