வணக்கம்
செவ்வாய், நவம்பர் 28, 2006
ஜெயலலிதாவுக்கு வீரபாண்டியார் பதில்
இதுதொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கரும்பு விலை
அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.1014 கொடுக்கப்பட்டதாகவும் இப்போது தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவறான தகவலை கூறி இருக்கிறார்.
தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு உற்பத்தியாளர்கள்-சர்க்கரை ஆலை அதிபர்கள்-கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூடி விவசாயிகளுக்கு கட்டுப்படியாககக்கூடிய விலையாக மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் 8ஷி சதவீத பிழிதிறனுக்கு மேல் இருந்தால் ஒவ்வொரு புள்ளிக்கும் கூடுதலான விலையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.
தடை உத்தரவு
மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கம் 2.1.2000 அனëறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதைத்தொடர்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டது. அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க முடியாது என்று கோர்ëட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத்துறை ஆலைகள் மத்திய அரசு அறிவித்த சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் மாநில அரசாங்கம் பரிëந்துரை விலையை சேர்த்து 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
தவறான தகவல்
தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான உரிய விலை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைக்கூட அறிந்துகொள்ளாமல் தி.மு.க. ஆட்சியில் திடீரென கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறானது ஆகும்.
2001-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2006 ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தையே கூட்டவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை காரணம் காட்டி மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ விலையோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
ஓட்டு வாங்க தந்திரம்
ஆனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வாதாடி மாநில அரசாஙëகம் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்யலாம் என்று ஜெயலலிதா கூறி இருப்பது தவறானது. அவருக்கு உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் எனëற எண்ணம் இருந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய 2004-ம் ஆண்டிலேயே கரும்பு விலையை ரூ.1014 ஆக உயர்த்தி இருந்திருக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோது அடுத்த நடைபெற இருந்த 2006 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொணëடு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க வேணëடும் என்று கருதி 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.1014 வழங்க வேண்டும் என்று ஒரு உத்தரவை 2005-2006-ல் போட்டு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க செய்த தந்திரமான செயல் ஆகும்.
முத்தரப்பு கூட்டம்
2006-2007-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையாக டனë ஒன்றுக்கு ரூ.802.50 என்று வழங்கி உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை ரூபாயை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேணëடும் எனëபது சட்டம். அந்த அடிப்படையில்தான் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.802.50 முதலில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை, முத்தரப்பு கூட்டத்திற்கு பின்னர் வழங்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள ஒன்று ஆகும். இந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க முத்தரப்பு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கருதி, தி.மு.க. அரசு மீது உண்மைக்கு மாறான அறிக்கை விடுவதை ஜெயலலிதா இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறி உள்ளார்.
ஞாயிறு, நவம்பர் 26, 2006
விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு.
விவசாயிகளுக்கு எதிராக இருப்பதென்று தமிழக அரசு கங்கனம் கட்டி கொண்டுள்ளது போல் தெரிகிறது. நல்ல விளைச்சல் தரும் பாசன வசதியுடைய விவசாய நிலங்களை பறித்து துணை நகரம் அமைப்பேன் என்பது, கரும்புக்கு ஆதார விலையை குறைப்பது என்று திமுக அரசு முடிவெடுத்திருப்பது விவசாயிகளின் நலனின் மேல் இந்த அரசுக்கு உள்ள அக்கரையை காட்டுகிறது.
கரும்புக்கு ஆதார விலையை தமிழ அரசு ஒரு டன்னுக்கு 200 ரூபாய் குறைத்துள்ளது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் கரும்பின் ஆதார விலையை உயர்த்துகிறேன் என்று தான் எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும். யார் ஆட்சிக்கு வந்தாலும் உயர்த்தமாட்டார்கள், விவசாயிகள் கடுமையாக போராடினால் தேர்தல் வருவதாக இருந்தால் வாக்கு அறுவடை செய்ய ஆதார விலையை கொஞ்சம் உயர்த்தி விவசாயிகளின் மேல் அக்கரையுள்ளதாக காட்டிக்கொள்வார்கள்.
இந்த முறை நிலைமை இன்னும் மோசம், இருக்கும் ஆதார விலையை குறைத்துள்ளார்கள். தற்போது 1014 ரூபாயாக இருப்பதை 802 ரூபாயாக சத்தமில்லாமல் கமுக்கமாக குறைத்துள்ளார்கள். கரும்பு வெட்டு கூலி டன்னுக்கு 200 ல் இருந்து 300 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்காகவா இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? எப்பப்பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் விவசாயி தலையிலேயே ஏன்யா கை வைக்கிறீங்க. "உழுதவன் கணக்கு பார்த்தா ஒரு ஆலாக்கு கூட மிஞ்சாது" என்பது விவசாயியின் நிலை அறிந்தோருக்கு தெரியுமே.
இதுல வேற நம்ம முதல்வர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அப்பப்ப கூறிக்கொள்வார், இப்ப நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அவர் கம்யூனிஸ்ட் அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகாரர் மாதிரி என்று. கம்யூனிஸ்ட் வேற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வேற என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
கரும்பு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் பெரும்போராட்டம் நடத்தினால் தான் உண்டு அல்லது மருத்துவர் இராமதாசு அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை விடவேண்டும். ஜெயலலிதா விலை குறைப்பை குறித்து கண்டன அறிக்கை விட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
கலைஞர் குடும்பத்து ஆட்கள் சர்க்கரை ஆலையில் பெரும்முதலீடு செய்திருந்தால் கரும்பின் ஆதார விலை அதிகரிப்பு என்பது இந்த ஆட்சியில் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். சிமெண்ட் கதை தான் நமக்கு தெரியுமே.
"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது இப்போ "ஊருக்கு(அரசுக்கு) இளைச்சவன் விவசாயி" என்று மாறிவிட்டது.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
வள்ளுவன் வாக்கு பொய்யா? தெரியாது, ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞருக்கு நன்றாக தெரியும்.
ஞாயிறு, நவம்பர் 19, 2006
புலியின் முதலை வேட்டை
என்ன தான் பலசாலியா இருந்தாலும் சில இடங்களில் பலம் இருக்காது / செல்லுபடியாகாது அப்போ அங்க பலமுள்ள எதிரி அடிச்சா பரலோகம் தான்.
புதிர்:-
புலி சிங்கத்தையும் சிங்கம் புலியையும் வேட்டியாடுவது எங்கு நடக்குது தெரியுமா?
இலங்கையில் தான்