வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 02, 2018

ஆத்தி பட்டப் பெயர்

அத்தி என்பது பூ, அத்தி மரம் என்பது கூட உள்ளது. இதில் வேறு சிறப்புகள் இல்லை.
ஆத்தி என்பதும் பூ , ஆத்தி மரம் கூட உள்ளது. இது சிறப்பானது. ஆத்தி பூ சோழ பெரு வேந்தர்களின் குடிப்பூ. சிவபெருமானும் ஆத்தி பூ சூடியிருந்தாராம். ஆத்தி மரம்

உறுதியானது. இதை கருங்காலி என்றும் கூறுவார்கள்.

சோழனுக்கு ஆத்திப் பூ ; சேரனுக்கு பனம் பூ ; பாண்டியனுக்கு வேம்பம் பூ

நெடுங்கிள்ளியின் உறையூரை பிடிக்க இன்னொரு சோழன் நலங்கிள்ளி முயலும் போது  அடேய் வெண்ணைகளா நீங்க இருவரும் ஆத்தி பூ காரனுங்கடா, நீங்க சண்டை போடுவது பனம்பூ சூடிய சேரனோ வேம்பம் பூ சூடிய பாண்டியனோ அல்ல அவனும் ஆத்திப்பூ சூடியவனே. சண்டையில் ஒருத்தன் தான் வெற்றி பெற முடியும் உங்களில் யார் தோற்றாலும் தோற்பது ஆத்திப்பூ சூடியவனே, அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா? இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள் என்று கோவூர் கிழார் என்ற பாணபத்திர ஓணாண்டி கூறினாராம்.

பாணபத்திர ஓணாண்டி பேச்சை சண்டையில் கில்லியான கிள்ளியில் ஒருவன் கேட்கலை (ஓணாண்டி பேச்சை எவன் கேக்கறான்), காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று  நெடுங்கிள்ளி மண்டைய போட்டதும் போர் முடிவுற்றது.

என் அப்புச்சியின் பட்டப் பெயர் ஆத்தி. அப்புச்சி  அம்மாயி எல்லோரையும் தாத்தா ஆயா என்றே நான் கூப்பிடுவேன். அத்தி என்றால் பூ என்று மட்டும் தெரியும் ஆத்தி  என்று பூ, மரம் இருப்பது தெரியாது. தாத்தாவுக்கு ஆத்தி என்று ஏன் பட்டப்பெயர் வந்தது என்று ஆயாவிடம் கேட்டேன் அவருக்கும் காரணம் தெரியவில்லை. இதனால

ஆத்தின்னு சொல்றாங்களோ, அதனால ஆத்தின்னு சொல்றாங்களோ என்று நானே பல ஏரணங்களை கற்பித்துக்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

வருந்துகிறோம் என்று தினமலரில் விளம்பரம் கொடுத்தோம். உள்ளூர் முகவரிடம் கொடுத்துவிட்டோம். அச்சமயம் எங்கள் ஊரில் தினமலரை நிறைய வீடுகளில் வாங்குவார்கள் தினமலரில் விளம்பரம் கொடுக்க அதுவும் ஒரு காரணம்.

தினமலரில் வேலை செய்ததால் அவருக்கு (முகவருக்கு) ஆங்கிலத்துடன் தமிழ் புலமை மிக அதிகம், அந்த அளவு தமிழ் புலமை இல்லைன்னா தினமலரில் வேலை செய்ய  முடியுமா?. விளம்பரத்தில் அவரே திருத்தம் எல்லாம் செய்து மிக சிறப்பாக வெளியிட்டார். ஆத்தி என்று தமிழில் எச்சொல்லும் இல்லை இது ஆர்த்தியாக இருந்திருக்கும், ர்  என்பது இங்கு அமைதி (ஆங்கிலத்தில் சில எழுத்துகள் silence இல்லையா அது போல்) என கருதி ஆர்த்தி கவுண்டர் மறைவு என்று போட்டுவிட்டார். ஆர்த்தி என்று  எழுத்தில் இருந்தாலும் அதை ஆத்தி என்றே சொல்லவேண்டுமாம், அமைதி அமைதி. படத்தை மாற்றாமல் (தினமலர் முகவருக்கு நன்றி) அப்படியே போட்டதால்  படித்தவர்கள் பார்த்தவுடன் ஆத்தி கவுண்டர் (எத்தனை  பேர் ர்-ஐ கவனித்தார்களோ) சிவபதவியை அடைந்து விட்டார் என புரிந்து கொண்டார்கள். தினமலரில் ஆர்த்தி என்று  வந்த பிறகே இது  தெரிந்தது, வந்த பின் ஏன்யா கொடுத்த மாதிரி வெளியிடவில்லை என கேட்கவில்லை. கேட்காமலே தினமலர் முகவர் விளக்கம் கொடுத்தார்.

நாங்களும் ஆர்த்தி தான் ர் அமைதி கொண்டு ஆர்த்தி என்பது ஆத்தி என கூறப்பட்டு வந்துள்ளது என  2017 அக்டோபர் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். புதிதாக கட்டிய

கட்டடத்துக்கு கூட ஆர்த்தி என்றே பெயர் வைத்துள்ளோம்.

நீதி - தினமலர் முகவரை நம்பினால்  தமிழில் புலமை பெறலாம்.

குறிப்பு - 
என் தாத்தாவின் பட்டப்பெயர் ஆத்தி என்பதால் நாங்கள் சோழ அரச மரபை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. சோழ அரச மரபை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும்

ஆராய்ச்சியில்  யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இத்தகவல் உதவும்.

திங்கள், அக்டோபர் 09, 2017

ஆத்தி - குறிஞ்சிப்பாட்டு

45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,

குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

பொருளுரை: 

சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.

http://sekalpana.blogspot.in/2016/04/blog-post_36.html


ஆத்தி மலரைக் குறிஞ்சிப்பாட்டு ‘அமர் ஆத்தி’ என்று குறிப்பிடுகிறது. அமர் என்னும் சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள்.
ஆத்தி மரதைக் கருங்காலி என்கின்றனர்
சோழப் பெருவேந்தர்களின் குடிப்பூ ‘ஆர்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இந்த ஆர்-மலரை ஆத்தி என்கின்றனர்.

சிவபெருமான் ஆத்திப் பூவைச் சூடியுள்ளான் என்பர். (ஆத்தி சூடி – நூல்)

http://vaiyan.blogspot.in/2015/09/kurinjipattu_12.html