இறங்கு முகத்தில் தோன்றும் இவ்வொழுங்கு மூன்று உலக்கைகளால் ஆனது. வழக்கமா இறங்க முக போக்கில் காளை ஒழுங்கு தான தோன்றும்? ஏன் இங்க கரடி என்று வருது? இந்த ஒழுங்கு தோன்றினால் மேலும் விலை வீழும் என பொருள். இந்த ஒழுங்கு அரிதாக தான் தோன்றும்.
இந்த ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?
* தெளிவான இறங்கு முகம் வேண்டும்.
* இதில் சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும். (இதை முதல் நாள் என்போம்)
* இரண்டாம் நாளில் முதல் நாளுக்கு கீழாக வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இது முதல் நாளை தொடக்கூடாது.
* மூன்றாம் நாளும் வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இதன் தொடக்கமும் முடிவும் இரண்டாம் நாளை ஒத்ததாக இருக்கும். அதாவது இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிதரி.
* வெள்ளை உடல்களின் நீளம் அதிகமாக இருந்தால் போக்கு தொடர அதிக வாய்ப்பு உண்டு.
* இது சிறந்த போக்கு அறியும் ஒழுங்கு அல்ல என்றாலும் நான்காவது நாள் கீழாக நல்ல இடைவெளியுடன் கருப்பு உடல் தோன்றினால் போக்கு தொடருது என நம்பலாம்.