உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.
http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&
என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புதன், ஜூலை 05, 2006
செவ்வாய், ஜூலை 04, 2006
சேவல் பலியிட்டு சங்கர மட வேலை தொடக்கம்
கொலை, கைது, ஜெயில் என்று இதுவரை சந்தித்திராத அளவு பெரும்சோதனையில் காஞ்சி மட சங்கராச்சாரியார்கள் உள்ளனர். இதனால் மட மக்கள் மடத்தில் வாஸ்து தோசம் ஏதாவது உள்ளதா என்று வாஸ்து அறிஞர்களை கொண்டு ஆராய்ந்தனர்.
ஆராய்ந்ததில் காஞ்சி சங்கர மடத்தின் முன் பகுதி நுழைவாயில் வாஸ்து குறைபாடுடன் உள்ளதாக வாஸ்து அறிஞர்களால் அறியப்பட்டது.
அதனால் வட பகுதியிலுள்ள நுழைவாயிலை இடித்துவிட்டு கிழக்கு திசையில் நுழைவாயிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் கிழக்குப்பகுதியில் இருந்த கடைகள் காலிசெய்யப்பட்டன.
தற்போது காலிசெய்யப்பட்ட கடைகளை இடித்து புதிய நுழைவாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கு முன் சேவல் பலி கொடுக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2006/07/03/kanchi.html
காஞ்சி மடத்தில் சேவல் பலி கொடுத்து நுழைவாயில் மாற்றும் பணி தொடங்கப்பட்டது என்ற செய்தியை படித்ததும் என்னடா இது குப்பன் சுப்பன் ஆண்டுக்கு ஒரு முறை அவனோட கோயிலில் கோழி, கெடா வெட்டி சாமி கும்பிட்டப்போ இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க சேவலை பலி கொடுத்து வேலை செய்யறாங்களேன்னு தோன்றியது. எல்லாம் காலத்தின் கோலம் என்ன செய்வது.
ஒரு வேளை இவர்களின் சோதனைக்கு காரணம் அய்யனாருக்கும் கருப்பணாருக்கும் முனீஸ்வரனுக்கும் உரிய படையலை ஆட்சியாளர்களின் (அப்போது) நெருக்கத்தை வைத்து தடுத்ததால் நேர்ந்த தெய்வ குற்றமோ என்னமோ யார் கண்டது.
காதோலை, கருவமணி, சுருட்டு, சாராயம் படைத்து முனீஸ்வரனுக்கு ஒரு கெடா அல்லது கோழி வெட்டுனா எல்லா தோசமும் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். எனக்கு தெரிந்த பரிகாரம் இது.
ஆராய்ந்ததில் காஞ்சி சங்கர மடத்தின் முன் பகுதி நுழைவாயில் வாஸ்து குறைபாடுடன் உள்ளதாக வாஸ்து அறிஞர்களால் அறியப்பட்டது.
அதனால் வட பகுதியிலுள்ள நுழைவாயிலை இடித்துவிட்டு கிழக்கு திசையில் நுழைவாயிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் கிழக்குப்பகுதியில் இருந்த கடைகள் காலிசெய்யப்பட்டன.
தற்போது காலிசெய்யப்பட்ட கடைகளை இடித்து புதிய நுழைவாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கு முன் சேவல் பலி கொடுக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2006/07/03/kanchi.html
காஞ்சி மடத்தில் சேவல் பலி கொடுத்து நுழைவாயில் மாற்றும் பணி தொடங்கப்பட்டது என்ற செய்தியை படித்ததும் என்னடா இது குப்பன் சுப்பன் ஆண்டுக்கு ஒரு முறை அவனோட கோயிலில் கோழி, கெடா வெட்டி சாமி கும்பிட்டப்போ இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க சேவலை பலி கொடுத்து வேலை செய்யறாங்களேன்னு தோன்றியது. எல்லாம் காலத்தின் கோலம் என்ன செய்வது.
ஒரு வேளை இவர்களின் சோதனைக்கு காரணம் அய்யனாருக்கும் கருப்பணாருக்கும் முனீஸ்வரனுக்கும் உரிய படையலை ஆட்சியாளர்களின் (அப்போது) நெருக்கத்தை வைத்து தடுத்ததால் நேர்ந்த தெய்வ குற்றமோ என்னமோ யார் கண்டது.
காதோலை, கருவமணி, சுருட்டு, சாராயம் படைத்து முனீஸ்வரனுக்கு ஒரு கெடா அல்லது கோழி வெட்டுனா எல்லா தோசமும் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். எனக்கு தெரிந்த பரிகாரம் இது.
வியாழன், ஜூன் 22, 2006
குறும்பாறு
தமிழ்மணத்தில் இப்போ "ஆறு" கரைபுரண்டு ஓடிக்கிட்டுருக்கு. அதுல சிறிய துணை ஆறா இந்த குறும்பாறு கலக்குது, இதுல தண்ணி குறைச்சல்ன்னு சொல்லாதிங்க தண்ணி வரதே பெரிய சங்கதி.
(1) எந்த ஊர் நீங்க?
(2) எந்த சாமி புடிக்கும்?
(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.
(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
(1) எந்த ஊர் நீங்க?
பொறையாறு.
(2) எந்த சாமி புடிக்கும்?
ஆறுமுக சாமி.
(3) உங்க ஊர்ல எந்த சாமிக்கு கோயில் இருக்கு?
அய்யன்னாறுக்கு
(4) யாரை உங்களுக்கு பிடிக்காது?
சாமியாறை(எழுத்துப் பிழை காணாதீர்கள் 'ர' வை அழுத்தி சொல்லுவது வழக்கம் :-)) )
(5) பெரும்பான்மையான தமிழகத்தின் தண்ணி தேவையை தீர்ப்பது?
காவேரி ஆறு.
(கொசுறு) பெரும்பான்மையான தமிழக குடி மக்களின் தண்ணி தேவையை தீர்ப்பது விஜய் மல்லய்யாவின் United Breweries தண்ணி கம்பெனி.
(6) ஆறுகளை பெண்ணாக பாவிப்பவர்கள் நாம் , காவிரி தாய் அப்படி. ஆனா ஒரு ஆறு பெயரை பெண்கள் வைத்துக்கொள்ள முடியாது அது என்ன தெரியுமா?
அது "கிருஷ்ணா" ஆறு.
(7) 'ஆறா' அப்படின்னு யாரைக்கூப்பிடலாம்?
நதியா வை.
(8) பிடித்த சிரிப்பு நடிகர்?
"வைகை" புயல்.
(9) டாவடிச்ச பொண்ணு பேர்?
சிந்து.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)