2010 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவை பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள வாசிங்டன் & பால்டிமோர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது , 2 அடி உயரத்துக்கு மேல் பனி பொழிவு இருந்தது. அப்ப வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை (நல்ல முடிவு). பனிப்பொழிவு ஓய்ந்ததுக்கு அப்புறம் குடியிறுப்பு வளாகத்தில் சில புகைப்படங்களை எடுத்தேன். வரலாற்றில் இடம் பெற்ற இந்த பனிப்பொழிவை படம் பிடிக்கலை அப்படிங்கற அவப்பெயர் வந்துட கூடாது பாருங்க இஃகிஃகி.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...
1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.

2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி

3. குடியிருப்பு வளாகம்

4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.

.