பா.ம.க வுக்கு சவால்விடும் வகையில் தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் பா.ம.க வின் கோட்டையிலேயே களம் இறங்கியுள்ளதால் பா.ம.க அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ள பா.ம.க தலைவர் இராமதாஸ் அவர்கள் விஜயகாந்திற்கு "டெபாசிட்" தொகைகூட கிடைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். விருதாசலம் தொகுதி வெற்றியை இராமதாஸ் ஒரு மானப்பிரச்சனையாக கருதுவதாக பா.ம.க வின் முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். அதனால் தற்போதைய வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு பதிலாக காடுவெட்டி குரு விருதாசலத்தில் போட்டியிடுகிறார். ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவுக்கு பதிலாக "இராமு படையாச்சி" போட்டியிடுகிறார்.
காடுவெட்டி குரு தற்போது களத்தில் குதித்துள்ளதால் விருதாலச்தில் சூடு பறக்கும் என்று நிச்சயமாக கூறலாம், தேர்தல் கமிசன் சிறப்பு பார்வையாளரை இத்தொகுதிக்கு நியமித்து கண்காணித்தல் தேர்தல் பிரச்சினை இல்லாமல் நடக்க உதவும்.