வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, ஜனவரி 15, 2011

ஒற்றுமையின் பலம் எருமை உணர்த்தும் பாடம்

   அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்!!

ஒற்றுமையின் பலத்தை நாம் பாடங்களில் படித்திருப்போம். ஒரு குச்சிய உடைத்துவிடாலாம் ஆனால் அதே போன்ற குச்சிகளின் கட்டை உடைக்கமுடியாது. தனியொருவனின் கோரிக்கையை விட அமைப்புகளின் கோரிக்கை எடுபடுவதும் ஓர் காட்டு.

உங்களுக்கு தெரியும் தண்ணியிலுள்ள முதலை, நிலத்தில் சிங்கம் மற்றும் எருமைகளின் பலம். சிங்கங்கள் ஒற்றுமையா போராடி நீரில் இருக்கும் முதலையிடம் இருந்து தன் இரையை மீட்டன (படத்துல பார்க்கலாம்). சிங்கமும் பலமானது தண்ணியிலுள்ள முதலையும் பலமானது. காட்டெருமை இவைகளின் இரை. தன் கன்றை சிங்கங்களிடம் இழந்த காட்டெருமைகள் பின் கூட்டமாக ஒற்றுமையாக வந்து கன்றை சிங்கங்களிடம் இருந்து மீட்டு செல்கின்றன. ஒற்றுமை தந்த பலத்தில் எருமை ஒன்று சிங்கத்தை அப்படியே அலாக்கா தூக்கி வீசுவதையும் பார்க்கலாம். எருமைக்கு எப்படி இவ்வளவு தைரியம்? கூட்டமா இருந்தாலும் சிங்கம் தனக்கு தோதான எருமையை வேட்டையாடிடும். இங்க ஒற்றுமையா வந்ததால சிங்கம் ஓடிடுச்சி. 



இதிலிருந்து நாம ஏதாவது புரிஞ்சுக்கிட்டா சரி.