வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜூன் 08, 2009

என்னுடைய 32 பதில்கள்


நண்பர் பதிவர் பழமைபேசி என்னை இந்த தொடர் இடுகையில் இழுத்து விட்டுட்டார். மூனு நாலு நாளா சிந்தனை பண்ணி இந்த இடுகை இப்ப இங்க.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக இப்பெயரை நான் வைத்துக்கொண்டேன். என் உண்மையான பெயர் (குறும்பன் யாருன்னு) அவனுக்கு தெரியக்கூடாது பாருங்க இஃகி்ஃகி.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நான் ரொம்ப இளகிய மனம் உள்ளவங்க. யார் கண்ணுலயாச்சும் க(த)ண்ணீர பார்த்துட்டா தானா என் கண்ணுல இருந்து க(த)ண்ணீர் வந்துரும். சோகப் படம் பார்க்கறப்போ சின்ன துணிய கையில் வைச்சிக்கிறது வழக்கம். என்ன போய் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே?????

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கிறுக்கல் எனக்கு புடிக்குமா? என்ன கேள்வி இது?

4.பிடித்த மதிய உணவு என்ன?

சுவையான உணவு அனைத்தும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே வச்சுக்கிட்டா அது நட்பே இல்லைங்க. பழகி கொஞ்ச நாள் கழிச்சு தெரிந்தவர் நண்பரா மாறுவார், மாறாமலும் இருப்பார்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆளை தான்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

மிகச்சில கொள்கைகளில் உறுதியாக இருப்பது. பல பல.....
கொள்கைகளில் உறுதியில்லாமல் இருப்பது.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

பிடிக்காத விதயமே கிடையாது.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் பக்கத்தில் இல்லை அதனால தான் இந்த கேள்விகளுக்கு தட்டச்ச முடிகிறது. என் நிலையை புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை & பச்சை

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

புதிய பூவிது பூத்தது...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்

14.பிடித்த மணம்?

மரியாதைக்குரிய மணம். அதாங்க திருமணம். இஃகிஃகி.
பசியோடு இருக்கும் போது வரும் சாம்பார், குழம்பு, இரசம், பொரியல் மணம்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அடுத்தவங்க மேல உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு? அடுத்தவங்களாவது் தப்பிக்கட்டும்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவரின் பதிவிலுள்ள எல்லா இடுகையும் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

முதலில் கிரிக்கெட், இப்போ அத சுத்தமா பாக்கறது இல்ல. பார்க்காத என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை வேற பண்ணுவேன். இப்ப நீச்சல், வலைப்பந்து, உதைபந்து, டென்னிஸ்

18. கண்ணாடி அணிபவரா?

அல்ல

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

Just Cause - தொலைக்காட்சியில் பார்த்ததுங்க, அரங்குக்கு போய் பார்த்து 2 ஆண்டு ஆகிடுச்சி.

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் எனக்கு கொஞ்சம் மன்னிக்க நிறைய கம்மி.

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

ஒழுங்கு படுத்தப்பட்ட சத்தம் பிடிக்கும்,
ஒழுங்கு படுத்தப்படாத சத்தம் பிடிக்காது.

23.பிடித்த பருவ காலம் எது?

இக்கரைக்கு அக்கரை பச்ச. அதனால எனக்கு எல்லா பருவமும் பிடிக்கும்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, தொலைவை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தன்னடக்கம் தடுக்கிறது. இஃகிஃகி

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒன்னா ரெண்டா நிறைய விதயங்கள் இருக்கு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

நண்பர்களோட போயி கூத்தடிக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடித்த சுற்றுலாதலங்களே.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

இணையம் பார்ப்பது. (எந்த சிறு இடஞ்சலும் இருக்காது பாருங்க, இஃகிஃகி)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் வாழ்வை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க, அதை தெரிஞ்சுக்குங்க. .

8 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

இளகிய மணம்?

பழமைபேசி சொன்னது…

அடுத்தவங்கலாவது் ....

பழமைபேசி சொன்னது…

//கண்ணாடி அணிபவரா?

அல்ல
//

அப்பாட.... பால் வார்த்தீங்க!

பழமைபேசி சொன்னது…

நன்றியும் வாழ்த்துகளும்!

குறும்பன் சொன்னது…

வாங்க பழமைபேசி.
\\அப்பாட.... பால் வார்த்தீங்க!\\ உங்களால தான் 'இல்லை' 'அல்ல' பற்றி தெரிஞ்சிக்கிட்டேன்.

குறும்பன் சொன்னது…

\\இளகிய மணம்?\\
\\அடுத்தவங்கலாவது்\\
ஏதாவது எழுத்துப்பிழை???

பழமைபேசி சொன்னது…

இளகிய மணம் -> இளகிய் மனம்

அடுத்தவங்கலாவது் -> அடுத்தவங்களாவது (அடுத்தவர்களாவது)

குறும்பன் சொன்னது…

\\இளகிய மணம் -> இளகிய் மனம்... \\எனக்கென்னமோ இளகிய மனம் தான் சரி என்பது போல் தோன்றுகிறது. இஃகி இஃகி...

\\அடுத்தவங்கலாவது் -> அடுத்தவங்களாவது (அடுத்தவர்களாவது)\\ எழுதும் போதே ல போடலாமா அல்லது ள போடலாமா என்று நினைத்தேன். கடைசியில் ல என்று தவறாக எழுதிவிட்டேன்.

திருத்தங்களுக்கு நன்றி பழமைபேசி.