வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஜனவரி 25, 2013

நான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்!!!

நான் கமல் இரசிகன் அல்ல ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் பார்க்கப்போகிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே. தாலிபானையும் ஆப்கானிஸ்தானையும் காட்டுனா முசுலிம்களை தான் காட்ட முடியும். அவனுங்க தொழுகை நடத்தும் குரானை வைத்துள்ள தீவிரவாதிகள் தான். சிக்கறவன் கழுத்தை கோழியை அறுக்கற மாதிரி அறுப்பவனுங்க தான் அப்படி செய்யும் போது அல்லாகு அக்பர் என்று கத்துவதை வீடியோவாக எடுத்து உலகுக்கு அவனுங்க தான் காட்டுனானுங்க. இதை கமல் தன் படத்தில் சொல்லக்கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனம்.
** சார்வாகன் இடுகையை எடுத்து ஒட்டி உள்ளேன்**
I Support Kamal Haasan


வணக்க நண்பர்களே,
இந்திய ஜன்நாயக ,மதசார்பற்ற நமது நாட்டின் சட்டங்கள் மட்டுமே நம்க்கு முதன்மையானது.நமது சமூகத்தில் எழும் சிக்கல்களை சட்டம் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்.

கருத்துகளின் வடிவம் புத்தகம்,பேச்சு,பதிவுகள்,திரைப்படம் என பல வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில் வாழும் நாட்டின் சட்டங்களுக்கேற்றபடி மட்டுமே அனுமதிக்கலாம். சில கருத்துகள் தடை செய்யப் படுகின்றன என்றாலும் அவை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே!!

அந்த வகையில் விஸ்வரூபம் நாட்டின் தணிக்கை சட்டங்களின் படி அனுமதி பெற்ற ஒன்று.ஆகவே படத்தை எதிர்ப்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்கள் என்றால் தணிக்கை சட்டங்களில் வேண்டி மாற்றங்கள் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்தி தேவையான மாற்றம் கொண்டு வரட்டும்.

அதை விட்டு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தொனியில் செயல்படுவதும்,அதற்கு அரசு செவி சாய்ப்பதும் தவறான முன் உதாரணங்களையே ஏற்படுத்தும்.

இப்போது கூட எதிர்க்கும் மதத் தலைவர்கள் நீதிமன்றம் சென்று மட்டுமே தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டுகிறோம். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பாரபட்சம் காட்டாமல் ஒடுக்குவதே நாகரிக‌ சமூகத்தை காப்பாற்றும் வழியாகும்.

நான் கமல் அவர்களை இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்.

என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள்  ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!

நன்றி!!
 

செவ்வாய், நவம்பர் 27, 2012

கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து

அனைவருக்கும் கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து. எங்க பகுதியில் இதை கூம்பு நோம்பி  என்று சொல்லுவோம். நோம்பி என்றால் திருவிழா. கூம்பு அவிஞ்ச பின் (கார்த்திகை விளக்கு ஏற்றிய பின்) எந்த நல்ல செயலையும் அம்மாதத்தில் தொடங்கமாட்டார்கள்.



தீபாவளி போல் இதுவும் அமாவாசை அன்று வரும் விழா என்றே நினைத்திருந்தேன், ஆனால் இது கார்த்திகை மாதத்தில் முழுநிலவு அன்று வரும் என்று இப்போ கண்டுகொண்டேன். சில சமயம் முன்ன பின்ன வருமோ? ஒரு இணையத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள்.  சில இணையதளங்களில் கார்த்திகை மாதத்தில் வரும்  கார்த்திகை நட்சத்திர நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள். 

செவ்வாய் கிழமை நவம்பர் 27, 2012 அன்று கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இன்று பரணி நட்சத்திரம், சதுர்த்தசி திதி. புதன் கிழமை நவம்பர் 28, 2012 அன்று பௌர்ணமி திதி கார்த்திகை நட்சத்திரம் ஏன் ஒரு நாள் முன்னாடியே திருவண்ணாமலையில் கொண்டாடினார்கள்?


செவ்வாய் கூம்பு அப்படின்னா திங்கள் இரவிலிருந்தே வீட்டு வாசலில் விதவிதமாக கோலம் போடுவார்கள். வீட்டு வாசலுக்கு முன் மட்டுமே என்று நினைக்காதிர்கள். தங்கள் வீட்டிற்கு முன் உள்ள எல்லா இடத்திலேயும் கோலம் போடுவார்கள். யாரு கோலம் அழகா இருக்குங்கிறதில் ஒரு சின்ன போட்டி இருக்கும். சில பேர் புள்ளி வைத்த கோலம் போடுவதில் கில்லாடியாக இருப்பார்கள் அது நிறைய பேருக்கு நல்லா வராது அவங்க வண்ண பொடியை வைத்து கோலம் போடுவார்கள். கோலத்தில் விளக்கு வைத்து அதை இன்னும் அழகாக்குவார்கள். கோலம் காலை வரை அழியாமல் பத்தரமாக இருக்கும் பின் வீட்டிற்கு வருபவர்களால் அழியத்தொடங்கி விடும்.




திங்கள், நவம்பர் 12, 2012

இந்த தீபாவளியின் புது வெடிகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஐப்பசி மாத அமாவாசையை விட கார்த்திகை மாத அமாவாசை தான் தமிழர்கள் கொண்டாடும் உண்மையான ஒளித்திருநாள். எனக்கு தெரிந்து அதுக்கு யாரும் வாழ்த்து சொல்வதில்லை. அது இருக்கட்டும் இந்த தீபாவளியின் சில வெடி நகைச்சுவைகளை பார்ப்போம்.

1. மன்மோகன் சிங் வெடி:-
புகையும் வராது வெடிக்கவும் செய்யாது ஆனால் அமெரிக்கா காரன் வெடிச்சா மட்டும் வெடிக்கும் தன்மையுடையது.

2. சோனியா வெடி:-
இதுக்கு தீ வைத்தால் இதுக்கு பதிலா சுற்றியிருக்கும் சிவகங்கை வெடி, திக்கு விஜய் வெடி, சிபல் வெடி, நாராயணன் வெடி, சிங்வி வெடி போன்ற மற்ற வெடிகள் வெடிக்கும்.

3. கெஞ்ரிவால் வெடி:-
இந்த வெடியால் பாதிப்பு அதிகமா இருக்கும். சில முறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சில முறை சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு எந்த அளவு என்பது வெடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்

4. கட்கரி வெடி:-
இது வெடிச்சால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. ஆனா கடுமையான வெடி போல் தோன்றும். இதை உதார் வெடி என்று தமிழல்லாத சொல்லால் குறிப்பிடுவார்கள். இது இன்னும் சந்தையில் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் சங்கத்து ஆட்கள் இதை வாங்குவது தான்.

5. மோடி வெடி:-
முசுலிம்கள் இதை வெடித்தால் அவர்களுக்கு பாதிப்பு உறுதி. இவ்வெடியை தடை செய்ய பலர் முயன்றாலும் இதன் புகழ் அதிகளவில் பரவிவிட்டதால் தடை செய்வது இயலாத செயல.

6. மம்தா வெடி:-
பொதுவுடமைவாதிகள், காங்கிரசு காரங்க வெடிச்சா அவங்க கைய சுட்டுரும். நிறைய புகை வரும் சில முறை வெடிக்கும், வெடிச்சா சத்தம் அதிகமா இருக்கும்.

7. காரத் வெடி:-
இருசியா, சீனா ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு  வெடிச்சா அவங்களுக்கு புடிச்ச மாதிரி வெடிக்கும். அமெரிக்க ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களை சுட்டு விடும்.

8. தாத்தா வெடி:-
வெடிக்கவே செய்யாது ஆனால் வெடிக்கற மாதிரி புஸ்சுன்னு போகும் சத்தமில்லாம இருக்கும் மறுபடியும் புஸ்சுன்னு போகும் வெடிக்கும் வெடிக்கும் அப்படின்னு நினைக்க வைச்சு ஏமாத்தும்.

9. ஆத்தா வெடி:-
வெடிக்காது ஆனா புகை மட்டும் நிறைய வரும். தாத்தா வெடிக்கூட இதை வைக்கக்கூடாது.

10. தரும தலைவி வெடி:-
ஒழுங்கு முறையில்லாமல் வெடிக்கும். வெடிக்கும் என்று சிலர் கூடி நின்று பார்த்தால் கண்டிப்பாக வெடிக்காது. தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்தில் வெடிக்காது ஆனால் புகை வரும், சில சமயம் அதுவும் வராது.


உங்களுக்கும் இது மாதிரி நிறைய புது வெடிகள் தெரிந்திருக்கும்.

பொருப்பு துறப்பி:-
இது நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல. I-T act 66A பண்ற பாட்டை பாருங்கப்பா :(