வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 20, 2009

கருணா சிறையில் கொடுமை - வருத்தப்படுகிறேன்.

கருணா சிறையில் கொடுமை படுத்தப்பட்டால் அதற்காக நான் வருத்தப்படுவேன். அரசியவாதியான அவரை சிறையில் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதே என் அவா.

வேற ஒன்றும் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீங்களாக கருணா என்பதை கருணாநிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய துரோகி கருணாவும் இப்போது அரசியல்வாதி தான் என்பதை நினைவில் கொள்க.

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பிரியங்கா வதேரா - காந்தி

காங்கிரசு தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி இராபர்ட் வதேராவை மணமுடித்த செய்தி அனைவருக்கும் தெரியும். மணமான பின்பு இவரை பிரியங்கா வதேரா என்றே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இப்போது இவர் பெயரை பிரியங்கா காந்தி என பெரும்பாலும் என குறிக்கின்றன. இது தவறல்லவா? NDTV க்கு இது தொடர்பான கட்டுரையில் இத்தவறை குறிப்பிட்டேன், அதை அவர்கள் வெளியிடவேயில்லை. (என்னுடைய ஒரு commentம் அதுல வரமாட்டுங்குதுங்க ;-)) ). காந்தி மயக்கம் போகமாட்டிக்குது. (மகாத்மா காந்தி மயக்கம் இல்லைங்க, அவரை எப்பவோ மறந்தாச்சு) இதை மோசடி என்றே குறிப்பிடவேண்டும். பெயரை கூட மாற்றி வெளியிடும் இவற்றின் செய்திகளை எவ்வாறு நம்புவது?

பின்னாளில் சில செய்திகளை ஆவணப்படுத்த முயலும் போது இது எல்லோரையும் குழப்பும்.

நளினியை பிரியங்கா சந்தித்ததை எழுதிய போது கூட பிரியங்கா வதேராவை பிரியங்கா காந்தி என்றே எழுதினார்கள். நளினி - பிரியங்கா காந்தி சந்திப்பு...

தமிழ்நாட்டின் முதல்வர் யாருன்னு கேட்டா MGR ன்னும், பிரதமர் இந்திரா காந்தின்னும் சிலர் சொல்லுவாங்க. அவங்களுக்கும் இந்த செய்தியாளர்களுக்கும் என்ன வேறுபாடு?

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

சோனியா காந்தியின் சம்பந்தி தூக்கு மாட்டி மரணம்

அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.

60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.

7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.

செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.

ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....