(இதய பலவீனமானர்கள் படிக்க/பார்க்க வேண்டாம்.)
மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் (கஜேந்திரன்கள்) புகுந்து விட்டன. நகர் முழுவதும் அந்த யானைகள் (கஜேந்திரன்கள்) தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு யானை(கஜேந்திரன்) தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் & இன்னொரு யானை (கஜேந்திரன்) அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அங்கிருந்த மாடு ஒன்றை தாக்கியது அதனால் அந்த மாடு மோட்சத்தை அடைந்தது.
நிழற்படங்களும் அசைபடங்களும் உங்களுக்காக. (இதய பலவீனமானர்கள் பார்க்க வேண்டாம்.)
காவலாளி மிதித்து சாவு.
வாகனத்தை ஒரசிக்கொண்டு செல்லுதல்.
கட்டடத்துக்குள் யானை.
நிழற்படங்கள்.
நிறைய இடத்துல பொருப்பி(பொருப்புதுறப்பு) போட்டாகிவிட்டேன்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புதன், ஜூன் 08, 2011
புதன், ஜூன் 01, 2011
நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில்
நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் படித்த பிறகு தமிழ்மணத்தை திறந்தா யாரும் அதைப்பற்றி ஒன்றும் எழுதக் காணோம். என்னடா இராஜ் கிரணுக்கு பதிவர்கள் இடையே மவுசு இல்லையேன்னு வருத்தமா போச்சு. அதனால அவரைப்பற்றி நாமளாவது எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். டைம்ஸ் ஆப் இந்தியாவில் நம்ம ஆளுங்களைப் பற்றிகூட செய்தி போடறாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. அதனால செய்திய முழுசா படிச்சு பார்த்தேன். இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என அவர் நண்பர் ரிசி கபூர் சொல்லியிருக்கறார். இந்தி பட உலகலேயும் பல நண்பர்களை கொண்டு இருக்கறாரே என வியப்பாக இருந்தது. இவர் இந்தி படங்களில் நடித்ததே எனக்கு புதிய செய்தி.
இவர் 10 ஆண்டுகளாக காணாம போயிருந்ததா போட்டிருந்தாங்க, என்னுள் சந்தேகம் எட்டி பார்த்தது. இவர் பல இந்தி படங்களில் நடித்திருந்ததாக போட்டவர்கள் தமிழில் நடித்ததா போடவேயில்லை. சந்தேகம் அதிகமாகியது. இவர் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரத்தின் ஒர் மனநல மருத்துவமனையில் இருப்பதாக படித்ததும் எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் குறிப்பிட்டுள்ள இராஜ் கிரண் நம்ம இராஜ் கிரண் அல்ல என தெரிந்தது. இவரது அண்ணன் பெயர் கோவிந்து தம்பி பெயர் அஜித்.
மனநல மருத்துவமனையில் இருந்த தற்போது அங்கு வேலை பார்க்கும் இராஜ் கிரண் இந்தி பட உலக இராஜ் கிரண். நல்லா பீதிய கிளப்பிட்டாங்க.
குறிச்சொல்
இராஜ் கிரண்,
டைம்ஸ் ஆப் இந்தியா,
மருத்துவமனை
புதன், மே 11, 2011
திமுக நம்பும் வெற்றிக்கான வாய்ப்பாடு.
2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. யார் வெற்றியாளர் என்று தெரிய மே 13 வரை காத்திருக்கனும். இந்த இடைக்காலத்தில் பல கருத்து கணிப்புகள் வரும். மக்கள் பெருவாரியாக வந்து வாக்களித்ததே திமுக ஆட்சியை பிடிக்காததால் தான் என்று செயலலிதா கூறுகிறார். நல்லா கவனிங்க அதிமுக ஆட்சிக்கு வரணும் என்ற காரணத்திற்காக அதிக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். தேமுதிகவுடன் கூட்டு வைத்ததினால் அதிமுகவுக்கு லாபம் தான், தேமுதிக தனித்து நின்றிருந்தால் அதிமுக பாடு திண்டாட்டாமக இருந்திருக்கும். அதிமுக வெற்றி பெற்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கமுடியும் அது திமுக மீது உள்ள வெறுப்பு. உருப்படியாக அதிமுக எந்த போராட்டத்தையும் இந்த 5 ஆண்டுகளில் நடத்தவில்லை. எதிர்க்கட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அதிமுக தான் உதாரணம்.
திமுகவின் இலவச திட்டங்களால் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். வாக்குபதிவு அதிகமானதற்கு இது தான் காரணம். மக்கள் 2G ஊழல் பற்றி கவலைப்படவில்லை எனவே நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். திமுகவால் ஏராளமான மகளிர் சுய நிதி குழுக்கள் பயன்பெற்றுள்ளன அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என திமுகவினர் சொல்கின்றனர். விலைவாசி ஏற்றம், மின்சார தட்டுப்பாடு போன்றவை திமுகவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.
மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவிற்கு சாதகமாக இருக்குமா? யாருக்கு தெரியும்?. மே 13 அன்று தெளிவாக தெரியும் :)) .
திமுகவின் நட்சித்திரப் பேச்சாளராக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நிறைய பேர் சொல்கின்றனர். அவர் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இத்தேர்தலை நன்றாக பயன்படுத்தினார். அவர் திமுகவின் முதன்மை எதிரியான அதிமுகவை சாடவில்லை திமுகவும் அதிமுகவும் தான் அதிக இடங்களில் நேரிடையாக மோதுகின்றன. அவர் விஜயகாந்தை தாக்கி நிறைய பேசினார் அது திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் திமுக தலைவர்களின் தேர்தல் கால பேச்சை விட அதிகம் காண்பிக்கப்பட்டது. விஜயகாந்தை மட்டும் தாக்கி பேசும் ஒருவர் எப்படி திமுகவின் நட்சத்திரப்பேச்சாளராவார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் முன்னனி நகைச்சுவை நடிகர் எனவே அவரை பார்ப்பதற்கே நிறைய கூட்டம் கூடி இருக்கும். இவர் பேச்சால் தேமுதிக பாதிக்கப்பட்டிருக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்.
திமுக பல வியூகங்களை போட்டது என்று சிலர் சொல்லலாம். எத்தனை வியூகம் போட்டாலும் அவர்கள் நம்புவது இரண்டை தான்.
1. திருமங்கலம் வாய்ப்பாடு
2. சிவகங்கை வாய்ப்பாடு
திருமங்கலம் வாய்ப்பாடு என்பது அழகிரியால் வெற்றிகரமாக இடைத்தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. அது பொதுத்தேர்தலில் பலன் தருமா என்று தெரியவில்லை ஆனால் இதனால் மக்களை கேலிக்குள்ளாக்கினது தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் பணம் வெளிப்படையாக வாக்காளர் கைக்கு செல்வது தடைபட்டது ஆனால் பணம் பட்டுவாடா நடந்தது. பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்கு போடுவார்களா? நிறைய வாக்கு வேறு பதிவாகியுள்ளது இது திருப்பம் ஏற்படுத்தும். எந்த மாதிரியான திருப்பம் என்பதை காண மே 13 வரை பொறுத்திருங்கள். (எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? )
திருமங்கலம் வாய்ப்பாடு பலனளிக்காவிட்டால் சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்தி வெற்றி பெறுவது அடுத்த வியூகம். இந்த வியூகத்தை பயன்படுத்தினால் வெற்றி உறுதி. சிவகங்கை வாய்ப்பாடு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக. 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த சிதம்பரம் திடீர் என்று 3354 வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றதன் காரணமாக அந்த வியூகத்திற்கு சிவகங்கை வாய்ப்பாடு என்று பெயர் வைக்கப்பட்டது.
திருமங்கலம் வாய்பாடு பற்றியும் சிவகங்கை வாய்ப்பாடு பற்றியும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். திருமங்கலம் வாய்பாடு தடையில்லாமல் செயல்படுவதை தடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கெடுபிடியாக நடந்து பணப்புழக்கம் வெளிப்படையாக நடப்பதை ஓரளவு குறைத்தார்கள்.
வாக்கு பதிவு முடிந்ததிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 1 மாதம் இடைவெளி. சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்த அருமையான வாய்ப்பு. இதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. காற்று போக முடியாத இடத்திலும் போவார்கள் நம்ம அரசியல் வாதிகள். அதனால் 4 அடுக்கு பாதுகாப்பை நாம் நம்ப முடியாது. வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் போதையில் தூங்கிக்கிட்டு இருந்ததை செய்தியில் படித்திருப்பீர்கள். அறை சாளரங்களின் கதவு உடைந்து இருந்ததாம் இதையும் செய்தியில் படித்திருப்பீர்கள். தேர்தல் ஆணையம் சிவகங்கை வாய்ப்பாட்டை தடுப்பதற்காக பெரும் சிரமப்பட்டுக்கொண்டுள்ளது.
திருமங்கலம் வாய்ப்பாடு பெருமளவில் ஊடகங்களால் பேசப்பட்டது போல் சிவகங்கை வாய்ப்பாடு பேசப்படவில்லை. தேர்தல் எப்படியிருக்கும் என மே 13 வரை பேசுவோம். அப்புறம் ஏன் தேர்தல் முடிவு இப்படி வந்துச்சு என பேசுவோம்.
திமுகவின் இலவச திட்டங்களால் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். வாக்குபதிவு அதிகமானதற்கு இது தான் காரணம். மக்கள் 2G ஊழல் பற்றி கவலைப்படவில்லை எனவே நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். திமுகவால் ஏராளமான மகளிர் சுய நிதி குழுக்கள் பயன்பெற்றுள்ளன அவர்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என திமுகவினர் சொல்கின்றனர். விலைவாசி ஏற்றம், மின்சார தட்டுப்பாடு போன்றவை திமுகவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.
மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவிற்கு சாதகமாக இருக்குமா? யாருக்கு தெரியும்?. மே 13 அன்று தெளிவாக தெரியும் :)) .
திமுகவின் நட்சித்திரப் பேச்சாளராக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நிறைய பேர் சொல்கின்றனர். அவர் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இத்தேர்தலை நன்றாக பயன்படுத்தினார். அவர் திமுகவின் முதன்மை எதிரியான அதிமுகவை சாடவில்லை திமுகவும் அதிமுகவும் தான் அதிக இடங்களில் நேரிடையாக மோதுகின்றன. அவர் விஜயகாந்தை தாக்கி நிறைய பேசினார் அது திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் திமுக தலைவர்களின் தேர்தல் கால பேச்சை விட அதிகம் காண்பிக்கப்பட்டது. விஜயகாந்தை மட்டும் தாக்கி பேசும் ஒருவர் எப்படி திமுகவின் நட்சத்திரப்பேச்சாளராவார் என்பது எனக்கு புரியவில்லை. அவர் முன்னனி நகைச்சுவை நடிகர் எனவே அவரை பார்ப்பதற்கே நிறைய கூட்டம் கூடி இருக்கும். இவர் பேச்சால் தேமுதிக பாதிக்கப்பட்டிருக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்.
திமுக பல வியூகங்களை போட்டது என்று சிலர் சொல்லலாம். எத்தனை வியூகம் போட்டாலும் அவர்கள் நம்புவது இரண்டை தான்.
1. திருமங்கலம் வாய்ப்பாடு
2. சிவகங்கை வாய்ப்பாடு
திருமங்கலம் வாய்ப்பாடு என்பது அழகிரியால் வெற்றிகரமாக இடைத்தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. அது பொதுத்தேர்தலில் பலன் தருமா என்று தெரியவில்லை ஆனால் இதனால் மக்களை கேலிக்குள்ளாக்கினது தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் பணம் வெளிப்படையாக வாக்காளர் கைக்கு செல்வது தடைபட்டது ஆனால் பணம் பட்டுவாடா நடந்தது. பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்கு போடுவார்களா? நிறைய வாக்கு வேறு பதிவாகியுள்ளது இது திருப்பம் ஏற்படுத்தும். எந்த மாதிரியான திருப்பம் என்பதை காண மே 13 வரை பொறுத்திருங்கள். (எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? )
திருமங்கலம் வாய்ப்பாடு பலனளிக்காவிட்டால் சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்தி வெற்றி பெறுவது அடுத்த வியூகம். இந்த வியூகத்தை பயன்படுத்தினால் வெற்றி உறுதி. சிவகங்கை வாய்ப்பாடு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக. 2009 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த சிதம்பரம் திடீர் என்று 3354 வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றதன் காரணமாக அந்த வியூகத்திற்கு சிவகங்கை வாய்ப்பாடு என்று பெயர் வைக்கப்பட்டது.
திருமங்கலம் வாய்பாடு பற்றியும் சிவகங்கை வாய்ப்பாடு பற்றியும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். திருமங்கலம் வாய்பாடு தடையில்லாமல் செயல்படுவதை தடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கெடுபிடியாக நடந்து பணப்புழக்கம் வெளிப்படையாக நடப்பதை ஓரளவு குறைத்தார்கள்.
வாக்கு பதிவு முடிந்ததிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 1 மாதம் இடைவெளி. சிவகங்கை வாய்ப்பாட்டை பயன்படுத்த அருமையான வாய்ப்பு. இதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. காற்று போக முடியாத இடத்திலும் போவார்கள் நம்ம அரசியல் வாதிகள். அதனால் 4 அடுக்கு பாதுகாப்பை நாம் நம்ப முடியாது. வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் போதையில் தூங்கிக்கிட்டு இருந்ததை செய்தியில் படித்திருப்பீர்கள். அறை சாளரங்களின் கதவு உடைந்து இருந்ததாம் இதையும் செய்தியில் படித்திருப்பீர்கள். தேர்தல் ஆணையம் சிவகங்கை வாய்ப்பாட்டை தடுப்பதற்காக பெரும் சிரமப்பட்டுக்கொண்டுள்ளது.
திருமங்கலம் வாய்ப்பாடு பெருமளவில் ஊடகங்களால் பேசப்பட்டது போல் சிவகங்கை வாய்ப்பாடு பேசப்படவில்லை. தேர்தல் எப்படியிருக்கும் என மே 13 வரை பேசுவோம். அப்புறம் ஏன் தேர்தல் முடிவு இப்படி வந்துச்சு என பேசுவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)