வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், நவம்பர் 06, 2008

வக்கீல்

வக்கீல்: மருந்து உங்கள் நினைவுத்திறனை பாதித்து விட்டதா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எந்த வகையில் உங்கள் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டது?
சாட்சி: மறந்து விட்டேன்
வக்கீல்: மறந்துட்டீங்களா? எதையெல்லாம் மறந்துட்டீங்கன்னு சொல்ல முடியுமா?




வக்கீல்: டாக்டர் எத்தனை பிரேத பரிசோதனைகளை இறந்தவர்களின் மேல் பண்ணியிருக்கிறீர்கள்?
சாட்சி: நான் பண்ணுன எல்லா பிரேத பரிசோதனையும் செத்தவங்க மேல தான்.

ஞாயிறு, மே 18, 2008

தமிழ் எண்கள்

எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.


1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்

செவ்வாய், ஏப்ரல் 22, 2008

தவிட்டு செட்டி - தனகோடி செட்டி

ஒரு புத்தகத்தில் தவிட்டு செட்டி எப்படி தனகோடி செட்டியானார் அப்படின்னு போட்டிருந்தது. அத உங்களுக்கு இங்க சொல்றேன்.

செட்டியார் ஒருத்தர் தவிட்டு வணிகம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்ப அவரிடம் நிறைய செல்வம் இல்லை. அவரின் பண்ணையத்தில் புதிதாக ஒரு ஆள் வேலைக்கு சேர்ந்தாராம், அவர் சேர்ந்த புண்ணியம் செட்டியாரின் பண்ணை பல மடங்கு பெரிதாகியது. அதனால் அவரிடம் நிறைய நிறைய நிறைய செல்வமும் சேர்ந்தது. இவ்வாறாக தவிட்டு செட்டியார் தனகோடி செட்டியாராக மாறினார்.