வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூன் 29, 2010

நண்பர் தன் குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்த கதை

நண்பர் கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர். இதுக்கு காரணம் அவரோட நண்பர்களில் பெரும் பகுதி கொல்டிங்க என்பதும் காரணம். கொல்டிங்க கூட அரசியல் பேசறப்ப தமிழ்நாட்டை விட்டு கொடுக்க முடியுமா? எப்ப வாய்ப்பு கிடைத்தாலும் ஆந்திராவையும் ஐதராபாத்தையும் வாருவதும் சென்னையை தூக்கிபிடிப்பதும் அவர் வேலை. அதே போல அவர்களும் தமிழ்நாட்டை பற்றி பேசி இவரை வம்பு பண்ணுவதும் வழக்கம்.

தன்னுடைய பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு நிறைய தமிழ் பெயர்கள் தெரியாததால் நல்ல பெயர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். சின்ன பேரா இருக்கனும் என்பது நிபந்தனை. நானும் எனக்கு தெரிந்த சில பெயர்களை சொன்னேன். சில என்றால் 5 பெயர்கள் தான். எவ்வளவு தான் யோசிச்சாலும் தமிழ் பெயர்கள் நினைவுக்கு வரலை. இணையத்தில் தேடினாலும் எல்லாம் தமிழர்கள் வைக்கும் பெயர்களாக இருக்கே தவிர தமிழ் பெயர் குறைவு. நாம நிறைய கொடுத்தா தான அவர் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். நாம கொடுக்கறதே குறைச்சலா இருந்தா எப்படி? என்னடா தமிழ் பெயர் வைக்கறேன்னு ஒருத்தர் சொல்லறார் அவருக்கு உதவமுடியலையேன்னு எனக்கு விசனம். நல்ல தமிழ் பெயர் கிடைக்கலைன்னா தமிழ் பெயர் வைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு நானும் எனக்கு தெரிந்த மக்களிடம் எல்லாம் தமிழ் பெயர் கேக்கறதே வேலையாப்போச்சு. என் முயற்சிக்கு வெற்றி கிடைக்கலை.

தமிழில்  பெயர் வைக்கனும் என்று ஆசைப்பட்டாலும் பெயர்கள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் போல் தமிழல்லாத பெயர் வைப்பவர்கள் எத்தனை பேரோ?

இந்தக்குறையை போக்குவதற்காக தமிழ் பெயர்களுக்கான இணையதளத்தை இரவிசங்கர் உருவாக்குவதாக சொன்னார்.  இன்னும் அந்த தளம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்.

நண்பரின் பக்கத்து வீட்டுக்காரரும் தமிழ் பற்றாளர். அவரும் இவருக்காக பெயர் வேட்டையை நடத்தினார். அவர் தன் தங்கமணியிடம் சில பெயரை சொல்லுவார் அவர் அதை கேலி பேசுவார்...

பக்கத்துவீட்டுகாரரின் தங்கமணி அவர் போல் தமிழ் பற்றாளர் எல்லாம் கிடையாது. அதே போல் தமிழ் எதிரியும் கிடையாது.  இவர் தமிழ் தமிழ் என்பதை கேலி பண்ணுவதே அவர் வேலை. இவர் சில பெயர்களை சொல்ல அதை அவர் கேலி பண்ணுவதுமாக நாட்கள் போய்கிட்டிருந்தது. இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வந்தது. பக்கத்துவீட்டுகாரர் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை. குழந்தை பிறக்கும் முன் இவர்கள் இந்தியா செல்லவேண்டிவந்தது.

குழந்தையும் பிறந்து பெயரும் வைத்தாயிற்று. ஊர்ல வந்ததும் இவங்க கேட்ட முதல் கேள்வி குழந்தைக்கு என்ன பெயர் என்பது தான்.

சொன்னதும் அவங்க முகம் போன போக்க பார்க்கனுமே. அவருக்கு மட்டுமாபெயரை கேட்ட எனக்கும் என்னடா இதுன்னு தான் இருந்துச்சி. அந்த பெயரை வச்சி அவரை கேலி பண்ணினாலும் மனதுக்கு சங்கடமா இருந்ததென்னவோ உண்மை. என்னய்யா அந்த பெயர் அப்படின்னு கேட்கறீங்களா.



                                                                  ஸ்மித்தா

வெள்ளி, ஜூன் 11, 2010

நர்சிம் சந்தனமுல்லை சண்டையில் தெரிந்து கொண்டது.

 
  • பதிவர் நர்சிமுக்கும் சந்தன முல்லைக்கும் முன்பே ஆகாது.
  • ஆதிமூலகிருஷ்ணன் நர்சிம்மை பேட்டி கண்டு எழுதிய இடுகையை நையாண்டிசெய்து இந்த இடுகை எழுதப்பட்டதாகவும் இவ்வாறு எழுத நர்சிம்மின் அனுமதியை வாங்கியுள்ளதாகவும் கூறி இது ஒரு கும்மி இடுகை எல்லோரும் வாங்க என்று பதிவர் மயில் விஜி கூவி அழைக்கிறார்.
  • அவரது மேலான அறிவிப்பை தொடர்ந்து பலர் அங்கு கும்மியடித்தார்கள். அதில் சந்தன முல்லையும் ஒருவர். பின்னூட்டத்தில் நர்சிமை பெயர் குறிப்பிடாமல் நல்லா கும்மியிருக்காங்க. கடுமையாக கும்மியவர் சந்தன முல்லை.
  • குறிப்பிட்ட கும்மி இடுகை மற்றொரு தளத்திலிருந்து எடுத்து ஒட்டப்பட்டிருப்பதாக சில பதிவர்கள் குற்றம் சாட்டியபோது குறிப்பிட்ட இடுகை தன்னாலேயே எழுதப்பட்டதாகவும் தான் வேறு எந்த தளத்திலயும் எழுதவில்லை என்று பதிவர் மயில் விஜி கூறுகிறார். 
  • இந்த இடுகை வேறொரு தளத்தில் இருந்ததாகவும், பதிவர் மயில் விஜி தளத்தில் வெளியியான பின்பு அங்கு இல்லை என பதிவர்களால் கூறப்படுகிறது. 
  • சந்தன முல்லை தான் இந்த இடுகையை எழுதி விஜிக்கு கொடுத்து வெளியிட சொல்லியிருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். 
  • கும்மி இடுகையால் கோபமடைந்த நர்சிம் பூக்காரி என்ற ஆபாச புனைவு எழுதுகிறார். இதில் இவர் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை ஆனால் எல்லோருக்கும் தெரியும் இது யார் குறித்தென. 
  • பதிவர் மயில் விஜியிடமும், நர்சிமிடமும் இடுகையை நீக்க பதிவர்கள் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். இதனால் ஏற்படும் விளைகளை தாங்கள் பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.
  • வினவு தளத்தில் பூக்காரி எழுதிய நர்சிம் பொறுக்கி என இடுகை வந்து வலையுலகம் 2 வாரமாக இதே பேச்சாக இருந்தது. வாசகர் பரிந்துரையில் வந்த இடுகையெல்லாம் இது தொடர்பாக இருக்கவே தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்ற பகுதியை தூக்கிவிட்டார்கள். 
  • வினவு தளத்தில் நீங்கள் தானா எழுதியது என்ற போது மறுத்த பைத்தியக்காரன்(சிவராமன்), ஆதாரம் வெளிவந்ததும் ஆமாம் என்கிறார். 
  • நர்சிமும் பைத்தியக்காரனும் நெடுநாளைய நண்பர்கள்
  • இப்போது நர்சிமும், மயில் விஜியும் குறிப்பிட்ட சண்டைக்குரிய இடுகையை நீக்கிவிட்டார்கள். (இத முன்னாடியே செஞ்சிருந்தா என்னவாம்?)

 பார்ப்பனர்கள் --- 
  1. நர்சிம்
  2. பைத்தியக்காரன் 
  3.  ஜியோவ் ராம் சுந்தர்
  4. பால பாரதி
  5. பத்ரி

 நர்சிமின் அப்பா பிராமணர்கள் சங்கமான தாம்பிரஸில் உயர் பொறுப்பில் இருப்பவர். 

சந்தன முல்லை - வன்னியர், வன்னியர் ஆர்குட் தளத்தில் சந்தன முல்லை ஓர் உறுப்பினர்.  
  • சுகுணா திவாகர் ஆனந்த விகடனில் வேலை செய்பவர்.
  • கார்க்கி ஐதராபாத்தில் வேலை செய்துவிட்டு இப்போ தனியாக ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
  • நர்சிம் பைத்தியக்காரனுக்கும் சுகுணா திவாகருக்கும் தண்ணி வாங்கி ஊத்தி இருக்கார்.
  • பைத்தியக்காரன் நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கார்.
  • பைத்தியக்காரன் குங்குமத்திலோ, தினகரனிலோ வேலையில் இல்லை. நாகவல்லி என்ற தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதியிருக்கார்.
  • பைத்தியக்காரன் பூணூல் அனிந்திருப்பவர் ஆனால் பார்ப்பானை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்பவர்..
  • நர்சிம் பணக்காரர்.
  • பைத்தியக்காரன் பார்வையில் லதானந், அபிஅப்பா, மங்களூர் சிவா ஆகியோர் வழியல் ஆசாமிகள்.
  • நான் வழியல் ஆசாமி என்பதற்கு ஆதாரம் கொடு என்று மங்களூர் சிவா கேட்டதற்கு பைத்தியக்காரன் சில பொண்ணுங்க அத்தகவலை இவரிடம் சொன்னதாகவும் அந்த பொண்ணுங்க சொன்னாதான் ஆதாரம் வெளியிடுவேன் என்று மறுத்துவிட்டார். 
  • குசும்பன் மேல் உள் கோபம் கொண்டிருந்த காரணத்தால் இச்சண்டையை பயன்படுத்தி பைத்தியக்காரன் அவருக்கு கோமாளி என்ற பட்டம் கொடுக்கிறார்.

 இன்னும் எழுதலாம் தான் தான்  தான்  தான் ......

 

வியாழன், ஜூன் 03, 2010

எண்ணெய் கசிவும் அமெரிக்காவும்

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டிசு பெட்ரோலியத்துக்கு உரிய ஆழ்கடல் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தளம் வெடித்து 45 நாட்கள் ஆகிறது.  எண்ணெய் கிணறை அடைக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது வரை 50 மில்லியனுக்கு மேலான காலன் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்துள்ளது. உண்மையா எவ்வளவு எண்ணெய் வெளியேறி உள்ளது என்று யாருக்கும் தெரியாது. 

இந்த எண்ணெய் வெளியேற்றத்தால் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களின் மீன் பிடிப்பு மற்றும் கடற்கரையை சார்ந்த சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் இப்ப தான் புளோரிடா பக்கம் வர தொடங்கியிருக்கு.

மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவான குடியரசு கட்சி செல்வாக்கு உடையது.

இது அப்பகுதியின் புயல் காலம். கண்டிப்பா புயல் உண்டு. அது எண்ணெய் பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். இவங்க எண்ணெய் வெளியேற்றத்தை இப்ப நிறுத்தப்போறதில்லை (முடிஞ்சா தான).

மக்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

குறிப்பு -- என் வலைப்பதிவு இன்னும் முழுமையாக சரியாகவில்லை.

புதன், ஜூன் 02, 2010

YOU TUBE VIDEO - TEST