வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஏப்ரல் 05, 2006

வாக்கு போடாத மன்மோகன் சிங்

தேர்தலில் வாக்கு அளிப்பது நமது மிக முக்கிய கடமை மற்றும் உரிமைகளில் ஒன்று. ஆனால் நமது பிரதமரே அந்த கடமையை செய்யவில்லை என்னும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏப்ரல் 3, 2006 அன்று நடந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் மன்மோகன் சிங் வாக்கு செலுத்தவில்லை.

மெத்த படித்தவர், நாணயமானவர், பொருளாதார மேதை, அரசியல்வாதி இல்லாத பிரதமர் என்று பல பல சிறப்புகளை உடைய நமது பிரதமருக்கு இந்த செயல் ஒரு மாபெரும் தவறு என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாதான் இருக்கு.

1991 ல் இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்றால் அவர் அம்மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். இதன் பொருட்டே இவர் அஸ்ஸாம் வாசியானார். இவரின் நிரந்தர முகவரி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள டிஸ்பர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. அஸ்ஸாம் வாசியானது தவறில்லை ஆனால் ஒரு குடிமகனின் கடமையை தவறாமல் குறைந்தபச்சம் தேர்தல் சமயத்திலாவது செய்ய வேண்டுமல்லவா?

இவர் இதுவரை ஒரு அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு அளித்ததில்லை. 1998 பொதுதேர்தலில் மட்டும் வாக்களித்தார். அப்படியென்றால் உலகின் மிகப்பெரிய மக்களாச்சியின் தலைவர் கடந்த 15 (1991 - 2006) ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் வாக்களித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் வாக்கு போடலைன்னா புரிந்துகொள்ளலாம். - நிரந்தர அதிபர்.

மன்மோகன் சிங் கதை அப்படியல்லவே. இவர் உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவர். வாக்கின் அருமை தெரிந்து நடந்திருக்கவேண்டும். என்ன செய்வது உலகின் மிக பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவராக இருந்தாலும் இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இன்னும் இவர் மாநிலங்கவை உறுப்பினர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான்.

ஒரு வேலை இதனால் தான் இவருக்கு வாக்கின் அருமை தெரியாமல் போய்விட்டதோ?

இதில் என்ன வேடிக்கைனா, ஓட்டு பதிவுக்கு 2 நாளைக்கு முன்னாடி தொகுதிக்கு வந்து மகா (மக்கு ?) சனங்களே வாக்கு போடுங்கன்னு பிரசாரம் பண்ணியிருக்கிறார். ஆனா இவர் வாக்கு போடவில்லை. மன்மோகன் சிங் வாக்களிக்க வருவார் என்று இவர் சார்ந்த வாக்குசாவடி மக்கள் நினைத்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். சரியப்பா சில பேரால் வர முடியாது அதற்கு தானே அஞ்சல் வாக்கு முறை உள்ளது. பிரதமர், குடியரசு தலைவர், ஆளுனர், மந்திரிகளுக்கு இச்சலுகை உண்டு. மன்மோகன் சிங் அஞ்சல் வாக்கு முறையையும் பயன்படுத்தவில்லை.

தென் டில்லி மக்கள் இவரை 1999 -இல் தோற்கடித்தப்போ என்னடா மக்கள் ஒரு நல்ல ஆளை தேர்தெடுக்கமாட்டீங்கறாங்க என்று நினைத்ததுண்டு, இப்ப தான் தெரியுது தென் டில்லியில் நிறைய மன்மோகன் சிங்குகள் இருக்கிறாங்கன்னு.
அதனால் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மகா சனங்களே வாக்கு போடாதவர்கள் எல்லாம் மன்மோகன் சிங் மாதிரி. அப்ப நீங்க?
:-))

வாழ்க மக்கள் ஆட்சி.
மன்மோகனுமா? அப்படின்னு நொந்து போயி எழுதின பதிவுங்க இது.

source april 4, 2006 - dailypioneer newspaper.

http://www.dailypioneer.com/archives2/default12.asp?main_variable=front%5Fpage&file_name=story5%2Etxt&counter_img=5&phy_path_it=D%3A%5Cdailypioneer%5Carchives2%5Capr406