வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, டிசம்பர் 03, 2010

திமுக வரலாறு - கருத்துப்படம்

நல்லா பாருங்க.  புரிஞ்சுக்குங்க . 2G-spectrumத்துக்கு இதில் இடம் இல்லையா? ஓ! இது 2007ல போட்ட படமா.

திங்கள், நவம்பர் 29, 2010

கஜேந்திர மோட்சம் தவறியது

கஜேந்திர மோட்சம் என்றால் என்ன பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
தெரியாதவங்களுக்கு -  பாகவதத்தில் கூறப்பட்ட கதை...

கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜா தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல, பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. கதை முடிந்தது என்று நினைத்த கஜா, ஆதிமூலமே என்று அலறியது. அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் புள்ளேறி ( கருடன்), சுதர்சன சக்கரத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சம் அளித்தான்.
சுருக்கமா --- தண்ணிக்குள்ள வந்த யானையை அங்கிருந்த முதலை பிடிச்சுக்கிச்சி உடனே யானை பெருமாளே காப்பாத்துன்னு கத்த அதைக்கேட்ட திருமால் விரைந்து அங்குவந்து தன் சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். பின்பு யானைக்கு மறுபிறவி இல்லாத நிலையை (மோட்சம்) திருமால் அருளினார். சுதர்சனத்தால் முதலை கொல்லப்பட்டதால் அதற்கும் மோட்சம் கிடைத்திருக்கும் ஆனா அதை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்காணோம் ஏன்னு தெரியலை. 

இக்காலத்தில் நடந்தது -
கால கடிச்சு துதிக்கையை சும்மா விட்டதால தான யானை ஆதிமூலமேன்னு கத்துச்சு. அதனால முதலை இம்முறை காலை கடிக்காமல் துதிக்கையை கவ்விறுச்சு. இப்ப ஆதிமூலமேன்னு கத்தமுடியாதில்லையா. அதாவது யானைக்கு மோட்சம் கிடைக்காம தடுத்து விட்டது இந்த புத்திசாலியான முதலை.  (முடிவு:- முதலையின் பிடியில் இருந்து யானை தப்பி ஓடிவிட்டது)
குறிப்பு :- இது களிறு (ஆண் யானை) அல்ல பிடி (பெண் யானை)



முதலை யானையின் துதிக்கையை கடிக்கும் காட்சி.


முதலையிடம் இருந்து தப்ப யானை போராடும் காட்சி.

பிபிசி-யில் இந்த காட்சிகள் வந்திருக்கு. அதிலிருந்து சுட்டதுதான் மேல் இருக்கும் 2 படமும்.

திங்கள், செப்டம்பர் 20, 2010

எச்சு மிச்சு - அனுபவம்

நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.

எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும்.  அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.

எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.

ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப  என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.

அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு,  ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.

காட்டு: விலை எச்சா இருக்கே.