வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

திணமனி கருத்துப்படம் - மதுரை, பிச்சை, சலுகை

தமிழகமே மதுரைன்னு அமைச்சர் நேரு தவறாக புரிந்து கொண்டதின் விளைவு .....



இப்ப பிச்சை வாங்க கூட வாக்குரிமை கேக்கறாங்கப்பா.. சாமி..எப்ப தேர்தல் முடியுமோ?



தேர்தலுக்கு பின் மக்கள் விருப்பப்பட்ட சலுகைகள் கிடைக்கும்... இந்த சலுகைகள் இப்ப கிடைக்காமல் போனதற்கு தேர்தல் ஆணையமே காரணம்...

ஞாயிறு, மே 03, 2009

தினமணி கருத்துப் படம் - விலை/ கட்டண குறைப்பு

தேர்தலை முன்னிட்டு குவார்ட்டர் விலையை குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதால் குவார்ட்டர் கோயிந்தனெல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தும் படி "குடிமக்கள் முன்னேற்ற சங்கம்" கேட்டுக் கொள்கிறது. நமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முழுஅடைப்பு அன்று டாஸ்மார்க் கடைகளை மட்டும் அரசு திறந்திருந்ததை கோயிந்தன்கள் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.




திங்கள், ஏப்ரல் 27, 2009

போடுங்கம்மா ஓட்டு '...' பார்த்து...

போடுங்கம்மா ஓட்டு '......' பார்த்து... தேர்தல் நேரத்தில் இது வழக்கமா கேட்கிற கோசம். நானும் இப்படி கத்தி கத்தி வாக்கு சேகரித்திருக்கேன். ஆனா பாருங்க இந்த தேர்தல் கொஞ்சம் வேறுபாடு உடையது. போடாதிங்கம்மா ஓட்டு 'கை சின்னத்த ' பாத்து..... போடாதிங்கம்மா ஓட்டு 'உதய சூரியன ' பாத்து.... இது தான் இந்த தேர்தலுக்கான கோசம்.

கட்சி பாசம் உடன்பிறப்புகளை தடுக்குது, சரி எவன் ஊட்ல எழவு நடந்தாலும் உதய சூரியனுக்கு தான் வாக்கு போடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் தான் கட்சியின் வாக்கு வங்கி.

பிறப்புகளே சிந்தியுங்கள்... இவர் தான் ஆட்சியில் இருக்கிறார்.... இவர் நினைத்திருந்தால் முன்னமே மத்திய அரசை வழியுறுத்தி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும்... குறைந்த பட்சம் இலங்கைக்கு பணமும் இராணுவ தளவாடங்களும் போகாமல் செய்திருக்க முடியும். அது போதுமே என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

பாரதிராசா தலைமையில் ஈழ மக்களுக்காக திரையுலகம் போராட்டம் என்றதும் முழு அடைப்பு.... (டாஸ்மார்க் கடைகள், கலைஞர், சன் தொலைக்காட்சிகள் விதிவிலக்கு) ... செயலலிதா தமிழீழத்துக்கு ஆதரவு சொன்னதும் உண்ணாவிரதம் .... இதுக்கு வேற பல பதிவர்களின் சப்பை கட்டு..... (சில நேரமாவது) இவங்க எப்பதான் கட்சி சார்பா சிந்தித்து முடிவு எடுக்காம இருப்பாங்க... ரெட்டை இலைக்கு தான் ஓட்டுன்னு சொல்ற படிக்காத பாமரர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வேறுபாடு?

உண்ணா விரதமும் போர் நிறுத்தமும்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.

ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.

அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.

அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..

வியாழன், ஏப்ரல் 23, 2009

முழு அடைப்பின் போது டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி

ஆளும் திமுக சார்பில் ஈழ மக்கள் சிக்கல் தீர்வதற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வெற்றிகரமாக அமைதியாக நடந்தது என்பதை முழு அடைப்புக்கு முழு ஆதரவு கொடுத்த உங்களுக்கு தெரியும். ஈழ மக்களுக்காக திமுக நடத்திய முழு அடைப்பு பிடிக்காதவர்கள் பல்வேறு குறைகளை கூறுகின்றனர். பதிவுலகிலும் அப்படிதான் உள்ளது. குறை கூறி பல இடுகைகள்.

அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகள் ஏன் திறந்திருந்தன என்பதே அவர்களில் பெரும்பான்மையோர் கேட்கும் கேள்வி.

அஞ்சா நெஞ்சனை பெற்ற அருந்தவச் செல்வரும், வாழும் வள்ளல் ரித்திசை வேட்பாளராக்கி வள்ளலுக்கெல்லாம் வள்ளலானவரும், மக்கள் நலனுக்காக யார் காலையும் பிடிக்க தயங்காதவரும் அதன் காரணமாக அன்னை சோனியாவின் காலை கையை பிடித்து கெஞ்சியவரும், அண்ணா & பெரியார் கொள்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் சுயமரியாதைச்சிங்கமான தானைத்தலைவர் தன்மானச்சிங்கம் தமிழினக்காவலர் கலைஞர் அவர்கள் சார்பாக நான் பதில்களை சொல்கிறேன்.

1. திமுக என்ற கட்சி தான் முழு அடைப்பு நடத்தியதே தவிர அரசு அல்ல.

2. இந்த அரசு குடிமகன்கள் நலனில் அக்கரை உள்ள அரசு.

3. குடிமகன்கள் முழுஅடைப்பின் போது தகராறு செய்திருந்தால் இந்த அரசை கலைக்க வேண்டும் இதே குள்ள நரிகள் பேசியிருக்கும். இப்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பை இந்தஅரசு கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் என்னனமோ பேசுகிறார்கள்.

4. அன்று மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி. இந்த 10,000 கோடி இந்த அரசுக்கு கிடைக்கக்கூடாது அதன் மூலம் இது பல மக்கள் நல செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற வஞ்சகர்களின் எண்ணம் பலிக்காததால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்களைப் பற்றி தமிழினம் நன்கு அறியும்.

5. ஈழ மக்கள் சிக்கல் தீரவேண்டும் என்று முழுஅடைப்பு, பேரணி நடத்தியது இந்த அரசுதான். கலைஞரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். பல இலட்சம் தந்திகளை உடன்பிறப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இதை எதிர்கட்சிகளால் மறுக்க முடியுமா?

6. கலைஞரின் சொல்வன்மைக்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் அவர் உளருகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார், பல்டி அடிக்கிறார் என்கிறார்கள்.

தமிழக மக்களே மறக்காமல் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் சார்பு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

கருணா சிறையில் கொடுமை - வருத்தப்படுகிறேன்.

கருணா சிறையில் கொடுமை படுத்தப்பட்டால் அதற்காக நான் வருத்தப்படுவேன். அரசியவாதியான அவரை சிறையில் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதே என் அவா.

வேற ஒன்றும் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீங்களாக கருணா என்பதை கருணாநிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய துரோகி கருணாவும் இப்போது அரசியல்வாதி தான் என்பதை நினைவில் கொள்க.

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பிரியங்கா வதேரா - காந்தி

காங்கிரசு தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி இராபர்ட் வதேராவை மணமுடித்த செய்தி அனைவருக்கும் தெரியும். மணமான பின்பு இவரை பிரியங்கா வதேரா என்றே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இப்போது இவர் பெயரை பிரியங்கா காந்தி என பெரும்பாலும் என குறிக்கின்றன. இது தவறல்லவா? NDTV க்கு இது தொடர்பான கட்டுரையில் இத்தவறை குறிப்பிட்டேன், அதை அவர்கள் வெளியிடவேயில்லை. (என்னுடைய ஒரு commentம் அதுல வரமாட்டுங்குதுங்க ;-)) ). காந்தி மயக்கம் போகமாட்டிக்குது. (மகாத்மா காந்தி மயக்கம் இல்லைங்க, அவரை எப்பவோ மறந்தாச்சு) இதை மோசடி என்றே குறிப்பிடவேண்டும். பெயரை கூட மாற்றி வெளியிடும் இவற்றின் செய்திகளை எவ்வாறு நம்புவது?

பின்னாளில் சில செய்திகளை ஆவணப்படுத்த முயலும் போது இது எல்லோரையும் குழப்பும்.

நளினியை பிரியங்கா சந்தித்ததை எழுதிய போது கூட பிரியங்கா வதேராவை பிரியங்கா காந்தி என்றே எழுதினார்கள். நளினி - பிரியங்கா காந்தி சந்திப்பு...

தமிழ்நாட்டின் முதல்வர் யாருன்னு கேட்டா MGR ன்னும், பிரதமர் இந்திரா காந்தின்னும் சிலர் சொல்லுவாங்க. அவங்களுக்கும் இந்த செய்தியாளர்களுக்கும் என்ன வேறுபாடு?

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

சோனியா காந்தியின் சம்பந்தி தூக்கு மாட்டி மரணம்

அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.

60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.

7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.

செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.

ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....

செவ்வாய், மார்ச் 17, 2009

போப்பும் ஆணுறையும்.

போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.

ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.

போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))

புதன், மார்ச் 11, 2009

Erode, Salem & தொல்லை

ஏதாவது தகவல் வேண்டுமா? கூகுள் பண்ணுனா போச்சு. அதாவது இணையத்தில் தேடல் பண்ணுனா போச்சு அப்படிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா பாருங்க இந்த Erode & Salem பெரிய தொல்லை கொடுக்குது. Salem என்ற பெயரில் அமெரிக்காவில் பல நகரங்கள் இருக்கு, தேடுனா அது தான் முதல்ல வருது. நம்ம ஊர் சேலம் வரமாட்டிக்குதுங்க. ஐக்கிய அமெரிக்காவின் ஆரகன் என்ற மாநிலத்தின் தலைநகரமே சேலம் தான். நம்ம சேலத்துக்கு இப்ப தான் பல கடும் போராட்டங்களுக்கு பிறகு இரயில்வே கோட்டம் கிடைச்சிருக்கு.

அதே மாதிரி Erode ன்னு தேடுனாலும் தொல்லை தான். Salem மாதிரி இங்க Erode அப்படின்னு ஊரெல்லாம் கிடையாது, ஆனா Erode தேடல் வேற மாதிரி தொல்லைகளை கொடுக்குது. ஆங்கிலத்தில Erode அப்படின்னா வேற மாதிரி பொருள் தருது.

merriam-webster Erode க்கு என்ன பொருள் சொல்லுதுன்னா
transitive verb1: to diminish or destroy by degrees: a: to eat into or away by slow destruction of substance (as by acid, infection, or cancer) b: to wear away by the action of water, wind, or glacial ice eroded the hillside> c: to cause to deteriorate or disappear as if by eating or wearing away eroding buying power> 2: to produce or form by eroding erode U-shaped valleys>

இது நமக்கு தேவையான தகவல் இல்லையே....

இந்த இணைய தேடல் சிக்கல் தீர ஒரு வழி இருக்கு. அதாவது நம்மூர் ஈரோடு, சேலத்தோட பெயரை மாத்திடனும் இஃகி இஃகி. என்ன பெயர் வைக்கலாம்? அவ்வூர் மக்களின் ஆதரவு பெற்ற பெயரை வைக்கலாம் அல்லது பதிவர்களின் பேராதரவு பெற்ற பெயரை வைக்கலாம் இஃகி இஃகி. என் பரிந்துரை என்னன்னு கேட்கறீங்களா? ஈரோடை, சேரலம் என்று இவற்றின் பெயரை மாற்றலாம் என்பது என் பரிந்துரை.

சனி, மார்ச் 07, 2009

திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்

சமன்பாடு - 1

மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்.
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
ஆக முடிவாக என்னான்னா, மனுசனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

வெள்ளி, பிப்ரவரி 13, 2009

ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா - காங்கிரஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா விருதை தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அபிசேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார் .

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதை தர வேண்டும் என்றார் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி. இது தொடர்பாக என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ன கொடுமை இது சரவணன்.

இது தோடர்பாக திணமனியில் வந்த செய்தியின் சுட்டி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20090213031506&Title=Latest+News&lTitle=Rt%FAT%F4%FBRV+%F9Nn%A7Ls&Topic=0&ndate=2/13/2009&dName=No+Title&Dist=

புதன், பிப்ரவரி 11, 2009

குமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்

புதன் கிழமை 7 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க்-ல தி சீக்ரட் சாட்டர்டே (The Secret Saturdays) பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு குமரி கண்டம் குமரி கண்டம் அப்படின்னு பேசுனாங்க. தண்ணில இருக்கற ஒரு நகரத்துக்கு பேரு குமரி கண்டம்ன்னு வைச்சு கதைங்க. எப்படியோ கார்ட்டூன் நெட்வொர்க் காரங்களுக்கு குமரி கண்டம் பத்தி தெரிஞ்சிருக்குதே அப்படின்னு எனக்கு ஒரே குசி. அதை வலைஉலகத்துக்கு தெரிவிக்கனும்னு இப்ப இந்த இடுகை. :-))

புதன், பிப்ரவரி 04, 2009

திமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்

தினமணியில் வந்த இந்த கார்ட்டூனை நீங்களும் இரசியுங்கள்.

திமுகாவின் ஐம்பெரும் தலைவர்கள்.



வட நாடு - தென் நாடு பாகப்பிரிவினை



திமுகாவுக்கு தொல்லை மா ;-)


வெள்ளி, ஜனவரி 30, 2009

போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?.

இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.

புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.


திமுக ஈழதமிழர்களுக்கு உதவும் என இனியும் நம்புகிறீர்களா? அவர்களுக்கு ஆட்சி தான் தேவை. இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் வேற மாதிரி அறிக்கை விட்டிருப்பார்கள்.

திங்கள், ஜனவரி 26, 2009

பத்மா விருது யாருக்கு?

2009-ம் ஆண்டுக்கான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துள்ளது. தகுதியில்லாத சிலருக்கும் இது கொடுக்கப்பட்டுள்ளது என்பது சிலரின் அங்கலாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் பத்ம விபூசன் கிடைக்கவில்லை.


வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி, சரோஜினி வரதப்பன் , ஜெயகாந்தன் போன்றோருக்கு பத்ம பூசன் கிடைத்துள்ளது.


விவேக், ஐராவதம் மகாதேவன், அருணா சாய்ராம் , சுப்ரமணியம் கிருஷ்ணசாமி, P.R.கிருஷ்ணகுமார் , மருத்துவர் R.சிவராமன், பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் , ஆறுமுகம் சக்திவேல், ஷேக் காதர் நூர்தின் போன்றோருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. நல்லது.

எதற்காக அவர்களுக்கு இவ்விருதுகள் கொடுக்கப்பட்டது என்று அரசு தெரிவிக்கலாம். பல பேர் யார் என்றே தெரியவில்லை, எப்படி அவர்களை பற்றி அறிந்து கொள்வது? தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களைப்பற்றியே தெரியாத போது மற்ற மாநிலத்தவர்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது? பத்மா விருது வாங்கியவர்களின் பட்டியலை தெரிவிக்கும் அரசு தளத்தில் அவர்களைப்பற்றி சிறு குறிப்பாவது இருந்தால் தேவலை. இது பத்மா விருதுக்கு பெருமை சேர்க்கும்.


விவேக், ஐராவதம் மகாதேவன், ஆறுமுகம் சக்திவேல், கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன் ஆகியோரைத்தவிர மற்றவர்களைத் தெரியாது. சுப்ரமணியம் கிருஷ்ணசாமி சென்னை தூர்தர்சனில் குறும்படம் (கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்) காட்டுபவர் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிய குறிப்பு இருந்தால் இந்த ஐயம் எழுந்திருக்காது.


அப்புறம் அனைத்திந்திய அளவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், டோனி, ஹர்பஜன் சிங் பற்றி பெரும்பாலோருக்கு தெரியும். இஃகி இஃகி....

வெள்ளி, ஜனவரி 16, 2009

பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள்

சிட்டி குழும தலைவர் விக்ரம் பண்டிட்டுக்கு எதிராக அமெரிக்கர்கள் உள்ளனர். இவரது செயல் சரியில்லை என்று இவரை சிட்டி குழும தலைவர் பதவியிலுருந்து தூக்கி விட சில வால் ஸ்டீரீட் மக்கள் முனைவது தெரிந்ததே. அது எப்படியோ போகட்டும். ஆனால் அவர்கள் பண்டிட் पंडित என்ற எளிமையான அழகான பொருள் உள்ள சொல்லை அப்படி உச்சரிப்பதில்லை அது தான் என் வருத்தமெல்லாம். ஒவ்வொரு முறையும் TVயில் அவர் பெயரை தவறாக உச்சரிக்கும் போதும் எனக்கு கடும் கோபம் வரும். அமெரிக்கா காரங்க அப்படிதான் உச்சரிப்பாங்கன்னு என் நண்பன் சமாதானம் சொன்னாலும் அவங்க பழனியப்பன், அழகப்பன், சோமசுந்தரம், ஆண்டி, செந்தில், சரவணன், கண்ணன் போன்ற பெயர்களை தப்பா உச்சரிச்சா பொறுத்துக்கலாம் ஆனா பண்டிட் ... Pandit..... முடியலையே....

சனி, ஜனவரி 10, 2009

ஈழ தமிழர்களுக்காக ஒபாமாவிடம் மனு

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா அவர்களுக்கு 100,000 மேல் கையெழுத்து பெற்று மனு கொடுக்க ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. தாங்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் அனுப்பி பதிவு செய்யச்சொல்லுங்கள். மின்முகவரி, மற்றும் வீட்டு முகவரி ஏதும் தரத்தேவை இல்லை.

http://www.tamilsforobama.com/sign/letter.html என்ற பக்கத்துக்கு சென்று நீங்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.

Dear Friends,

Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.

The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html

Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter.

FYI: Here is our latest press release, "Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War at Once; Atrocities will be Punished."

Thank you,

Tamils for Obama

சனி, டிசம்பர் 27, 2008

ஷெட்டி - செட்டி

என் நண்பனின் குழந்தை பெயர் சுவேதா (ஷ்வேதா). இப்பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கறாங்க என்று அவனுக்கு ஒரே வருத்தம். அதாவது ஷ்வேதா என்று உச்சரிக்காம சுவேதான்னு உச்சரிக்கறாங்களாம். குறிப்பா அவங்க அப்பா, அம்மா, மாமனார், மாமியாரெல்லாம் சுவேதாதாதாதா ன்னு கூப்பிடறாங்கன்னு அலுத்துக்கிட்டான். நானும் சுவேதான்னு உச்சரிக்கற ஆளு தான் ;-) .

இரண்டு மூன்று நாளா பார்கரப்பல்லாம் புலம்புனான். இதுல ஏதோ சங்கதி இருக்குன்னு எனக்கு புரிஞ்சிபோச்சி. ஆனா என்னன்னு தான் புரியலை. சில்பா செட்டி ( ஷில்பா ஷெட்டி ) பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்த பிறகு தான் எனக்கு அவன் புலம்பலுக்கான காரணம் புரிஞ்சிபோச்சி. உங்களுக்கும் இப்ப காரணம் புரிஞ்சி இருக்கனுமே?

'ஊர் குருவி பருந்தாக முடியாது'ன்னு சொன்னேன், அவனுக்கு ஒன்னும் புரியலை. விளக்கி சொன்ன பிறகு தான் அவனுக்கு புரிந்தது. டேய் நீ வடநாட்டுல இருந்தா தான் ஷெட்டி ஆக முடியும் தமிழ்நாட்டுல இருந்தா செட்டியா தான் இருக்க முடியும் என்று சொன்னேன். அதாவது தமிழ்நாட்டுல் ஷெ ன்னு சொல்றதுக்கு பதிலா செ ன்னு தான் சொல்லுவாங்க குறிப்பா உங்க எங்க அப்பா அம்மா எல்லாம் என்றேன். அதனால ரொம்ப கவலைப்படாத. எப்படியாவது கிரந்தம் பயன்படுத்தி எழுதுவது பேசுவது என்று பல பேரு கங்கணம் கட்டிக்கிட்டு தஇருக்காங்க, அவங்க சட்டிய கூட ஷட்டி அல்லது ஸட்டி ன்னு தான் எழுதுவாங்க அது மாதிரி நீ ஆயிடாதேன்னு சொன்னேன். சட்டியாவே இருக்கான்னா அல்ல ஷட்டி (ஸட்டி)ஆகிட்டான்னு எனக்கு தெரியாது.

வியாழன், நவம்பர் 06, 2008

வக்கீல்

வக்கீல்: மருந்து உங்கள் நினைவுத்திறனை பாதித்து விட்டதா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எந்த வகையில் உங்கள் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டது?
சாட்சி: மறந்து விட்டேன்
வக்கீல்: மறந்துட்டீங்களா? எதையெல்லாம் மறந்துட்டீங்கன்னு சொல்ல முடியுமா?




வக்கீல்: டாக்டர் எத்தனை பிரேத பரிசோதனைகளை இறந்தவர்களின் மேல் பண்ணியிருக்கிறீர்கள்?
சாட்சி: நான் பண்ணுன எல்லா பிரேத பரிசோதனையும் செத்தவங்க மேல தான்.

ஞாயிறு, மே 18, 2008

தமிழ் எண்கள்

எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.


1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்

செவ்வாய், ஏப்ரல் 22, 2008

தவிட்டு செட்டி - தனகோடி செட்டி

ஒரு புத்தகத்தில் தவிட்டு செட்டி எப்படி தனகோடி செட்டியானார் அப்படின்னு போட்டிருந்தது. அத உங்களுக்கு இங்க சொல்றேன்.

செட்டியார் ஒருத்தர் தவிட்டு வணிகம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்ப அவரிடம் நிறைய செல்வம் இல்லை. அவரின் பண்ணையத்தில் புதிதாக ஒரு ஆள் வேலைக்கு சேர்ந்தாராம், அவர் சேர்ந்த புண்ணியம் செட்டியாரின் பண்ணை பல மடங்கு பெரிதாகியது. அதனால் அவரிடம் நிறைய நிறைய நிறைய செல்வமும் சேர்ந்தது. இவ்வாறாக தவிட்டு செட்டியார் தனகோடி செட்டியாராக மாறினார்.

வியாழன், ஏப்ரல் 10, 2008

சத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.

பழசு தான் இருந்தாலும் பல பேர் ஒகேனக்கல் போராட்டத்தில் சத்தியராஜின் பேச்சை கேட்காததால் இங்கு.


பாகம் ஒன்று



பாகம் இரண்டு




நான் சத்தியராஜ் கருத்தை ஆமோதிக்கிறேன்.

TBCD கருத்து இங்கே.

வெள்ளி, டிசம்பர் 28, 2007

பெனசிர் பூட்டோ கொலை - அலசல்

பெனசிர் பூட்டோ கொலைக்கான காரணம் என்ன? யார் காரணம்? என்பது பற்றி பல அலசல்கள் நடந்து கொண்டுள்ளன. மேற்கு நாடுகள் இதற்கு அல்கொய்தா அல்லது தாலிபான் காரணமாக இருக்கும் என்று சொல்லி அதைச்சார்ந்த காரணிகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியை சார்ந்த தொண்டர்கள் இதற்கு முசாரப் தான் காரணம் என்று சொல்லி நாய் முசாரப் நாய் என்று திட்டுகிறார்கள். பெனசிரும் தான் இறந்தால் அதற்கு முசாரப் தான் பொறுப்பு என்று மின்அஞ்சல் வழியாக அமெரிக்க நிருபருக்கு முன்பே தெரிவித்துள்ளார். பல பேட்டிகளில் அரசில் உள்ள சில அதிகாரிகள் தன்னை கொல்ல முயல்வதாக சொல்லியுள்ளார்.


1. அரசு பேச்சாளர் பிரிகேடியர் சிமா (Cheema) பெனசிர் பூட்டோவின் தலை காரின் sun roofல் மோதியதால் இறந்ததாக கூறுகிறார்.
2. பெனசிருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முசாதிக் கான் shrapnel காயத்தினால் இறந்திருக்கலாம் என்கிறார்.
3. பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரகுமான் மாலிக் பெனசிர் பூட்டோ கழுத்திலும் மார்பிலும் சுடப்பட்டதனால் இறந்ததாக கூறுகிறார்.

எத்தனை முரண்பாடு? ஏன் இந்த முரண்பாடு? எல்லாம் முசாரப்புக்கே வெளிச்சம்.

பெனசிர் பூட்டோ கொலையினால் முசாரப் அடையும் ஆதாயம் என்ன? என்று பார்த்தால் இக்கொலையில் அவரின் பங்கு புழப்படும்.

* பெனசிர் பூட்டோ இல்லாத நிலையில் மேற்கு நாடுகளுக்கு தற்போதைக்கு முசாரப்பை விட்டால் வேறு வழியில்லை.
* முசாரப்புக்கு மாற்றாக மேற்கு நாடுகள் பெனசிர் பூட்டோவை அதிகார மையத்துக்கு கொண்டு வர முயன்றது.
* மேற்கத்திய மிடையங்கள் பெனசிர் பூட்டோவுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்தது, இது மேற்கத்திய மிடையங்கள் புகழ் விரும்பி முசாரப்புக்கு பிடிக்காமல் போனது.
* முசாரப் விரும்பியபடி பெனசிர் அதிகார பரவல் ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொள்ளாதது.
* கராச்சியில் தற்கொலை தாக்குதல் நடந்தும் பெனசிருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க தவறியது திட்டமிட்ட செயலேயன்றி வேறல்ல.
* பாதுகாப்பு மிக்க பாசரை நகரான ராவல்பிண்டியில் இக்கொலை நடந்தது பெனசிருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை சொல்லாமல் சொல்லும்.

பெனசிர் பூட்டோ கொலையில் முசாரப்புக்கு நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்தது.

செவ்வாய், செப்டம்பர் 18, 2007

Cyclone Typhoon Hurricane என்ன வேறுபாடு?

இப்ப சீனாவை Typhoon விப்கா (Wipha ) தாக்க வருவதால் சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

சரி Typhoon ன்னா என்ன? நம்ம ஊருல Cyclone வரும், அமெரிக்காவில் Hurricane வரும் இல்லையா அது போல சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான்.

அதாவது அமெரிக்காவில் வரும் Cyclone க்கு பேரு Hurricane, சீனாவில் வரும் Cyclone க்கு பேரு Typhoon. அவ்வளவு தான். ஊருக்கு ஊர் ஓர் பேர்வைச்சுக்கிட்டு நம்மல குழப்பறாங்கப்பா. நாம மட்டும் தான் Cyclone ன Cyclone ன்னு சொல்லற ஆளுங்க. ;-))

இன்னும் குறிப்பா சொல்லனும்னா அட்லாண்டிக் & கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Hurricane. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Typhoon. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் Cyclone க்கு பேரு Cyclone.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2007

மதுரை, நெல்லை தஞ்சை சென்னை ஈழ தமிழர்களே

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ் எப்படிங்கண்ணே இருக்கும்? , தற்போதைய தமிழ் பல்கலைக்கழகம் உள்ள தஞ்சைத் தமிழ் எப்படி இருக்கும்? , பல நல்ல தமிழ் சொற்களை 'மெய்'யாலுமே புழங்கும் சென்னைத் தமிழ் எப்படி கீறும்?, நன்றாக கதைக்கும் ஈழத் தமிழ் எப்படி இருக்கும்? ஈழத் தமிழ் என்பது யாழ்பாணத் தமிழ் மட்டுமா? நாஞ்சில் தமிழ் நெல்லைத் தமிழுக்குள் வருமா? அல்லது இரண்டும் வேறு வேறா?

இதைப்பற்றிய குறிப்பு எங்காவது இருக்குமா? என்று தேடிப்பார்த்தேன். இதையெல்லாம் எங்கு போய் தேடுவது? கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிபீடியாவில் (www.ta.wikipedia.org) போய் தேடி பார்க்கவேண்டியதுதானே என்கிறீர்களா? நானும் அங்க போய் தேடி பார்த்தேன், என்ன கொடுமை, எல்லாம் வெத்து பக்கமா இருந்தது. ;-((

மதுரை, நெல்லை, நாஞ்சில், தஞ்சை, சென்னை, ஈழ தமிழர்கள் நிறைய பேர் வலை பதியராங்களே அவங்களாவது ஒரு 2 வரி எழுதக்கூடாதா?

விக்கிப்பீடியாவின் தமிழ் பற்றிய பக்கம்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.
AE.AA.E0.AF.87.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.
AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_-_.E0.AE.89.E0.AE.B0.E0.AF.88.E0.AE.A8.E0.AE.9F.
E0.AF.88.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.
B5.E0.AF.87.E0.AE.B1.E0.AF.81.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81.E0.AE.95.E0.AE.
B3.E0.AF.8D

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2007

Miss Teen USA South Carolina 2007 Answer

2007 ம் ஆண்டுக்கான 'Real Blonde' பரிசை தட்டிச்செல்பவர் "Miss Lauren Caitlin Upton".
நிறைய Blonde நையாண்டியை படித்திருக்கேன் இப்ப பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிங்க. :-))

Miss Teen USA South Carolina 2007 Answer with Subtitles.


வியாழன், ஆகஸ்ட் 23, 2007

Apartment ல் இந்தியர்களின் எண்ணிக்கை

Apartment Complex ல் எவ்வளவு இந்தியர்கள் இருக்கறாங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?






ஒரு சுலப வழி இருக்கிறது.




அதாவது எவ்வளவு Honda and Toyota company வாகனங்கள் அந்த Apartment Complex ல் இருக்குதுன்னு கண்டுபிடிச்சா போதும். +\- 5 சத இந்தியர்கள் அங்க வசிப்பாங்க.

செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)

சனி, மே 12, 2007

1 2 3 - கொடுமை

ஒரு கருத்துக்கணிப்பு, இரண்டு வாரிசு, மூன்று கொலை என்று இந்தியன் எக்ஸ்பிரசில் பொருத்தமாக தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.

கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.

கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?

இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

வியாழன், ஏப்ரல் 12, 2007

முதலை பயங்கரம் - எச்சரிக்கை

எச்சரிக்கை:- படங்கள் கோரமானவை..

தைவான் நாட்டின் கோசியுங் ( Kaohsiung ) நகர முதலைப்பண்ணையில் இக்கொடூரம் நடந்துள்ளது. அப்பண்ணையின் விலங்கு மருத்துவர் 17 வயதுடைய நைல் நதி முதலைக்கு மருத்துவம் பார்க்கும் போது முதலையானது அவரது கையை கடித்து எடுத்து விட்டது. நல்ல வேலையாக அவர் தப்பிவிட்டார். துண்டான கையை துப்பாக்கியால் முதலையை சுட்டு மீட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரது கையை ஒட்டியுள்ளார்கள்.

துப்பாக்கியால் சுட்டும் முதலை மீது ஒரு குண்டும் படவில்லை ( சுட்ட ஆளு அப்படி சுட்டு இருக்கார் :-(( ). வெடிச்சத்தத்தினால் முதலை அதிர்ச்சியாகி வாயை திறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.


முதலையிடம் கையை கொடுத்தவர் பெயர் சேங்-பொ-யு (Chang Po-yu)





முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்




முதலைக்கு கையை கொடுத்த சேங்-பொ-யு (Chang Po-yu)

சனி, மார்ச் 31, 2007

உலகின் மாபெரும் நிறுவனங்கள்

போர்ப்ஸ் இதழ் உலக அளவில் பெரிய 2000 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விற்பனை, சந்தை மதிப்பு, சொத்து, லாபம் என்ற காரணிகளை கொண்டு எது பெரிய நிறுவனம் என்பதை இவர்கள் கணித்துள்ளார்கள்.

வங்கி & எண்ணெய் நிறுவனங்கள் தான் பணம் கொழிக்கிற நிறுவனங்களா இருக்கு. Microsoft 66 வது இடத்திலயும், Google 289 வது இடத்திலயும், நம்ம மிட்டலின் Archelor Mittal 72 வது இடத்திலயும் இருக்கு.

உலக தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள நிறுவனங்களை இந்த அட்டவணையில் காணலாம்.





சரி எந்தெந்த இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்குதுன்னு தெரியனுமா? இந்த அட்டவணையை பாருங்க. 34 இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்கு.





தொடர்புடைய சுட்டிகள் :

http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000_Rank.html


http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000-India_10Rank.html

திங்கள், மார்ச் 26, 2007

2006ன் உலகின் பெரிய விமான நிலையங்கள்

உலகின் பெரிய விமான நிலையங்கள் அப்படின்னா பரப்பளவில் பெரியதுன்னு நினைச்சுக்காதிங்க 2006ல் அதிக பயணிகளை கையாண்ட நிலையங்களை தான் பெரியதுன்னு சொல்றேன். Airports Council International இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளது.


1. அட்லாண்டாவின் - ஹார்ட்ஸ் பீல்ட் ஜாக்சன் ( Hartsfield-Jackson ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 84,846,639 .

2. சிகாகோவின் - ஓ கரே ( O'Hare ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 76,248,911 .

3. லண்டனின் ஹீத்ரோ ( Heathrow ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 67,530,223 .

4. டோக்கியோவின் ஹனெடா ( Haneda ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 65,225,795 .

5. லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

6. டல்லஸ் & போர்ட் வொர்த் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 61,048,552 .

7. பாரிஸ் - சார்லஸ் டே கவ்லே ( Charles de Gaulle ) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 56,808,967 .

8. ஜெர்மனியின் பிராங்பர்ட் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 52,810,683 .

9. சீனாவின் பெய்ஜிங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 48,501,102 .

10. டென்வர் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 47,324,844 .

11. லாஸ் வேகாஸ் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,194,882 .

12. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam Schiphol Airport) - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 46,088,221 .

13. ஸ்பெயினின் மாட்ரிட் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 45,500,489 .

14. ஹாங்காங் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 44,020,000 .

15. தாய்லாந்தின் பாங்காக் பன்னாட்டு நிலையம் - கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 42,799,532 .


2006ன் சிறந்த விமான நிலையத்துக்கான பரிசை கண்கானிப்பு அமைப்பான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) அறிவித்துள்ளது.

அது எதுன்னு சொல்லுங்க?

அது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தான். 2ம், 3ம் இடங்கள் ஹாங்காங் & ஜெர்மனியின் முனிச்சுக்கு.



சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 35,033,083 மில்லியன், இது 22வது இடத்தில் உள்ளது.

அதிக சரக்குகளை கையாண்ட விமான நிலையங்கள் :

1. மெப்சிஸ் - இது FedEx ன் மையம், முதல் இடத்தை பிடித்த காரணம் தெரியுத? ;) - கையாண்ட சரக்கு 3,692,205 டன்

2. ஹாங்காங் - கையாண்ட சரக்கு 3,608,789 டன்

3. அங்கோர்ச் - கையாண்ட சரக்கு 2,803,792 டன்

4. சியோல் - கையாண்ட சரக்கு 2,336,571 டன்

5. டோக்கியோவின் நரிடா (Narita- NRT) - கையாண்ட சரக்கு 2,280,028 டன்

மேலதிக செய்திகளுக்கு

http://www.airports.org/aci/aci/file/Press%20Releases/2007_PRs/PR060307_PrelimResults2006.pdf

http://www.forbes.com/2007/03/22/worlds-busiest-airports-biz-logistics-cx_rm_0322airports.html



சனி, மார்ச் 24, 2007

300 ஆல் 15 கடத்தப்பட்டதா ?

பிரிட்டானிய கப்பற்படை வீரர்கள் 15 பேரை ஆயுதம் தாங்கிய இரானிய படைகள் கைது செய்துள்ளது.


ஈராக்கின் கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரானிய படைகள் தனது கடற்படை வீரர்களை கைது செய்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளது.

ஆனால் இரான், பிரிட்டானிய கடற்படை வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனாலயே கைது செய்ததாக கூறியுள்ளது.

எது உண்மை ? யாம் அறியோம் பராபரமே.

ஏன் இந்த கைது நடவடிக்கை?

1. யுரேனிய செறிவூட்டல் தொடர்பாக இரானுக்கு எதிராக ஐ.நா மூலம் தடை கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மும்முரமாக உள்ளதால்.

2. இரானிய கடற்பகுதியில் அத்துமீறி பிரிட்டானியர்கள் நுழைந்ததனால்.

3. அமெரிக்க Hollywood 300 படம், இரானிய / பெர்சிய மக்களை கேவலமாக சித்தரித்ததனால்.



என்னைப்பொருத்தவரை 300 படமே இதற்கு காரணம் என்பேன். 300 பேர் கொண்ட ஸ்பார்ட்டா நகர படை மாபெரும் பெர்சிய படையை தோற்கடித்த வரலாற்று நிகழ்வு தான் படம். அந்த படத்தில் ரொம்ப கேவலமாக பெர்சிய (தற்போதய இரான்) படைகளை / மக்களை காட்டியிருப்பர்கள்.

கொசுறு:

மதன் ஸ்பார்ட்டா பெர்சிய சண்டையை வைத்து ஒரு தொடர் எழுத போறார் தலைப்பு - "போனாங்க தோத்தாங்க" , இது தொடர்பாக ஏகப்பட்ட நூல்கள் உள்ளன, மதன் 90 சத நூற்களை படித்து குறிப்பெடுத்து விட்டார் 10 சத நூற்கள் தான் பாக்கி, தோத்து போன பெர்சிய மன்னனே இது தொடர்பாக ஒரு நூல் எழுதி அதில் ஸ்பார்ட்டா மக்களின் திறமையை புகழ்ந்திருப்பார். போதாதுக்கு அற்புதமான graphics உடன் படமே வந்தாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அதிலிருந்து ஒரு படத்தை போடுவதாக உள்ளார்கள்


ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் இரானியர்களை கோபப்படுத்தியுள்ளது, அதனால் தங்களது வீரத்தை காட்ட வேண்டி பிரிட்டானிய வீரர்கள் 15 பேரை கோழி அமுக்கர மாதிரி அமுக்கிட்டாங்க.

பின்ன இரானியனா கொக்கா...

ஸ்பார்ட்டா நாட்டு படையை பிடிக்காம வெள்ளைக்காரனை புடிச்சு என்ன சாதிக்கப்போறாங்க அப்படின்னு கேக்கறீங்களா? மதனின் போனாங்க தோத்தாங்க தொடரில் இது தொடர்பாகவும் அவர் விளக்கப்போறார்.

அதுவரைக்கும் பொறுக்க முடியாதவர்களுக்கு இப்ப ஸ்பார்ட்டா என்ற நாடே இல்லை, அது பழங்காலத்து கிரேக்க நாடுகளில் ஒன்று.

வியாழன், மார்ச் 22, 2007

பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் 58 வயதான பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதற்கான தடயம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜமைக்கா நாட்டு காவல் துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி தென்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


முன்பு முகத்தை அழுத்தியதால் அவர் கழுத்து எழும்பு முறிந்துள்ளதாக ( gland க்கு அருகில் ) அதிகாரபூர்வமல்லாத செய்தி வந்தது.


ஜமைக்காவின் காவல் துறை துணை ஆணையர் மார்க் சீல்ட்ஸ் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றார். அவர்களை உடனடியாக சரணடையும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


பாப் ஊல்மரின் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அணியினரிடம் விசாரணை நடத்திய ஜமைக்கா காவல் துறை அவைகளின் கைரேகையையும் சேகரித்துள்ளது.

இக்கொலையை கிரிக்கெட் சூதாடிகள் செய்திருக்கலாம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. இக்கொலை கிரிக்கெட் விளையாட்டின் நீக்க முடியாத கரை என்பதை உறுதியாக கூற முடியும்.

வெள்ளி, மார்ச் 02, 2007

சனிக்கிழமை முழு சந்திர கிரகணம்.

3 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சனிக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அப்போழுது வெண்ணிலா செந்நிலாவாக காட்சியளிக்கும். இதை அனைவரும் எந்தவித சிறப்பு கருவிகளும் இன்றி வெறும் கண்ணாலயே பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது, அதனால் கவலையில்லாமல் வெறும் கண்ணால் பார்க்கலாம். பைனாகுலர் மூலம் பார்த்தால் இன்னும் சிறப்பாக காட்சி தெரியும்.

கிரகணம் தொடங்கும் நேரம் - 2018 GMT
முழு கிரகணம் தெரியும் நேரம் - 2244 TO 2358 GMT.



மேலுள்ளது எவ்வாறு கிரகணம் உருவாகிறது என்பதை காட்டும் படம்..


ஐரோப்பா , மத்திய கிழக்கு & ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு முழுதாக இது தெரியும். இந்தியா & அமெரிக்க, கனடா கிழக்கு கரை மக்களுக்கு முழுதாக இல்லாவிட்டாலும் பெரும்பகுதி தெரியும். நியுசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதி மக்களுக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது.


மேலுள்ளது எங்கு கிரகணம் தெரியும் என்பதை காட்டும் படம்.









புதன், பிப்ரவரி 28, 2007

செயலலிதா - லட்சுமி மிட்டல் ஒப்பீடு

நண்பனுடன் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தபோது பணக்கார ஆசாமிகளை பற்றிய பேச்சு வந்தது. இந்தியாவிலேயே பெரிய பணக்காரர் அம்பானியா, டாடாவா என்று வந்தபோது நான் அம்பானி சகோதரர்கள் என்க அவன் டாடா என்றான்.

டாடா பழைய ஆளு, அம்பானி தான் இப்ப பெரிய பணக்காரர் என்றேன் நான், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. எங்க சண்டைய யாராவது தீர்த்து வைங்கப்பா...

சரி யார் பணக்கார இந்தியர் என்ற கேள்வி வந்த போது இருவரும் இரும்பு ஆலை முதலாளி மார்வாடி லட்சுமி மிட்டல் என்பதை ஒத்துக்கொண்டோம்.

இந்த வெட்டி அரட்டைல இருந்து சேட்டும் சேக்கும் தான் பணத்துல குளிக்கிற ஆளுங்கன்னு புரிந்தது.

நம்ம சேட்டு லட்சுமி மிட்டலை பாராட்டணும், உலகின் 5 வது பெரிய பணக்காரரா இருந்தாலும் , இங்கிலாந்தில் வசித்தாலும் இன்னும் இந்திய கடவுச்சீட்டை (Passport) தான் வைத்துள்ளார். நாமல்லாம் அப்படியா? எப்படா குடியுரிமை கிடைக்கும்ன்னு அல்லாடறோம்.

முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவி, புரட்சித்தலைவி வெற்றிச்செல்வி ( செயலலிதா தாங்க) க்கும் லட்சுமி மிட்டலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்றான். எனக்கு ஆச்சரியம் என்னன்னு சொல்லுடான்னு கேட்டேன்.

இரண்டு பேரும் அவங்க பசங்களுக்கு உலகம் வியக்கற அளவு மா மா மா பெரும் அளவில் திருமணம் நடத்துனாங்க அந்த விதத்தில் இரண்டு பேருக்கும் ஒற்றுமை என்றான்.

நான் கடுப்பாயிட்டேன் , டேய் லட்சுமி மிட்டல் அவரு காசை போட்டு திருமணம் நடத்தினார், முன்னாள் முதல்வர் வெற்றிச்செல்வி நம்ம காசை ( அதாங்க நம்ம அரசாங்கம்) வைத்து திருமணம் நடத்தினார், இரண்டையும் ஒப்பிடாதன்னு திட்டினேன்.

நீங்களே சொல்லுங்க செயலலிதாவே அந்த திருமணத்தை மறக்க நினைக்கறப்போ இவன் அதை வைத்து ஒப்பீடெல்லாம் நடத்தினா நல்லா இருக்குங்களா?

புதன், ஜனவரி 03, 2007

விமானம் எப்படி பறக்கிறது? ஒரு விளக்கம்

விமானம் எப்படி பறக்கிறது? என்று கல்லூரி காவலாளிக்கு ஒரு ஐயம் வந்துவிட்டது. என் நண்பனை பார்த்து எப்படிப்பா ஏரோபிளேன் வானத்துல பறக்குது? அங்க தான் ரோடு இல்லையே என்று கேட்டார்.

என் நண்பன் அவருக்கு விளக்க ஆரம்பித்து விட்டான். இவ்வளவு உயரத்தில் பறக்கனும் அதை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அவர்களுக்கு சொல்லும் என்று விலாவாரியாக எடுத்துச்சொன்னான். பாவம் அவர் ஒன்னும் புரியாம விழிச்சார். அதை கவனித்த நான் உடனே களத்தில் குதித்தேன். தள்ளுடா உனக்கு சொல்ல தெரியலை என்று சொல்லிவிட்டு நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்.

அதலாம் இல்லிங்க மெட்ராசுல இருந்து பிளேன் கிளம்புனதும் 10000 அடி உயரத்துக்கு போயிடும் அங்கயே அது நிக்கும், பூமி சுத்துதா? சுத்தி அமெரிக்காவுக்கு கீழ பிளேன் வந்ததும் போன் போட்டு சொன்னதும் பிளேன் கீழ இறங்கி வந்துடும் என்று சொன்னேன்.

என் விளக்கம் அவருக்கு புரிந்துவிட்டது. அதான பார்த்தேன் பிளேன் எப்படி ரோடு இல்லாம ஓடும்? தம்பி சரியா சொன்னப்பா என் சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி எனக்கு நன்றி சொன்னார்.

அவர் எனக்கு நன்றி சொன்னதை கேட்ட நண்பன் நொந்து போயிட்டான், இப்பவும் என்கிட்ட பேசும் போது என்னடா பிளேன் பறக்கற கதையை இன்னும் எத்தனை பேருக்கு சொன்ன அப்படின்னு பொறாமைல கேட்பான். ;-)

இது என் அனுபவம் இல்லை, இது நண்பரின் அனுபவம் ;-) சொன்னார் இங்க போட்டாச்சு.