வணக்கம்
வியாழன், ஆகஸ்ட் 20, 2009
வெண்ணைவெட்டி யார்?
http://www.washingtonexaminer.com/world/ap/53694632.html
http://thatstamil.oneindia.in/news/2009/08/20/world-norway-diplomat-blasts-absent-un-chief.html
இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பலவீனமான ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் இருக்கிறார். இலங்கை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க அவர் தவறி விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகில் ஏற்பட்ட எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும், தீர்க்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுமே செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது என்று நார்வே கடுமையாக விமர்சித்துள்ளது.
ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் இதுதொடர்பாக நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நார்வேயின் ஆஃப்டன்போஸ்டன் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் மோனா கூறியிருப்பதாவது...
இதுவரை இருந்த ஐ.நா. பொதுச் செயலாளர்களிலேயே மிக மிக பலவீனமானவர் பான் கி மூன்தான். கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் இருக்கிறார். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவரிடம் இல்லை. சமீபத்திய பல்வேறு உலக நெருக்கடிகளை தீர்த்து வைக்கவோ அல்லது சமாளிக்கவோ அவர் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.
சவால்களை துரிதமாக சந்திக்கவும், தீர்த்து வைக்கவும் அவர் தவறி விட்டார். அவர் மிகத் தாமதமாக விழித்து எழுந்தபோது கிட்டத்தட்ட அந்த நெருக்கடிகள் கை விட்டுப் போயிருந்தன அல்லது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தன. பான் கி மூனின் செயல்பாடுகள் ஐ.நா. சபையின் அனைத்துத் தரப்பினைரயும் எரிச்சல்பட வைத்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு உலகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் ஐ.நா. சபை உள்ளது. ஆனால் அதற்கேற்ற வேகமோ, விவேகமோ பான் கி மூனிடம் இல்லாதது வேதனை அலிக்கிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அவர் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது. சந்தேகங்களை எழுப்புகிறது.
உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து ஐ.நா. சபையிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அதேபோல உலக சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் கூட ஐ.நா. பங்கெடுக்காமல் உள்ளது வியப்பைத் தருகிறது.
இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட காரணம் மூன்தான்...
மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி விடுதலை தொடர்பாக பான் கி மூன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மெளனியாக இருந்து வருகிறார். அவர் அங்கு சென்றதால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மியான்மரில் நடப்பதை அவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடந்த இனப்போரின் முடிவின்போது நடந்த பெருமளவிலான போர்க் குற்றங்கள், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்களை தடுக்க பான் கி மூன் தவறி விட்டார். அதற்காக அவர் முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.
இவை மட்டுமல்ல, தர்பூர், சோமாலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, காங்கோ என எந்தவித பிரச்சினை குறித்தும் அவர் ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட எல்லா பிரச்சினையிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார். எதையும் கவனிக்கும் அக்கறையும் அவரிடம் காணப்படவில்லை.
பான் கி மூன் சிறப்பாக செயல்பட சிறிது கால அவகாசம் தரலாம் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், தூதர்களும் முன்பு கூறினார்கள். ஆனால் இப்போது பான் கி மூனின் போக்கைப் பார்த்தால் அவரிடம் எந்தவிதமான செயல் திறனும் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது என்று சரமாரியாக விமர்சித்துள்ளார் மோனா.
நார்வே தூதரின் இந்த பகிரங்க விமர்சனத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பான் கி மூன் நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் மோனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நார்வே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009
சிரிக்க சிந்திக்க - 2
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் அறை பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
திங்கள், ஆகஸ்ட் 17, 2009
சிரிக்க சிந்திக்க - 1
திருமணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா...
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
புதன், ஆகஸ்ட் 12, 2009
புகழ்பெற்ற பதிவரும் அடையாளமும்.
- MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
- கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
- செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.

- இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
- நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
- பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
- என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
- 007 அப்படின்னா அது James Bond.
- கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
- அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
- தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
- பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
- பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.
- பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
- நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
- 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
- இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
- புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
- நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
- பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)
அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.
செவ்வாய், ஜூன் 30, 2009
Indian Express - 10ம் வகுப்பு பொது தேர்வு

10ம் வகுப்பு பொது தேர்வு கூடாதுன்னு கபில் சிபல் ஏன் சொல்லறாருன்னு இப்ப புரியுதா மக்களே...
இப்ப 10 அப்புறம் 12வது அப்புறம் கல்லூரி அப்புறம் தேர்வே கூடாதும்பார். தேர்வு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை தருகிறது என்பதை இராகுல் சோனியாவை விட யாருக்கு நன்கு புரியும்?
இராகுல் காந்தி பற்றி தப்பா பேசாதிங்க. அவரு தான் இந்தியாவின் விடிவெள்ளி.
காக்கா புடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..
கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் பெரிய வழக்குரைஞராக இருந்தவர் என்று கேள்வி.
வெள்ளி, ஜூன் 19, 2009
தினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு

(1)தோற்றப்போனதுக்கு காரணம் இப்ப தான் தெரிஞ்சுது, மக்களே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மனு போடுங்க, உங்களுக்கு தந்தி தான் கொடுக்கத்தெரியுமுன்னா தந்தி கொடுங்க.

(2)தமிழக கேப்டன் பெயருக்கு இழுக்கு சேர்த்திட்டார் இந்த கிரிக்கெட் கேப்டன்.

(3) 33% கிடைக்குமான்னே தெரியல 50% கேட்குறீங்களே.

(4) புழல் சிறையில் வெல்டிங் குமாரை போட்டு தள்ளுனதால வந்த பயம். பயப்படுறதுல்ல நியாயம் இருக்கத்தான் செய்யுது.
இ
திங்கள், ஜூன் 08, 2009
என்னுடைய 32 பதில்கள்
நண்பர் பதிவர் பழமைபேசி என்னை இந்த தொடர் இடுகையில் இழுத்து விட்டுட்டார். மூனு நாலு நாளா சிந்தனை பண்ணி இந்த இடுகை இப்ப இங்க.
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக இப்பெயரை நான் வைத்துக்கொண்டேன். என் உண்மையான பெயர் (குறும்பன் யாருன்னு) அவனுக்கு தெரியக்கூடாது பாருங்க இஃகி்ஃகி.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் ரொம்ப இளகிய மனம் உள்ளவங்க. யார் கண்ணுலயாச்சும் க(த)ண்ணீர பார்த்துட்டா தானா என் கண்ணுல இருந்து க(த)ண்ணீர் வந்துரும். சோகப் படம் பார்க்கறப்போ சின்ன துணிய கையில் வைச்சிக்கிறது வழக்கம். என்ன போய் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே?????
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கோழி கிறுக்கல் எனக்கு புடிக்குமா? என்ன கேள்வி இது?
4.பிடித்த மதிய உணவு என்ன?
சுவையான உணவு அனைத்தும்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே வச்சுக்கிட்டா அது நட்பே இல்லைங்க. பழகி கொஞ்ச நாள் கழிச்சு தெரிந்தவர் நண்பரா மாறுவார், மாறாமலும் இருப்பார்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆளை தான்.
8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
மிகச்சில கொள்கைகளில் உறுதியாக இருப்பது. பல பல..... கொள்கைகளில் உறுதியில்லாமல் இருப்பது.
9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
பிடிக்காத விதயமே கிடையாது.
10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாரும் பக்கத்தில் இல்லை அதனால தான் இந்த கேள்விகளுக்கு தட்டச்ச முடிகிறது. என் நிலையை புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை & பச்சை
12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
புதிய பூவிது பூத்தது...
13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்
14.பிடித்த மணம்?
மரியாதைக்குரிய மணம். அதாங்க திருமணம். இஃகிஃகி.
பசியோடு இருக்கும் போது வரும் சாம்பார், குழம்பு, இரசம், பொரியல் மணம்.
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அடுத்தவங்க மேல உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு? அடுத்தவங்களாவது் தப்பிக்கட்டும்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவரின் பதிவிலுள்ள எல்லா இடுகையும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
முதலில் கிரிக்கெட், இப்போ அத சுத்தமா பாக்கறது இல்ல. பார்க்காத என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை வேற பண்ணுவேன். இப்ப நீச்சல், வலைப்பந்து, உதைபந்து, டென்னிஸ்
18. கண்ணாடி அணிபவரா?
அல்ல
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
Just Cause - தொலைக்காட்சியில் பார்த்ததுங்க, அரங்குக்கு போய் பார்த்து 2 ஆண்டு ஆகிடுச்சி.
21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் எனக்கு கொஞ்சம் மன்னிக்க நிறைய கம்மி.
22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ஒழுங்கு படுத்தப்பட்ட சத்தம் பிடிக்கும், ஒழுங்கு படுத்தப்படாத சத்தம் பிடிக்காது.
23.பிடித்த பருவ காலம் எது?
இக்கரைக்கு அக்கரை பச்ச. அதனால எனக்கு எல்லா பருவமும் பிடிக்கும்.
24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, தொலைவை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தன்னடக்கம் தடுக்கிறது. இஃகிஃகி
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஒன்னா ரெண்டா நிறைய விதயங்கள் இருக்கு.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பல்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
நண்பர்களோட போயி கூத்தடிக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடித்த சுற்றுலாதலங்களே.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும்.
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
இணையம் பார்ப்பது. (எந்த சிறு இடஞ்சலும் இருக்காது பாருங்க, இஃகிஃகி)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் வாழ்வை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க, அதை தெரிஞ்சுக்குங்க. .
வியாழன், ஜூன் 04, 2009
"ற்க்" பிழையும் பதிவர்களும்
நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.
அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)
இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....
விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((
சனி, மே 30, 2009
தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை
சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.
வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?
தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.
உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com
அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்
முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்
வியாழன், மே 28, 2009
உடன்பிறப்புகளுக்காக ஒரு Cartoon

இருந்தாலும் இந்த cartoon ன பார்த்ததும் மனசு கேக்காம இங்க உங்களுக்காக...;-)

என்னதான் இருந்தாலும் உண்ணாவிரதத்தை இப்படி கேலி ஆக்கி இருக்கக்கூடாது..... (கருத்துபடம் வரைந்தவரை சொல்லலிங்க ... )
புதன், மே 27, 2009
தினமணி கருத்துப்படம்
வியாழன், மே 21, 2009
சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்
சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.
இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.
திங்கள், மே 18, 2009
புதிய தேடு பொறி
http://www.wolframalpha.com/
தேர்தல் நகைச்சுவை
ஊர்ல பேசும் போது என்னடா நீங்க நினைச்ச அளவுக்கு கூட வாக்கு வாங்கலையாட்டக்குது என்றேன்.
ஆமாண்ணா, இதுல எங்கோ தப்பு நடந்திருக்கு... வெற்றி பெறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை... ஆனா வாக்கு எண்ணிக்கை தான் உதைக்குது. பசங்களை கேட்டேன். அவங்க இப்படி தான் சொல்றாங்க..
"நான் போட்டது என்னமோ நம்ம கட்சிக்கு தான் ஆனா அது எதுல விழுந்ததுன்னு தான் எனக்கு தெரியாது."
இது தான் இப்ப ஊர்ல சூடானா தேர்தல் செய்தி....
வியாழன், மே 14, 2009
வாக்கு பதிவு விழுக்காடும் நம்ம கருத்தும்
1. திருவள்ளூர் (தனி) - 54% - யாரும் சரியா வேலை செய்யவில்லை
2. வட சென்னை - 61% - தா.பா வெற்றி அடைந்து விடுவார் என்று உடன்பிறப்புகள் வேலை செய்யவில்லையா?
3. தென் சென்னை - 62% - ஓரளவு வேலை செய்திருக்காங்க.
4. மத்திய சென்னை - 58% - அடுத்தவன வாக்கு பெட்டி பக்கம் வராம அடிச்சி வெரட்டங்குள்ள வாக்கு பதிவு முடிஞ்சுன்னு சொல்லிட்டாங்கப்பா.
5. ஸ்ரீபெரும்புதூர்- 65% - தொகுதி மாறினது வீண்.
6. காஞ்சீபுரம் (தனி)- 66% - தேவலை
7. அரக்கோணம்- 65% - இரயிலு ஓடுமா? இல்லை ஜெகத்ரட்சகன் காசு வேலை செய்யுமா?
8. வேலூர்- 58% - யாரும் சரியா வேலை செய்யவில்லை, சரியா வேலை செய்யாதவங்களை வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அனுப்பனும்.
9. கிருஷ்ணகிரி - 70% - சுகமாகிடுமா இல்ல நஞ்ச குடிச்ச கதை தானா?
10. தர்மபுரி - 70.5% - பாமக நல்லா வேலை செய்து இருக்காங்க.
11. திருவண்ணாமலை- 69% - குருவும் அவர தோற்கடிக்க வேண்டும் என்பவர்களும் நல்லா வேலை செய்திருக்காங்க.
12. ஆரணி- 59% - யாரும் சரியா வேலை செய்யவில்லை
13. விழுப்புரம் (தனி) - 70% - சிறுத்தையா இலையா என்பதை விட பொன்முடியா தைலாபுரமான்னு கேக்கறது தான் சரி.
14. கள்ளக்குறிச்சி - 60% - நட்சத்திர தொகுதியா இது?
15. சேலம் - 69% - தங்கபாலுக்கு ஆப்பு தான்.
16. நாமக்கல்- 75% கொங்குநாடு முன்னேற்றப் பேரவை & கொங்கு இளைஞர் பேரவையின் வேலை.
17. ஈரோடு - 71.6% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.
18. திருப்பூர்- 71% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.
19. நீலகிரி (தனி) - 62% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவை சரியா வேலை செய்யலையா அல்லது தோழர்கள் சரியா வேலை செய்யலையா?
20. கோவை- 60% - ஈசுவரா எல்லாம் உன் வேலை தானா?.
21. பொள்ளாச்சி- 65.5% - அப்ப இங்க BEST தானா?
22. திண்டுக்கல் - 68% - காங்கிரசுக்கு பெரிய பூட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
23. கரூர்- 80% - பணக்காரரு நல்லா இறைச்சி இருக்கார்ங்கறது தெரியுது.
24. திருச்சி - 67% - தோழர்களும் மாமாக்களும் அதிகம் உள்ள இடத்தில் காங்கிரசா? விளங்கிடும்.
25. பெரம்பலூர் - 71% - பணத்த டாலரா இறைச்சதா கேள்வி.
26. கடலூர் - 67% - திமுக ஆதரவு பதிவர்கள் அதிமுகவுக்கு ஆப்பு அப்படிங்கறாங்க, திமுக எதிர்ப்பாளர்கள் காங்கிரசா அப்படின்னு சிரிக்கறாங்க. விருதாச்சலம், பண்ருட்டி எல்லாம் இந்த தொகுதிக்கு கீழதாம்பா வருது. தேமுதிகவையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.
27.சிதம்பரம் (தனி) - 74% - சிறுத்தையும் சிங்கமும் நல்லா வேலை செஞ்சிருக்காங்க.
28. மயிலாடுதுறை - 70% - ஐயருக்கு ஆப்பு தான்.
29. நாகப்பட்டினம் (தனி) - 69% - சித்தமல்லிகாரங்க விளையாடி இருக்காங்கப்பா.
30. தஞ்சாவூர் - 68% - மந்திரி தொகுதி, அதுவும் இல்லாம லோ.கணேசன் வேற மதிமுகவுல இருந்து திமுகவுக்கு வந்திருக்காரு.
31. சிவகங்கை - 66% - சீக்கியரை மன்னிக்கும் கனவான் போட்டியிடுராரு, அவருக்கு தமிழர்கள கண்டா கொஞ்சம் இலப்பம் தான், பணத்த தண்ணியா செலவு பண்றதுக்கு தான் கண்ணப்பன் இங்க நிக்கறாரு. நம்ம கனவாணுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வேற, பார்க்கலாம்.
32. மதுரை - 76.6% - அஞ்சா நெஞ்சன் எப்படி வாக்கு வாங்கனும்ன்னு தெரிஞ்ச ஆளு. 3 லட்சம் வாக்கு வேறுபாட்டுல வெற்றி பெருவேன்னு சூழுறைத்திருக்கார்.
33. தேனி - 62% - எப்பவாவது தான் ஆள்கூழ் (luck) அடிக்கும். அது தெரியாத ஆளா ஆருண்?
34. விருதுநகர் - 70% - வைகோவுக்குன்னு எழுதி வச்சிருக்கு.
35. ராமநாதபுரம் - 64.5% - வள்ளலுக்கே சோதனை.
36. தூத்துக்குடி - 65.7% - சித்த மருத்துவரான இந்து நாடாருக்கும் முன்னால் பல்கலைக்கழக துணைவேந்தரான கிறுத்துவ நாடாருக்கும் போட்டி. முரட்டு பக்தரின் தொகுதி. என்ன வேண்டும்மென்றாலும் நடக்கலாம்.
37. தென்காசி (தனி) - 63% - கைய மறந்துடுங்க.
38. திருநெல்வேலி - 65% - திமுகவுக்கு தெரியும் இப்ப இந்த தொகுதி கை கூடாதுன்னு.
39. கன்னியாகுமரி - 63.09% - தாமரை மலருமா?
40. புதுச்சேரி - 80% - காங்கிரசுக்கு கொஞ்சம் தொண்டர்கள் இருக்குமிடம்.
http://thatstamil.oneindia.in/news/2009/05/14/tn-67-votes-polled-in-tamil-nadu.html

