வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் வரலாறு

மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி (பழனியாண்டவர்) கோவில் தல வரலாறு (தல புராணம்) அசித் புராணமல்ல  😉
வெள்ளக்கோவிலுள்ள வீரகுமார சாமி தன் எல்லைக்குட்பட்ட மக்கள் நலமாக உள்ளார்களா என்று அறிய திங்கள் தோறும் நாட்டில் எல்லா இடங்களுக்கும் உலா செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒரு முறை நாமக்கலுக்கு அருகிலுள்ள மரூர்பட்டியில் திரளாண மக்கள் சாமியின் வருகையை எதிர்பார்த்து கூடியிருந்தனர். சாமி அவர்களிடம் எதற்காக கூடியுள்ளீர்கள் என்று வினவினார். அவர்கள் சாமி வெள்ளக்கோவில் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது அதனால் உன் ஆலயத்திற்கு மாதம் ஒரு முறை கூட வரமுடிவதில்லை. ஆகையால் இங்கு எழுந்தருள வேண்டும் என வேண்டினர். அதற்கு சாமி வீரக்குமார சாமியாக வெள்ளக்கோவிலில் எழுந்தருளுவேன் என பக்தருக்கு வாக்கு கொடுத்ததன் காரணமாக வேறு ஊர்களில் தான் எழுந்தருள முடியாது என்றும், தான் வேலவனின் இறங்குகை என்றும் அதனால் பழனியாண்டவர் ஆலயத்தை நிறுவி வழிபடச் சொன்னார். அப்போது கூட்டத்திலிருந்த குப்பண்ணக் கவுண்டர் என்ன இருந்தாலும் தங்களை தரிசிப்பது போல் ஆகுமா என்றார். இந்த இறங்குகையில் தான் பெண்களை கோவிலில் பார்ப்பதில்லை என்று வாக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் என் ஆலயத்தின் உள் வரமாட்டார்கள் ஆனால் அவர்களின் வேண்டுதலுக்கு இரு மடங்கு பலன் கொடுப்பேன், ஆனால் பழனியாண்டவர் கோவிலுக்கு இருபாலரும் வரலாம் என்று கூறி பழனியாண்டவரை ஏற்பாடு செய்ய கூறினார். அப்போதும் கூட்டத்திலிருந்த செல்லமுத்து கவுண்டர் என்ன இருந்தாலும் உங்களை வழிபடுவது தான் பிடித்துள்ளது என்றார். அதற்கு சாமி என் உருவத்தை வரைந்து வேல் சாட்டை பிரம்பு முதலியவற்றை வைத்து கும்பிடுங்கள் என்றார் வேல் சாட்டை முதலியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை நொய்யலில் குளிப்பாட்டி வெள்ளக்கோவிலுள்ள தன் ஆலயத்திற்கு மகா சிவராத்திரி காலத்தில் காவடியுடன் கொண்டுவரச் சொன்னார் சாமியின் உருவப்படத்தை பெண்களும் வழிபடலாம் என்பதால் சாமியின் தீர்ப்பு அனைவருக்கும் உகந்ததாக இருந்தது.

வெள்ளக்கோவிலில் உள்ள வீரக்குமார் சாமி சிலை

வெள்ளக்கோவிலில் உள்ள கோவில் முதன்மை வாயிலை தாண்டியதும்

வீரக்குமார் கோவிலில் உள்ள மண் குதிரைகள்
வீரக்குமார் கோவிலில் இருந்த மகாமுனி (தற்போது கோவிலுக்கு வெளியே உள்ளது)

வீரக்குமார் கோவில் மகா சிவராத்திரி தேர்

வீரக்குமார் சாமி உருவம் (ஓவியம்)


பழனியாண்டவர் அலங்காரத்தில்



பழனியாண்டவர்

செவ்வாய், ஜூன் 19, 2018

பேலியோ

அடிக்கடி மறந்து விடுவதால் இங்கு போட்டுள்ளேன். எழுதியது நியாண்டர் செல்வன்
இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.
——-
இந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.
விதிகள்:
மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே
சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்
அசைவ டயட்:
மீல் 1:
3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.
மீல் 2:
100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.
OR
நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்
OR
பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)
மீல் 3:
பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். பசி அடங்கும் அளவுக்கு. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்
ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்
முட்டை சேர்த்த சைவ டயட்:
மீல் 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
மீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய் (பசி அடங்கவில்லையெனில், அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கவும்).
மீல் 3:   4 முட்டை
ஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்
முட்டை சேர்க்காத பியூர்வெஜ் சைவ டயட்
Meal option 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
Meal option 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். உடன் காய்கறி சாலட்/ காய்கறி சூப் ஏராளமாக பருகவும்.  அவகாடோவும் சேர்க்கலாம்
Meal option 3:  முழுகொழுப்பு பாலில் செய்த பனீர் டிக்கா, பனீர் மஞ்சூரியன்.பசி அடங்கும் அளவுக்கு
சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே
தவிர்க்கவேன்டியவை
பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)
அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்
பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்
பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற
கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.
அளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை
மாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)
தவிர்க்கவேண்டிய இறைச்சி:
சாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்
கொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி
கருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)
முட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்
எண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி
உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                 முள்ளங்கி
பாகற்காய்
காரட் (200 grams max. dont take daily)
பீட்ரூட் (200 grams max. dont take daily)
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                           பீர்க்கங்காய்                                                                                                   புடலங்காய்  ,சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
நிலக்கடலை
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய்                                                                                                                     பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
சுவையான பேலியோ சைவ ரெசிபிகளை இத்தளத்தில் காணலாம்
___________________________________________________
இது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் பதிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.
மேலும் கேள்விகள் இருந்தால் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைந்து கேட்கவும்.
https://selvan.wordpress.com/2015/03/25/paleo-diet-for-beginners/  

புதன், மே 02, 2018

ஆத்தி பட்டப் பெயர்

அத்தி என்பது பூ, அத்தி மரம் என்பது கூட உள்ளது. இதில் வேறு சிறப்புகள் இல்லை.
ஆத்தி என்பதும் பூ , ஆத்தி மரம் கூட உள்ளது. இது சிறப்பானது. ஆத்தி பூ சோழ பெரு வேந்தர்களின் குடிப்பூ. சிவபெருமானும் ஆத்தி பூ சூடியிருந்தாராம். ஆத்தி மரம்

உறுதியானது. இதை கருங்காலி என்றும் கூறுவார்கள்.

சோழனுக்கு ஆத்திப் பூ ; சேரனுக்கு பனம் பூ ; பாண்டியனுக்கு வேம்பம் பூ

நெடுங்கிள்ளியின் உறையூரை பிடிக்க இன்னொரு சோழன் நலங்கிள்ளி முயலும் போது  அடேய் வெண்ணைகளா நீங்க இருவரும் ஆத்தி பூ காரனுங்கடா, நீங்க சண்டை போடுவது பனம்பூ சூடிய சேரனோ வேம்பம் பூ சூடிய பாண்டியனோ அல்ல அவனும் ஆத்திப்பூ சூடியவனே. சண்டையில் ஒருத்தன் தான் வெற்றி பெற முடியும் உங்களில் யார் தோற்றாலும் தோற்பது ஆத்திப்பூ சூடியவனே, அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா? இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள் என்று கோவூர் கிழார் என்ற பாணபத்திர ஓணாண்டி கூறினாராம்.

பாணபத்திர ஓணாண்டி பேச்சை சண்டையில் கில்லியான கிள்ளியில் ஒருவன் கேட்கலை (ஓணாண்டி பேச்சை எவன் கேக்கறான்), காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று  நெடுங்கிள்ளி மண்டைய போட்டதும் போர் முடிவுற்றது.

என் அப்புச்சியின் பட்டப் பெயர் ஆத்தி. அப்புச்சி  அம்மாயி எல்லோரையும் தாத்தா ஆயா என்றே நான் கூப்பிடுவேன். அத்தி என்றால் பூ என்று மட்டும் தெரியும் ஆத்தி  என்று பூ, மரம் இருப்பது தெரியாது. தாத்தாவுக்கு ஆத்தி என்று ஏன் பட்டப்பெயர் வந்தது என்று ஆயாவிடம் கேட்டேன் அவருக்கும் காரணம் தெரியவில்லை. இதனால

ஆத்தின்னு சொல்றாங்களோ, அதனால ஆத்தின்னு சொல்றாங்களோ என்று நானே பல ஏரணங்களை கற்பித்துக்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

வருந்துகிறோம் என்று தினமலரில் விளம்பரம் கொடுத்தோம். உள்ளூர் முகவரிடம் கொடுத்துவிட்டோம். அச்சமயம் எங்கள் ஊரில் தினமலரை நிறைய வீடுகளில் வாங்குவார்கள் தினமலரில் விளம்பரம் கொடுக்க அதுவும் ஒரு காரணம்.

தினமலரில் வேலை செய்ததால் அவருக்கு (முகவருக்கு) ஆங்கிலத்துடன் தமிழ் புலமை மிக அதிகம், அந்த அளவு தமிழ் புலமை இல்லைன்னா தினமலரில் வேலை செய்ய  முடியுமா?. விளம்பரத்தில் அவரே திருத்தம் எல்லாம் செய்து மிக சிறப்பாக வெளியிட்டார். ஆத்தி என்று தமிழில் எச்சொல்லும் இல்லை இது ஆர்த்தியாக இருந்திருக்கும், ர்  என்பது இங்கு அமைதி (ஆங்கிலத்தில் சில எழுத்துகள் silence இல்லையா அது போல்) என கருதி ஆர்த்தி கவுண்டர் மறைவு என்று போட்டுவிட்டார். ஆர்த்தி என்று  எழுத்தில் இருந்தாலும் அதை ஆத்தி என்றே சொல்லவேண்டுமாம், அமைதி அமைதி. படத்தை மாற்றாமல் (தினமலர் முகவருக்கு நன்றி) அப்படியே போட்டதால்  படித்தவர்கள் பார்த்தவுடன் ஆத்தி கவுண்டர் (எத்தனை  பேர் ர்-ஐ கவனித்தார்களோ) சிவபதவியை அடைந்து விட்டார் என புரிந்து கொண்டார்கள். தினமலரில் ஆர்த்தி என்று  வந்த பிறகே இது  தெரிந்தது, வந்த பின் ஏன்யா கொடுத்த மாதிரி வெளியிடவில்லை என கேட்கவில்லை. கேட்காமலே தினமலர் முகவர் விளக்கம் கொடுத்தார்.

நாங்களும் ஆர்த்தி தான் ர் அமைதி கொண்டு ஆர்த்தி என்பது ஆத்தி என கூறப்பட்டு வந்துள்ளது என  2017 அக்டோபர் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். புதிதாக கட்டிய

கட்டடத்துக்கு கூட ஆர்த்தி என்றே பெயர் வைத்துள்ளோம்.

நீதி - தினமலர் முகவரை நம்பினால்  தமிழில் புலமை பெறலாம்.

குறிப்பு - 
என் தாத்தாவின் பட்டப்பெயர் ஆத்தி என்பதால் நாங்கள் சோழ அரச மரபை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. சோழ அரச மரபை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும்

ஆராய்ச்சியில்  யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இத்தகவல் உதவும்.