வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஆகஸ்ட் 17, 2009

சிரிக்க சிந்திக்க - 1

கண்ணா நீ
திருமணத்திற்கு
முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு
பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து
ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...



ஒரு
பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி
இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு
மாதிரிதான் இருப்பா...


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா
அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது!


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை
படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு
எப்படி தெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,
நனையும்
போது சந்தோஷம்.
நனைந்த
பின்பு ஜலதோஷம்.



மகனே
பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.


டேய்
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது
தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

4 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

சிரிச்சாச்சு; இனிதான் சிந்திக்கணும்! இஃகிஃகி!!

குறும்பன் சொன்னது…

பழமை, நேரம் கிடைக்கும் போது சிந்திச்சு பாருங்க. இஃகிஃகி

சி.கருணாகரசு சொன்னது…

நல்லா இருக்கு

குறும்பன் சொன்னது…

நன்றி கருணாகரசு