வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், பிப்ரவரி 04, 2010

மழை மறைவு பகுதி நமக்கு மட்டும் தானா?

தமிழகத்தில் மழை ஏன் குறைவா பெய்யுது என்பதற்கான காரணத்தை பள்ளி பாட புத்தகத்துல படிச்சிறுப்போம். காரணம் அதிக மழைப்பொழிவை கொண்டு வரும் 4 மாசம் இருக்கும் தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால். 2 மாசம் அடிக்கும் வடமேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகத்தின் உள் பகுதிகள் எப்பவும் வறண்ட பகுதிகள் தான்.

அமெரிக்காவுல மேற்கு கரையில் அடிக்கும் காற்று மழையை 4000 கிமீ தாண்டி கிழக்கு கடற்கரை வரை கொண்டு வருது. இங்க மட்டும் மலை இல்லையா? இருக்கு.


கேரளாவ தாண்டுனா நாம தான். ஏன் நம் பகுதி மட்டும் மழை மறைவு பகுதியா இருக்கு? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.

கடற்கரையை ஒட்டி இருப்பதால் நமக்கு அதிகமான மழை பொழிவு இருக்கவேணும். வானத்த பொழந்துகிட்டு கொட்ட வேணாம், குறைஞ்சபட்சம் குடிக்க பஞ்சம் இல்லாம தண்ணி கிடைச்சாலே போதும். ஏன் இயற்கை தமிழகத்துக்கு இந்த ஓரவஞ்சனையை செய்கிறது? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
.

வியாழன், ஜனவரி 28, 2010

K V தங்கபாலுவில் KV என்பது என்ன?

தற்போதய தமிழக காங்கிரசு தலைவர் K V தங்கபாலு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுல K. V என்பது எதைக்குறிக்குது? என்னய்யா இது கேள்வி. V என்பது அவங்க அப்பா பேரோட முதல் எழுத்தா இருக்கலாம் K என்பது அவங்க கிராமத்தோட முதல் எழுத்தாவோ அல்லது அவரு தாத்தாவோட பெயரின் முதல் எழுத்தாவோ இருக்கலாம் என்று பலர் சொல்வது எனக்கு புரிகிறது. நானும் அப்படி தான் நினைத்தேன். அவங்க அப்பா பேரு என்ன என்று அறிந்து கொள்ள ஆவல். தேடி பார்த்தேன் எங்கும் கிடைக்கலை. இவரு மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டாரே அப்ப மனு தாக்கல் செய்யும் போது உறுதிமொழி ஆவணம் ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துருப்பாருல்ல அதுல பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று யோசனை வந்தது. சரின்னு தேர்தல் ஆணையத்தின் வலைக்கு போய் கண்டு பிடித்தேன்.

ஆனா பாருங்க அதுல இவரு அப்பா பேரு தங்கவேலுன்னு இருக்கு.


யாருக்காவது KVக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு தங்கபாலுவ பிடிக்காம இருக்கலாம் அதுக்காக தவறா சொல்ல வேண்டாம். இவரு தாத்தா பேரு KV ன்னு இருக்குமோ?? எண்கணித சோதிடத்தின் வேலையா இருக்குமோ???
.
.

வியாழன், டிசம்பர் 31, 2009

சென்னை மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்

இது நேற்று உண்மையாக நடந்த நிகழ்வு. எப்படி எனக்கு தெரியும் என்றால் என்னுடன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பரின் பெற்றோருக்கு இது நடந்தது.

இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.

அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.