வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், டிசம்பர் 31, 2009

சென்னை மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்

இது நேற்று உண்மையாக நடந்த நிகழ்வு. எப்படி எனக்கு தெரியும் என்றால் என்னுடன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பரின் பெற்றோருக்கு இது நடந்தது.

இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.

அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.

புதன், டிசம்பர் 30, 2009

ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்

இது பரபரபுக்காக வைக்கப்பட்ட தலைப்பா என்றால் ஆம் இல்லை எனலாம். நடந்த செயல் உண்மை. இவ்விடுகைக்கு வேறு மாதிரி தலைப்பு கொடுக்கத்தான் நினைத்திருந்தேன் ஆனா பதிவுலகில் இப்போ ஈரோடு பேச்சு அதிகமா இருப்பதால் இத்தலைப்பு. இஃகி இஃகிஃ

நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.

இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.

இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.

1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.

தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.

அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.

எனக்கு புரியாதது
:-

1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.

2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.

3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.

.

திங்கள், டிசம்பர் 21, 2009

ஆழ்கடலுக்குள் எரிமலை வெடிப்பு

நாம எல்லோரும் எரிமலை வெடிச்சு சிதறுவதை பார்த்திருப்போம். நேர்ல இல்லைங்க, படத்துல தொலைக்காட்சியில யூ டியூப்-ல தான். அறிவியலாளர்களும் பூமில எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க, கடல்ல எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க ஆனா ஆழ் கடலுக்குள் எரிமலை வெடிச்சு சிதறி பார்த்ததில்லை. இதுக்காக தவம் இருந்திருக்காங்க. பூமியிலிருந்து 1.2 கி.மீ கடலுக்குள்ள இருக்கற எரிமலை வெடிச்சு சிதறுனத ரோபோ மூலமா படம் புடிச்சி ஆகா ஆகான்னு கொண்டாடுறாங்க. ஆடட்டும் தப்பில்ல. இப்ப நாமும் அத பார்க்கலாமா. (அவங்க படம் பார்த்தாங்க நாமளும் பார்க்கப்போறோம் அதனால நாமளும் அறிவியலாளர்கள் தான், என்ன நான் சொல்லறது சரியா இஃகிஃகி)




இது பசிபிக் கடலில் இருக்கும் சமோவாவுக்கு தென் மேற்கே 200 கிமீ தள்ளி இருக்கு. இந்த எரிமலைக்கு பெயர் மேற்கு மாடா.

கடலில் உள்ள எரிமலைகளை நிறைய பார்த்தாலும் ஆழ்கடல் எரிமலை வெடிப்பை படம் பிடிப்பது இது தான் முதல். ஹவாய் தீவுகளில் ஒருவகையான எரிமலை குமறி அதன் குழம்பு கடலுக்கு செல்லும். எப்ப போனாலும் அதை பார்க்கலாம். அது புகழ் பெற்ற சுற்றுலா தளம் கூட. அது போன்றவற்றுடன் மேற்கு மாடாவை சேர்க்காதிங்க. இது தனி வகை.

ஆழ்கடலில் இருந்ததால் தண்ணீரின் அழுத்தம் இதன் வெடிப்பின் பாதிப்பு அல்லது சீற்றத்தை வெகுவாக குறைத்து விட்டதால் ரோபோ மூலம் எரிமலை வெடிப்பிற்கு சில அடி தூரம் வரை செல்ல முடிந்ததாம். நில மற்றும் கடல் மட்டத்திற்கு அருகிலுள்ள எரிமலைகளில் அவ்வாறு செல்ல முடியாது காரணம் அவற்றின் சீற்றம் மற்றும் வெப்பம்.

மேற்கு மாடா எரிமலையானது 9 கிமீ நீளமும் 6 கிமீ அகலமும் உடையது. இதன் அடி 3 கிமீ ஆழத்தில் உள்ளது. இது பசிபிக் டெக்டோனிக் தட்டு ஆசுத்திரிலேயா தட்டுக்கு அடியில் சொருகும் இடத்தில் இருக்கு. இது மிகவும் சிறப்பான இடம். இந்த பகுதியில தான் பாறைகள் மறுபயனீடுக்கு பூமிக்கு உள்ளாற போகும். அதே போல் இங்க தான் உருகிய பொருட்கள் பூமியின் உள்ளுக்குள் இருந்து மேல் பரப்புக்கு வரும். (உள்ளாற போனா வெளியில் வந்து தான ஆகனும்)


இது தொடர்பான செய்தி;
http://edition.cnn.com/2009/TECH/science/12/18/volcano.underwater.explosion.pacific/
http://news.bbc.co.uk/2/hi/science/nature/8419736.stm

குறிப்பு :- வழக்கம் போல் இது நான் எழுதும் தாமதமான சூடான செய்தி.
.
.

செவ்வாய், டிசம்பர் 01, 2009

கூம்பு நோம்பி வாழ்த்து

கூம்பு நோம்பி என்பது கார்த்திகை ஒளித் திருவிழாவைக் குறிக்கும் அதாங்க கார்த்திகை தீபம். கொங்கு நாட்டில் விழாவை நோம்பி என்று தான் அழைப்பார்கள். அன்று தெருக்களில் கோலம் போட்டு வீடுகளை அகல் விளக்கால் அலங்காரம் செய்வார்கள். அன்று ஆடம்பரம் ஏதும் இருக்காது. ஆனால் விழாக் களை இருக்கும். காசு இருந்தா தான் இதை கொண்டாட முடியும் என்றில்லை, இது அனைவராலும் கொண்டாடப்படக்கூடியது. குறிப்பா தீபாவளிக்கு செலவழிக்கும் எந்த செலவும் இதுக்கு கிடையாது. எனக்கு தெரிந்து வாழ்த்தெல்லாம் இதுக்கு சொல்லி கேட்டதில்லை. அப்புறம் ஏண்டா வாழ்த்து இடுகைன்னு கேக்கறீங்களா? இஃகி இஃகி நானும் இடுகை போடனும்முல்ல. தீபாவளிக்கு இணையானது இது. சொல்லப்போனா தமிழர்கள் கொண்டாடும் ஒளி விழா இது தான்.

எங்கள் ஊரில்:-

விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.

கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.

சைவ நெறி - வைணவ நெறி

தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.

தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.

நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...

கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.

திங்கள், நவம்பர் 09, 2009

குமாரமங்கலம் - புரியாதது

குமாரமங்கலம் அப்படின்னு சொன்னா உங்களில் பல பேருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராசன் குமாரமங்கலம் நினைவுக்கு வருவார். சிலருக்கு ஆதித்ய குமாரமங்கலம் பிர்லா நினைவுக்கு வருவார். ரங்கராசன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோட மகன் என்று பலருக்கு தெரிந்திருக்கும், அவரு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பராயனோட மகன். சுப்பராயன் விடுதலைக்கு முன் சென்னை மாகாண முதல்வராக இருந்திருக்கிறார். இது நிறைய பேருக்கு தெரியாது.

இவங்க சொந்த ஊர் திருச்செங்கோடுக்கு பக்கத்திலுள்ள குமரமங்கலம். குமரமங்கலத்துல இருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்தவங்களாம் இவங்க. இவங்க பேரு ரங்கராசன் குமரமங்கலம், மோகன் குமரமங்கலம் அப்படின்னு தான் இருந்திருக்கனும். குமரமங்கலம் எப்படி குமாரமங்கலம் ஆச்சின்னு தெரியலை. kumar - குமார் மாதிரி Kumaramagalam என்று ஆங்கிலத்தில் எழுதினதை குமாரமங்கலம் என்று தப்பா படிச்சு அப்படி ஆகி இருக்கலாம் என்பது என் கணிப்பு.

பிர்லா குழுமத்தை சார்ந்தவரோட பெயருல எப்படி குமாரமங்கலம் சேர்ந்துச்சுன்னு தான் புரியலை. ஆதித்ய குமாரமங்கலம் பிர்லாவோட அம்மா இராஜசிரீ தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. மதுரை மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவங்க. மதுரைல படிப்ப முடிச்சாங்க. அவங்களுக்கும் குமாரமங்கலம்\குமரமங்கலத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல. இவரு அப்பா பேரு ஆதித்திய விக்ரம் பிர்லா. இவங்க நிருவாகத்தின் கீழ் தான் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான BITS பிலானி வருது.

குமார் மங்கலம் அப்படிங்கிறத தான் சிலர் குமாரமங்கலம் அப்படின்னு சொல்லறாங்களா அல்ல குமாரமங்கலம் அப்படிங்கிறதை சிலர் குமார் மங்கலம் அப்படிங்கறாங்களான்னு புரியலை. இந்த இடுகையை படிக்கறவங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

வெள்ளி, அக்டோபர் 30, 2009

தினமணி கருத்துப்படம் - முல்லை, குவாத்ரோச்சி, உசார், அமைச்சர்

படம் பெரிதாக தெரிய அதன் மேல் சொடுக்கவும்.

முல்லைப்பெரியார் அணை சிக்கலை என்ன லாவகமா தலைவர் கருணாநிதி தீர்க்கப்போறார்ன்னு பாருங்க.




வழக்கில் இருந்து தப்ப ஒரே வழி பேரை குவாத்ரோச்சின்னு மாத்திக்கிறதுதான். பேரை குவாத்தோச்சின்னு மாத்திக்க நிறைய பேர் வந்ததால அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் தீர்ந்திடுச்சாம். அந்த விண்ணப்பத்த முதல்லயே பேரை குவாத்ரோச்சின்னு மாற்றிக்கிட்டவர் விலை அதிகம் வைச்சு வெளியில் விக்கறதா பேசிக்கிறாங்க.



பிரமரும் உள்துறை அமைச்சரும் ரொம்ப உசாரா இருக்காங்க. இதைத் தான் வரும் முன் காப்பது என்கிறார்களோ?




தலைவருக்கு தெரியும்யா யாரை சட்டமன்ற உறுப்பினராக்கனும் யாரை மக்களவை உறுப்பினராக்கனும்னு அதுலையும் யாரை எப்ப எங்க அமைச்சராக்கனும்ன்னு. அதனால தான் நாம் அவரை அரசியல் சாணக்கியன் அப்படின்னு சொல்லறோம்.

புதன், அக்டோபர் 28, 2009

அரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்

தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.

TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.

எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.

தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000

செவ்வாய், அக்டோபர் 27, 2009

தினமணி கருத்துப்படம் - ஐநா, ஈழம், அரசியல்

தினமணியோட கருத்துப்படம் நாட்டு\உலக நடப்பை அப்படியே சொல்லுது.


கருணாநிதியா தேடி அமைத்த வேலி இது. இதுல இருந்து அவரை காப்பாற்றுவதாவது. அவரை மீறி உடையக்கூடியது ஒரு பக்கம் தான் அது காங்கிரசு கூட்டணி. அது உடையக்கூடாதுன்னு தான் எல்லா வேலையும் செய்கிறார். உடன்பிறப்பே இது 2004 அல்ல 2009, எல்லா கணக்கும் மாறி போயிடுச்சி. மீதி மூனு பக்கமும் அசைக்க முடியாத வலுவோட இருக்கு.




ஐநா-ன்னு ஒன்னு இருக்கா? ஓஓஓ இருந்ததா...




சிபிஐ சோதனை என்பது அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் ஒரு சீட்டு. அதுக்கு போயி யாராவது(அரசியல்வாதி) கவலைப்படுவாங்களா? அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா...

வெள்ளி, அக்டோபர் 23, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 3

வாஸ்துவ பற்றி முதல் இடுகையிலும் அடி அளவுகள் பற்றி இரண்டாம் இடுகையிலும் எழுதியிருந்தேன். நான் வாஸ்துவை பற்றி எழுத காரணமான நிகழ்வு இங்கே.

தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.

வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்


பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.

இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?

ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.


.
.

வியாழன், அக்டோபர் 22, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 2

வாஸ்து முறைப்படி வீடு கட்டினால் செல்வச்செழிப்போடு நலமாக வாழலாம் என்று வாஸ்து அறிஞர்கள் சொன்னதை பார்த்தோம். மனையடி சாத்திர நூலை படித்த பொழுது வீட்டின் உள்கூட்டளவு எந்த அடிகளில் இருந்தால் என்ன வகையான பலன்கள் கிடைக்கும் என்று போட்டிருந்தது. 120 அடி வரைக்கும் கொடுத்திருந்தார்கள் , இங்கு 60 அடி வரை கொடுத்துள்ளேன். அது என்ன உள்கூட்டளவு? அதாவது அறையின் அளவு இதுவாகும். சுவற்றின் அளவை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான கொத்தனார்கள் இந்த அளவு படி கட்டடம் கட்டுவார்கள்.
6x6, 6x8, 8x8, 8x10, 10x10, 10x17, 10x11, 10x16, 16x17 என்று அறையின் அளவு இருப்பதன் ரகசியம் இது தான் (நம்மூரில்).

அடி அளவுகளின் பலன்கள்

6 - நன்மை ஏற்படும்
7 - தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 - செல்வம் செல்வாக்கு படிப்படியாக உயரும்
9 - துன்பம் துயரம்
10 - பொருள் சேரும் தினமும் விருந்து
11 - மகிழ்ச்சியும் வளமும் பெருகும்
12 - துயரம் புத்திரசோகம்
13 - துன்பம் நோயினால் அவதி
14 - பொருள் இழப்பு, கவலை
15 - துன்பம் துயரம்
16 - தனசேர்க்கை, குறைவற்ற வாழ்க்கை
17 - விரோதிகள் பணிவர்
18 - கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 - புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 - செய்தொழில் வெற்றி, சுகபோகம்
21 - பொருள் விருத்தி, புகழ் உண்டு
22 - விரோதிகள் நாசம்
23 - கெடுதி ஏற்படும்
24 - வரவும் செலவும் சமம்
25 - மனைவிக்கு கண்டம்
26 - பொருள் அபிவிருத்தி
27 - சமூக கவுரவம் அதிகரிக்கும்
28 - தெய்வ அருள் கிட்டும், சுபிட்சம் உண்டாகும்
29 - வறுமை ஒழியும்
30 - லட்சுமி கடாட்சம், மக்கள் செல்வம் அதிகரிக்கும்
31 - தெய்வ அருள் கிட்டும்
32 - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 - வாழ்க்கையின் நிலை உயரும்
34 - இடமாற்றம் ஏற்படும்
35 - திருமகள் அருள்
36 - சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 - செய்தொழில் முன்னேற்றம்
38 - வறுமை, துன்பம்
39 - நல்ல வாழ்வு
40 - விரோதிகள் வலிமை பெறுவர்
41 - செல்வம் பெருகும்
42 - அஷ்டலட்சுமி வாசம்
43 - நன்மை ஏற்படாது
44 - பெரிய இழப்பு உண்டாகும்
45 - மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 - வறுமை, நோய்
47 - பொருள் இழப்பு
48 - தீயினால் ஆபத்து
49 - தவறுகள், இழப்புகள்
50 - நன்மை உண்டாகாது
51 - வீண் தொல்லைகள்
52 - பொருள் அபிவிருத்தி
53 - பெண்களால் பொருள் நட்டம்
54 - அரசின் சீற்றம்
55 - உறவினர் விரோதம்
56 - குடும்ப விருத்தி
57 - சந்ததி நாசம்
58 - கண்டம் ஏற்படும்
59 - கவலைகள் வறுமை
60 - செய்தொழில் அபிவிருத்தி
.
.

புதன், அக்டோபர் 21, 2009

வாஸ்து - எதிரில் கண்டது

இப்பொழுதெல்லாம் வீடு கட்டறவங்க வாஸ்து பார்க்காம கட்டறதில்லைன்னு தெரியும். வீட்டின் ஒவ்வொரு அறையும் அதிலுள்ள பொருட்களும் வாஸ்துவின் படி தான் உள்ளன. வீடு மட்டும் இல்லை கோயிலும் வாஸ்து படி இருந்தால் தான் அக்கோயில் சிறக்கும் என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலுக்கு மட்டும் ஏன் அவ்வளவு செல்வம் வருகிறது? ஏனென்றால் வாஸ்து படி அமைந்த சிறந்த கோயில் அதுவாகும். மற்றகோயில்கள் சைவ்வாறு அமையவில்லையா? சாமிக்கே வாஸ்தா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை வாஸ்து அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலியிடம் வேண்டும் என்பது வாஸ்து விதி. அப்ப தெற்கு, மேற்கு? அது இரண்டும் ஆகாத இடங்கள் அதனால் அங்கு காலியிடங்கள் கூடாது அல்லது குறைவான காலியிடம் இருக்கலாம். குறிப்பாக வடக்கு & கிழக்கு காலியிடத்தை ஞவிட தெற்கு & மேற்கு காலியிடங்கள் குறைவாக இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு பகுதி உயர்ந்தும் வடக்கு, கிழக்கு பகுதி தாழ்ந்தும் இருக்கவேண்டும். ஈசானிய மூலையாகிய வடகிழக்கில் கிணறு அதாவது நீர் தேங்கும் தொட்டி (நிலத்தில்) இருக்க வேண்டும். அக்னி மூலையாகிய தென்கிழக்கில் சமையலறை இருக்கவேண்டும். பழனி மூலையாகிய தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்கவேண்டும், அதனால் இப்பகுதியில் நீர் தேங்கும் தொட்டியை (மாடியில்) அமைக்கவும். வாயு மூலையாகிய வடமேற்கு மூலையிலோ அல்லது மேற்கு பகுதியிலோ கழிவறை & கழிவறை தொட்டி இருக்கவேண்டும்.

எந்த பகுதியில் பூசை அறை, படுக்கை அறை, பணம் வைக்கும் பெட்டி இருக்கலாம் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

வாஸ்துவினால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. இது விற்கும் மனைகளின் விலையில் கூட தெரியும். கிழமேற்காக செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எப்பகுதி நிலம் அதிக விலைக்கு போகும்? தென் பகுதி நிலம் அதாவது வடக்கு நோக்கி உள்ள நிலம் வடபகுதி நிலத்தை விட அதிகமாக விலை போகும். அதுபோலவே கிழக்கு நோக்கி உள்ள நிலம் மேற்கு நோக்கி உள்ள நிலத்தை விட மதிப்பு அதிகமாக இருக்கும்.

வாஸ்து படி வீடு கட்டி வாழ்ந்தால் செல்வத்திற்கும் நலத்திற்கும் குறைவிருக்காது என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. எனவே வாஸ்து அறிஞர்களின் அறிவுரைபடி வீடு கட்டி நலமாக வளமாக வாழவும்.
.
.

வெள்ளி, அக்டோபர் 16, 2009

தினமணி கருத்துப்படம் - நோபல்


நோபல் பரிசு நம்ம நாட்டு தலைவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் தினமணியின் குரல் நியாமானதே. இது மேல் நாட்டு அரசியல் அதனாலதான் நம்மாளுங்களுக்கு கிடைக்கலை. நாம் எப்பவும் அமைதி விரும்பிங்க தான், அதை மாற்ற யாராலும் முடியாது. பரிசு கிடைக்கலைங்கறதுக்காக நம்ம குணத்தை மாற்றி கொள்ளமுடியுமா?

புதன், அக்டோபர் 14, 2009

தினமணி கருத்துப்படம்



திமுக காங்கிரசு கூட்டணி தமிழக மக்களவை உறுப்பினர்களின் இலங்கை பயணம் இராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி நல்ல முறையில் முடிந்தது. முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு இவர்கள் சொல்லிட்டாங்கப்பா. அதனால அவங்களெல்லாம் அங்க எந்த குறையும் இல்லாம இருக்குறாங்க நம்புங்க.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

வெண்ணைவெட்டி யார்?

ஐநா சபை தலைவர் பான் கீ மூன் தான் சிறந்த வெண்ணைவெட்டி என ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் கூறியுள்ளார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. இவர் ஐநா தலைவரா இருக்கும் வரை ஐநா தலையிடும் நல்லது நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால்????? தப்பு எதிர்பார்ப்பவர்களிடம் தான் பான் கீ மூனிடம் இல்லை.

http://www.washingtonexaminer.com/world/ap/53694632.html

http://thatstamil.oneindia.in/news/2009/08/20/world-norway-diplomat-blasts-absent-un-chief.html

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பலவீனமான ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் இருக்கிறார். இலங்கை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க அவர் தவறி விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகில் ஏற்பட்ட எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும், தீர்க்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுமே செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது என்று நார்வே கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் இதுதொடர்பாக நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நார்வேயின் ஆஃப்டன்போஸ்டன் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் மோனா கூறியிருப்பதாவது...

இதுவரை இருந்த ஐ.நா. பொதுச் செயலாளர்களிலேயே மிக மிக பலவீனமானவர் பான் கி மூன்தான். கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் இருக்கிறார். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவரிடம் இல்லை. சமீபத்திய பல்வேறு உலக நெருக்கடிகளை தீர்த்து வைக்கவோ அல்லது சமாளிக்கவோ அவர் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.

சவால்களை துரிதமாக சந்திக்கவும், தீர்த்து வைக்கவும் அவர் தவறி விட்டார். அவர் மிகத் தாமதமாக விழித்து எழுந்தபோது கிட்டத்தட்ட அந்த நெருக்கடிகள் கை விட்டுப் போயிருந்தன அல்லது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தன. பான் கி மூனின் செயல்பாடுகள் ஐ.நா. சபையின் அனைத்துத் தரப்பினைரயும் எரிச்சல்பட வைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு உலகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் ஐ.நா. சபை உள்ளது. ஆனால் அதற்கேற்ற வேகமோ, விவேகமோ பான் கி மூனிடம் இல்லாதது வேதனை அலிக்கிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அவர் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது. சந்தேகங்களை எழுப்புகிறது.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து ஐ.நா. சபையிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அதேபோல உலக சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் கூட ஐ.நா. பங்கெடுக்காமல் உள்ளது வியப்பைத் தருகிறது.

இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட காரணம் மூன்தான்...

மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி விடுதலை தொடர்பாக பான் கி மூன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மெளனியாக இருந்து வருகிறார். அவர் அங்கு சென்றதால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மியான்மரில் நடப்பதை அவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடந்த இனப்போரின் முடிவின்போது நடந்த பெருமளவிலான போர்க் குற்றங்கள், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்களை தடுக்க பான் கி மூன் தவறி விட்டார். அதற்காக அவர் முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.

இவை மட்டுமல்ல, தர்பூர், சோமாலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, காங்கோ என எந்தவித பிரச்சினை குறித்தும் அவர் ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட எல்லா பிரச்சினையிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார். எதையும் கவனிக்கும் அக்கறையும் அவரிடம் காணப்படவில்லை.

பான் கி மூன் சிறப்பாக செயல்பட சிறிது கால அவகாசம் தரலாம் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், தூதர்களும் முன்பு கூறினார்கள். ஆனால் இப்போது பான் கி மூனின் போக்கைப் பார்த்தால் அவரிடம் எந்தவிதமான செயல் திறனும் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது என்று சரமாரியாக விமர்சித்துள்ளார் மோனா.

நார்வே தூதரின் இந்த பகிரங்க விமர்சனத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பான் கி மூன் நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் மோனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நார்வே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

சிரிக்க சிந்திக்க - 2


என்னங்க
ஏன் அடிக்கடி சமையல் அறை பக்கம் போறீங்க?
டாக்டர்
சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக
சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.


டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த
அளவுக்கு பாக்குறாங்க?
''
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!


வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்
: ஆகிவிட்டது.
வக்கீல்
: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்
: ஒர் பெண்ணை.
வக்கீல்
: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்
: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..


சார்,
டீ
மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா
மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க
ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...


''
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த
கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய்
. சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான்
என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை
அவங்களே சொன்னங்க...


திங்கள், ஆகஸ்ட் 17, 2009

சிரிக்க சிந்திக்க - 1

கண்ணா நீ
திருமணத்திற்கு
முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு
பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து
ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...



ஒரு
பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி
இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு
மாதிரிதான் இருப்பா...


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா
அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது!


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை
படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு
எப்படி தெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,
நனையும்
போது சந்தோஷம்.
நனைந்த
பின்பு ஜலதோஷம்.



மகனே
பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.


டேய்
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது
தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

புதன், ஆகஸ்ட் 12, 2009

புகழ்பெற்ற பதிவரும் அடையாளமும்.

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அது முத்திரையாகவோ அல்லது சொற்றொடராகவோ இருக்கும். அந்த சொற்றொடரை\முத்திரையை பார்த்தா நமக்கு அந்த நிறுவனம் நினைவுக்கு வரும். விளம்பரத்துக்கு நிறைய செலவு பண்ணி நம்ம மனசுல அவங்க நிறுவன முத்திரை\சொற்றொடரை பதிய வைக்க முயற்சிப்பாங்க. அதே போல் சில தனி நபர்களுக்கும் அடையாளம் உள்ளது. இவங்க நிறுவனம் மாதிரி எல்லாம் செலவு பண்ணமாட்டாங்க. காலப்போக்கில் அடையாளம் தங்கிவிடும். இங்க சில தனி நபர்களின் அடையாளங்களை பார்ப்போம்.

  • MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
  • கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
  • செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.



  • இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
  • நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
  • பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
  • என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
  • 007 அப்படின்னா அது James Bond.
  • கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
  • அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
  • தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
  • பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
  • பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.

  • பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
  • நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
  • 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
  • இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
  • புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
குறிப்பு:
  1. நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
  2. பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)

அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.

செவ்வாய், ஜூன் 30, 2009

Indian Express - 10ம் வகுப்பு பொது தேர்வு



10ம் வகுப்பு பொது தேர்வு கூடாதுன்னு கபில் சிபல் ஏன் சொல்லறாருன்னு இப்ப புரியுதா மக்களே...
இப்ப 10 அப்புறம் 12வது அப்புறம் கல்லூரி அப்புறம் தேர்வே கூடாதும்பார். தேர்வு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை தருகிறது என்பதை இராகுல் சோனியாவை விட யாருக்கு நன்கு புரியும்?

இராகுல் காந்தி பற்றி தப்பா பேசாதிங்க. அவரு தான் இந்தியாவின் விடிவெள்ளி.

காக்கா புடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..

கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் பெரிய வழக்குரைஞராக இருந்தவர் என்று கேள்வி.

வெள்ளி, ஜூன் 19, 2009

தினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு



(1)தோற்றப்போனதுக்கு காரணம் இப்ப தான் தெரிஞ்சுது, மக்களே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மனு போடுங்க, உங்களுக்கு தந்தி தான் கொடுக்கத்தெரியுமுன்னா தந்தி கொடுங்க.





(2)தமிழக கேப்டன் பெயருக்கு இழுக்கு சேர்த்திட்டார் இந்த கிரிக்கெட் கேப்டன்.



(3) 33% கிடைக்குமான்னே தெரியல 50% கேட்குறீங்களே.


(4) புழல் சிறையில் வெல்டிங் குமாரை போட்டு தள்ளுனதால வந்த பயம். பயப்படுறதுல்ல நியாயம் இருக்கத்தான் செய்யுது.

திங்கள், ஜூன் 08, 2009

என்னுடைய 32 பதில்கள்


நண்பர் பதிவர் பழமைபேசி என்னை இந்த தொடர் இடுகையில் இழுத்து விட்டுட்டார். மூனு நாலு நாளா சிந்தனை பண்ணி இந்த இடுகை இப்ப இங்க.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக இப்பெயரை நான் வைத்துக்கொண்டேன். என் உண்மையான பெயர் (குறும்பன் யாருன்னு) அவனுக்கு தெரியக்கூடாது பாருங்க இஃகி்ஃகி.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நான் ரொம்ப இளகிய மனம் உள்ளவங்க. யார் கண்ணுலயாச்சும் க(த)ண்ணீர பார்த்துட்டா தானா என் கண்ணுல இருந்து க(த)ண்ணீர் வந்துரும். சோகப் படம் பார்க்கறப்போ சின்ன துணிய கையில் வைச்சிக்கிறது வழக்கம். என்ன போய் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே?????

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கிறுக்கல் எனக்கு புடிக்குமா? என்ன கேள்வி இது?

4.பிடித்த மதிய உணவு என்ன?

சுவையான உணவு அனைத்தும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே வச்சுக்கிட்டா அது நட்பே இல்லைங்க. பழகி கொஞ்ச நாள் கழிச்சு தெரிந்தவர் நண்பரா மாறுவார், மாறாமலும் இருப்பார்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆளை தான்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

மிகச்சில கொள்கைகளில் உறுதியாக இருப்பது. பல பல.....
கொள்கைகளில் உறுதியில்லாமல் இருப்பது.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

பிடிக்காத விதயமே கிடையாது.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் பக்கத்தில் இல்லை அதனால தான் இந்த கேள்விகளுக்கு தட்டச்ச முடிகிறது. என் நிலையை புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை & பச்சை

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

புதிய பூவிது பூத்தது...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்

14.பிடித்த மணம்?

மரியாதைக்குரிய மணம். அதாங்க திருமணம். இஃகிஃகி.
பசியோடு இருக்கும் போது வரும் சாம்பார், குழம்பு, இரசம், பொரியல் மணம்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அடுத்தவங்க மேல உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு? அடுத்தவங்களாவது் தப்பிக்கட்டும்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவரின் பதிவிலுள்ள எல்லா இடுகையும் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

முதலில் கிரிக்கெட், இப்போ அத சுத்தமா பாக்கறது இல்ல. பார்க்காத என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை வேற பண்ணுவேன். இப்ப நீச்சல், வலைப்பந்து, உதைபந்து, டென்னிஸ்

18. கண்ணாடி அணிபவரா?

அல்ல

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

Just Cause - தொலைக்காட்சியில் பார்த்ததுங்க, அரங்குக்கு போய் பார்த்து 2 ஆண்டு ஆகிடுச்சி.

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் எனக்கு கொஞ்சம் மன்னிக்க நிறைய கம்மி.

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

ஒழுங்கு படுத்தப்பட்ட சத்தம் பிடிக்கும்,
ஒழுங்கு படுத்தப்படாத சத்தம் பிடிக்காது.

23.பிடித்த பருவ காலம் எது?

இக்கரைக்கு அக்கரை பச்ச. அதனால எனக்கு எல்லா பருவமும் பிடிக்கும்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, தொலைவை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தன்னடக்கம் தடுக்கிறது. இஃகிஃகி

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒன்னா ரெண்டா நிறைய விதயங்கள் இருக்கு.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

நண்பர்களோட போயி கூத்தடிக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடித்த சுற்றுலாதலங்களே.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

இணையம் பார்ப்பது. (எந்த சிறு இடஞ்சலும் இருக்காது பாருங்க, இஃகிஃகி)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் வாழ்வை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க, அதை தெரிஞ்சுக்குங்க. .

வியாழன், ஜூன் 04, 2009

"ற்க்" பிழையும் பதிவர்களும்


நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.




அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)


இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....


விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((

சனி, மே 30, 2009

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை பயனர்களுக்கு சிரமத்தை குடுக்கிறது. பிடித்த இடுகைக்கு வாக்களிக்க முயன்ற போது 'OpenID authentication failed: Bad signature' என்று வருகிறது. நான் kurumban.blogspot.com , http://kurumban.blogspot.com இரண்டையும் கொடுத்துப்பார்த்தேன். புண்ணியமில்லை.

சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.

வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?




தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்

வியாழன், மே 28, 2009

உடன்பிறப்புகளுக்காக ஒரு Cartoon

எப்ப பார்த்தாலும் கடித தந்தி புகழ் தலைவரை/கட்சிய பத்தியே கருத்துப்படம் போடராங்கன்னு சில உடன்பிறப்புகளுக்கு கவலை அதனால ஒரு மாறுதலுக்காக....




இருந்தாலும் இந்த cartoon ன பார்த்ததும் மனசு கேக்காம இங்க உங்களுக்காக...;-)





என்னதான் இருந்தாலும் உண்ணாவிரதத்தை இப்படி கேலி ஆக்கி இருக்கக்கூடாது..... (கருத்துபடம் வரைந்தவரை சொல்லலிங்க ... )

புதன், மே 27, 2009

தினமணி கருத்துப்படம்

தினமணியில் வந்த இந்த கருத்துப்படங்கள் உங்களுக்காக...

1. சிங்களத்தின் இரத்தவெறி



2. கருணாநிதியின் தொண்டு...

வியாழன், மே 21, 2009

சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்

மத்திய அரசுக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியது பல திமுக எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நாளை என்ன திருப்பம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அறிந்தும் அவர்கள் அற்ப மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.

இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.

திங்கள், மே 18, 2009

புதிய தேடு பொறி

இணையத்தின் இணையில்லா இராசா கூகுளுக்கு இது போட்டியாக இல்லாமல் போட்டியாக புதிய தேடல் பொறி வந்துள்ளது. சாதாரண தேடலுக்கு இது அவ்வளவாக உதவாது. இது கூகுள், யாகூ, எம் எசு என் லைவ் போன்ற தேடல் பொறிகளில் இருந்து வேறுபாடுடையது. இது இன்னும் சோதனை அளவிலேயே உள்ளது. முயன்று பாருங்கள்.

http://www.wolframalpha.com/

தேர்தல் நகைச்சுவை

ஈழம் பற்றி நினைத்தால் மனம் சொல்லனா துயரம் அடைகிறது. எனவே அதைப்பற்றி இப்போதைக்கு பேசப்போவதில்லை\எழுதப்போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவு பற்றி ஊர்ல விசாரித்தேன். அங்க நடமாடும் செய்தி உங்களுக்கு இங்கே...

ஊர்ல பேசும் போது என்னடா நீங்க நினைச்ச அளவுக்கு கூட வாக்கு வாங்கலையாட்டக்குது என்றேன்.

ஆமாண்ணா, இதுல எங்கோ தப்பு நடந்திருக்கு... வெற்றி பெறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை... ஆனா வாக்கு எண்ணிக்கை தான் உதைக்குது. பசங்களை கேட்டேன். அவங்க இப்படி தான் சொல்றாங்க..

"நான் போட்டது என்னமோ நம்ம கட்சிக்கு தான் ஆனா அது எதுல விழுந்ததுன்னு தான் எனக்கு தெரியாது."

இது தான் இப்ப ஊர்ல சூடானா தேர்தல் செய்தி....

வியாழன், மே 14, 2009

வாக்கு பதிவு விழுக்காடும் நம்ம கருத்தும்

தமிழ்நாட்டில் நடந்த வாக்கு பதிவு விழுக்காடுகளை வைத்து நாம் கொஞ்சம் ஊகம் செய்யலாம். இந்த விழுக்காடு செய்தி thatstamil.com ல் வந்தது.

1. திருவள்ளூர் (தனி) - 54% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

2. வட சென்னை - 61% - தா.பா வெற்றி அடைந்து விடுவார் என்று உடன்பிறப்புகள் வேலை செய்யவில்லையா?

3. தென் சென்னை - 62% - ஓரளவு வேலை செய்திருக்காங்க.

4. மத்திய சென்னை - 58% - அடுத்தவன வாக்கு பெட்டி பக்கம் வராம அடிச்சி வெரட்டங்குள்ள வாக்கு பதிவு முடிஞ்சுன்னு சொல்லிட்டாங்கப்பா.

5. ஸ்ரீபெரும்புதூர்- 65% - தொகுதி மாறினது வீண்.

6. காஞ்சீபுரம் (தனி)- 66% - தேவலை

7. அரக்கோணம்- 65% - இரயிலு ஓடுமா? இல்லை ஜெகத்ரட்சகன் காசு வேலை செய்யுமா?

8. வேலூர்- 58% - யாரும் சரியா வேலை செய்யவில்லை, சரியா வேலை செய்யாதவங்களை வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அனுப்பனும்.

9. கிருஷ்ணகிரி - 70% - சுகமாகிடுமா இல்ல நஞ்ச குடிச்ச கதை தானா?

10. தர்மபுரி - 70.5% - பாமக நல்லா வேலை செய்து இருக்காங்க.

11. திருவண்ணாமலை- 69% - குருவும் அவர தோற்கடிக்க வேண்டும் என்பவர்களும் நல்லா வேலை செய்திருக்காங்க.

12. ஆரணி- 59% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

13. விழுப்புரம் (தனி) - 70% - சிறுத்தையா இலையா என்பதை விட பொன்முடியா தைலாபுரமான்னு கேக்கறது தான் சரி.

14. கள்ளக்குறிச்சி - 60% - நட்சத்திர தொகுதியா இது?

15. சேலம் - 69% - தங்கபாலுக்கு ஆப்பு தான்.

16. நாமக்கல்- 75% கொங்குநாடு முன்னேற்றப் பேரவை & கொங்கு இளைஞர் பேரவையின் வேலை.

17. ஈரோடு - 71.6% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

18. திருப்பூர்- 71% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

19. நீலகிரி (தனி) - 62% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவை சரியா வேலை செய்யலையா அல்லது தோழர்கள் சரியா வேலை செய்யலையா?

20. கோவை- 60% - ஈசுவரா எல்லாம் உன் வேலை தானா?.

21. பொள்ளாச்சி- 65.5% - அப்ப இங்க BEST தானா?

22. திண்டுக்கல் - 68% - காங்கிரசுக்கு பெரிய பூட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

23. கரூர்- 80% - பணக்காரரு நல்லா இறைச்சி இருக்கார்ங்கறது தெரியுது.

24. திருச்சி - 67% - தோழர்களும் மாமாக்களும் அதிகம் உள்ள இடத்தில் காங்கிரசா? விளங்கிடும்.

25. பெரம்பலூர் - 71% - பணத்த டாலரா இறைச்சதா கேள்வி.

26. கடலூர் - 67% - திமுக ஆதரவு பதிவர்கள் அதிமுகவுக்கு ஆப்பு அப்படிங்கறாங்க, திமுக எதிர்ப்பாளர்கள் காங்கிரசா அப்படின்னு சிரிக்கறாங்க. விருதாச்சலம், பண்ருட்டி எல்லாம் இந்த தொகுதிக்கு கீழதாம்பா வருது. தேமுதிகவையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.

27.சிதம்பரம் (தனி) - 74% - சிறுத்தையும் சிங்கமும் நல்லா வேலை செஞ்சிருக்காங்க.

28. மயிலாடுதுறை - 70% - ஐயருக்கு ஆப்பு தான்.

29. நாகப்பட்டினம் (தனி) - 69% - சித்தமல்லிகாரங்க விளையாடி இருக்காங்கப்பா.

30. தஞ்சாவூர் - 68% - மந்திரி தொகுதி, அதுவும் இல்லாம லோ.கணேசன் வேற மதிமுகவுல இருந்து திமுகவுக்கு வந்திருக்காரு.

31. சிவகங்கை - 66% - சீக்கியரை மன்னிக்கும் கனவான் போட்டியிடுராரு, அவருக்கு தமிழர்கள கண்டா கொஞ்சம் இலப்பம் தான், பணத்த தண்ணியா செலவு பண்றதுக்கு தான் கண்ணப்பன் இங்க நிக்கறாரு. நம்ம கனவாணுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வேற, பார்க்கலாம்.

32. மதுரை - 76.6% - அஞ்சா நெஞ்சன் எப்படி வாக்கு வாங்கனும்ன்னு தெரிஞ்ச ஆளு. 3 லட்சம் வாக்கு வேறுபாட்டுல வெற்றி பெருவேன்னு சூழுறைத்திருக்கார்.

33. தேனி - 62% - எப்பவாவது தான் ஆள்கூழ் (luck) அடிக்கும். அது தெரியாத ஆளா ஆருண்?

34. விருதுநகர் - 70% - வைகோவுக்குன்னு எழுதி வச்சிருக்கு.

35. ராமநாதபுரம் - 64.5% - வள்ளலுக்கே சோதனை.

36. தூத்துக்குடி - 65.7% - சித்த மருத்துவரான இந்து நாடாருக்கும் முன்னால் பல்கலைக்கழக துணைவேந்தரான கிறுத்துவ நாடாருக்கும் போட்டி. முரட்டு பக்தரின் தொகுதி. என்ன வேண்டும்மென்றாலும் நடக்கலாம்.

37. தென்காசி (தனி) - 63% - கைய மறந்துடுங்க.

38. திருநெல்வேலி - 65% - திமுகவுக்கு தெரியும் இப்ப இந்த தொகுதி கை கூடாதுன்னு.

39. கன்னியாகுமரி - 63.09% - தாமரை மலருமா?

40. புதுச்சேரி - 80% - காங்கிரசுக்கு கொஞ்சம் தொண்டர்கள் இருக்குமிடம்.


http://thatstamil.oneindia.in/news/2009/05/14/tn-67-votes-polled-in-tamil-nadu.html

KU-AM நிறுவனத்தின் கருத்து கணிப்பு

பல்வேறு நாளிதழ்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளன. இவற்றை சில புகழ்பெற்ற கருத்து கணிப்பு நிறுவனங்கள் செய்தன. அரசியல் கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. ஏவல் துறையான உளவுதுறையை வைத்து ஆளும்கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன.

இதுல பாருங்க எதுவுமே ஒரே மாதிரி வரவில்லை, அப்படி என்றால் என்ன பொருள்? புரிஞ்சா சரி.

இங்கு புகழ்பெற்ற KU-AM புள்ளியியல் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு உங்களுக்காக.

காங் கூட்டணி - 182
பாசக கூட்டணி- 204
மூன்றாவது அணி- 92
நான்காவது அணி & சுயேச்சைகள் - 59

4 விழுக்காடு முன்னபின்ன இருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

செவ்வாய், மே 12, 2009

மக்களே மறக்காதீர்கள்.

மக்களே நாளை தேர்தல் மறக்காமல் வாக்கு செலுத்துங்கள். இந்த தேர்தல் ஈழ தமிழர் விதயத்தில் துரோகம் செய்த திமுக கூட்டணிக்கு பாடம் கற்பிக்கும் தேர்தல். மறந்தும் திமுக & காங்கிரசுக்கு வாக்கு செலுத்தாதீர்கள். இப்ப தோற்றால் தான் வரும் தேர்தலில் தமிழருக்கு துரோகம் செய்யமாட்டார்கள். இனி யாரும் தமிழருக்கு துரோகம் செய்ய நினைக்கமாட்டார்கள்.

பல திமுக அனுதாபிகள் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். நீங்களும் எதிராக வாக்களியுங்கள், நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க உங்கள் வீட்டில் சொல்லுங்கள். நான் சொல்லிவிட்டேன். அவங்களே எதிராகதான் வாக்களிப்போம் என்று கூறினார்கள். எனக்கு நன்கு பழக்கமான 4 குடும்பத்தாரிடமும் என் வேண்டுகோளை விடுத்தேன், அவர்களும் திமுக கூட்டணிக்கு எதிராதான் வாக்களிக்க போறாங்க. ஏதோ என்னால முடிந்தது.

கொங்கு பகுதி - தேர்தல் அலசல்

கொங்கு பகுதியின் தொகுதிகளை பற்றி இது வரை யாரும் சரிவர கணிக்கவில்லை. கொங்கு பகுதி வாழ் பதிவர்கள் கணித்தார்களா என்று தெரியாது. கோயமுத்தூர், ஈரோடு பகுதியில் வசிக்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். ஏன் அவர்கள் செய்யவில்லை?

சென்னை வாழ் பதிவரே சென்னை, மதுரை, விருதுநகர், கடலூர் பற்றி கணித்துள்ளார். மதுரைக்காரங்க மதுரையை பற்றி ஒன்னும் சொல்லக்காணோம்.

தேமுதிகவின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. சரத்குமாரின் சமுத்துவ கட்சியின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. விருதுநகர்ல நடிகர் கார்த்தி தேவர் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் வைகோ வெற்றி இழுப்பறின்னு பேசறாங்க. இது மாதிரி ஆளுக்கு வேண்டிய மாதிரி கணிப்பு எழுதறாங்க. எழுதட்டும் எழுதட்டும் தேர்தல் முடியும் வரை இதத்தான செய்யமுடியும்.

சரி கொங்கு பகுதி பற்றி நாம கொஞ்சம் அலசுவோம்.

இங்கு கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது. எனக்கு தெரிந்து இப்பேரவையை யாரும் (கணிப்பு பதிவர்கள்) கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. ஆனால் கொங்கு பகுதியில் இதன் பாதிப்பு பலமாக இருக்கப்போகிறது. கள நிலைமையை பார்த்தவர்கள் இப்பேரவைக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

இதனால திமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதா இல்ல அதிமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதான்னு தான் தெரியலை. சில தொகுதிகளில் இரண்டாம் இடம் வரவும் வாய்ப்பிருக்கு. குறிப்பா கோவை, பொள்ளாட்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிகளில்.

கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது.

இப்பகுதிகளில் அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று சொன்னாலும் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை அதை பாதிக்குமா என்று தெரியவில்லை.

சனி, மே 09, 2009

யாருக்கு வாக்கு செலுத்துவது? திமுகவுக்கு மறந்தும் வேண்டாம்

ஈழ தமிழர் விதயம் காரணமாக யாருக்கு வாக்கு போடுவது என்று நமக்கு குழப்பம். இதில் குழப்பமே வேண்டாம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்தாதீர்கள்.

திமுக கூட்டணி தோற்க வேண்டும் அப்போது தான் இனி வரும் இந்திய அரசு தமிழருக்கு துரோகம் செய்யாது. குறிப்பாக காங்கிரசு படுதோல்வி அடைய வேண்டும். அப்போதான் அதனுடன் சேர்ந்து தமிழர்களை அழித்த திமுகவுக்கும் பாடம் வரும்.

சில திமுக உடன்பிறப்புகளுக்கு இது கடினமான செயல் தான். அவர்கள் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' போன்ற அழகிய சொல்லாடலுக்கு மயங்கி நிற்பவர்கள். மயக்கம் தெளிஞ்சா எல்லாருக்கும் நல்லது. மயக்கம் தெளிய கூடாது என்று தான் முழு அடைப்பு அன்று டாஸ்மார்க் திறந்திருந்தது, சன், கலைஞரில் சிறப்பு படம் போட்டார்கள். புரிஞ்சுக்குங்கப்பா...

அதிமுகவுக்கு வாக்கு செலுத்துங்க. அதிமுக பிடிக்கலையா தேமுதிகவுக்கு வாக்கு செலுத்துங்க, அதுவும் பிடிக்கலையா உங்க தொகுதியில் நிற்கும் வேற கட்சிக்கு அல்லது சுயேச்சைக்கு வாக்கு செலுத்துங்க. மறந்தும் உதயசூரியனுக்கோ, கைக்கோ வாக்கு செலுத்தாதிங்க.

கருணாநிதியை விட செயலலிதா எவ்வளவோ மேல்...
முதல் நாள் பிரபாகரன் நண்பன் என்று பேட்டி கொடுக்க வேண்டியது அடுத்த நாள் நான் அப்படி சொல்லவேயில்லை என்பது.

எனக்கு தெரிந்து கருணாநிதி என்றும் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என்று ஆணித்தரமாக சொன்னதில்லை. என்றுமே இவரு வழவழா கொழகொழா தான்.
செயலலிதா இத்தேர்தலில் அப்படி சொல்லி உள்ளார். அப்படி சொன்னதற்காக அவரை பாராட்டவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி, மத்தியில் பல அமைச்சர்கள் மேலும் அங்கு இவருக்கு பெரும் செல்வாக்கு. எல்லாம் இருந்தும் ஈழ மக்களை காக்க ஒன்றும் செய்யவில்லை... அப்புறம் எதற்கு திமுகவிற்கு வாக்கு செலுத்தவேண்டும்?

வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

திணமனி கருத்துப்படம் - மதுரை, பிச்சை, சலுகை

தமிழகமே மதுரைன்னு அமைச்சர் நேரு தவறாக புரிந்து கொண்டதின் விளைவு .....



இப்ப பிச்சை வாங்க கூட வாக்குரிமை கேக்கறாங்கப்பா.. சாமி..எப்ப தேர்தல் முடியுமோ?



தேர்தலுக்கு பின் மக்கள் விருப்பப்பட்ட சலுகைகள் கிடைக்கும்... இந்த சலுகைகள் இப்ப கிடைக்காமல் போனதற்கு தேர்தல் ஆணையமே காரணம்...

ஞாயிறு, மே 03, 2009

தினமணி கருத்துப் படம் - விலை/ கட்டண குறைப்பு

தேர்தலை முன்னிட்டு குவார்ட்டர் விலையை குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதால் குவார்ட்டர் கோயிந்தனெல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தும் படி "குடிமக்கள் முன்னேற்ற சங்கம்" கேட்டுக் கொள்கிறது. நமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முழுஅடைப்பு அன்று டாஸ்மார்க் கடைகளை மட்டும் அரசு திறந்திருந்ததை கோயிந்தன்கள் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.




திங்கள், ஏப்ரல் 27, 2009

போடுங்கம்மா ஓட்டு '...' பார்த்து...

போடுங்கம்மா ஓட்டு '......' பார்த்து... தேர்தல் நேரத்தில் இது வழக்கமா கேட்கிற கோசம். நானும் இப்படி கத்தி கத்தி வாக்கு சேகரித்திருக்கேன். ஆனா பாருங்க இந்த தேர்தல் கொஞ்சம் வேறுபாடு உடையது. போடாதிங்கம்மா ஓட்டு 'கை சின்னத்த ' பாத்து..... போடாதிங்கம்மா ஓட்டு 'உதய சூரியன ' பாத்து.... இது தான் இந்த தேர்தலுக்கான கோசம்.

கட்சி பாசம் உடன்பிறப்புகளை தடுக்குது, சரி எவன் ஊட்ல எழவு நடந்தாலும் உதய சூரியனுக்கு தான் வாக்கு போடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் தான் கட்சியின் வாக்கு வங்கி.

பிறப்புகளே சிந்தியுங்கள்... இவர் தான் ஆட்சியில் இருக்கிறார்.... இவர் நினைத்திருந்தால் முன்னமே மத்திய அரசை வழியுறுத்தி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும்... குறைந்த பட்சம் இலங்கைக்கு பணமும் இராணுவ தளவாடங்களும் போகாமல் செய்திருக்க முடியும். அது போதுமே என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

பாரதிராசா தலைமையில் ஈழ மக்களுக்காக திரையுலகம் போராட்டம் என்றதும் முழு அடைப்பு.... (டாஸ்மார்க் கடைகள், கலைஞர், சன் தொலைக்காட்சிகள் விதிவிலக்கு) ... செயலலிதா தமிழீழத்துக்கு ஆதரவு சொன்னதும் உண்ணாவிரதம் .... இதுக்கு வேற பல பதிவர்களின் சப்பை கட்டு..... (சில நேரமாவது) இவங்க எப்பதான் கட்சி சார்பா சிந்தித்து முடிவு எடுக்காம இருப்பாங்க... ரெட்டை இலைக்கு தான் ஓட்டுன்னு சொல்ற படிக்காத பாமரர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வேறுபாடு?

உண்ணா விரதமும் போர் நிறுத்தமும்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.

ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.

அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.

அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.