தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.
TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.
எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.
தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புதன், அக்டோபர் 28, 2009
செவ்வாய், அக்டோபர் 27, 2009
தினமணி கருத்துப்படம் - ஐநா, ஈழம், அரசியல்
தினமணியோட கருத்துப்படம் நாட்டு\உலக நடப்பை அப்படியே சொல்லுது.
கருணாநிதியா தேடி அமைத்த வேலி இது. இதுல இருந்து அவரை காப்பாற்றுவதாவது. அவரை மீறி உடையக்கூடியது ஒரு பக்கம் தான் அது காங்கிரசு கூட்டணி. அது உடையக்கூடாதுன்னு தான் எல்லா வேலையும் செய்கிறார். உடன்பிறப்பே இது 2004 அல்ல 2009, எல்லா கணக்கும் மாறி போயிடுச்சி. மீதி மூனு பக்கமும் அசைக்க முடியாத வலுவோட இருக்கு.

ஐநா-ன்னு ஒன்னு இருக்கா? ஓஓஓ இருந்ததா...

சிபிஐ சோதனை என்பது அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் ஒரு சீட்டு. அதுக்கு போயி யாராவது(அரசியல்வாதி) கவலைப்படுவாங்களா? அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா...
கருணாநிதியா தேடி அமைத்த வேலி இது. இதுல இருந்து அவரை காப்பாற்றுவதாவது. அவரை மீறி உடையக்கூடியது ஒரு பக்கம் தான் அது காங்கிரசு கூட்டணி. அது உடையக்கூடாதுன்னு தான் எல்லா வேலையும் செய்கிறார். உடன்பிறப்பே இது 2004 அல்ல 2009, எல்லா கணக்கும் மாறி போயிடுச்சி. மீதி மூனு பக்கமும் அசைக்க முடியாத வலுவோட இருக்கு.

ஐநா-ன்னு ஒன்னு இருக்கா? ஓஓஓ இருந்ததா...

சிபிஐ சோதனை என்பது அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் ஒரு சீட்டு. அதுக்கு போயி யாராவது(அரசியல்வாதி) கவலைப்படுவாங்களா? அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா...
வெள்ளி, அக்டோபர் 23, 2009
வாஸ்து - எதிரில் கண்டது 3
வாஸ்துவ பற்றி முதல் இடுகையிலும் அடி அளவுகள் பற்றி இரண்டாம் இடுகையிலும் எழுதியிருந்தேன். நான் வாஸ்துவை பற்றி எழுத காரணமான நிகழ்வு இங்கே.
தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.
வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்
பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.
இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?
ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.
.
.
தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.
வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்
பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.
இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?
ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.
.
.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)