கண்ணா நீ
திருமணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா...
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், ஆகஸ்ட் 17, 2009
புதன், ஆகஸ்ட் 12, 2009
புகழ்பெற்ற பதிவரும் அடையாளமும்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அது முத்திரையாகவோ அல்லது சொற்றொடராகவோ இருக்கும். அந்த சொற்றொடரை\முத்திரையை பார்த்தா நமக்கு அந்த நிறுவனம் நினைவுக்கு வரும். விளம்பரத்துக்கு நிறைய செலவு பண்ணி நம்ம மனசுல அவங்க நிறுவன முத்திரை\சொற்றொடரை பதிய வைக்க முயற்சிப்பாங்க. அதே போல் சில தனி நபர்களுக்கும் அடையாளம் உள்ளது. இவங்க நிறுவனம் மாதிரி எல்லாம் செலவு பண்ணமாட்டாங்க. காலப்போக்கில் அடையாளம் தங்கிவிடும். இங்க சில தனி நபர்களின் அடையாளங்களை பார்ப்போம்.

அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.
- MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
- கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
- செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.

- இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
- நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
- பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
- என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
- 007 அப்படின்னா அது James Bond.
- கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
- அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
- தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
- பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
- பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.
- பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
- நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
- 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
- இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
- புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
- நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
- பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)
அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.
செவ்வாய், ஜூன் 30, 2009
Indian Express - 10ம் வகுப்பு பொது தேர்வு

10ம் வகுப்பு பொது தேர்வு கூடாதுன்னு கபில் சிபல் ஏன் சொல்லறாருன்னு இப்ப புரியுதா மக்களே...
இப்ப 10 அப்புறம் 12வது அப்புறம் கல்லூரி அப்புறம் தேர்வே கூடாதும்பார். தேர்வு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை தருகிறது என்பதை இராகுல் சோனியாவை விட யாருக்கு நன்கு புரியும்?
இராகுல் காந்தி பற்றி தப்பா பேசாதிங்க. அவரு தான் இந்தியாவின் விடிவெள்ளி.
காக்கா புடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..
கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் பெரிய வழக்குரைஞராக இருந்தவர் என்று கேள்வி.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)