பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் 58 வயதான பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதற்கான தடயம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜமைக்கா நாட்டு காவல் துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி தென்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முன்பு முகத்தை அழுத்தியதால் அவர் கழுத்து எழும்பு முறிந்துள்ளதாக ( gland க்கு அருகில் ) அதிகாரபூர்வமல்லாத செய்தி வந்தது.
ஜமைக்காவின் காவல் துறை துணை ஆணையர் மார்க் சீல்ட்ஸ் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றார். அவர்களை உடனடியாக சரணடையும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாப் ஊல்மரின் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அணியினரிடம் விசாரணை நடத்திய ஜமைக்கா காவல் துறை அவைகளின் கைரேகையையும் சேகரித்துள்ளது.
இக்கொலையை கிரிக்கெட் சூதாடிகள் செய்திருக்கலாம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. இக்கொலை கிரிக்கெட் விளையாட்டின் நீக்க முடியாத கரை என்பதை உறுதியாக கூற முடியும்.