வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இரண்டாம் சுற்று பனிப்பொழிவு - புகைப்படம்

2010 பிப்ரவரி மாதம் 2 அடிக்கு மேல் பனிப்பொழிவு இருந்ததையும் அதன் படங்களையும் போன இடுகையில் இட்டிருந்தேன். மூன்று நாள் கழித்து செவ்வாய்கிழமை இரவிலிருந்து புதன் கிழமை நண்பகல் வரை அடுத்த சுற்று பனிப்பொழிவு இருந்தது. 1 அடிக்கு மேல் வரும் என்று சொன்னாலும் 7 அங்குல அளவுக்கு தான் பனிப்பொழிவு இருந்தது. இரவில் அதிக அளவு பனிப்பொழிவு இல்லை. காலையில் கடும் காற்றுடன் நிறைய பனிப்பொழிவு இருந்தது. குளிரை கூட தாங்கிடலாம், ஆனா காற்றுடன் வரும் குளிர் கொடுமையானது. கடும் காற்று என்றால் நிலைமை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். கடும் காற்றுடன் பனி பெய்ததால் 15 அடி தள்ளி உள்ள பொருட்கள் கூட தெரியவில்லை. இதனால் பனி அள்ளும் வேலையை கூட நகர அரசுகள் ஒத்தி வைத்தன. மாலை ஐந்து மணிக்கு மேல் புகைப்படம் எடுக்கலாம் என்று வெளியே சென்றேன். திடீர் திடீர் என்று காற்று அடித்தது, காற்றின் போது குளிர் அதிகமாக இருந்ததால் ஏன்டா வெளியில் வந்தோம் என்று ஆகிவிட்டது. 5 நிமிடம் கூட வெளியில் இருந்து இருக்கமாட்டேன். கையுறையையும் தாண்டி கை சில்லென்று ஆகிவிட்டது, எந்தளவு குளிர் இருந்திருக்கும் என்று பாருங்கள்.

வரும் திங்கள் இரவு 5 அங்குலத்துக்கு பனி இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

1. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி. பனி அள்ளிய பிறகும் நிறைய பனி மீதம் இருக்கு, முழுமையாக சுத்தப்படுத்த குறைந்தது4 நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.



2. நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டாலும் சாலை இன்னும் முழுவதுமாக சுத்தப்படுத்தப்படவில்லை. நடைபாதையை சுத்தப்படுத்தியது அதை ஒட்டியுள்ள நிறுவனம், அரசு அல்ல.



3. சாலை சந்திப்பு, பனி அள்ளும் எந்திரம் வேலையில் உள்ளது.


.
.

6 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நிறைய தகவல்கள்.. நன்றி

பழமைபேசி சொன்னது…

நன்றி!

குறும்பன் சொன்னது…

நன்றி அண்ணாமலை.

குறும்பன் சொன்னது…

நன்றி பழமைபேசி

அன்புடன் நான் சொன்னது…

படத்தகவலுக்கு நன்றிங்க

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.