கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.
கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.
நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.
ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.
தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.
ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
வெள்ளி, ஏப்ரல் 09, 2010
வியாழன், ஏப்ரல் 08, 2010
வழக்கறிஞர் நகைச்சுவை
ஒரு விருந்தில் மருத்துவரும் வழக்கறிஞரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால் தொடர்ச்சியா தடங்கல் இல்லாமல் பேசமுடியவில்லை. ஏகப்பட்ட பேர் மருத்துவரிடம் தங்கள் உடல் நிலையை, நோயை கூறி இலவச மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் இது மாதிரி நடந்தது, மருத்துவரின் பொறுமை போயிடுச்சி (யாரும் தப்பு சொல்ல முடியாது, மனுசன நிம்மதியா விருந்தில் பேச விடறாங்களா), அவர் வழக்கறிஞரிடம் நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது சட்ட ஆலோசனை கேட்டு வருபவர்களை தடுக்க என்ன செய்யறீங்கன்னார்.
நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.
சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்
மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார். ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.
வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.
பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.
நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.
சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்
மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார். ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.
வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.
பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.
புதன், மார்ச் 31, 2010
விளம்பரத்தில் ரஜினிகாந்த்
அமீரக பதிவர் செந்தில்வேலன் இந்தி ஜாக்கிகள் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து வருத்தப்பட்டிருந்தார். அவருக்காக இந்த இடுகை. இஃகிஃகி.
கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.
IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).
திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))
கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.
IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).
திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))
திங்கள், மார்ச் 29, 2010
சிரிங்க சிரிங்க
ஒரு இளைஞனுக்கு மிகச் சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. எந்த மாதிரியான "சிறந்த எழுத்தாளனாக" வர நீ ஆசைபடுகிறாய் என்று ஒருவர் கேட்டார்.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.
முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.
இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.
ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.
சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.
மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.
4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.
ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.
நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார்.
அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.
நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.
இப்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "Error Message" எழுதும் வேலை செய்கிறார்.
முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.
இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.
மின்சார நிறுவனம், சமையல் எரிவாயு நிறுவனம், தொலைபேசி நிறுவனம் என்றார் பணியாள்.
ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.
சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.
மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.
4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.
ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.
அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.
பெரியவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு , ஆமாப்பா, கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருப்பதற்கு மன்னிகவும் என்று எழுதவும் என்றார்.
நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்.
..
சனி, மார்ச் 20, 2010
கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு
தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.
இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.
இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://tinyurl.com/yh2lt6v
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்
ஈரோடு, மார்ச். 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும். இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும். இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)