வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



குடியுருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியுருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

EAD கிடைப்பதில் தாமதம்.

அமெரிக்காவில் EAD எனப்படும் வேலை செய்ய அனுமதி அட்டை இருந்தால் விசா இல்லாமல் வேலை செய்யமுடியும் அதாவது பச்சை அட்டை மாதிரி ஆனால் பச்சை அட்டை கிடையாது. 
பச்சை அட்டைக்கு முன் இது கொடுப்பார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமாகும் போது இதை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். இது பற்றி விளக்கினால் நிறைய சொல்லவேண்டி இருக்கும் அதனால் இந்த சுருக்கம் போதும்.

நம்ம மக்கள் நிறைய பேர் இப்ப EAD-ல் வேலை செய்கிறார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமானால் EADஐ புதுபித்துக்கொள்ள வேண்டும். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்ததை இரு ஆண்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இரு ஆண்டுகளுக்கு புதுபிப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு ஆண்டு உறுதி.

EAD காலாவதி ஆவதற்குள் அடுத்த EAD வாங்கிவிட வேண்டும். வழக்கமா EADஐ புதுபிக்க விண்ணபித்தால் விரைவில் கிடைத்துவிடும். இவ்வளவு காலமா இப்படி தான் இருந்தது.

இப்ப புதுபிக்கும் EAD கிடைக்க தாமதமாகிறது. EAD இல்லாட்டி வேலை செய்யமுடியாது. 60 நாட்களுக்கு முன் விண்ணபித்தவர்கள் பலருக்கு இன்னும் புது EAD வராததால் அவர்கள் வேலை செய்யமுடியாத நிலை.சிலருக்கு 75 நாட்கள் ஆனதாக கேள்வி.

எனவே மக்களே நீங்களோ உங்கள் நண்பரோ EADஐ புதுபிப்பதாக இருந்தால் 120 நாட்களுக்கு முன் விண்ணபித்து விடுங்கள்.

செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)