வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, செப்டம்பர் 20, 2024

மு. கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல

கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல. அவர் தமிழறிஞர் மட்டுமே.  தற்போதைய வெற்று அரசியலுக்காக திமுகவினர் அப்படிக்கூறுவது அவருக்கு பெருமை சேர்க்காது மாறாக இழுக்கைத் தரும்.

திமுக தொண்டர்கள்  அல்லாத பலரும்  இந்த கோயபல்சு பரப்புரைக்கு இரையாகி கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்கிறார்கள். 

இயற்றமிழ், நாடகத்தமிழ், இசைத்தமிழ் ஆகிய மூன்று தமிழ்களிலும் அறிஞராக உள்ளவரையே முத்தமிழ் அறிஞர் என்போம். அந்த வகையில் வெகு சிலர் தான் இருப்பர் இப்போது எவர் உளர் என அறியேன்.  இயற்தமிழில் அதிகமாகவும் அதைவிடக் குறைவாக  இசைத்தமிழிலும் அதைவிடக் குறைவாக நாடகத்தமிழிலும் இருப்பார்கள். 

முத்தமிழும் அறிந்திருப்பது வேறு முத்தமிழிலும் அறிஞராய் விளங்குவது என்பது வேறு, இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் சிக்கலில்லை.  காட்டாக வான்கோழியை மயில் என்று திரும்ப திரும்ப கூறினாலும் அது மயில் ஆகாது என்பதை அறிக. 



திரைப்படத்தை  விட நாடகம் சிறப்புடையது என்றாலும் நாடகங்கள் குறைந்து திரைப்படம் அதிகமாகிவிட்ட படியால் இக்காலத்தில் திரைப்படத்தையும் நாடகத்தமிழில் சேர்க்கலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு மாறுபட்ட  கருத்து இருக்கலாம். ஆனால் திரைப்படமானாலும் நாடகமானாலும் நாடகத்தமிழுக்கான இலக்கணம்  ஒன்று தான் அது இன்னும் மாறவில்லை.

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் அடிகளாசிரியர் முத்தமிழின் இலக்கணத்தை பாட்டாகவே வடித்து தந்துள்ளார். 

ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமையப் பாவி
மோனை முதலாம் தொடையழகு தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும்

பாவினம் என்றும் பண்ணத்தி என்றும்
செந்துறை என்றும் செப்பும் பாட்டில்
அறமுதற் பொருளை அமையப் பொருத்திப்
பண்களை அமைத்துப் பாடுதல் தானே
இசைத்தமிழ் என்னும் இன்தமிழ் ஆகும்

நடித்தலுக் கேற்ற வெண்துறைப் பாட்டில்
அறமுத லாகிய பொருள்வகை அமைவரப்
பாடி ஆடுதல் நாடகத் தமிழாம்

பாடி ஆடி நடிப்பது தான் நாடகத் தமிழ்  வரையறைக்குள் வரும் என்று  தெளிவாக  குறிபிடப்பட்டுள்ளது.  

தமிழில் பா எழுதுபவர்கள் எல்லாம் தமிழறிஞர்கள் அல்ல, இசை கோர்ப்பவர்கள் எல்லாம் இசை அறிஞர்கள் அல்ல, பாடி ஆடுபவர்கள் எல்லாம் நாடக அறிஞர்கள் அல்ல.

இதனால் நாடகத்திற்கோ திரைப்படத்திற்கோ கதை, திரைக்கதை , வசனம் மட்டும் எழுதுபவர்களையோ இயக்குபவர்களையோ, பாட்டெழுதுபவர்களையோ இசை கோர்ப்பவர்களையோ அதில் சேர்க்க முடியாது இவை இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் மட்டுமே  சேரும் என்பதை அறியலாம். இதனால் கருணாநிதி நாடகத் தமிழ் அறிஞர் இல்லை என்பதையும் முத்தமிழ் அறிஞர் என்பது தவறு என்பதையும் அறியலாம்.

கருணாநிதி தமிழில் புலமை மிக்கவர். சில காரணங்களால் அவர் தமிழறிஞர் அல்ல என்றும் சிலர் அவர் மறைந்த 5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே வாதிடுகிறார்கள். சிலர் இப்படி வாதிடுவார்கள் என்பதை முன்கூட்டி  அறிந்ததாலும், பின் வரும் காலங்களில் தமிழ் அறிஞர்கள் எவரும், தான் தமிழறிஞர் என்பதை மறுகக்கூடாது என்பதாலுமே இவர் முன்பே சங்கத்தமிழ் எழுதி இருந்தாலும் கூடுதலாக  குறலோவியம், தொல்காப்பியப் பூங்காவை முன்னெச்சரிக்கையாக இயற்றினார் எனக் கருதலாம். தொல்காப்பியப் பூங்கா நூலை நான் படித்ததில்லை தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது எளிய செயல் அல்ல என்பதால் அதையே நான் கருணாநிதியை தமிழறிஞர் என்று நிருபிக்கும் சிறந்த படைப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஆனால் எழுதியபோது பலர் தொல்காப்பிய பூங்கா நூல் எழுதும் முயற்சியை வியந்து கூறியதை கேட்டதுடன் சரி , அதன்பின் தமிழறிஞர்கள் மட்டுமல்ல திமுகவினர் உட்பட எவரும் அந்த நூலைப்பற்றி பேசிக்கேட்டதில்லை.


ஞாயிறு, ஜூலை 07, 2024

சூழ்நிலையால் எதிர் பிம்பத்துக்கு ஆளானேன் ஆனால் நான் அந்த எதிர் பிம்பம் அல்ல.

 தொலைக்காட்சி தொகுப்பாளினி பார்க்க அழகாக இருப்பார், வயது என்று பார்த்தால் பன்னிரண்டாவது -  முதலாண்டு கல்லூரி மாணவி வயதாக இருக்கும். (பெயரைக் கூறினால் தெரிந்து விடும், அவரின் பெயரைக்கூறுவது அறமாகாது என்பதால்  பலவற்றைக் கூறுகிறேன் இதை வைத்து முடிந்தால் கண்டுகொள்ளுங்கள்) ஆனால் அவரின் நிகழ்ச்சியில் தமிழை கொதறிவிடுவார். சன் மக்களே இப்படி கொதறினால் தான் மக்களுக்கு பிடிக்கும் என்றிருப்பார்களோ அல்லது இவர் அப்போது அப்படித்தான் இருந்தாரோ என அறியேன். அவரின் தமிங்கிலத்தாலும்  கோணங்கித்தனமான கேணத்தனமான செய்கைகளாலும் அந்நிகழ்ச்சி எனக்கு பிடிக்காது. பெப்சி உமாவும் அப்போது நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன்.

சில ஆண்டுகள் கழித்து காஞ்சி மடத்தை தொடர்பு படுத்தி அவரைப்பற்றி தவறான பிம்பம் வரும்படி நாளேடுகளில் செய்தி வந்தது, அதுவே நான் அவரைப்பற்றி அறிந்த கடைசி செய்தி.

’ஒரு நடிகையின் கதை’ தொடர் குமுதத்தில் வந்த போது வாரா வாரம் அடித்து பிடித்து கடைக்கு குமுதம் வந்ததும் முதல் ஆளாக வாங்கி இந்த வாரத்தில் கூறப்பட்டுள்ள நடிகர் யாராக இருக்கும் என்று  விவாதிப்போம் அப்படிப்பட்ட எங்களுக்கு (அதில் அடியேனும் அடக்கம்) கடைசியில் பார்த்த செய்தி தானே பசுமரத்தில்  அடித்த ஆணி போல் நிற்கும். இதில் என் தவறு ஏதும் உள்ளதா?

கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நெருங்கிய நண்பரொருவர் இவர் வந்துள்ளார் கூட்டத்தில்  பேசுகிறார் அருகில் தான் அந்த இடம் உள்ளது வா என்றார். நான் நாளேடுகளில் வந்தாரே அவரா என்றேன். ’ஆம்’ என்று விட்டு ஓரிரு படப்பெயர்களை கூறி அதில் நடித்துள்ளார் என்று விளக்கம் கொடுத்தார்.



என் நேரம் அவரும் அங்கு இருந்தார், மறைவாக இருந்ததால் நான் கவனிக்கவில்லை. தொகுப்பாளினி வெறுக்கும் செய்தியை நான் தொடர்பு படுத்தி அவரை நினைவுக்கு கொண்டுவந்ததால் அவருக்கும் தர்மசங்கடம், நம்மை இன்றும் இப்படி நினைத்து நினைவில் வைத்து உள்ளார்களே என. என்னைப்பற்றி ஓர் கரும்புள்ளி அவரிடம் விழுந்து விட்டது 😞  என்னை அழைத்த நண்பருக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிட்டேன். அவர் நிலைமையை சமாளிக்க இவர் நடித்த ஓரிரு படங்களை கூறி, அதில் நடித்துள்ளார் இப்பொழுதெல்லாம் தொக்கா தொகுப்பாளினி என்பதை பெரும்பாலோர் மறந்துவிட்டனர், இந்தப்படத்தில் நடித்த நடிகை என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும் என்றார். அந்த தொகுப்பாளினி பின்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது அப்போது தான் எனக்குத்தெரிந்தது. 

உடனே அவர்களுடன் கூட்ட அறைக்கு கிளம்பி விட்டேன். அது கடுங்குளிர்காலம், ஆனால் உதட்டு பசையை ( lip balm ) எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டேன். அது குளிர் காலம் என்பதால் உதடில் ஈரமில்லாவிட்டால் உதடு வெடித்துவிடும், உதட்டுப்பசையை எடுக்க மறந்ததால் எச்சிலால் உதட்டை ஈரப்படுத்திக்கொள்வது தான் தப்பிக்க ஒரே வழி. கூட்ட அறையில் இருக்கும் போது உதடு நன்கு உலர்ந்து விட்டது எச்சிலால் ஈரப்படுத்தாவிட்டால் உதட்டில் வெடிப்பு வந்துவிடும். அவர் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். அவர் இந்தப்புறமும் அந்தப்புறமும் தலையை  திருப்பி திருப்பி பேசிக்கொண்டிருந்ததால் அவர் நானிருக்கும் பக்கத்தை விட்டு மறுபுறம் தலையை திருப்பி பேசும் போது நாக்கை சுழற்றி எச்சிலால் மேல் கீழ் உதடுகளை  நனைக்கலாம் என்றிருந்தேன். அவர் அந்தப்பக்கம் திரும்பியதும் மெதுவாக நாக்கை சுழற்றி உதடுகளை ஈரப்படுத்த ஆரம்பித்தேன். 

பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்! என்பதற்கிணங்க கெரகம் நான் உதடுகளை நாக்கால் ஈரப்படுத்தும் பொழுது இந்தப்பக்கம் திரும்பி,   முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த நான் நாக்கை சுழற்றுவதை பார்த்துவிட்டார். அவரின் முகமாற்றத்தை கவனித்துவிட்டேன் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அது உணர்த்திவிட்டது. எனக்கு சங்கடமாக்கிவிட்டது. தவறான எண்ணத்துடன் அவரைப்பார்த்து நாக்கை சுழற்றி எச்சில் (ஜொல்) விடுவதாகவும் மற்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் நினைத்து விட்டார் (நினைத்து இருப்பார்). என்னைப்பற்றி  இருத்த கரும்புள்ளி இப்பொழுது கருங்கோளமாகவே மாறிவிட்டது. பின்பு கூட்டம் முடியும் வரை நான் இருந்த பக்கம் திரும்பாமல்  ஒரே பக்கமாக பார்த்து பேசினார், அது எனக்கு இன்னும் பெரும் சங்கடத்தை உருவாக்கி விட்டது.

என்னைப்பற்றி தவறான கருங்கோளம் அவரிடம் உருவானதை தவறு என்று கூற முடியுமா? முடியாது, அதுவே சரியானதும் ஆகும். அதேநேரம் நான் அந்த கருங்கோளத்துக்கு உரியவனா என்றால் அதுவும் இல்லை. சூழ்நிலை எப்படியெல்லாம் ஒருவரைப்பற்றிய பிம்பத்தை உருவாக்குகிறது என்பதற்கு இது ஒரு காட்டு.

இப்போது கூட ஒரு பிரச்சனையில்,  பிரச்சனை ஏன் அது போல் உருவாகிறது என்று தெளிவாக கூறியதுடன் அது அப்படி நடக்காமல் இருப்பதற்கான வழி ஒன்றையும் கூறியிருந்தார்.

சனி, செப்டம்பர் 09, 2023

நீதிக்கட்சியால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரவில்லை

சுப.வீரபாண்டியன், அருள்மொழி என எல்லோரும் போகிறபோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது நீதிக்கட்சியின் ஆட்சி என்கிறார்கள்.

நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணை செயலாக்கம் பெறவில்லை; சுயேட்சை அமைச்சரவையான சுப்பராயன் அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரது முன்னெடுப்பிலேயே இட ஒதுக்கீடு அரசாணை கொண்டு வரப்பட்டு, அது தமிழ்நாட்டில் செயலாக்கம் பெற்றது என்பது வரலாறு!


அரசாணை செயலாக்கம் பெறவில்லை என்றால் என்ன ஆகும் என்பற்கு காட்டு :-- 

மகோரா ஆட்சியில் காவல் துறையில் உயர் அதிகாரிகள் காவல்துறையினரை பணியாளர்களாக (ஆர்டர்லிகள்) வைத்துக்கொள்ளுவதை நீக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த காவல்துறைப் பணியாளர்கள் காவலர்களுக்கான அரசு சம்பளத்தை பெறுவர். ஆனால் மகோரா வெளியிட்ட அரசாணை  தாலின் ஆட்சி வரையிலும் செயலாக்கம் பெறவில்லை, இன்னும் காவல்துறையினரை பணியாளர்களாக வைத்துக்கொள்ளும் போக்கு தொடர்கிறது. செயலாக்கம் பெறாத வரையில் அரசாணை என்பது பேப்பரை மட்டுமே அலங்கரிக்கும் வெற்று அலங்கார வார்த்தையே.

சனி, மே 13, 2023

கருநாடக தேர்தல்- 2023

 கருநாடக தேர்தல்- 2023



சிக்மகளூரில் தமிழக பாசக பொறுப்பாளர் CT ரவி - தோல்வி. 

CT இரவி (பாசக) 79,128 - 46.53%

தம்மைய்யா (காங்கிரசு) 85,054 - 50.01%



பாசகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய ஊப்ளி-தார்வார்ட் மத்தி தொகுதியில் செகதீசு சட்டர் தோல்வி

செகதீசு சட்டர் (காங்கிரசு) 60,775 - 37.89%

மகேசு தென்கினாகை (பாசக) 95,064 - 59.27%


கீழுள்ள அனைவரும் வெற்றி.

சிவக்குமார்- 143,023 (75.03%) - நாகராசு (மசத) 20,631 (10.82%) - அசோகா (பாசக) 19,753 (10.36%)

சித்தராமையா- 119,816(60.09%) - சோமன்னா 73,653 (36.94%) - பாரதி சங்கர் (மசத) 1,037 (0.52%)

குமாரசாமி - 96,592 (48.83%) - யோகராசா (பாசக) 80,677 (40.79%) - கங்காதர் (காங்) 15,374 (7.77%)

பொம்மை - 100,016 (54.95%) - பதன் யாசிராமெத்கான் (காங்) 64,038 (35.18%) - சசிதர் யெலிகர் (மசத) 13,928 (7.65%)


வெள்ளி, ஏப்ரல் 07, 2023

இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி? - சிவம் சங்கர் சிங் (பா.ச.க.வின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)

 நெடியது ஆனால் அனைவரும் படிக்கவேண்டியது. நமக்கு தெரியாத அரசியல் கட்சிகளின் வண்டவாளங்களை அறிந்துகொள்ளலாம், நாம் பலரும் அறியாமல் பெரிய கட்சிகளின் சதியில் மாட்டியிருப்பதை அறியலாம்.


இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?
(நீங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது)
- சிவம் சங்கர் சிங்
(பா.ச.க.வின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)
-தமிழில் இ.பா சிந்தன்.
- எதிர் வெளியீடு

சிவம் சங்கர் சிங், நூலின் ஆசிரியர்.
இந்தியா முழுக்க பல தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவிய தேர்தல் ஆலோசகர்.
பிரபல தேர்தல் ஆலோசனையாளர் பிரசாந்த் கிசோரின்
IPAC என்கிற இந்திய அரசியல் நடவடிக்கை குழுவின் மூலம் அரசியல் ஆலோசனை வழங்கும் துறைக்குள் நுழைந்தார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். Data analytics எனப்படும் தரவு பகுப்பாய்வு உத்திகளை தேர்தல் பிரச்சாரங்களில் புகுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறார்.

மொழிபெயர்ப்பாளர் இ.பா.சிந்தன், மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்து வரும், இவர் சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பல நாடுகளில் அரசியல் சூழ்நிலை குறித்து இணையத்திலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

1. எப்படித்துவங்கின எல்லாமும்
அயல்நாட்டுக்கு படிக்கப்போகும் பெரும்பாலான இந்தியர்களைப் போலவே சிவம் சங்கர் சிங்கிற்கும் ஒரு கனவு இருந்தது.
அங்கே, படிப்பு முடிந்ததும் கொஞ்ச காலம் வேலை செய்துவிட்டு, போதுமான அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டு, இந்தியா திரும்ப வேண்டும் என்றும், அப்போது இந்தியாவின் அரசியலில் ஏதாவது பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அந்தக் கனவை தொடர்ந்த பயணம் தான் இந்த நூல்.

முதல் பகுதியில் குறிப்பிடத்தக்க சில

* அரசியலை கண்டுகொள்ளாமல்,அதில் அக்கறை இல்லாமலும் இருக்கிற மக்களில் எவ்வளவு பேரை, ஒரு கட்சி ஆதரவளிக்க வைக்கிறதோ, அந்த அளவுக்கு அக்கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது.

*CAG(citizens for accountable governance) என்ற அரசு சாரா அமைப்பினை உருவாக்கிய பிரசாந்த் கிஷோர், "வளர்ச்சியின் நாயகன்" மோடி என்று நாடு முழுவதும் அவருக்கு ஒரு பிரமாண்ட பிம்பத்தை கட்டி அமைக்கிறார்
.
*2014 இல் பாசக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, பிரதமராக பதவியேற்ற மோடியின் நம்பிக்கைக்குரிய இடத்திலிருந்து பிரசாந்த் கிசோர் விலக்கி வைக்கப்பட்டார். ஆக, சிஏஜி அமைப்பு நிர்மூலம் ஆனது.

*லேம்ப் ஃபெலோசிப் திட்டம் என்பது பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வகம் என்னும் ஒரு அரசுசாரா நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிவதற்கு தேர்வுகள் நடத்தப்பட்டு இந்தியாவின் ஏதாவதொரு பாராளுமன்ற உறுப்பினரோடும் பதினோரு மாதங்கள் இணைந்து பணிபுரியும் அரிய வாய்ப்பு சிவம் சங்கர் சிங்கான எனக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் கிடைத்தது. இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் அதில் இணைந்தேன்.

*சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்பியான பிரேம் தாஸ் ராய் உடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டேன்.

*பாராளுமன்றமே, எம்பிக்கள் உத்வேகத்துடன், திறம்படவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை என்பதை, எம்பிகள் உடன் பணிபுரிந்த எங்களில் பலருக்கும் புரிந்தது.

*தலைமையின் உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும் என்பதே எம்பிக்களின் கடமையாக இருந்தது.

*1985 களில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த கட்சி தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது நிச்சயமாக நல்லதொரு காரணத்தின் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் அதனால் ஒட்டுமொத்த பாராளுமன்ற நடவடிக்கைகளை விருந்து சடங்கு ஆகி போன பக்கவிளைவுகளையும் சரிவர கவனித்திருக்கலாம்.

*தேர்தலுக்காக பணிபுரிந்த போது தான் நடுநிலையான வை என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்த பல ஃபேஸ்புக் பக்கங்களை நிர்வகிப்பதே, அரசியல் கட்சிகள் தான் என்ற உண்மை எனக்குத் தெரியவந்தது.

*பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு வாக்களிப்பது

*பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்காக, தனிநபர் தீர்மானங்களை கொண்டு வருவது.

*விவாதங்களில் கலந்து கொள்வது

*கேள்விகள் கேட்பது

*பாராளுமன்ற நிலைக்குழுககளில் பங்குகொண்டு பாராளுமன்றத்தை 
பொறுப்புள்ளதாக்குவது
ஆகியவை ஒரு எம்பியின் பாராளுமன்ற கடமைகள் என தெரிந்துகொண்டேன்.

*"ஸ்டார்டு கொஸ்டின்" எனப்படும் நட்சத்திர கேள்விகளை அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர் நேரடியாக பாராளுமன்றத்திற்கு வந்து பதில் அளிப்பார். மற்ற கேள்விகள் நட்சத்திர அந்தஸ்து இல்லாத கேள்விகளாகக் கருதப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும்.

*லேம்ப் பயிற்சியை பதினொரு மாதங்கள் முடிந்த பிறகு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் கில் விண்ணப்பித்து வேலைக்கான உத்தரவாதம் கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன்.

பகுதி 2 அரசியல் ஆலோசகர்கள்

*உண்மை இல்லாத விஷயங்களை கூட அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு ஊடக வெளிச்சத்திற்காக உண்மையாக ஆக்கினோம். அவற்றில் ஒன்று, நாடறிந்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷனை, தானே தாக்கியதாக பெருமை பொங்க பரப்பினார் பாஜக இளைஞர் அமைப்பின் தேசிய பொறுப்பாளராக இருந்து பிறகு செய்தி தொடர்பாளரான தஜீந்தர் பால்சிங் பக்கா.

பகுதி 3. தொழில்நுட்பமும் டேட்டாவும்

*மணிப்பூர் தேர்தலில் செய்தது போலவே திரிபுரா தேர்தலிலும் மாணிக் சர்க்கார் அரசுக்கு எதிரான 100 குற்றச்சாட்டுகளை தயாரிக்க முயற்சி செய்தோம். ஆனால் தோல்வியுற்றோம்.
மாணிக் சர்க்கார் அரசுக்கு எதிராக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சொல்லிக்கொள்ளும்படியான குற்றச்சாட்டுகளை எங்களால் தயாரிக்கவே முடியாது என்பதையும் புரிந்து கொண்டோம்.

*தற்செயலாக உருவாக்கப்பட்ட வெற்றி முழக்கம் தான் "ஆப் கி பார் மோடி சர்க்கார்".

*இருவேறு மக்கள் குழுவிற்கு இருவேறு செய்திகளை கொண்டுசெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமாகியிருக்கிறது. இது ஒன்றும் புதிது இல்லை. ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் இப்படியாக செய்து தான் அமெரிக்க தேர்தலில் முடிவுகளை மாற்ற முடிந்திருக்கிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதனை தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்த துவங்கி இருக்கிறார்கள். மக்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப பிரச்சாரம் செய்யப்படுவது பேஸ்புக் நிறுவனத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் பல விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களிலும் அப்படியான தில்லுமுல்லுகளை செய்திருக்கிறதா என்று விசாரிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரே பரிந்துரை செய்திருக்கிறார்.

*பாஜகவை ஃபேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் 1.46 கோடி, யூடிபில் பின்தொடர்பவர்கள் 4.5 லட்சம், ட்விட்டர் ஒரு கோடி பேர்

*வாட்ஸ் அப்பை தாண்டியும் புதிய வாய்ப்புகளையும் பாஜக தேடிக் கொண்டேதான் இருந்தது. "நமோ செயலி" அல்லது "நரேந்திர மோடி செயலி" என்ற ஒன்றை உருவாக்கி, அதனை மிகத் தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கியது. வாட்ஸ்அப் இயங்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்படும் எந்த நிலையிலும் அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே நமோ செயலியை பாஜக அறிமுகப்படுத்தியது.

*பாரதிய ஜனதா கட்சிக்கு தன்னார்வத் தொண்டர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

*மின்சார கட்டணம் கட்டும் ரசீது மூலம் கூட ஒரு குடும்பத்தின் பின்னணி அலசப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு தேர்தலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

4. ஃபேக்(Fack) செய்திகளும் திட்டமிட்ட பிரச்சாரமும்

*ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் நிச்சயமாக அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.
ஒருகட்டத்தில் பொய்யைச் சொன்ன நீயே கூட நம்ப தொடங்கிவிடுவாய்.
நாஜி ஜெர்மனியின் பிரச்சார மந்திரியாக இருந்த ஜோசப் கோயபல்ஸ் அவர்களின் மேற்கோள் இது . இந்திய அரசியல்வாதிகளின் பெரும்பாலானோருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான வெற்றிகரமான அரசியல்வாதிகளுக்கு அன்றாட நடைமுறை அரசியலில் கோயபல்ஸ் கருத்துக்கள் நிச்சயமாக புதிதாக இருக்காது.

*ஃபேக் செய்திகளை உருவாக்கி, பரப்பி வெற்றி கொள்ளும் கட்சிக்கும், அவருக்கு எதிராக தோல்வி அடைந்து கொண்டே இருக்கின்ற கட்சிக்கும் ஃபேக் செய்தி உருவாக்கி பரப்புவது தவிர வேறு வழி என்ன இருக்கிறது? அதனால்,ஃபேக் செய்திகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு ஃபேக் செய்திகளும் வளரத்தான் போகின்றன.

5. ஒரு தேர்தலை வெல்வது

*தலைமையிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதால் கட்சி கட்டுப்பாட்டுடன் செயல்பட முடியும் என்பதை தவிர, குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதரவுக் கூட்டம் உருவாகி அதுவே நாளடைவில் பல கட்சிகளாக உடைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

*இந்து மதம் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக கட்டமைக்கப்படும் ஃபேஸ்புக் பக்கங்களை பின்தொடரும் லட்சக்கணக்கானோர் பாஜகவால் மட்டுமே இந்து 
மதத்தை காப்பாற்ற முடியும் என்றும் நம்புகின்றனர்.

*வரலாற்றை திரித்து காங்கிரசின் மீது மக்களுக்கு வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பகத்சிங்கை சிறையில் சென்று காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கவில்லை போன்ற பொய்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.
உண்மையில் ஜவகர்லால் நேருவே நேரடியாக சிறைக்குச் சென்று "பகத் சிங்கையும்,
பத்துகேஸ்வர் தத்தையும் சந்தித்தார்" என்ற எளிய உண்மையை கூகுளில் தேடினால் கூட தெரிந்து கொண்டுவிடலாம்.
வரலாற்றில் மிக தெளிவான உண்மை நிலை கூட அறிந்திராத பிரதமராக இருக்கிறார் என்று மோடி மீது ஏளனப்பார்வை தானே மக்களுக்கு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக,இத்தகைய பொய்களின் மூலமாக பாஜகவிற்கு அரசியல் ஆதாயம் தான் கிடைத்தது.
பாஜகவில் இருந்து ஏன் விலகினேன்?

*2014 ஆம் ஆண்டில் மோடியின் மாய வார்த்தைகளால் என்னை போலவே பலரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. பாஜகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளிலிருந்து தான் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக பாஜகவிலிருந்தும், ஏபிவிபி இருந்தும்,இன்னும் சொல்லப்போனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்துமே கூட பலபேர் என்னுடைய கருத்திற்கு ஆதரவளித்தனர்.

*தேசங்களையும் அது இயங்குவதற்கு தேவையான அமைப்புகளையும் கட்டமைப்பதற்கு பல பத்தாண்டுகள், நூறு ஆண்டுகள் கூட தேவைப்படும் அப்படியாக உருவாக்கி வைக்கப்பட்டிருந்த பலவற்றையும் பாஜக அழித்திருக்கிறது என்பதே அதனுடைய தோல்விக்கு உதாரணம்.

*தேர்தல் நிதி பத்திரம் - நம் நாட்டின் அரசியல் கட்சிகளை கார்ப்பரேட்டுகளுக்கும் அன்னிய சக்திகளும் விலை கொடுத்து வாங்கி ஊழலை சட்டபூர்வமாக அங்கீகரித்து, அதற்காகவே உருவாக்கப்பட்ட நடைமுறை. ஊழல் குறைந்து இருப்பது போல தோன்றுவது இதனால்தான். உண்மையில் அமெரிக்காவைப் போன்று நேரடியாக கண்டுபிடிக்கமுடியாத மாதிரியான ஒரு திட்டத்தை உருவாக்கி ஊழலை சட்டப்படி அங்கீகரிக்கும் ஒரு நடைமுறையாக மாற்றியிருக்கிறது பாஜக அரசு.

* திட்டக் கமிஷனை ஒழித்தது

செய்யும் திட்டங்கள் சரியாக செயல்படுத்த படுகின்றனவா என்று அறிந்துகொள்ள திட்ட கமிஷனின் அறிக்கைகள் தான் பெரும் உதவியாக இருந்து வந்தன. அது ஒழிக்கப்பட்டு விட்டதால், இனிமேல் அரசாங்கம் கொடுக்கிற தகவல் மட்டுமே தான் இருக்கப் போகின்றன.

*சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை முறைகேடாக பயன்படுத்துதல்

*பணமதிப்பிழப்பு படு தோல்வியில் முடிந்த ஒரு திட்டம்.
பயங்கரவாதத்தையும் காகித பணத்தின் தேவையை குறைக்கவும் ஊழலை உடைத்தெறியும் அமல்படுத்த பட்டதாக கூறிய அனைத்துமே அபத்தமான பொய்ப்பிரச்சாரப் பரப்புரைகள் தான்.
உண்மையிலேயே, இந்தியாவின் தொழில் துறையையும், வியாபாரத்தையும் ஒட்டுமொத்தமாக இத்திட்டம் அழித்துவிட்டது.

*ஜிஎஸ்டி செயல்படுத்திய விதம்
அவசரகதியில் செயல்படுத்தப்பட்டால் வியாபாரத்தில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.

*வீண்பெருமைக்காக வெளியுறவு கொள்கைகளையே குழப்பி வைத்திருப்பது.

*சன்சாத் ஆதர்ஷ், கிராம் யோஜனா, மேக் இன் இந்தியா, ஸ்கில் டெவலப்மன்ட் போன்ற பல்வேறு திட்டங்களின் தோல்வி.

*பெட்ரோல் மற்றும் டீசலின் அதிகப்படியான விலை உயர்வு

*மிக முக்கியமான அடிப்படை பிரச்சனைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாதது

*விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களை தொடர்ச்சியாக 
அவமானப்படுத்துவது

*70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்காதது போல் மாயையை உருவாக்குவது.

*மேற்கண்ட காரணங்களால் நான் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி எனது ராஜினாமாவை 2018ல் சமர்ப்பித்தேன்.

7 சில பரிசோதனை முயற்சிகள்

*ஊரிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிய மனித உரிமைப் போராளி ஐரோம் ஷர்மிளா ஒரு கட்சியை துவங்கினார். முதலில் போட்டியிட்டு அவர் பெற்ற வாக்குகள் வெறும் 90 மட்டுமே.

*ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டம் பெற்ற பின்னர் லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் யேல் பல்கலைக்கழகத்திலும் படித்துவிட்டு அரசியலில் நுழைந்தார் அசாமைச் சேர்ந்த பரோடியுத் போரா. மக்காவிலிருந்து பிறகு தனிக்கட்சியாகத் தொடங்கிய லிபரல் ஜனநாயகக் கட்சியில் முன்னனுபவம் கொண்டிருக்கும் தனி நபர்கள் ஓட்டு போட்டாலும் கூட புதிய கட்சிகளால் பெரிய அளவுக்கு வெற்றிபெற முடியாது என்பதற்கு உதாரணமாக அமைந்தது.

*ஊழலற்ற ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் 2006 ஆம் ஆண்டில் மருத்துவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான நாக பைரவர் ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவர் "லோக் சத்தா" என்ற அமைப்பை தொடங்கினார்.
பிறகு அது கட்சியாக மாறியது. அக்கட்சியின் ஒரே எம்எல்ஏவாக இருந்தார்.
பிறகு, எம்பியாக முயற்சி செய்து நான்காவது இடம் பெற்றார்.
தற்போது அது மீண்டும் கட்சியை அமைப்பாக மாற்றி விட்டார்.
இந்தியாவில் 177 அரசியல் கட்சிகளில் நல்லாட்சி அமையவும் சட்ட மாற்றங்களை ஏற்படுத்தவும் அரசினை சிறப்பாக செயல்பட வைக்கவும் முயல்கிற ஒரு கட்சியை தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.
ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக்சத்தா கட்சிக்கும் அந்த பட்டியலில் நிச்சயமாக இடம் உண்டு என்றாலும், அவர்களால் இதுவரையில் தேர்தலில் வெல்ல முடியாமல் போயிருக்கிறது.

*சமீபத்திய இந்திய வரலாற்றில் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கி ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் அரசியலில் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது "ஆம் ஆத்மி கட்சி"யை தான் சொல்ல முடியும்.
கட்சி தொடங்கப்பட்டது முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் மட்டுமே 130 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றது ஆம் ஆத்மி கட்சி.

*2014 ஆம் ஆண்டு முதலே கல்வி, சுகாதாரம் மற்றும் இதர அரசு சேவைகளில் பல சீர்திருத்தங்களை ஆம் ஆத்மி கட்சியால் மேற்கொள்ள முடித்திருக்கிறது.

*ஆம் ஆத்மி கட்சியின் மீது மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொதுவாக மற்ற பெரிய கட்சிகள் மீதும் வைக்கப்பட முடிகிற குற்றச்சாட்டுகள் தான். இருந்தாலும், அவையெல்லாம் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டும் பெரிய அளவிலான நெருக்கடிகள் ஆக மாறி இருக்கின்றன, ஏனென்றால் ஊழலை ஒழித்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வருகிறோம் என்று உறுதியளித்து விட்டு அரசியலுக்கு வந்த காரணத்தினாலேயே அவர்கள் மீது வைக்கப்படுகிற ஒவ்வொரு குற்றச்சாட்டும் மக்களின் கவனத்தை ஈர்த்து கோபத்தை உண்டாக்குகின்றன.

*மேற்கண்ட மாற்று அரசியல் பரிசோதனை முயற்சிகளும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

* நான் 2018 ஜூன் மாதத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி விட்டதாக பொதுவெளியில் அறிவித்த பின்னர் அரசியலில் ஆர்வமுள்ள பலர் எனக்கு மின்னஞ்சல் மூலமும் அலைபேசி அழைப்புகள் மூலமும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

*கடந்த காலத்தில் அக் கட்சியின் செயல்பாடுகள், தவறுகள், என அனைத்தையும் பட்டியலிட்டு, கட்சியினால் நீண்ட நெடுங்காலம், அதற்காக சமரசம் செய்யாமல், இந்த அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்டால், அக் கட்சியில் இணைவது குறித்து நான் முடிவெடுக்கலாம்.

-சிவம் சங்கர் சிங்

திங்கள், மார்ச் 13, 2023

குலப்பெயர் என்பது குடும்பப்பெயர், அது குடியின் பெயரன்று

பெரியசாமித் தூரன், மாரப்பன் மணியன்

சில ஆண்டுகளுக்கு முன் பெரியசாமித் தூரனில் உள்ள தூரன் என்பது சாதிப்பெயர் என்றனர். இல்லையென ஒருவர் மறுக்க அது உட்சாதிப்பெயர் என்று கூறினர். நானும் ஆமாம் என்று தான் நினைத்திருந்தேன். பலரைப் போலவே தீரா ’விடம்’ அந்த அளவு என்னை ஆட்கொண்டிருந்த காலமது, பலரை இன்னமும் ’விடம்’ கடுமையாக ஆட்கொண்டுள்ளது என்பதையும் அறிவேன். இது குடிப் பெயர் இல்லை என்பது சமீபத்தில் தான் புரிந்தது. இது பெருங் குடும்பத்தின் குடும்பப் பெயர் ஆகும். எப்படி என்கிறீர்களா. பல பரம்பரைகளுக்கு முன் இருந்த மூதாதையரின் (பரனின் பரன் ....) பெயராகவோ பட்டப்பெயராகவோ இருந்திருக்கலாம். அவரின் ஆண் வழி தோன்றல்கள் அப்பெயரை கொண்ட குலத்தார்கள். திருமணம் ஆகும் வரை பெண்ணும் அக்குலத்தார்.

என்னை விட 5 வயது சிறியவனின் பட்டப்பெயர் தொறுக்கன். பட்டப்பெயர் எப்படி வந்தது எனக்கேட்கக்கூடாது. ஏதோவொரு காரணத்தால் யாராவது ஒருவர் அப்பெயரை வைத்துக்கூப்பிட மற்றவரும் அந்தப்பெயர் சொல்லி கூப்பிட அப்பெயர் நிலைத்துவிடும்.

எளிமையாக இக்கால தீரா’விடம் ’ஆளின் எ.காட்டை வைத்து சொல்லவேண்டு மென்றால் கருணாநிதியின் குடும்பத்தின் பல ஆண் வாரிசுகள் பெய்ர் நிதியில் முடிவதை பார்த்திருப்பீர்கள். உதய நிதி அவர் பையன் இன்ப நிதி, கலா நிதி, ’தயா நிதி, அருள் நிதி. சில காலத்தில் நிதி குடும்பம் (குலம்) என்றால் அது கருணா வழிதோன்றல்களைக் குறிக்கும் கருணாவின் பெயர் மறைந்தாலும் சில பல தலைமுறைகளுக்கு பின்பு வருபவர்கள் நிதி பெயரை தங்கள் பெயரில் வைக்கா விட்டாலும் அவர்கள் கருணா வழித்தோன்றல்கள் இல்லையென கூறமுடியுமா? தாங்கள் நிதிக்குலத்தார் என்பார்கள் ஆனால் எப்படி, ஏன் நிதி வந்தது எனத்தெரியாது. எங்கப்பா நிதிக்குலம் அதனால் நான் நிதிக்குலம் என்பார்கள். மற்றவர்களின் (காமராசர், சுப்பராயன், அண்ணா, ...) கருணாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறமுடியுமா? 

அதனால் இது குடிப்பெயரில்லை குடும்பப்பெயர் என்பது புரிகிறதா?

திங்கள், மார்ச் 06, 2023

ஏன் தமிழ்நாட்டிற்கு INNER LINE PERMIT வேண்டும் அதனால் என்ன பலன்

வடக்கத்தியானுங்கள விரட்டனும் நம்ம வேலையை பிடுங்கிக்கிறான் என்று ’சுருக்கமா’ கூறும் போது அதற்கு எதிர்ப்பை தமிழ் தேசியர்கள் மனிதாபமானம் அற்ற கொடூர மனமுடையவர்கள் என நினைத்துக்கொண்டு நம்ம மனிதாபிமான தமிழர்களும், தமிழ் தேசியர்களுக்கு உலகமயமாக்கல் பொருளாதார நடைமுறை தெரியாது என எண்ணி நமக்கு பாடம் எடுப்பவர்களும், சில யு-டியூப் போராளிகளும் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு விரிவா சொல்லனும் போலுள்ளது. இதை பல காலமாக பலர் கூறி வருகின்றனர் என்றபோதிலும் சமீபத்தில் சவுக்கு கூறியதும் மறுபடியும் அப்படியே தொங்கறானுங்க. இப்ப வட நாட்டவர்களை கொல்வதால் அவர்கள் சாரி சாரியாக அவங்க ஊருக்கு போறானுங்க என்ற வதந்தியும் சேர்ந்துகொண்டது. இவனுங்களுக்கு ஒரே பதிலையே பல இடங்களில் கூறி வருகிறேன். இதை தவிர்க்க ஒரு இடத்தில் பதிலை இட்டால் அவங்க கேள்விகளுக்கான பதிலை இதிலிருந்து வெட்டி ஒட்டினால் தட்டச்சும் வேலை எனக்கு மிச்சமாகும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை நினைவிலிருந்து எழுதுகிறேன் அதனால் ஏதாவது சில கேள்விகள் விடுபட்டு இருந்தாலும் இருக்கும். அதனால் ஏதாவது கேள்வி இருந்தாலும் கேட்கவும், பதில் உரைக்கிறேன்.

முதலில் வடக்கத்தியானுங்க இங்க வேலைக்கு ’வரவே கூடாதுன்னா’ தமிழ் தேசியர்கள் கூறுகிறார்கள்? வரவே கூடாதுன்னு சொல்லுவதாக நினைத்துக்கொண்டே மனிதாபிமான தமிழர்களும் நமக்கு பொருளாதார பாடம் எடுப்பவர்களும் கேள்விகள் தொடுக்கின்றனர். இவர்கள் அறிந்தோ அறியாமலோ ஏதோ சில திட்டத்துடனே இப்படிக் கூறுகிறார்கள் என எண்ணுகிறேன். இதற்கு கூறும் பதிலே கிட்டதட்ட அவர்களின் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

(1) கேள்வி -
பொருளாதாரத்துக்காக ஒருவர் இடம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கோ மாநிலங்களுக்கோ செல்வது தவிர்க்க முடியாதது. அவங்க ஊர்லயே நல்ல வருமானம் கிடைத்தால் அவன் ஏன் வேறு ஊருக்கு செல்ல வேண்டும்? ’இதில் ஏதாவது தவறு இருக்கா இல்லை என்றே கூறமுடியும்.’

தமிழ் தேசியர்கள் -
நீங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் வகை தொகையில்லாமல் தமிழ்நாட்டுக்கு வடவர்கள் வேலைக்காக என்றாலும் படையெடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வகை தொகை இல்லாமல் வருவதால் தான் இச்சிக்கல் பெரிதாகியுள்ளது, பேசுபொருளாகியுள்ளது, கவனம் பெற்றுள்ளது. இது எதிர்காலத்தில் பேராபத்தில் நம்மை கொண்டு விட்டு விடும். இப்படி வருவதை முறைப்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம். இந்தியா என்பது பல நாடுகளின் ஒன்றியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்குத்தான் இந்தியாவில் INNER LINE PERMIT (ILP) என்பது நடைமுறையில் உள்ளது. மூன்று இந்திய மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. அதனால இது இந்தியாவில் இல்லை என்று கூற வேண்டாம். மூத்த செய்தியாளர்களுக்கு இது தெரிந்திருக்கவேண்டும், ஏன் ILP இருப்பது தெரியாத மாதிரி பேசுகிறார்கள் எனத்தெரியவில்லை. INNER LINE PERMIT இருக்கும் வரை வேலை செய்யலாம் முடிந்த பின் மூட்டையை எடுத்துக்கிட்டு சொந்த ஊருக்கு போகவேண்டியது தான். வாக்குரிமை பற்றிய பயமும் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவானோ என்ற அச்சமும் நமக்கு குறையும். மக்கள் தொகை (demography) மாற்றம் இருக்காது

திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் எல்லாரும் வர முடியாது. இதற்குத்தான் அனைத்து நாடுகளிடமும் ‘விசா’ என்ற ஒழுங்கு படுத்தும், முறைப்படுத்தும் நடைமுறை உள்ளது என்பதை INNER LINE PERMIT உடன் இணைத்துப் பார்க்கலாம். பெரும்பாலான சிக்கல்கள் ILPயை நடைமுறைப்படுத்தினாலே தீர்ந்து விடும்.

(2) கேள்வி -
வேலைக்கு வருபவர்களை எப்படி குறை சொல்லமுடியும் இங்குள்ள தமிழ் முதலாளிகள் தான் அவர்களுக்கு வேலை தருகிறார்கள் அதனால் முதலாளிகளான தமிழர்கள் தான் குற்றவாளிகள்.

தமிழ் தேசியர்கள் -
கேள்வி ஒன்றுக்கான பதிலைப் பார்க்கவும். நூறு ஆயிரம் பேர் தான் வேலைக்கு வரலாம் என்றால் முதலாளி அதிலிருந்து ஆளை எடுக்கட்டும். கிடைக்காத போது தமிழனைத் தான் நாட வேண்டும். INNER LINE PERMIT மூலம் இவர் ஆட்களை வெளி மாநிலத்திலிருந்து பெறலாம். தரகர்களும் (Consultancy) ஆட்களை பெற்றுத்தருவர்.

(3) கேள்வி-
உனக்கென்னய்யா நீ சும்மா சொல்லிட்டு போயிடுவ. வடவர்கள் நேரத்திற்கு வந்து குறைந்த கூலிக்கு அதிக நேரம் இருந்து வேலை செய்யறாங்க. தமிழர்களுக்கு கூலி அதிகமா கொடுத்தும் நேரத்திற்கு வர மாட்டிக்கிறாங்க, இதுல சிலர் வாரத்திற்கு இரு முறை எட்டியே பார்ப்பதில்லை கூப்பிட்டாலும் இதோ அதோ என்பாங்க ஆனா வரமாட்டாங்க.

தமிழ் தேசியர்கள் -

பதில் 1. முதலில் வடவன் அப்படித்தான் இருப்பான், பெண்டு பிள்ளைகளோட 
இங்கு தங்கியதும் அவனும் சில ஆண்டுகளில் மாறிடுவான் ( இது மனித குணம்), இதற்கு நம்மாளுங்களே வெளிநாடுகளில் வேலைக்கு (White collar job) போன கதையை சொல்லலாம். திருமணம் ஆகாதா போது எச்சுமையும் இல்லாத போது பல மணிநேரம் அதிகமாக வேலை செய்வார்கள் அதே திருமணமாகி குழந்தை குட்டி என அங்கு தங்கும் போது குறித்த நேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டார்கள், விரைவில் வீட்டுக்கு செல்லவே பார்ப்பார்கள். பின்பு எல்லோரையும் போல் ஆகி விடுவார்கள். தேநீர், காபியை எப்படி நமக்கு வித்தாங்கன்னு தெரியும்( இந்தக்கதை தெரியலைன்னா சொல்லுங்க சொல்றேன்) வ.உ.சி கப்பல் வணிகத்தை அழித்தது எல்லாம் இப்படித்தான். இது மாதிரி நிறைய காட்டுகள் கூறலாம்.

பதில் 2. குடி இதற்கு முக்கிய காரணம். TASMAC எண்ணிக்கையை குறைத்தால் இது கட்டுக்குள் வரும் வாய்ப்பு சிறிது உண்டு, குறைவான கடைகள், திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது, முதலான பலப்பல நூதன வழிகள் மூலம் குடி பழக்கத்தை குறைக்க அரசு முயலனும். குடியை ஒழித்தாலே 90-95% 
பிரச்சனை ஒழிந்துவிடும்.

(4) கேள்வி -
வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கட்டட வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாய கூலிகளும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் பாதி நேரம் வேலை செய்வதில்லை. இதில் அவர்களால் தான் இதற்கு ஆட்கள் கிடைக்கிறது.

தமிழ் தேசியர்கள் -
இதற்குத்தான் INNER LINE PERMIT என்ற உள் நுழைவு அனுமதி . பெரு முதலாளிகள் அந்த பெட்ரோமாசு லைட்டே தான் வேண்டுமென்றால் INNER LINE PERMIT பெற்று அவனை அல்லது தேவையானவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் இதற்கான அரசு அனுமதி பெற்ற தரகர்கள்\முகவர்கள் INNER LINE PERMIT மூலம் கொண்டு வந்த ஆட்களை பெற்று பணிக்கு சேர்த்துக் கொள்ளட்டும். அப்போது பாதுகாப்பு இருவருக்கும் உறுதிப்படும்.

-கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கவும். அப்போது தான் நமக்கு தெளிவு கிடைக்கும்.

வெள்ளி, ஜனவரி 06, 2023

நாட்டின் அரசியலில் சிறப்பு இடத்தை பெற்ற உபி யாதவ் குடும்பம் பற்றி.

 நாட்டின் அரசியலில் சிறப்பு இடத்தை பெற்ற உபி யாதவ் குடும்பம் பற்றி தெரியவேண்டாமா? இதோ உங்களுக்காக 🙂

.
முலாயம் அப்பா பெயர் மேவாராம் சிங் யாதவ். அவருக்கு சுகர் சிங் யாதவ் அதாவது சர்க்கரை சிங் யாதவ் பாச்சி லால் சிங் யாதவ் என்று இரு பையன்கள்.
சுகருக்கு 5 பசங்க. அபய் ராம், ரத்தன் (ராணுவ வீரர் 1965 இந்தோ பாக் போரில் பங்குபெற்றவர்) , முலாயம் (SP head), ராச்பால், சிவ்பால்(state president of SP)

பாச்சிலாலுக்கு இரு மனைவிகள் இரு பிள்ளைகள்
முதல் மனைவி கீதா தேவி இவர்களின் மகன் அரவிந்து
2வது மனைவி பூல்வதி இவர்களின் மகனே ராம்கோபால் (expelled from SP)

ராம்கோபாலின் மனைவி பூலான்தேவி மகன் அக்சய் பெரோசாபாத் SP MP

அபய்ராம் செயதேவியை கட்டிக்கிட்டார் அவர்களின் மகன் தர்மேந்திரா (இரட்டை மகன் மகள்) பதுவன் தொகுதி SP MP.
தர்மேந்திராவின் சகோதரி சந்தியா (இரட்டை) மணிபுரி சில்லாபரிசத் தலைவர்.
தர்மேந்திராவின் மருமகள் வந்தனா அமிர்பூர் சில்லா பரிசத் தலைவர். இன்னொரு சகோதரி சீலா லக்டோ மாவட்ட முன்னேற்ற ஆணைய உறுப்பினர்.
சீலாவின் மருமகன் அசந்த் கோட்ட முன்னேற்ற அதிகாரி
ரத்தனின் மகன் ரன்வீர் . 

ரன்வீரின் மனைவி மிருதுளா சைபி ஒன்றிய முன்னேற்ற அலுவலர். இவங்க மகன் தேச் பிரதாப் மணிபூரியின் SP MP. இவரின் மனைவி ராச்லட்சுமியின் அப்பா தான் லல்லு.

லல்லுவும் முலாயமும் எப்படி உறவினர்கள் என்று இப்போது புரிந்ததா??.

முலாயமுக்கும் மாலதிதேவிக்கும் பிறந்தவர் தான் உபி முதல்வர் அகிலேசு.
அகிலேசின் மனைவி டிம்பிள் கனுச்சின் SP MP

முலாயமின் தொடுப்பு தற்போதைய மனைவி சாதனா குப்தாவுக்கு பிறந்தவர் பிரதீப் (பிரதீக்?)
பிரதீப்பின் மனைவி அபர்னா இப்போது (2017) லக்னோ கன்டோன்மென்ட் வேட்பாளர்.

ராச்பாலின் மனைவி பிரேமலதா. அவங்க பையன் அபிசேக் @ அன்சுல் எடாவா சில்லா பரிசத் தலைவர்

சிவ்பாலின் மனைவி சரளாதேவி. இவர்களின் மகன் அதியா உபி பிராந்திக் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர்.

எனக்கு சக்கரை பெரியவரா பாச்சி லால் பெரியவரா என்று தான் தெரியவில்லை

2017 சனவரியில் முகநூலில் எழுதியது

செவ்வாய், ஜூன் 14, 2022

குறிப்பிட்ட நாளின் கீச்சை பார்ப்பது எப்படி?


கீழுள்ள இரண்டும் வேலை செய்யும். இரண்டாவது அன்றிலிருந்து இது வரை போட்ட எல்லா கீச்சுகளையும் காட்டும். கொடுக்கப்பட்டுள்ள நிரலை தேடல் பெட்டியில் எழுதி செல் பொத்தானை அமுக்கவும் அல்லது தேடலை செயல்படுத்தவும்

from:elonmusk since:2022-06-06 until:2022-06-11

(from:elonmusk) since:2022-06-12 -filter:replies +filter:nativeretweets

வெள்ளி, மே 13, 2022

மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை

 https://www.bbc.com/tamil/sri-lanka-61418032 - மகிந்தவின் வரலாறை அறிந்து கொள்ள பிபிசி-இன் தகவலை இங்கு பதிகிறேன்.

2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் பின்னணி, அவர்கள் கடந்துவந்த பாதை குறித்த விரிவான கட்டுரை இது.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தபோது சர்வதேச அளவிலான கவனம் அவர் மீது விழுந்தது. அந்தப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி ஒரு அரசனுக்குரிய செல்வாக்கோடு வலம்வந்தார் அவர்.

மஹிந்த மட்டுமல்லாமல் அவருடைய சகோதரர்கள் சமல், கோட்டாபய, மஹிந்தவின் மகன் நாமல் என அவருடைய குடும்பமே மிகப் பெரிய செல்வாக்குக்குரியதாக உயர்ந்தது. ஆனால், வெறும் உள்நாட்டுப் போரின் வெற்றி மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கைத் தரவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் கதை என்பது மூன்று தலைமுறையாக, தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு, உச்சத்தை அடைந்த ஒரு குடும்பத்தின் கதை.

குடும்பமும் அரசியலும்

இலங்கையின் தென்கோடியில் இருக்கிறது அம்பாந்தோட்டை மாவட்டம். ராஜபக்ஷக்களின் சொந்த மாவட்டம் என்பதால், இலங்கையிலேயே அரசின் கவனிப்பை அதிகம் பெற்ற மாவட்டமாக இருக்கிறது. மிகப்பெரிய துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் என மெகா நகரத்திற்கு உரிய எல்லாம் இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. சீனாவின் குவாங்ஸு நகரின் சகோதர நகரமாகவும் அம்பாந்தோட்டை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்திலிருக்கும் வீரகட்டிய கிராமமே, ராஜபக்ஷக்களின் சொந்த ஊர். அந்த ஊருக்குள் நுழையும் அந்நியர் யாருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். அந்தச் சிறிய ஊருக்குப் பொருந்தாத வகையில் பெரும் எண்ணிக்கையில் காவலர்கள் இருப்பார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினரின் வீடு, தோட்டம், அவர்களது பெற்றோரின் நினைவிடம் என எல்லா இடங்களிலும் காவலர்கள் குவிந்திருப்பார்கள்.

ஆனால், ராஜபக்ஷ குடும்பம் முதன்முதலில் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது, இந்தப் பிரதேசமே காடுகளும் வறண்ட வயல்வெளிகளும் கொண்ட பகுதியாக மட்டுமே இருந்தது. மக்கள்தொகையும் மிகவும் குறைவு. அதிலும் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கிராமப்புறங்களிலேயே வசித்துவந்தனர்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டான் டேவிட் ராஜபக்ஷ என்பவர் வீரகெட்டிய கிராமத்தில் ஒரு கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்கு உள்ளூரில் நல்ல செல்வாக்கும் இருந்தது. இந்த டான் டேவிட்டின் மகன்தான் டான் மேத்யூ ராஜபக்ஷ என்ற டி.எம்.ராஜபக்ஷ. ராஜபக்ஷ குடும்பத்திலேயே முதன்முதலில் அரசியலுக்கு வந்தவர் இவர்தான்.

1936இல் ஸ்டேட் கவுன்சிலுக்கு தேர்தல் நடந்தபோது அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து களமிறங்கி வெற்றிபெற்றார் டான் மேத்யூ. அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் அவரது செல்வாக்கு பெரிதும் உயர்ந்தது. இந்நிலையில், 1945இல் டான் மேத்யூ காலமானார். ஆனால், அத்தொகுதியை விட்டுவிட குடும்பத்தினர் தயாராக இல்லை. யாரைக் களமிறக்கலாம் என்று யோசித்தார்கள். அந்தத் தருணத்தில் அவருடைய மகன்கள் மிகவும் சிறுவர்கள். முடிவில் டான் மேத்யூவின் தம்பி டான் ஆல்வின் ராஜபக்ஷ என்ற டி.ஏ.ராஜபக்ஷவை அம்பாந்தோட்டையில் களமிறக்க முடிவுசெய்யப்பட்டது.

மிக எளிதாக அந்தத் தேர்தலில் வென்ற டான் ஆல்வின், 1947இல் அம்பாந்தோட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்படியாக சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றார் டி.ஏ.ராஜபக்ஷ. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

1951இல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசெல்ல அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக) முடிவுசெய்தார். யோசிக்காமல் அவருடன் சென்றார் டி.ஏ. ராஜபக்ஷ. பண்டாரநாயக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியபோது அவருடன் டி.ஏ.ராஜபக்ஷவும் இருந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்பு ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை.

1959 செப்டம்பரில் பண்டாரநாயக கொல்லப்பட்டவுடன் பிரதமராகப் பதவியேற்ற விஜயானந்த தகநாயக்கவின் அமைச்சரவையில் முழுப் பொறுப்புடன் விவசாயம் மற்றும் நிலங்கள் துறையின் அமைச்சராக 1959 செப்டம்பரிலிருந்து 1960 மார்ச் வரை சிறிது காலம் பணியாற்றினார் டி.ஏ.ராஜபக்ஷ.

1960இல் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு, பெலிவத்த தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்தபடியே அம்பாந்தோட்டையைச் சுற்றி தன் அரசியலைச் சுருக்கிக்கொண்டார் டான் ஆல்வின்

டான் ஆல்வினுக்கு சாமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இதில் மூன்றாவது குழந்தைதான் மஹிந்த.

"பந்தா ஏதுமின்றி பழகுவார்கள்"

வீரகெட்டிய கிராமத்தைச் சேர்ந்த கே.பி.ஜெயசேகர, மஹிந்தவின் தீவிர ஆதரவாளர். மனிதருக்கு வயது எழுபதாகிவிட்டது. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுடனான சிறுவயது நாட்களை துல்லியமாக நினைவுகூர்கிறார்.

"அந்த காலகட்டத்தில் நான், மஹிந்த, கோட்டாபய என எல்லோருமே ஒன்றாகத்தான் விளையாடினோம். சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிவோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன்கள் என்ற பந்தா ஏதுமின்றி பழகுவார்கள் மஹிந்தவும் அவரது சகோதரர்களும். எனக்கும் பஷிலுக்கும் ஒரே வயது" என்கிறார், கே.பி. ஜெயசேகர.

21 வயதில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை

1966வாக்கில் மூத்த மகனான சாமல் ராஜபக்ஷ காவல்துறையில் துணை ஆய்வாளராக வேலைக்குப் போக ஆரம்பித்தார். இதற்கு சில காலத்திலேயே அதாவது, 1967இல் டான் ஆல்வின் ராஜபக்ஷ உடல்நலம் குன்றி இறந்துபோனார். அப்போது மஹிந்த வித்யோதயா பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்நிலையத்தில் பணியாற்றிவந்தார்.

இந்த காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு சிறிமாவோ பண்டாரநாயகவின் வசம் வந்திருந்தது.

டான் ஆல்வினின் மறைவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை நினைவுகூரும் சடங்கு ஒன்று ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டில் நடந்தது. அந்த நிகழ்வுக்கு வந்தார் சிறிமாவோ. அப்போது, டான் ஆல்வின் வகித்துவந்த பெலிவத்த தொகுதியின் கட்சி அமைப்பாளர் பொறுப்பை, சாமல் ராஜபக்ஷவுக்குக் கொடுக்க முன்வந்தார் சிறிமாவோ. ஆனால், அவர் அப்போது காவல்துறை பணியில் இருந்ததால், அந்தப் பொறுப்பை மஹிந்தவுக்கு அளிக்கும்படி கேட்டார் அவரது தாயார்.

மஹிந்தவுக்கு அப்போது வெறும் 21 வயதுதான். இது நடந்தது 1968 மே மாதம். இதற்குப் பிறகு அரசியலில் மஹிந்த படிப்படியாக வளர ஆரம்பித்தார் என்கிறார், ஜெயசேகர. "வீரகெட்டிய பகுதி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்வந்து நிற்பார். அதனால், இந்தப் பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது" என்கிறார் ஜெயசேகர.

1970ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பெலியத்த தொகுதியில் மஹிந்த தீவிரமாகப் பணியாற்ற ஆரம்பித்தார். அந்தத் தருணத்தில் அவரது தாயார் மிகக் கவனமாக மஹிந்தவை வழிநடத்தினார். எதிர்பார்த்ததைப் போலவே பெலியத்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது மஹிந்தவுக்கு. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சித் அட்டபட்டுவை எளிதில் தோற்கடித்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில்தான் அவருடன் இணைந்துகொண்டார் அவருடைய சகோதரரான பஷில் ராஜபக்ஷ. மஹிந்த இல்லாத நேரங்களில் பெலியத்த தொகுதியில் பஷிலைத்தான் அப்பகுதியினர் தொடர்புகொள்ள வேண்டும்.

1977இல் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தன மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த, ரஞ்சித் அட்டபட்டுவிடம் தோற்றுப் போனார். சகோதரர் பஷிலும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.

1972இல் இலங்கையில் புதிதாக அரசியல் சாசனம் எழுதப்பட்ட பிறகு, இலங்கையின் சட்ட விவகாரங்களை இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, சட்ட அமைச்சராக இருந்த 1973இல் ஃபெலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, 30 வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இந்த விதியைப் பயன்படுத்திய மஹிந்த சட்டப்படிப்பில் சேர்ந்திருந்தார். இப்போது தேர்தலில் தோற்றுப்போனவுடன், பெரிதாக வேலை இல்லாத அந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி சட்டப்படிப்பை முடித்தார். 1981இல் எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை நீதிமன்றங்களில் செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில், சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் அவருடைய மகன் அனுர பண்டாரநாயகவுக்கும் எழுந்த மோதலில், அனுர கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். அந்தத் தருணத்தில் பஷில் ராஜபக்ஷ அனுர பண்டாரநாயகவுக்கு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அனுர திரும்பவும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், அவருடன் வெளியேறியவர்களுக்கு பெரிதாக பொறுப்பு கிடைக்கவில்லை. ஆனால், மஹிந்த தொடர்ந்து பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நீடித்தார்.

இந்த காலகட்டத்தில், 1970ல் சிறிமாவோ பிரதமரானபோது, காவல்துறையில் பணியாற்றிவந்த சாமல் ராஜபக்ஷ பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1977இல் சிறிமாவோ பதவிவிலகும்வரை, அந்தப் பிரிவில் பணியாற்றிவந்தார் சாமல்.

1977இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தபிறகு, சாமல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இனியும் காவல்துறையில் இருப்பது பெரிய பலனளிக்காது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்தார் சாமல்.

1970களின் பிற்பகுதியில், சிறிமாவோவின் மகளான சந்திரிகாவும் அரசியலில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருந்தார். இதற்கு நடுவில் இலங்கையின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டிருந்தது. 1982இல் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜெயவர்தனவே மீண்டும் வெற்றிபெற்றார்.

1983இல் நடந்த இடைத் தேர்தலிலும், பெலியத்த தொகுதியில், மஹிந்தவுக்குத் தோல்வியே கிடைத்தது. இந்த நேரத்தில்தான் ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. அதனை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.

"மனித உரிமை காவலர் மஹிந்த"

பல மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. இந்தத் தருணத்தில் பத்திரிகையாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா மஹிந்தவைத் தொடர்புகொண்டு, தென்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு, மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் இருவரும் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தனர்.

1989 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதன்பிறகும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்தபடி இருந்தார் மஹிந்த. 1991-92 காலகட்டத்தில் மஹிந்தவின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அவரது குரல்கள் கவனிக்கப்பட்டன. அதேபோல, தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடத்திய சிலர் காணாமல்போனபோது அவர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார் மஹிந்த.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது, மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் வெகுவாக நடைபெற்றாலும் அவரது கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.

"வடக்கு - கிழக்கு விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், தென் பகுதி சிங்கள மக்களின் மனித உரிமை காவலர் என்ற பெயரை இழக்க அவர் தயாராக இல்லை" என்கிறார், மனித உரிமை ஆர்வலரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா.

இதற்கிடையில் சில சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றிருந்தன. சிறிமாவோ பண்டாரநாயகவின் மகள் சந்திரிகாவின் கணவர் விஜேய குமாரதுங்கே கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நாடு திரும்பினார்.

மஹிந்த தொடர்ந்து தென் பகுதியின் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதிலும் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குரலை ஒலிப்பதிலும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். அந்தத் தருணத்தில், பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.

இதனை எதிர்த்து என்ன செய்யலாம் என விவாதித்தபோது, பாத யாத்திரை நடத்தலாம் என யோசனை தெரிவித்தார் குஷால் பெரேரா. கொழும்புவில் தொடங்கி கடற்கரை ஓரமாகவே, காலி சாலை வழியாகச் செல்லும் அந்த யாத்திரை கொழும்பு, காலி, மாத்தர மாவட்டங்களைக் கடந்து அம்பாந்தோட்டையை அடைந்து மொனேராகல பகுதியை அடையுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தார் பிரேமதாச. அப்படியான சூழலில் இந்த பாத யாத்திரையை எப்படி வெற்றிகரமாக நடத்த முடியுமெனப் பலரும் கேள்வியெழுப்பினர்.

இருந்தபோதும் மஹிந்த தீவிரமாக ஆதரவு திரட்ட ஆரம்பித்தார். இந்த பாத யாத்திரையில் நான்கு பிரதானமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. 1988-90 ஆம் ஆண்டுகளில் நடந்த கலவரம், அதையொட்டிய அரசின் நடவடிக்கைகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். 2. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 3. தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். 4. உரிமைக்காக போராடிவரும் குழுக்களுடன் சண்டையிடாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மஹிந்தவும் குரக்கன் சால்வையும்

இந்த பாத யாத்திரை 1992 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தொடர்பான மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றும் கொழும்பு நகரில் மஹிந்த தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. அரசுக்கு எதிர்த்தரப்பில் இருந்த பலரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தத் தருணத்திலேயே மஹிந்தவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாக உயர ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு, பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்த சிறிமாவோ அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையென்றாலும், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். சந்திரிகா குமாரதுங்கவும்கூட பாத யாத்திரை தொடங்கிய தினத்தில் அதில் பங்கேற்றார். மிகப் பெரிய ஊடக கவனமும் அந்த பாத யாத்திரைக்குக் கிடைத்தது. தோல்வியால் சோர்வுற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அந்த பாத யாத்திரை பெரும் உற்சாகத்தை அளித்தது.

இந்த பாத யாத்திரை மாத்தர பகுதியை அடைந்தபோது, மஹிந்த தற்போது பிரபலமான குரக்கன் சால்வையை அணிந்துகொண்டார்.

ராஜபக்ஷக்களின் சொந்த ஊரான வீரகெட்டியவிலும் அம்பாந்தோட்டை பகுதியிலும் குரக்கன் எனப்படும் கேப்பை பெருமளவில் விளைந்துவந்தது. வாக்குப் பெட்டிகளை அடையாளமாக வைத்து தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ஷ. அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு, அதே நிறத்தில் அவர் சால்வை அணிய ஆரம்பித்தார். அப்போதிலிருந்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த நிறத்தில் சால்வையை அணிந்து வந்தனர். பாத யாத்திரைக்கு முன்பாக ராஜபக்ஷ சகோதரர்களின் சாமல் ராஜபக்ஷ மட்டும் அவ்வப்போது அந்த சால்வை அணிந்து வந்தார்.

தேசிய தலைவராக உயர்ந்த ராஜபக்ஷ

"இந்த யாத்திரைக்குப் பிறகு, மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசியத் தலைவராக உயர்ந்தார்", என்கிறார் குஷால் பெரேரா. பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

இந்தத் தருணத்தில்தான் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, மே 1 ஆம் தேதியன்று கொழும்பு நகரின் ஆர்மர் வீதியில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். பிரேமதாசவின் மரணம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பிரேமதாச கொல்லப்பட்ட பிறகு, பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியானார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், மக்கள் மத்தியில் இருவரும் ஈர்ப்பை ஏற்படுத்துபவர்களாக இல்லை.

மாறாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த போன்றவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். மூன்று மாகாண சபைகளுக்கு நடந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.

இதற்கு நடுவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சில மாற்றங்கள் நடந்தன. சிறிமாவோவின் மகனும் சந்திரிகாவின் சகோதரருமான அனுர பண்டாரநாயக கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆகவே, அக்கட்சியின் அடுத்த தலைமையாக சந்திரிகா குமாரதுங்கதான் இருப்பார் என்பது உறுதியானது.

1994ல் ஜூனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மஹிந்தவுக்கு இருந்த செல்வாக்கை வைத்துப் பார்க்கும்போது, தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால், மஹிந்த நிச்சயம் அமைச்சராகக்கூடும் எனப் பலரும் கருதினார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா. உடனடியாக ப்ளாட், ஈரோஸ், டெலோ, டக்ளஸ் தேவானந்தாவின் இபிடிபி ஆகியவை அரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தன. எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்தது விவசாய அமைச்சகத்தை. ஆனால், சந்திரிகா அவருக்கு தொழிலாளர் மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சகத்தை வழங்கினார். விவசாயத் துறை கிடைத்தால், தனது தொகுதியில் செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக இருக்குமெனக் கருதினார் மஹிந்த.

தொழில்துறையை ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்வது என்று யோசித்த மஹிந்த, தொழிலாளர்களுக்கான தேசிய சாசனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், அந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்புடன் சந்திரிகா தொடங்கியிருந்த பேச்சுவார்த்தை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததால், மஹிந்த மீதான ஊடக கவனம் குறைவாகவே இருந்தது. இதற்கிடையில் 1994இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்றார் சந்திரிகா.

இருந்தபோதும் தொழிலாளர் நலன் சார்ந்து பல யோசனைகளை முன்வைத்தபடி இருந்தார் மஹிந்த. இவையெல்லாம் சேர்ந்த மஹிந்த ஒரு முற்போக்கான அமைச்சர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ஆனால், இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1997இல் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டுக்காக மஹிந்த சென்றிருந்தபோது அவரிடமிருந்து தொழிலாளர் துறை பறிக்கப்பட்டது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் அமைச்சராக்கப்பட்டார் மஹிந்த.

சந்திரிகாவின் இந்த நடவடிக்கையால் மஹிந்த சற்று சோர்வடைந்தாலும், தனக்களிக்கப்பட்ட அமைச்சகத்தின் மூலம் மக்களை எந்த அளவுக்கு சென்றடைய முடியும் என்று யோசித்து செயல்பட ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில்தான் அவரது அரசியல் சிங்கள - பௌத்த அரசியலாக தீவிரமாக உருவெடுத்தது.

1999இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. இதற்குப் பிறகு, தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அளிக்கக்கூடிய புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்பினார் சந்திரிகா குமாரதுங்க. இதற்கு பௌத்த பிக்குமார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மஹிந்தவும் இந்த புதிய அரசியல் சாசனத்தை ஏற்கவில்லை என்கிறார், குஷால் பெரேரா. "இந்த அரசியல் சாசனம் நிறைவேறினால் நான் எனது மக்களிடம் செல்ல முடியாது" என மஹிந்த தன்னிடம் கூறியதாக தனது Rajapaksa - The Sinhala Selfie நூலில் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், மஹிந்த எதிர்ப்பார் என்று செய்தி பரவிய நிலையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேயில்லை. இதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மீண்டும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களில் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு, 2001ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த. இந்த காலகட்டத்தில், பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தாதவராகவே இருந்தார்.

தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுகளை அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், 2004 ஏப்ரலில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி வெல்ல, தன் ஆதரவாளரான ரத்ன ஸ்ரீ விக்ரமசிங்கேவை பிரதமராக்க விரும்பினார் சந்திரிகா. ஆனால், பௌத்த பிக்குகளின் ஆதரவு மஹிந்தவுக்கே இருந்தது.

முடிவில், தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. 2005 ஆகஸ்ட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து, போர் நிறுத்தத்திற்கு எதிரான ஒரு மன நிலையையும் தீவிர புலிகள் எதிர்ப்பு மன நிலையையும் அடுத்த ஜனாதிபதியாக தீவிர சிங்கள ஆதரவு மனநிலை கொண்டவரே வரவேண்டுமென்ற மனநிலையும் நாட்டின் தென்பகுதியிலும் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியிலும் உருவாகியது.

சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரது குடும்பத்திற்குள் அவர் முன்னிறுத்தக்கூடியவகையில் யாரும் இல்லை. முடிவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடியவரா மஹிந்த ஒருவரே தென்பட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்சி அறிவித்தது. மிக வேகமாக தனது தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார் மஹிந்த.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போர் நிறுத்தத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவரும் ஜனாதிபதியாக தன்னை ரணில் முன்னிறுத்திவந்த நேரம், 'ஒரே இலங்கை' என்ற கோஷத்தை முன்வைத்து சிங்கள மக்களை ஒன்று திரட்டினார் மஹிந்த.

ஜனாதிபதியானார் மஹிந்த

இந்த நிலையில்தான், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தது புலிகள் இயக்கம். ஆனால், புலிகளின் இந்த அழைப்பு தனக்கு பாதகமாக முடியுமென ஐக்கிய தேசியக் கட்சி கருதவில்லை. புலிகளின் அறிவிப்பின்படி வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ் பேசுவோர் பங்கேற்கவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியாயின. மஹிந்த 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். ரணிலைவிட சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மஹிந்த, தான் எல்லா மக்களுக்குமாகச் சேர்த்து பாடுபடப்போவதாகவும், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மேலும் உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட திருத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் மஹிந்த.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, உடனடியாக இருவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டது. அதில் ஒருவர் அவருடைய சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ. அவர் பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்றார். மஹிந்த ஜனாதிபதியான பிறகு, சில மாதங்களில் புலிகள் தரப்போடு பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்தாலும் அதில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருகோணமலையில் உள்ள மாவிலாறு அணை மூடப்பட்ட விவகாரம், இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் துவங்குவதற்கான புள்ளியாக அமைந்தது. இதற்குப் பிறகு 2007ல் கிழக்குப் பகுதி முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வர, 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் இமேஜ் தொடர்ந்தது அதிகரித்தது. ஆட்கடத்தல், சட்டவிரோதமாக பிடித்துவைத்தல், காணாமலாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டன. முடிவாக, 2009 மே 17ஆம் தேதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

கேள்வியே கேட்க முடியாத அரசன்

இந்த கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி என்ற நிலையிலிருந்து கேள்வியே கேட்க முடியாத அரசன் என்ற நிலைக்கு உயர்ந்தார் மஹிந்த.

2010இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, மீண்டும் போட்டியிட்டார் மஹிந்த. அவரை எதிர்த்து, பொது வேட்பாளராக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்செக நிறுத்தப்பட்டார். ஆனால், சரத் பொன்செகவைவிட 17 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ஷ.

இந்த இரண்டாம் முறை தேர்வுசெய்யப்பட்டபோது, வீரகெட்டிய கிராமத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கிய மஹிந்த, அங்கிருந்து வெகு தூரம் சென்றிருந்தார்.

"காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதத்தை வைத்து அவரை நாங்கள் மிகவும் நம்பினோம். ஆனால், அதிகாரம் வந்த பிறகு அவர் மாறிவிட்டார். சந்தர்ப்பவாதியாகிவிட்டார். மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்டதெல்லாம், ஒரு விளம்பரத்திற்காத்தான் என்பது புரிகிறது" என்கிறார், ஒரு காலகட்டத்தில் மஹிந்தவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்ட பிரிட்டோ.

ஒரு காலத்தில் மனித உரிமைகள் போராளியாக அறியப்பட்டு, அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மகிந்த ராஜபக்ஷ, 2009 மே மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களிலும் போர் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், வெளிநாடுகளில் எந்த அளவுக்கு ராஜபக்ஷ மீது கண்டனங்கள் எழுந்தனவோ, அதே அளவுக்கு அவருக்கு உள்நாட்டில் அரசியல் செல்வாக்கும் உயர்ந்தது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்புச் செயலருமாகிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அப்போதைய ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கும் அதிமுக்கியமான பங்குண்டு என்றாலும் மஹிந்தவின் அரசியல் தலைமையால்தான் அது சாத்தியமானது என்று இலங்கையின் பெரும்பான்மை சமூகம் நம்பியது.

இரண்டாவது முறை மஹிந்த ஜனாதிபதியானதும், அவரது சகோதரர், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் அவரது செல்வாக்குக்கு பலத்த சேதத்தை உண்டாக்கின.

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்ற இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் சரத்தை தமது இரண்டாவது பதவிக் காலத்தின்போது திருத்திய மஹிந்த, 2015 ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். ஆனால், பல எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட, பெரிய அரசியல் செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத மைத்திரிபால சிறிசேன இந்தத் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தினார். (மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு இருமுறை ஜனாதிபதி பதவி வகித்தவர் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்ற பழைய விதியே கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.)

வீழ்ந்த ராஜபக்ஷ

ஏற்கெனவே இரண்டு முறை ஜனாதிபதி பதவியில் மஹிந்த இருந்தார் என்பதால், 2019 ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. இதனால், 2016இல் மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவை வீழ்த்தி ஜனாதிபதியானார்.

இதற்குப் பிறகு, ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட அதன்பின் சிறுபான்மை அரசின் பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஆகஸ்டு 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார்.

ஆனால், இலங்கையில் அடுத்தடுத்து பொருளாதார ரீதியாக ராஜபக்ஷ சகோதரர்கள் இணைந்து எடுத்த முடிவுகள், நாட்டை மிக மோசமான சூழலுக்குத் தள்ளின. முடிவில் மே ஒன்பதாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மஹிந்த.

1970இல் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வென்றதன் மூலம் தன் அரசியல்வாழ்வைத் தொடங்கிய மஹிந்த, அமைச்சர், பிரதமர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்று உயர்ந்து, தற்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்தில் அடைக்கலம் புகும் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறார்.

ஆனால், இலங்கை அரசியலில் நிகழ்வுகள் மிக வேகமாக நடக்கும். ஒருபோதும் நடக்கவே நடக்காது எனத் தோன்றக்கூடிய நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடந்துவிடும். ஆகவே, மஹிந்தவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ஒருவர் இப்போதே முடிவுரை எழுதிவிட முடியாது.

 


ஞாயிறு, ஏப்ரல் 17, 2022

அண்ணான்மார் புகைப்படங்கள்

 பொன்னர் சங்கர் புகைப்படங்கள்













திங்கள், ஏப்ரல் 04, 2022

எது குடும்பக் கட்சி

காங்கிரசு, திமுக, இராசுட்டிரய சனதாதளம், சமாச் வாதி, சிவசேனா, சமயசார்பற்ற சனதாதளம், தெலுங்கு தேசம், YSR காங்கிரசு, தேசிய மாநாடு உறுதியான குடும்ப கட்சிகள்.

தேசியவாத காங்கிரசு முடிவு சரத்பவார் கையில் இருக்கு.

பிசு சனதாதளம் குடும்ப கட்சியாக தொடருமா இல்லையா என்பது திருமணம் செய்து கொள்ளாத நவீன் பட்நாயக் குடும்ப உறுப்பினருக்கு கட்சி பதவியை கொடுப்பாரா மாட்டாரா என்பதில் இருக்கு.

மமதாவும் அண்ணன் பையன் அபிசேக்கை முன்னிருத்துவதாக செய்திகள் வருது, அதனால் திரிணாமுல்லைப் பற்றி இப்பக்கூறுவது சரியல்ல.

எதெல்லாம் குடும்ப கட்சிகள் இல்லை? பொதுவுடமை கட்சிகள், பாசக, அதிமுக.

குழப்பம் பாசக என்பதில் தான் சிலருக்கு உள்ளது, மற்றதில் குழப்பம் இருக்காது எனக் கருதுகிறேன். என் கருத்தை கூறுகிறேன்.  அதை நீங்கள் ஏற்கலாம் மறுக்கலாம்  ஆனா என் கருத்தை சொல்லனுமில்லை 😉

பாசகவில் சில குடும்பங்கள் சில பகுதிகளில் செல்வாக்கு செலுத்தலாம் அதை வைத்து அதை குடும்பக்கட்சி எனக்கூறமுடியாது. கட்சித் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டும் இருந்தால் மட்டுமே அப்படிக்கூற முடியும். தலைமைக்கு பிடிக்கவில்லை கைமீறுகிறார்கள் என்றால் அது எவரையும் மாற்றக்கூடியது, அதனால் சில பகுதிகளில் சில குடும்பத்தினரின் செல்வாக்கு அக்கட்சியில் உள்ளதை வைத்து அதைக் குடும்பக்கட்சி என கூறமுடியாது. அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் இரு பெரிய கட்சிகளிலும் அப்படி உள்ளது அதற்காக குடியரசுக் கட்சியையும் டெமாக்ரட்டிக்  கட்சியையும் அப்படி நாம் கூறுவதில்லை. அமெரிக்காவில் உள்ளது போல் சில மேலை நாடுகளிலும் நிப்பான் ஆத்திரேலியா போன்ற சில கீழை நாடுகளிலும் இருக்கலாம். 

பாசக வேறுமாதிரியானது. இதில் செல்வாக்கு செலுத்துவது RSS தனிப்பட்ட எந்தக் குடும்பமும் அல்ல, அவர்களை மீறி எதுவும் நடக்காது. சொல்லப்போனால் அவர்களின் அரசியல் கிளை இது எனலாம். அவர்கள் சொல்லும், விரும்பும் ஆள் தான் தலைமைக்கு வரமுடியும். ஒரு நாள் மிகவும் பலம் பெறுகிறார் என்றால் விட மாட்டார்கள் அவரை தூக்கிவிட்டு வேறொருவரை கொண்டுவந்து விடுவார்கள். அத்வானி கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இரண்டிலிருந்து நூற்று ஐம்பதுக்கு மேல் அதன் மக்களவை உறுப்பினர்களை இரண்டு தேர்தலில் ஆக்கி பாசகவின் வளர்ச்சியை துரிதப்படுத்தினார். RSSஇன் செல்லப்பிள்ளையாகத் தான் இருந்தார், பாக்கித்தானில் சின்னா நினைவிடத்தில் அவர் ஒரு சிறந்த மனிதர் என்று கூறிய ஒரு சொல்லால் RSS-ஆல் ஓரங்கட்டப்பட்டார்,  அந்த இடத்துக்கு மோதி கொண்டுவரப்பட்டார். மோதி பெரியதாக வளர்ந்தால் அந்த இடத்துக்கு வேறொருவர் வருவார் அவர் உபி முதல்வர் ஆதித்தியநாத்தாக இருக்கலாம். 65 அல்லது 70 வயதானவர்களுக்கு தேர்தல் அரசியலில் ஓய்வுன்னு பாசக ஒரு சட்டம் போட்டு பலரை வீட்டுக்கு அனுப்பியது போல், அச்சட்டத்தை பயன்படுத்தி இவரும் அனுப்பப்படலாம். (இதுவரை அந்த சட்டத்தை மோதிக்கு பயன்படுத்தவில்லை)

வெள்ளி, மார்ச் 11, 2022

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராளி ஈகி தாளமுத்து

தமிழ் இந்துவில் வந்த கட்டுரை. இணைப்பு கீழே

 https://www.hindutamil.in/news/opinion/columns/775824-thiyakiyanar-thalamuthu.html

படியெடுத்து பதிர்ந்துள்ளேன். *****

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதல் களப்பலியான ல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தாளமுத்து என்ற இளைஞரும் தியாகியானார். மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் காலமானார். நடராசன் – தாளமுத்து என்ற இரட்டைப் பெயர்கள் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்றவை. ஆனால், அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாத நிலையே இருந்தது. ‘இந்து தமிழ் திசை’யில் (‘நடராசன் புகழுடம்பு எய்திய கதை’, ஜனவரி 31, 2022) நடராசன் பற்றிய கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து, தாளமுத்து பற்றிய புதிய செய்திகளுடன் இக்கட்டுரை அமைகின்றது.

சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் பக்தவத்சல நாயுடு என்பாரும் சட்ட மேலவையில் என்.ஆர்.சாமியப்ப முதலியாரும் தாளமுத்துவின் மறைவைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். சென்னை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லெப்டினெண்ட் கர்னல் எம்.எம்.கான், சென்னை பொது மருத்துவமனையின் மதிப்புறு மருத்துவர் கே.நாராயணமூர்த்தி ஆகியோரிடமிருந்து அரசாங்கம் பெற்ற அறிக்கைகளிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது.

சென்னை மத்திய சிறையிலிருந்த தாளமுத்துவின் கைதி எண் 6477. ‘சி’ வகுப்பு. வயது 19. எடை 43 கிலோ. உயரம் 5 அடி 4 அங்குலம். கல்வித் தகுதி, வேலை ஆகியன பற்றித் தகவல் இல்லை. இருப்பிடம் கும்பகோணம் கும்பேசுவரர் தெற்குத் தெரு.

  1939 பிப்ரவரி 13-ல் சிறைபட்ட தாளமுத்துவுக்குப் பதினெட்டு நாட்கள் கழித்துக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதிதான் அவர் மருத்துவ உதவியை நாடினார் என்று சிறை அதிகாரிகள் கூறினர். அவருக்கு வந்த நோய் அமீபாவினால் (Entamoeba histolytica) உண்டாகும் சீதபேதி என்று சிறை மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அடுத்த நாள் சளியும் குருதியும் கலந்து பதின்மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

காய்ச்சல் இல்லை என்றாலும் நிமிடத்துக்கு நாடித் துடிப்பு 88 உடன் மூச்சிரைப்பும் இருந்தது. அதற்கடுத்த நாள் வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டதில் கழிப்பறைக்குத் தாமே நடந்து செல்லத் தாளமுத்து விரும்பியிருக்கிறார். ஆனால், அதற்கு மருத்துவர்கள் இணங்கவில்லை. தேறிவருகிறார் என்று நினைத்த வேளையில், மார்ச் 10-ம் தேதி அவருடைய நிலை மோசமடைந்தது. இரவில் பத்து முறையும் காலையில் பத்து முறையுமாகப் பன்னிரண்டு மணி நேரத்தில் இருபது முறை சளியும் ரத்தமும் கலந்து பச்சை நிறத்தில் கழிந்தது. ஒவ்வொரு முறையும் கழியும் முன் வயிற்றுப்பிசைவுடன் கடும் வலியில் தாளமுத்து துடித்தார்.

உடனே, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மதியம் 1:35-க்கு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் தாளமுத்து. நீர்ச்சத்து இழந்தும், களைத்துச் சோர்ந்தும், கண்கள் உள்ளொடுங்கியும், படபடவென நாடியும் துடித்துக்கொண்டிருந்த தாளமுத்துவுக்கு குளுக்கோஸ், பிராந்தி கலவை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையும், தொடர்ந்து குளுக்கோஸ் நீரும் ஊட்டப்பட்டன. கைகால்களின் விரல்நுனிகள் மெல்லச் சில்லிட்டுவந்ததால் கம்பளியும் சுடுநீர் பாட்டிலும் அணைப்புக்குக் கொடுத்தனர். நிலைமை சீரடையாததால் இரவு பத்து மணிக்கு நாளங்களின் வழியாக குளுக்கோஸ்- உப்புநீர் உட்செலுத்தப்பட்டது. மறுநாள், 11-ம் தேதி காலை குதத்தின் வழியாகச் சூடான காபி கொடுத்தார்கள். அப்போதும் நிலைகொள்ளாமல் அனத்திக்கொண்டிருந்தார் தாளமுத்து. 10:30 மணிக்கு அட்ரீனலின் (adrenalin), ஸ்ட்ரிக்னீன் (strychnine) ஆகிய ஊக்கிகள் செலுத்தப்பட்டன. பிற்பகல் 1:45 மணிக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் தாளமுத்துவின் உயிர் பிரிந்தது.

தாளமுத்து எப்படிக் காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் தகவல் சென்றதா, எப்போது பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது, சிறையில் சுகாதார நிலைமை என்ன முதலான கேள்விகள் சட்டமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ஆனால், நடராசன் இறந்தபோது நிகழ்ந்ததைப் போன்ற காரசாரமான விவாதங்கள் நிகழவில்லை. முதல் களப்பலிக்குக் கிடைத்த கெளவரம் என்றே அதைக் கொள்ளலாம். நீதிக்கட்சியின் பெருந்தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், பழம்பெரும் இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம், அப்துல் ஹமீது கான், டி.வி.ராமசாமி, கே.வி.ஆர்.சாமி, மெஹ்பூப் அலி பேக் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.

அரசாங்கம் மேலதிக விவரங்களைக் கேட்ட நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தம் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிறுவும்வகையில் விளக்கம் அளித்தார். சீதபேதித் தொற்று ஏற்படுவதற்கும் அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். எனவே, சிறைபடுவதற்கு முன்பே தாளமுத்து தொற்றுக்கு ஆளாகிவிட்டார் என்றார்.

நான்கு மாதங்களாகச் சிறையில் எவருக்கும் இந்நோய் நேரவில்லை என்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டினார். சிறையின் சுகாதார நிலைமையைப் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்றதோடு நில்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டக் கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்காமல் முரண்டுபிடிக்கின்றனர் என்று அவர்கள் மீதே புகார் கூறினார். உடல் மெலிவும் ரத்த சோகையும் உடல்வாகுக்கு உரியதைவிட ஏழெட்டு கிலோ குறைவான எடையும் கொண்டவரான தாளமுத்துவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என்று இறந்துபோன தாளமுத்து மீதே பழி சுமத்தினார். 

மருத்துவ அறிக்கைகளை வழிமொழிந்து முதல்வர் ராஜாஜி கொடுத்த பதில்களில் ஏளனம் இழையோடியது. தாளமுத்து நோய்வாய்ப்பட்டதற்குப் போராட்டத் தலைவர்கள் அக்கறை கொண்டார்களா என ஓர் உறுப்பினர் வினவியதற்கு, இல்லை என்ற பதில் கேள்வியிலேயே தொக்கி நிற்கவில்லையா என்று பதிலளித்தார் ராஜாஜி. தாளமுத்துவின் மறைவு வெளியுலகில் ஏற்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு முற்றிலும் மாறான உணர்வுநிலையே சட்டமன்றத்தில் வெளிப்பட்டது.

மாலை ஆறு மணிக்குப் பொது மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தாளமுத்துவின் முதிய பெற்றோரும் இளம் மனைவியும் அழுது புரண்ட காட்சி அனைவரையும் கலங்கவைத்தது. மறியல் களமான இந்து தியலாஜிக்கல் பள்ளியைத் தாண்டி ஊர்வலம் சென்றபோது, பேராரவாரம் ஏற்பட்டது. மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசனின் சமாதிக்கு அடுத்து தாளமுத்து புதைக்கப்பட்டார். அண்ணா, என்.வி.நடராசன், பாசுதேவ் ஆகியோர் உணர்ச்சிமிகு இரங்கல் உரையாற்றினர். ‘தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார் அண்ணா.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஆவணபூர்வமான முழு வரலாறு 80 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எழுதப்படவில்லை. அந்த வரலாற்றை எழுதுவது நடராசன் – தாளமுத்து தியாகத்துக்குச் சிறந்த அஞ்சலியாக அமையும்

.

- ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

மார்ச் 11 தாளமுத்துவின் 83-ம் நினைவு நாள்.

ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெல்ச்சி நேரம் \ பெல்ச்சி காலம்

 இந்திரா காந்தியின் பெல்ச்சி காலம் போல "’இலாகிப்பூர்"’ பிரியங்கா வதேராவின் காலமாக மாறுமா என நிறைய வடநாட்டு ஆங்கில ஊடகங்கள் எழுதுவதை, கேட்பதை பார்த்தேன். (Can Priyanka do Indira’s comeback ‘Belchi’ moment of 44 years ago? what is belchi moment? ) இந்திரா காந்தி, பிரியங்கா வதேரா என்ற பெண்மணிகளை தொடர்பு படுத்தி இருந்ததால் பெல்ச்சி என்பது ’"பேட்டி"’ போன்ற பெண்கள் தொடர்புடைய இந்தி சொல் என நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது பெல்ச்சி என்பது பீகாரில் பாட்னாவுக்கு அருகில் உள்ள நாளந்தா (அக்காலத்தில் பீகார் செரிப்) மாவட்டத்தில் இருக்கும் போக்குவரத்து வசதிகளும் மற்ற வசதிகளும் அற்ற சிற்றூர் என்பது. இப்பவும் போக்குவரத்து வசதிகள் மோசம்.மற்ற வசதிகள் ஏதாவது மேப்பட்டு உள்ளதா எனத் தெரியவில்லை.

நெருக்கடி நிலையினால் வடநாட்டில் துடைத்து எறியப்பட்ட இந்திரா காந்தி 1980ஆம் ஆண்டு தேர்தலில் வடமாநிலங்களில் பெருவெற்றி பெற்றதற்கு அவரின் பெல்ச்சி பயணம் காரணம். அவரின் பெல்ச்சி பயணம் மலைக்க வைக்கக்கூட்டியது.

குர்மி சேனையால் பெல்ச்சியில் 1977இலில் பதினொன்று வெவ்வெறு சாதியை சேர்ந்த அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்டனர். கையை கட்டி நெருப்பில் போட்டு கொன்றார்கள். இதுவே பீகாரில் அரிசனங்கள் படுகொலை செய்யப்பட்ட முதல் நிகழ்வு.

இந்திரா காந்தி பெல்ச்சிக்கு போவதாக இருந்தது அவரைத்தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்திரா காந்தி பாட்னாவுக்கு போய் பின்னர் பீகார் செரிப்புக்கு சென்றார்.

கட்சியினரிடம் பெய்ச்சிக்கு போகனும் என்றார்.



அவர் போனது ஆகத்து மாதம் அப்ப பருவகாலம் உச்சத்தில் இருக்கும் காலம். இங்கிருந்து பெய்ச்சி தூரம், பாதை பயங்கபர மோசம் சேறும் சகதியுமா இருக்கும், மழை பெய்தால் வெள்ளம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்வீர் என்றார்கள். அதனால இப்ப போவது நல்லதில்லை போக வேண்டாம் என்றனர். யார் சொல்லியும் கேட்காம போவேன் என பிடிவாதமாக இருந்தார். எனவே காரில் போனார், கார் சகதியில் மாட்டிக்கொண்டது. உடனை jeepஐ கொண்டு வரச் சொல்லி அதில் போனார். Jeepஇம் சிறிது தூரம் போனதும் மாட்டிக்கொண்டது. இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. சரின்னு உழவு எந்திரதை கொண்டு வரச்சொல்லி அதன் மூலம் jeepஐ இழுத்து பயணப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் உழவு எந்திரமும் மாட்டிக்கொண்டது. மறுபடியும் இனி வேண்டாம் திரும்பி போகலாம் என்றார்கள். அவர் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. அப்ப பாதையில் சேறும் சகதியும் எப்படி இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளுங்கள்.


நான் பெய்ச்சிக்கு நடந்து போகிறேன், வரவில்லை என்பவர்கள் தாராளமாக திரும்பி போகலாம் என்றார். சிறிது தூரம் போனதும், கூட்டத்திலிருந்த ஒருவர் பக்கத்தில் உள்ள கோவிலில் யானை இருக்கு என்றார். சரி யானையை கொண்டு வாருங்கள் என்றனர். யானை வந்தது. யானைப்பாகன் அம்பாரி இல்லை யானையின் முதுகில் தான் உட்கார முடியும் கீழே விழாமல் இருக்க அம்பாரி இல்லாததால் எந்த துணையும் இல்லை என்றார். இந்த யானையின் பெயர் மோதி.(இது தான் விந்தையா ) 😉 சரின்னதும் பிரதீபா பாட்டில் (ஆம் குடியரசு தலைவரே, அப்போது அவர் பீகார் காங்கி தலைவர்) இந்திரா காந்திக்கு பின்னும் முன்னாடி பாகன் இருக்க யானையில் இந்திரா பயணப்பட்டார். யானைப் பயணம் மூன்றரை மணி நேரம். சிறிய ஆற்றை கடந்தும் யானை போயிருக்கிறது. அப்போ ஆற்றின் நீர் யானையின் வயிற்றில் பாதியை தொட்டிருக்கிறது. அந்திசாயும் நேரத்தில் பெல்ச்சியை அடைந்தனர். இந்திரா யானையை விட்டு இறங்கவில்லை. யானையை மண்டியிட வைத்து சிற்றூர் மக்கள் கூறுவதை கேட்டார். 

டெல்லிக்கு திரும்பும் முன் 1977இல் அவர் தோற்க காரணமான செயப்பிரகாசு நாராயணை மருத்துவமனையில் சந்தித்து அவர் விரைவில் நலமடைய வேண்டினார், அப்போது செயப்பிரகாசு நாராயண் இந்திராவின் தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். 1980இல் வென்றார்.