வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

பிணி போக்கும் தன்வந்திரி திருமந்திரம்

எல்லா பிணியும் நீங்க 108 முறை இந்த தன்வந்திரி திருமந்திரத்தை ஓதவும்.

 ஓம் பகலவனே கோவிந்தனே;
 தந்வந்திரியே மருந்து கலனை உடையவனே;
எல்லா பிணிகளையும் போக்குபவனே ;
மூவுலகின் கோவே திருமாலே போற்றி! போற்றி








மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் வரலாறு

மரூர்பட்டி பாலதண்டாயுதபாணி (பழனியாண்டவர்) கோவில் தல வரலாறு (தல புராணம்) அசித் புராணமல்ல  😉
வெள்ளக்கோவிலுள்ள வீரகுமார சாமி தன் எல்லைக்குட்பட்ட மக்கள் நலமாக உள்ளார்களா என்று அறிய திங்கள் தோறும் நாட்டில் எல்லா இடங்களுக்கும் உலா செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒரு முறை நாமக்கலுக்கு அருகிலுள்ள மரூர்பட்டியில் திரளாண மக்கள் சாமியின் வருகையை எதிர்பார்த்து கூடியிருந்தனர். சாமி அவர்களிடம் எதற்காக கூடியுள்ளீர்கள் என்று வினவினார். அவர்கள் சாமி வெள்ளக்கோவில் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது அதனால் உன் ஆலயத்திற்கு மாதம் ஒரு முறை கூட வரமுடிவதில்லை. ஆகையால் இங்கு எழுந்தருள வேண்டும் என வேண்டினர். அதற்கு சாமி வீரக்குமார சாமியாக வெள்ளக்கோவிலில் எழுந்தருளுவேன் என பக்தருக்கு வாக்கு கொடுத்ததன் காரணமாக வேறு ஊர்களில் தான் எழுந்தருள முடியாது என்றும், தான் வேலவனின் இறங்குகை என்றும் அதனால் பழனியாண்டவர் ஆலயத்தை நிறுவி வழிபடச் சொன்னார். அப்போது கூட்டத்திலிருந்த குப்பண்ணக் கவுண்டர் என்ன இருந்தாலும் தங்களை தரிசிப்பது போல் ஆகுமா என்றார். இந்த இறங்குகையில் தான் பெண்களை கோவிலில் பார்ப்பதில்லை என்று வாக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் என் ஆலயத்தின் உள் வரமாட்டார்கள் ஆனால் அவர்களின் வேண்டுதலுக்கு இரு மடங்கு பலன் கொடுப்பேன், ஆனால் பழனியாண்டவர் கோவிலுக்கு இருபாலரும் வரலாம் என்று கூறி பழனியாண்டவரை ஏற்பாடு செய்ய கூறினார். அப்போதும் கூட்டத்திலிருந்த செல்லமுத்து கவுண்டர் என்ன இருந்தாலும் உங்களை வழிபடுவது தான் பிடித்துள்ளது என்றார். அதற்கு சாமி என் உருவத்தை வரைந்து வேல் சாட்டை பிரம்பு முதலியவற்றை வைத்து கும்பிடுங்கள் என்றார் வேல் சாட்டை முதலியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை நொய்யலில் குளிப்பாட்டி வெள்ளக்கோவிலுள்ள தன் ஆலயத்திற்கு மகா சிவராத்திரி காலத்தில் காவடியுடன் கொண்டுவரச் சொன்னார் சாமியின் உருவப்படத்தை பெண்களும் வழிபடலாம் என்பதால் சாமியின் தீர்ப்பு அனைவருக்கும் உகந்ததாக இருந்தது.

வெள்ளக்கோவிலில் உள்ள வீரக்குமார் சாமி சிலை

வெள்ளக்கோவிலில் உள்ள கோவில் முதன்மை வாயிலை தாண்டியதும்

வீரக்குமார் கோவிலில் உள்ள மண் குதிரைகள்
வீரக்குமார் கோவிலில் இருந்த மகாமுனி (தற்போது கோவிலுக்கு வெளியே உள்ளது)

வீரக்குமார் கோவில் மகா சிவராத்திரி தேர்

வீரக்குமார் சாமி உருவம் (ஓவியம்)


பழனியாண்டவர் அலங்காரத்தில்



பழனியாண்டவர்