வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 10, 2017

ஆர் கே நகர் தேர்தல் ஒத்தி வைப்பு

ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைப்பு - சரியா? எனது சிறுபார்வை

சசி அணி 4,000 அளவுக்கு கொடுத்தது என்றால் பன்னீர் அணியும் மற்ற சில பணக்கார கட்சிகளும் 2,000, 1,000 என்று வசதியைப் பொருத்து கொடுத்துள்ளன. சில கட்சிகளும் கட்சி சாரா வேட்பாளர்களும் பிசுனாறிங்க. பண பலம் இல்லாதவர்கள். இதில் பலர் சொத்து அது இதுன்னு உடைமைகளை அடமானம் வைத்து தேர்தலுக்கு செலவு செய்திருப்பார்கள். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் அவர்கள் இது வரை தங்களின் சொத்தை அடமானம் வைத்து கிடைத்த பணத்தை இறைத்து செய்த பரப்புரை எல்லாம் வீண். அடுத்த தேர்தல் காலத்துக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்? தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பணத்தை தருமா? இது நியாமான எல்லோரும் சம வலிமையுடன் போராடும் தேர்தல் ஆகுமா? அரவக்குறிச்சி தஞ்சையில் என்ன ஆயிற்று. பணம் கொடுத்தவர்களே தான மீண்டும் போட்டியிட்டார்கள்? பணம் கொடுக்கப்பட்டது என்றால் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது தானே முறை? 

அதாவது தேர்தல் ஆணையம் அதிமுக திமுக பாசக பொதுவுடமை வாதிகள் போன்ற பெரிய கட்சிகளையே கணக்கில் கொண்டு தேர்தல் நடத்துகிறது. நேர்மையற்ற கூழை கும்பி போடும் முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையம்.

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

தேர்தல் ஆணையம் பணம் கொடுக்கச்
சொல்லிக் கொடுத்திருந்தால்
அதுபொறுப்பேற்கும்

இவர்கள் கொழுப்பெடுத்துக் கொடுத்தால்
அத்ற்கான பலனை அவர்கள்
அனுபவிப்பதுதானே சரியாய் இருக்கும் ?
இல்லையா ?

குறும்பன் சொன்னது…

உண்மை தான் என் கருத்து சிலரின் தவறுக்காக தவறு செய்யாத பலரின் பொருளாதாரத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது, நசுக்கி விட்டது. நிறைய கோணங்களில் சிந்தித்து வலிமையான தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்.